Posts

Showing posts from May, 2024

தானியேல் 9:24-27 விளக்கம்

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.  -தானியேல் 9 : 24 அந்த நிறைவேறப் போகிற தீர்க்கத்தரிசனம் என்ன? மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்,  உலகத்தில் மீறுதல், அது யூதர்களினுடைய மீறுதலாக இருக்கட்டும், அந்நியர்களுடைய  மீறுதலாக இருக்கட்டும், மீறுதல் இல்லாமல் போய்விட்டதா? இல்லை. பாவங்களைத் தொலைக்கிறதற்கும்,  பாவங்கள் தொலைந்துவிட்டனவா? இல்லை. அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும்,  அக்கிரமம் நிவிர்த்தி ஆகி விட்டதா? இல்லை. நித்திய நீதியை வருவிக்கிறதற்கும்,  நித்திய நீதி இப்போது உண்டாகி விட்டதா? இல்லை. தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், அனைத்து தீர்க்கத்தரிசனங்களும், அனைத்து தரிசனங்களும் நிறைவேறி, மூடி முத்திரைப் போடும் நிலைமையிலா இருக்கிறது? இல்லை. நிறைவேறாதது ...

உப்பு உவமை

மத்தேயு 5:13 - நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் உப்பு கெட்டுப் போவதை தடுக்கும். (எ.கா மீன் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு போட்டு வைப்பார்கள்) நாம் இந்த உலகம் கெட்டுப் போவதை தடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  நாம் இப்போது பூமிக்கு உப்பாய் இருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு இடத்தில் சண்டை, சச்சரவு அதிகமாக இருந்தால் நாம் அந்த இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தில் சமாதானம் நிலவ வேண்டும். 2 இராஜாக்கள் 2:19-22 , தண்ணீர் உப்பினால் ஆரோக்கியமானது. அது போல நாம் இருக்கிற இடம் சுத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.  உப்பின் தன்மை நம்பிடம் இல்லையென்றாலும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு.  (மத் 5:13) சத்தியத்தை கேட்டு, நம்மை திருத்திக் கொள்வதற்கு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதை நாம் இழந்து விட்டால் நாம் மிதிக்கப்படுவோம்.  2 இராஜாக்கள் 4:9  - அந்த ஸ்திரீ எலிசாவை பரிசுத்தவான் என்று கண்டு கொண்டாள்  அவரிடம் இருந்த அந்த உப்பு அவர் பரிசுத்தவான் என்று அந்த ஸ்திரீக்கு காட்டிக் கொடுத்தது.  உப்பு சுவையைக் கொடுக்கக் கூடியது....

விளக்கு உவமை - மத்தேயு 5:15

விளக்கு உவமை மத்தேயு 5:14-16 மாற்கு 4:21-22 லூக்கா 8:16-17 லூக்கா 11:33-36 மத்தேயு 5:14 - நீங்கள் பூமிக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் விளக்கு: விளக்கு என்பது இயேசுவைக் குறிக்கிறது ( வெளி 21 : 23; நீதி 6:23) 7 பொன்குத்துவிளக்குகள்  - 7 சபைகள் (வெளி 1:20) சபையின் தலைவர் இயேசுகிறிஸ்து. (எபே 1:23) விளக்குத்தண்டு: விளக்குத்தண்டு என்பது இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரையும் குறிக்கிறது. (ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள்  சகரியா 4 : 14) செருபாபேல்(ராஜா) மற்றும் யோசுவாவை (பிரதான ஆசாரியன்) குறிக்கிறது.  இன்று ராஜாக்களும், ஆசாரியர்களுமாய் இருப்பது இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் தான். (வெளி 1:6) விளக்குத்தண்டில் ஊற்றப்படுகிற எண்ணெய்: விளக்கில் ஊற்றப்படுகிற எண்ணெய் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. (1 சாமு 16:13) விளக்குத்தண்டில் எண்ணெய் இருந்தால் தான் நம்மிடத்தில் நற்கிரியைகள் இருக்கும்.  நம்மிடத்தில் நற்கிரியைகள் இருந்தால் தான் அதைக் காண்கிற மக்கள், வெளிச்சத்தை நம்மிடத்தில் காண்பார்கள். (பிலி 2:14) கர்த்தராகிய இயேசு கி...

Bible Quiz Ques and Ans Apr 7 2024

Church Quiz Easy questions 1) What kind of animal spoke to Balaam? Ans: Donkey (Num 22:21-35) 2)  Who was the first king of Israel’s Northern Kingdom? Ans: Jeroboam (1 Kings 11:26-40) 3)  Which prophet is known for his vision of a valley of dry bones coming to life, symbolizing the restoration of Israel? Ans: Ezekiel (Ezekiel 37:1-14) 4)  What is the shortest verse in the Bible? Ans: Jesus wept (John 11:35) 5)  How many people were saved on the Noah’s ark? Ans: 8 6)   Which book prophesies exclusively against Edom? Ans: Obadiah  7)  what does the name “Boanerges” mean which Jesus gave to James and John? Ans: The sons of thunder (Mark 3:17) 8)  Who was the priest-king of Salem? Ans: Melchizedek (Gen 14:18) 9)  What were the names of Abraham’s brothers? Ans: Nahor, Haran 10)  On what mountain did moses die?  Ans: Mt Nebo (Deut 34)  11)  of Matthew, Mark, Luke and John which one was a Doctor? Ans: Luke (Col 4:14) 12)  Na...

சேம், காம், யாப்பேத்

சேம், காம், யாப்பேத் உலகத்தில் எத்தனை ஜனங்களை பார்த்தாலும் அவர்களை 3 குழுக்களாக பிரிக்கலாம்.  எப்படியென்றால், ஐரோப்பா நாடுகளில் 3 விதமான மருந்துகள் இருக்கும் 1) வெள்ளைக்காரர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து ரொம்ப இலகுவாக இருக்கும். 2) ஆசியர்களுக்கு உண்டாக்கப்படுகிற மருந்து கொஞ்சம் கடினமாக  இருக்கும். 3)ஆப்பிரக்கர்களுக்கு இந்த 2 வகை மருந்தும் ஒத்து வராது. அவர்கள் அங்கங்கள் எல்லாம் கடினமானதாக இருப்பதால் அவர்களுக்கு தயாரிக்கப்படுகின்ற மருந்து வித்தியாசமானதாக இருக்கும்.  பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல்: நோவாவின் காலத்திற்கு பிறகு எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து பாபேல் என்னும் கோபுரத்தைக் கட்டினார்கள். (ஆதி 11).  அங்கே வைத்து ஆண்டவர் பாஷைகளை தாறுமாறாக்கினார்.  அங்கு வாழ்ந்தவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த மொழி, அதை ஒரு கூட்டத்தார் பேசிக் கொண்டே இருந்தார்கள்.  இன்னும் 2 மொழிகள் தான் புதிதாக வந்தன.  யாருடைய மொழி மாறியது?   சேம் வம்சத்தார் - தொடர்ந்து அந்த இடத்தில் பேசப்பட்டு வந்த அந்த மொழியையே பேசினார்கள். காம் வம்சத்தார் - மொழி மாறியது. யாப்பேத் வம்சத்தார் - ம...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம் பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.  -வெளிப்படுத்தல் 22 : 1 தேவதூதன் யோவானுக்கு காண்பிக்கிறான்.  யோவான் 4 ம் அதிகாரத்தில் இயேசுவானவர் துரவண்டையில் ஒரு பெண்ணிடம் பேசும் போது இந்த ஜீவத்தண்ணீரைக் குறித்து பேசுகின்றார்.  அந்த ஜீவத்தண்ணீர் நித்திய ஜீவனைக் குறிக்கிறது. 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம் பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.  -வெளிப்படுத்தல் 21 : 1 யோவானுக்கு மாத்திரம் தேவன் இதை காண்பித்தார்.  எதிர்காலத்தில் நாம் இதையெல்லாம் காண்போம்.  புதிய பூமி பழைய பூமியில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.  ஆனால் புதிய பூமி மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாக இருக்கும். 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 20 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 20 விளக்கம் ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.  -வெளிப்படுத்தல் 20 : 1 இது அந்த 7 ஆண்டுகள் முடிந்ததும், இயேசு வருகிறார். அப்பொழுது இயேசுவுக்கு எதிர்த்து யுத்தம் பண்ண மெகிதோ பள்ளத்தாக்கில் அந்திக்கிறிஸ்து சேனைகளுடன் நிற்கிறான் அல்லவா?  அப்பொழுது இயேசு அந்த அந்திக்கிறுஸ்துவை அழிப்பார் தானே! அதன் பின்பு நடக்கிற சம்பவம் இது.  ஒரு பெரிய தேவதூதன் இறங்கி வருகிறான்.  அவனுடைய கையில் பாதாளத்தினுடைய திறவுகோல் இருந்ததாம்.  அது நரகம் அல்ல.

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம் இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.  -வெளிப்படுத்தல் 19 : 1 ஆட்டுக்குட்டியானவர் - இயேசுவானவரின் கல்யாணம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவா? மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவா? தேவன் ஒரு முறை மனுஷனானார்.  தேவன் மனிதனாக இருக்கும் பொழுது தான் அவர் திருமணம் முடிக்க முடியும்.  மனிதனாகிய இயேசு கிறிஸ்துவுக்கே.  யோவான் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை பார்த்து சொல்லுகிறார். இதோ முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியானவர் என்று.  அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியாக அங்கு அடிக்கப்பட்டார்.  யூத முறைமையின் படி ஒரு ஆண் திருமணம் முடிப்பது 40 வயதிலே தான். இயேசு 33 வருஷம் பூமியில் மனிதனாக வாழ்ந்து விட்டார். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இயேசுவானவர் பரலோகத்தில் மீண்டுமாக ஆட்டுக்குட்டியானவராக காணப்படுவார்.  மீண்டும் மனித வயதை தன்னிடத்தில...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 18 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 18 விளக்கம் இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.  -வெளிப்படுத்தல் 18 : 1 பாடல்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 17 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 17 விளக்கம் ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;  -வெளிப்படுத்தல் 17 : 1 இந்த 17-18 வது அதிகாரத்தில் வருபவைகள் நிறைய அடையாளங்கள் மற்றும் குறிப்புகளை கொண்டது. இதை நாம் சாதாரணமாக வாசிக்கும் போது புரியாது.  இங்கு யோவானுக்கு தேவதூதர் பேசுகிறார்.  இந்த உலகத்தின் மனிதர்களை ஏமாற்றிய, வஞ்சித்த மகா வேசிக்கு என்ன நடக்கப் போகிறது என்று சொல்லுகிறேன்.  இங்கு தண்ணீர் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக தண்ணீரைக் குறிக்கவில்லை.  இங்கு பெண் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக பெண்ணைக் குறிக்கவில்லை.  இங்கு வேசித்தனம் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக வேசித்தனத்தை குறிக்கவில்லை.  அந்த தேவதூதர் யோவானோடு பேசும் பொழுது யோவானுக்கு என்ன புரிந்தது.  முதலாம் நூற்றாண்டிலே யோவான் போன்ற மக்கள் எதைக் குறித்து அறிந்திருந்தார்கள...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 16 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 16 விளக்கம் அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழுதூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.  -வெளிப்படுத்தல் 16 : 1 எங்கே இருந்து அந்த சத்தம் வருகிறது.  பரலோகத்தில் இருக்கிற தேவாலயத்தில் இருந்து  தேவனுடைய ஆலயத்திலே அல்ல அவருடைய சிங்காசனம் இருப்பது.  தேவனுடைய சிங்காசனம் பரலோகத்திலே இன்னுமொரு இடத்திலே இருக்கிறது.  ஆயினும் இந்த சத்தம், தேவனுடைய சத்தத்தைப் போன்று  அப்படியானால் இந்த சத்தம் சிங்காசனத்தில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.  அப்படியானால் தேவனுடைய ஆலயத்திலிருந்து எப்படி வர முடியும். தேவனுடைய ஆலயத்திற்குள்ளே இருப்பது என்ன?  உடன்படிக்கைப் பெட்டி.  உடன்படிக்கைப்பெட்டி தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.   உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருப்பது என்ன?  10 கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் இரண்டு, ஆரோனுடைய கோல், மன்னா. அந்த 3ன் மூலம் தேவன் தம்முடைய உடன்படிக்கையை மிக அழகாக காண்பிக்கிறார்.  ...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம் பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.  -வெளிப்படுத்தல் 15 : 1 தேவன் தன்னுடைய கோபத்தில் உலகத்தை கண்டிக்கின்றார். அவைகள் எல்லாம் முடிவுறும் வகையில் இந்த 7 வாதைகள்.  இதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இனி நாம் படிக்க போகின்றவைகள் மிக அலங்காரமானவைகள்.  7 ஆண்டுகள் முடிவடையப் போகிறது. 3-4 மாதங்களே உள்ளன.  தேவனுக்கு உக்கிர கோபம் வருகிற சந்தர்ப்பம் உண்டு.  இப்போது அவர் கோபம் முடிவடைகிறது.  கடைசியாற தேவனுடைய உக்கிர கோபத்தை 7 விதங்களிலே தேவன் காண்பிக்கப் போகிறார்.  அவருடைய கடுங்கோபமாகிய 7 வாதைகளையும் அவர் கொட்டும் முன்னதாக சொல்லப்படுகின்ற முதல் வசனம் தான் இது. ஆச்சர்யமான அடையாளத்தை கண்டேன் என்று சொல்லப்படுகிறது.  கிரேக்க மொழியில் இது “ஒப்பீடு” என்று அர்த்தம்.

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம் பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.  -வெளிப்படுத்தல் 14 : 1 பின்பு என்பது கிரேக்க மொழியில் Kai என்று பயன்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. 13ம் அதிகாரத்தில் உள்ள சம்பவங்கள் நடைபெற்ற பின்பு. நாம் 13 ம் அதிகாரத்தில் பார்த்தது பொய்யான ஆட்டுக்குட்டி. இங்கு நாம் பார்ப்பது மெய்யான ஆட்டுக்குட்டி. இயேசு கிறிஸ்து. பொய்யான ஆட்டுக்குட்டி, robot செய்து அதற்கு உயிர் கொடுத்து, அந்த மிருகத்தினுடைய இலக்கத்தைப் போட்டது என நாம் பார்த்தோம். அந்த 666 ஐ நெற்றியிலே, வலதுகையிலே பதித்தார்கள். Illuminati என்ற பிசாசினுடைய விசுவாசிகள் அவர்களுடைய அடையாளம் 2 விரல்களை(சுண்டு விரல் மற்றும் ஆள் காட்டி விரலை காண்பிப்பது. அதினுடைய அர்த்தம் 6 கடலில் இருந்து வந்த இரண்டாவது மிருகத்தின் இலக்கமும் இது தான். அந்த இரண்டு கொம்புகள் உள்ள மிருகத்தை இப்படியாக அவர்கள் காண்பிக்கிறார்கள். இதினாலே அடையாளப்படுத்துவது பிசாசு (Free m...