வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம்
பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
-வெளிப்படுத்தல் 22 : 1
-வெளிப்படுத்தல் 22 : 1
- தேவதூதன் யோவானுக்கு காண்பிக்கிறான்.
- யோவான் 4 ம் அதிகாரத்தில் இயேசுவானவர் துரவண்டையில் ஒரு பெண்ணிடம் பேசும் போது இந்த ஜீவத்தண்ணீரைக் குறித்து பேசுகின்றார்.
- அந்த ஜீவத்தண்ணீர் நித்திய ஜீவனைக் குறிக்கிறது.
-வெளிப்படுத்தல் 22 : 2
- ஜீவ விருட்சத்தைப் பற்றி ஆதியாகமத்தில் பார்க்கிறோம்.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
-ஆதியாகமம் 2 : 9
- ஆதி 3:22-24 ம் வசனத்தில் மனிதன் தன் பாவத்தில் ஜீவ விருட்சத்தை புசிக்கக் கூடாது என்று தோட்டத்திற்கு காவல் வைக்கிறார் இயேசு.
- ஆதியாகமத்திற்கு பிறகு இந்த ஜீவ விருட்சம் இருக்கிற இடம் புதிய பூமி- புதிய எருசலேம்.
-வெளிப்படுத்தல் 22 : 3
- புதிய பூமியில் எந்த ஒரு சாபமும் இராது.
- தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் - அதாவது இயேசுவானவர் இருக்கிற சிங்காசனம் அங்கு இருக்கும்.
-வெளிப்படுத்தல் 22 : 4
- எடுத்துக்கொள்ளப்பட்ட சபை அந்த புதிய பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்களாக காணப்படுவார்கள்.
- அவர்கள் தேவனுக்கு ஊழியஞ்செய்வார்கள்.
- தேவனை தரிசிப்பார்கள்.
- அவர்களுடைய நெற்றியில் தேவனுடைய நாமம் எழுதப்பட்டு இருக்கும்.
பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படி சொன்னார்
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
-யாத்திராகமம் 33 : 20
புதிய ஏற்பாட்டில் இப்படி சொல்லப்படுகிறது
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
-1 யோவான் 3 : 2
-வெளிப்படுத்தல் 22 : 5
- இயேசுவானவரே அந்த வெளிச்சமானவர்.
- அவருடைய வெளிச்சமே பூமிக்கு போதுமானதாக இருக்கும்.
- கர்த்தரின் வெளிச்சம் மக்களின் மேல் பிரகாசிப்பதால் அவர்கள் அரசாளுவார்கள்.
ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
-சகரியா 14 : 7
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
-சகரியா 14 : 9
-வெளிப்படுத்தல் 22 : 6
- கர்த்தர் தேவதூதன் மூலமாக யோவானுக்கு காண்பிக்கிறார்.
- கர்த்தர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையும், சத்தியமுமானவைகள்.
-வெளிப்படுத்தல் 22 : 7
- இங்கு சீக்கிரமாய் என்று சொல்லப்படுகிறதன் கிரேக்க வார்த்தை Tachy.
- அப்படியென்றால் Suddenly-திடீரென என்று அர்த்தம்.
- கர்த்தர் நினையாத நாழிகையிலே வருவார்.
- எனவே நாம் விழித்திருக்க வேண்டும்
- அதற்கு வேதத்திலுள்ள வார்த்தைகளை கைகொள்ள வேண்டும்.
-வெளிப்படுத்தல் 22 : 8
- யோவானுக்கு இவை அனைத்தையும் தேவதூதன் மூலமாக தேவன் வெளிப்படுத்தினார்.
- அந்த தேவதூதனை வணங்கும்படி யோவான் அவன் காலில் விழுந்தான்.
-வெளிப்படுத்தல் 22 : 9
- அதற்கு தேவதூதன் தேவனை மாத்திரமே தொழுதுகொள் என்று அறிவுறுத்தினான்.
- தேவதூதனே இப்படி சொல்லியிருக்க நாமும் அதை கடைபிடிக்க வேண்டும்.
- முக்பியமாக பெரிய pastors, மற்றவர்கள் தங்களை தொழுது கொள்ள நினைத்தால் அவர்களுக்கு தேவனை தொழுதுகொள் என்று அறிவுறுத்த வேண்டும்.
-வெளிப்படுத்தல் 22 : 10
- இந்த வசனங்களை முத்திரை போட வேண்டாம்.
-வெளிப்படுத்தல் 22 : 11
- இயேசு திடீரென்று வருவதால் கடைசி நிமிட மனந்திரும்புதலுக்கு இடம் இருக்காது.
- எனவே அவனவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கட்டும் என்கிறார்.
-வெளிப்படுத்தல் 22 : 12
- கீழ்க்கண்ட வசனங்களை வாசித்தால் இந்த வசனம் விளங்கும்
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
-மத்தேயு 24 : 44
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
-யாக்கோபு 2 : 20
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
-தீத்து 3 : 8
-வெளிப்படுத்தல் 22 : 13
- கர்த்தரே ஆதியும், அந்தமுமானவர்.
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
-வெளிப்படுத்தல் 1 : 8
அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
-ஏசாயா 41 : 4
-வெளிப்படுத்தல் 22 : 14
- ஜெயங்கொள்ளுகிறவன் ஜீவ விருட்சத்தை பெற்றுக் கொள்ளுவான்.
- பரலோகத்தில் பிரவேசிப்பான்.
-வெளிப்படுத்தல் 22 : 15
- யாரெல்லாம் பரலோகத்தில்
-வெளிப்படுத்தல் 22 : 16
- இயேசுவானவர் பேசுகிறார்.
- இயேசுவானவரே அந்த தாவீதின் சந்ததி வேர், விடிவெள்ளி நட்சத்திரம்.
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
-ஏசாயா 11 : 1
-வெளிப்படுத்தல் 22 : 17
- தேவன் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை.
- விருப்பமுள்ளவன், தாகமாயிருக்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பான்.
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
-ஏசாயா 55 : 1
-வெளிப்படுத்தல் 22 : 18
- இந்த பைபிளில் யாரும் ஒரு வார்த்தையையும் கூட்டவும் கூடாது. குறைக்கவும் கூடாது.
- இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள்.
-வெளிப்படுத்தல் 22 : 19
- இந்த வேதத்தில் எவனாவது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், தேவன் அவர்கள் பெயரை தனது ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார்.
-வெளிப்படுத்தல் 22 : 20
- இங்கு சீக்கிரமாய் என்று கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை கிரேக்க மொழியில் இது Tachy என்று சொல்லப்படுகிறது.
- அதன் அர்த்தம் suddenly-திடீரென்று.
- இயேசுவானவர் திடீரென்று வருவார் என்பதே இதன் அர்த்தம்.
-வெளிப்படுத்தல் 22 : 21
- யோவான் தேவனுடைய கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக என்று சொல்லி முடிக்கிறார்.
Comments
Post a Comment