தானியேல் 9:24-27 விளக்கம்
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. -தானியேல் 9 : 24 அந்த நிறைவேறப் போகிற தீர்க்கத்தரிசனம் என்ன? மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், உலகத்தில் மீறுதல், அது யூதர்களினுடைய மீறுதலாக இருக்கட்டும், அந்நியர்களுடைய மீறுதலாக இருக்கட்டும், மீறுதல் இல்லாமல் போய்விட்டதா? இல்லை. பாவங்களைத் தொலைக்கிறதற்கும், பாவங்கள் தொலைந்துவிட்டனவா? இல்லை. அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், அக்கிரமம் நிவிர்த்தி ஆகி விட்டதா? இல்லை. நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், நித்திய நீதி இப்போது உண்டாகி விட்டதா? இல்லை. தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், அனைத்து தீர்க்கத்தரிசனங்களும், அனைத்து தரிசனங்களும் நிறைவேறி, மூடி முத்திரைப் போடும் நிலைமையிலா இருக்கிறது? இல்லை. நிறைவேறாதது ...