Posts

மாற்கு பவுலோடு ஊழியம் செய்தாரா?

அப்போஸ்தலர் 15:37 — “இந்த மாற்கு யார்?” அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.  -அப்போஸ்தலர் 15 : 37  யார் இந்த மாற்கு இங்கு குறிப்பிடப்படும்  மாற்கு  என்பவர் “ யோவான் மாற்கு (John Mark)”  ஆவார். இந்த   மாற்கு, எருசலேமில் இருந்த ஒரு விசுவாசி. அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  -அப்போஸ்தலர் 12 : 12 மாற்குவின் தாய்  மரியாள் . அவர்களுடைய வீடு ஆரம்ப சபையின் கூடுகைக்கான இடமாக இருந்தது. பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது விசுவாசிகள் அந்த வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.  அதனால் மாற்கு சிறுவயதிலிருந்தே சபை சூழலில் வளர்ந்தவர். மாற்கு பவுலுடன் எப்போது சென்றார்? பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.    -அப்போஸ்தலர் 12 : 25 பவுலும் பர்னபாவும் முதல் ...

நான் ஏன் வாழ்கிறேன்

LEVEL 1 – இயேசுவை அறிதல் I. Discover Jesus 1) நான் ஏன் வாழ்கிறேன்? ( What is the Purpose of My Life?) Introduction   ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் இந்த கேள்வி வரும்: “நான் ஏன் பிறந்தேன்?” “Why am I here?” “என் Life-க்கு என்ன Purpose?” சிறு வயதில் நமக்கு இந்த கேள்வி பெரிதாகத் தெரியாது. பள்ளிக்குச் செல்கிறோம், படிக்கிறோம், விளையாடுகிறோம். பிறகு வேலை, திருமணம், குடும்பம், பணம், வீடு, குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் அமைதியாக உட்காரும்போது: “இதுதானா வாழ்க்கை? இதற்காகத்தானா நான் பிறந்தேன்?” என்ற கேள்வி நம்முடைய உள்ளத்தில் எழலாம். ஒருவருக்கு நல்ல  Job  இருக்கலாம். நல்ல  Family  இருக்கலாம். பணம் இருக்கலாம். வீடு, கார், வசதிகள் இருக்கலாம். பல  Achievements  இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் இருந்தாலும், உள்ளத்தில் ஒரு  emptiness  இருக்கலாம். ஏன்? ஏனென்றால் மனிதன் வெறும் வாழ்க்கையை நடத்துவதற்காக மட்டும் படைக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு  Purpose  இருக்கிறது. Life-க்கு Purpose இருக்கிறதா? ஒரு...

சேனைகளின் கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் என்றால் என்ன?  ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.  -ஏசாயா 6 : 3 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த  இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின்  நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.  -1 சாமுவேல் 17 : 45 தமிழில் சேனைகளின் கர்த்தர் (படைகளின் ஆண்டவர்) ஆங்கிலத்தில் LORD of HOSTS எபிரேய மொழியில் YAHWEH SABAOTH “சேனைகளின் கர்த்தர்” என்றால் எல்லா சேனைகளுக்கும் தலைவரும், ஆண்டவருமான தேவன்.  “சேனை” என்பது ஜனங்களின் திரள்கூட்டம். படைகள், இராணுவங்கள் ஆகும். (Army) பரலோக சேனை - தேவ தூதர்கள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள். ( சங்கீதம் 103 : 20) வானமும், பூமியும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகின்றன. தேவனின் முழுமையான அதிகாரத்தைக் குறிக்கிறது.  உதாரணம்: உதாரணமாக ஒரு நாட்டின் ஜனாதிபதி தனியாகப் போராடுவதில்லை.  அவருக்...

ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம்

ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.  -அப்போஸ்தலர் 1 : 12  இந்த வசனத்தில் வருகிற ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் மக்களை ஓய்வுநாளில் எங்கும் தொலைவாக போகாதபடி கட்டளையிட்டு இருந்தார்.  பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன்தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.  -யாத்திராகமம் 16 : 29 ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரம் (Sabbath day's journey) என்பது யூதர்களிடையே பயன்படுத்தப்பட்ட ஒரு தூர அளவாகும்.  யூத பாரம்பரியத்தில், ஓய்வுநாளில் ஒருவர் நடக்கக்கூடிய அதிகபட்ச தூரம் சுமார் 2,000 முழங்கள் (cubits) என்று நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இது சுமார் 0.9 முதல் 1 கிலோமீட்டர் (சுமார் 0.6 மைல்) தூரமாகும்.  ஒரு ஓய்வுநாள் பிரயா...

ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள்

ஜாமங்கள் மற்றும் மணி வேளைகள் ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 12 மணி நேரம் இரவு (4*3=12) 12 மணி நேரம் இரவு.  இந்த 12 மணி நேரத்தை தான் 4 ஜாமங்களாக பிரித்திருக்கின்றனர்.   ஜாமம் என்பது இரவு நேரத்தைப் பிரித்து காட்டும் காலப்பகுதி ஆகும்.  4 ஜாமங்கள் அதாவது ஒவ்வொரு 3 மணி நேரத்தை கொண்டு கணக்கிடுவார்கள் (4*3=12). அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் (1)  சாயங்காலத்திலோ , (2)  நடுராத்திரியிலோ , (3)  சேவல் கூவும் நேரத்திலோ,  (4)  காலையிலோ , எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.  -மாற்கு 13 : 35 12 மணி நேரம் பகல் (12*1=12) 12 மணி நேரம் பகல்.   பகல் நேரத்தை யூதர்கள் 4 ஜாமங்களாக பிரிக்காமல், 12 வேளைகளாக பிரித்திருக்கின்றனர். (அதாவது ஒன்றாம் மணி வேளை, இரண்டாம் மணி வேளை etc). ஆனால் இதிலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை யூதர்கள் ஜெபித்தனர்.  சில இடங்களில் அதை ஜெப வேளை என்றும் அழைக்கின்றனர். (4*3=12) இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்...