வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 22 விளக்கம்

பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
 -வெளிப்படுத்தல் 22 : 1
  • தேவதூதன் யோவானுக்கு காண்பிக்கிறான். 
  • யோவான் 4 ம் அதிகாரத்தில் இயேசுவானவர் துரவண்டையில் ஒரு பெண்ணிடம் பேசும் போது இந்த ஜீவத்தண்ணீரைக் குறித்து பேசுகின்றார். 
  • அந்த ஜீவத்தண்ணீர் நித்திய ஜீவனைக் குறிக்கிறது. 

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
 -வெளிப்படுத்தல் 22 : 2
  • ஜீவ விருட்சத்தைப் பற்றி ஆதியாகமத்தில் பார்க்கிறோம். 
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
 -ஆதியாகமம் 2 : 9
  • ஆதி 3:22-24 ம் வசனத்தில் மனிதன் தன் பாவத்தில் ஜீவ விருட்சத்தை புசிக்கக் கூடாது என்று தோட்டத்திற்கு காவல் வைக்கிறார் இயேசு. 
  • ஆதியாகமத்திற்கு பிறகு இந்த ஜீவ விருட்சம் இருக்கிற இடம் புதிய பூமி- புதிய எருசலேம். 

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
 -வெளிப்படுத்தல் 22 : 3
  • புதிய பூமியில் எந்த ஒரு சாபமும் இராது.
  • தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் - அதாவது இயேசுவானவர் இருக்கிற சிங்காசனம் அங்கு இருக்கும். 

அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
 -வெளிப்படுத்தல் 22 : 4
  • எடுத்துக்கொள்ளப்பட்ட சபை அந்த புதிய பூமியில் தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்களாக காணப்படுவார்கள். 
  • அவர்கள் தேவனுக்கு ஊழியஞ்செய்வார்கள்.
  • தேவனை தரிசிப்பார்கள்.
  • அவர்களுடைய நெற்றியில் தேவனுடைய நாமம் எழுதப்பட்டு இருக்கும். 
பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படி சொன்னார்

நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
 -யாத்திராகமம் 33 : 20

புதிய ஏற்பாட்டில் இப்படி சொல்லப்படுகிறது

பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
 -1 யோவான் 3 : 2


அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
 -வெளிப்படுத்தல் 22 : 5
  • இயேசுவானவரே அந்த வெளிச்சமானவர்.
  • அவருடைய வெளிச்சமே பூமிக்கு போதுமானதாக இருக்கும். 
  • கர்த்தரின் வெளிச்சம் மக்களின் மேல் பிரகாசிப்பதால் அவர்கள் அரசாளுவார்கள். 
ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
 -சகரியா 14 : 7

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
 -சகரியா 14 : 9

பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
 -வெளிப்படுத்தல் 22 : 6
  • கர்த்தர் தேவதூதன் மூலமாக யோவானுக்கு காண்பிக்கிறார். 
  • கர்த்தர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையும், சத்தியமுமானவைகள். 

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
 -வெளிப்படுத்தல் 22 : 7
  • இங்கு சீக்கிரமாய் என்று சொல்லப்படுகிறதன் கிரேக்க வார்த்தை Tachy.
  • அப்படியென்றால் Suddenly-திடீரென என்று அர்த்தம்.
  •  கர்த்தர் நினையாத நாழிகையிலே வருவார்.
  • எனவே நாம் விழித்திருக்க வேண்டும் 
  • அதற்கு வேதத்திலுள்ள வார்த்தைகளை கைகொள்ள வேண்டும். 

யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
 -வெளிப்படுத்தல் 22 : 8
  • யோவானுக்கு இவை அனைத்தையும் தேவதூதன் மூலமாக தேவன் வெளிப்படுத்தினார். 
  • அந்த தேவதூதனை வணங்கும்படி யோவான் அவன்  காலில் விழுந்தான். 

அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
 -வெளிப்படுத்தல் 22 : 9
  • அதற்கு தேவதூதன் தேவனை மாத்திரமே தொழுதுகொள் என்று அறிவுறுத்தினான்.
  • தேவதூதனே இப்படி சொல்லியிருக்க நாமும் அதை கடைபிடிக்க வேண்டும்.
  • முக்பியமாக பெரிய pastors, மற்றவர்கள் தங்களை தொழுது கொள்ள நினைத்தால் அவர்களுக்கு தேவனை தொழுதுகொள் என்று அறிவுறுத்த வேண்டும். 

பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
 -வெளிப்படுத்தல் 22 : 10
  • இந்த வசனங்களை முத்திரை போட வேண்டாம். 

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
 -வெளிப்படுத்தல் 22 : 11
  • இயேசு திடீரென்று வருவதால் கடைசி நிமிட மனந்திரும்புதலுக்கு இடம் இருக்காது. 
  • எனவே அவனவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கட்டும் என்கிறார். 

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
 -வெளிப்படுத்தல் 22 : 12
  • கீழ்க்கண்ட வசனங்களை வாசித்தால் இந்த வசனம் விளங்கும்
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
 -மத்தேயு 24 : 44

வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
 -யாக்கோபு 2 : 20

இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
 -தீத்து 3 : 8

நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
 -வெளிப்படுத்தல் 22 : 13
  • கர்த்தரே ஆதியும், அந்தமுமானவர். 
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
 -வெளிப்படுத்தல் 1 : 8

அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
 -ஏசாயா 41 : 4

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
 -வெளிப்படுத்தல் 22 : 14
  • ஜெயங்கொள்ளுகிறவன் ஜீவ விருட்சத்தை பெற்றுக் கொள்ளுவான். 
  • பரலோகத்தில் பிரவேசிப்பான். 

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
 -வெளிப்படுத்தல் 22 : 15
  • யாரெல்லாம் பரலோகத்தில்

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
 -வெளிப்படுத்தல் 22 : 16
  • இயேசுவானவர் பேசுகிறார். 
  • இயேசுவானவரே அந்த தாவீதின் சந்ததி வேர், விடிவெள்ளி நட்சத்திரம்.
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
 -ஏசாயா 11 : 1

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
 -வெளிப்படுத்தல் 22 : 17
  • தேவன் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை.
  • விருப்பமுள்ளவன், தாகமாயிருக்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பான். 
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
 -ஏசாயா 55 : 1

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
 -வெளிப்படுத்தல் 22 : 18
  • இந்த பைபிளில் யாரும் ஒரு வார்த்தையையும் கூட்டவும் கூடாது. குறைக்கவும் கூடாது.
  • இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள். 

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
 -வெளிப்படுத்தல் 22 : 19
  • இந்த வேதத்தில் எவனாவது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், தேவன் அவர்கள் பெயரை தனது ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார். 

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
 -வெளிப்படுத்தல் 22 : 20
  • இங்கு சீக்கிரமாய் என்று கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை கிரேக்க மொழியில் இது Tachy என்று சொல்லப்படுகிறது. 
  • அதன் அர்த்தம் suddenly-திடீரென்று.
  • இயேசுவானவர் திடீரென்று வருவார் என்பதே இதன் அர்த்தம்.  

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.      
 -வெளிப்படுத்தல் 22 : 21
  • யோவான் தேவனுடைய கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக என்று சொல்லி முடிக்கிறார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4