சங்கீதம் 87: இஸ்ரவேலின் சத்துருக்கள சீயோனில் மறுபடியும் பிறந்தவர்கள்!
சங்கீதம் 87: இஸ்ரவேலின் சத்துருக்கள் சீயோனில் மறுபடியும் பிறந்தவர்கள்! தேவன் நம்முடைய பிதா(அப்பா) என்றால், எருசலேம் ஒரு தாயைப் போன்றது என்று சொல்லலாம். ஏனென்றால், நாம் மீட்கப்பட்டு புதிய வாழ்வைப் பெற்றது சீயோனிலிருந்தே. மேசியா சீயோனில் நிறைவேற்றிய காரியத்தின் மூலமாகவே நாம் மறுபடியும் பிறக்க முடிகிறது. எருசலேமில் அவர் அனுபவித்த மரணமும் உயிர்த்தெழுதலும் மூலமாக நம்முடைய புதிய வாழ்க்கை தொடங்குகிறது. மரியாதைக்குரிய பரிசேயரும், யூதர்களின் அதகாரியுமான நிக்கோதேமுவிடம் , இயேசு “ மறுபடியும் பிறக்க வேண்டும் ” என்பதன் முக்கியத்துவத்தைப் பேசினார். ( யோவான் 3 ) யோவான் சுவிசேஷம் முதல் அதிகாரத்திலிருந்தே இதைத் தெளிவாகக் கூறுகிறது: யார் வேண்டுமானாலும் மேசியாவை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். அவர்கள் இரத்தத்தினாலோ, மாம்சத்தின் சித்தத்தினாலோ, மனிதனுடைய சித்தத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; தேவனால் பிறந்தவர்கள். சீயோனிலிருந்து இந்த மறுபிறப்பு சீயோனின் மூலமாகவே சாத்தியமானது. அது யூதர்களுக்காக மட்டு...