Posts

ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம்

ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.  -அப்போஸ்தலர் 1 : 12  இந்த வசனத்தில் வருகிற ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் மக்களை ஓய்வுநாளில் எங்கும் தொலைவாக போகாதபடி கட்டளையிட்டு இருந்தார்.  பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன்தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.  -யாத்திராகமம் 16 : 29 ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரம் (Sabbath day's journey) என்பது யூதர்களிடையே பயன்படுத்தப்பட்ட ஒரு தூர அளவாகும்.  யூத பாரம்பரியத்தில், ஓய்வுநாளில் ஒருவர் நடக்கக்கூடிய அதிகபட்ச தூரம் சுமார் 2,000 முழங்கள் (cubits) என்று நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இது சுமார் 0.9 முதல் 1 கிலோமீட்டர் (சுமார் 0.6 மைல்) தூரமாகும்.  ஒரு ஓய்வுநாள் பிரயா...

ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள்

ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள் ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 12 மணி நேரம் இரவு (4*3=12) 12 மணி நேரம் இரவு.  இந்த 12 மணி நேரத்தை தான் 4 ஜாமங்களாக பிரித்திருக்கின்றனர்.   ஜாமம் என்பது இரவு நேரத்தைப் பிரித்து காட்டும் காலப்பகுதி ஆகும்.  4 ஜாமங்கள் அதாவது ஒவ்வொரு 3 மணி நேரத்தை கொண்டு கணக்கிடுவார்கள் (4*3=12). அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் (1)  சாயங்காலத்திலோ , (2)  நடுராத்திரியிலோ , (3)  சேவல் கூவும் நேரத்திலோ,  (4)  காலையிலோ , எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.  -மாற்கு 13 : 35 12 மணி நேரம் பகல் (12*1=12) 12 மணி நேரம் பகல்.   பகல் நேரத்தை யூதர்கள் 4 ஜாமங்களாக பிரிக்காமல், 12 வேளைகளாக பிரித்திருக்கின்றனர். (அதாவது ஒன்றாம் மணி வேளை, இரண்டாம் மணி வேளை etc). ஆனால் இதிலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை யூதர்கள் ஜெபித்தனர்.  சில இடங்களில் அதை ஜெப வேளை என்றும் அழைக்கின்றனர். (4*3=12) இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்...

பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி

பவுலின் நிரூபங்களில் - அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி பவுலின் 13 நிருபங்கள் பைபிளில் உள்ள வரிசை ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் பவுலின் நிருபங்களின் காலவரிசை பவுலின் நிருபங்கள் பொதுவாகக் கருதப்படும் காலவரிசையில்: கலாத்தியர்  — கி.பி. 48–49 1 தெசலோனிக்கேயர்  — கி.பி. 50–51 2 தெசலோனிக்கேயர்  — கி.பி. 51–52 1 கொரிந்தியர்  — கி.பி. 54–55 2 கொரிந்தியர்  — கி.பி. 55–56 ரோமர்  — கி.பி. 56–57 எபேசியர்  — கி.பி. 60–62 பிலிப்பியர்  — கி.பி. 60–62 கொலோசெயர்  — கி.பி. 60–62 பிலேமோன்  — கி.பி. 60–62 1 தீமோத்தேயு  — கி.பி. 62–64 தீத்து  — கி.பி. 63–65 2 தீமோத்தேயு  — கி.பி. 66–67 இப்போது இந்த வரிசையில் பவுல்  தன்னை எவ்வாறு விவரிக்கிறார்  என்பதை கவனியுங்கள். மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும்,  அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய  நானும்,...

சங்கீதம் 87: இஸ்ரவேலின் சத்துருக்கள சீயோனில் மறுபடியும் பிறந்தவர்கள்!

சங்கீதம் 87: இஸ்ரவேலின் சத்துருக்கள்  சீயோனில் மறுபடியும் பிறந்தவர்கள்! தேவன் நம்முடைய  பிதா(அப்பா)  என்றால்,  எருசலேம் ஒரு தாயைப் போன்றது  என்று சொல்லலாம். ஏனென்றால், நாம் மீட்கப்பட்டு புதிய வாழ்வைப் பெற்றது சீயோனிலிருந்தே.  மேசியா சீயோனில் நிறைவேற்றிய காரியத்தின் மூலமாகவே நாம்  மறுபடியும் பிறக்க  முடிகிறது. எருசலேமில் அவர் அனுபவித்த  மரணமும் உயிர்த்தெழுதலும்  மூலமாக நம்முடைய புதிய வாழ்க்கை தொடங்குகிறது. மரியாதைக்குரிய பரிசேயரும், யூதர்களின் அதகாரியுமான  நிக்கோதேமுவிடம் , இயேசு “ மறுபடியும் பிறக்க வேண்டும் ” என்பதன் முக்கியத்துவத்தைப் பேசினார். ( யோவான் 3 ) யோவான் சுவிசேஷம் முதல் அதிகாரத்திலிருந்தே இதைத் தெளிவாகக் கூறுகிறது:  யார் வேண்டுமானாலும் மேசியாவை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் தேவனால் பிறந்தவர்கள்.   அவர்கள் இரத்தத்தினாலோ, மாம்சத்தின் சித்தத்தினாலோ, மனிதனுடைய சித்தத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல;  தேவனால் பிறந்தவர்கள். சீயோனிலிருந்து இந்த மறுபிறப்பு  சீயோனின் மூலமாகவே  சாத்தியமானது. அது யூதர்களுக்காக மட்டு...