தேவ ராஜ்யம்
தேவ ராஜ்யம் நமக்கு இரட்சிப்பு எப்படி கிடைக்கின்றது? கிருபையினால் விசுவாசத்தை கொண்டு தேவ ராஜ்யத்திற்குள் செல்ல அந்த கிருபையும் விசுவாசமும் போதுமா? போதாது? வேறு என்ன வேணும். நீதியும், பரிசுத்தமும் அதை எப்படி பெற முடியும்? பாவத்தை ஜெயிப்பதன் மூலம் பாவத்தை எப்படி ஜெயிக்க முடியும்? சத்தியம் நம்மை விடுதலையாக்கும். சத்தியத்தை எப்படி அறிவது? தேவ வசனத்தின் மூலம். தேவ வசனத்தை படித்தால், மனப்பாடம் செய்தால், மேற்கோள் காட்டி ஜெபித்தால் பாவத்திலிருந்து விடுதலையாக முடியுமா? முடியாது. வசனம் வாழ்க்கையாக வேண்டும். அதாவது வசனத்தில் உள்ள வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் செயல்பட வேண்டும் அதற்கு ஜெபிக்க வேண்டும் பின்பு அந்த சத்தியம் நம்மை பாவத்திலிருந்து முழுமையாக விடுதலையாக்கும்.