யெகோவா மாகேன் – கர்த்தர் என் கேடகம்
வேதாகமப் படிப்பு:யெகோவா மாகேன் – கர்த்தர் என் கேடகம்
முக்கிய வசனம்
-சங்கீதம் 3 : 3
- யெகோவா மாகேன் (Jehovah Magen) என்பதன் அர்த்தம் “கர்த்தர் என் கேடகம்” என்பதாகும்.
- ஒரு யுத்த வீரர் யுத்தம் செய்யும்போது கேடகம் அவனை அம்புகளிலிருந்து மற்றும் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும்.
- அதுபோல தேவன் தம்மை நம்புகிறவர்களை பாதுகாக்கிறார்.
பயம் – சாத்தான் பயன்படுத்தும் நுழைவு வாயில்
- பயம் என்பது சாத்தான் நம்மை தாக்க பயன்படுத்தும் ஒரு வழி.(நுழைவு வாயில் - gateway).
- நாம் பயப்படும்போது, சாத்தான் நமக்குள் வர நாமே வாயில் அமைத்துத் தருகிறோம்.
- தேவன் நமக்கு கொடுத்த பாதுகாப்பை நாம் மறந்து விடுகிறோம்.
- பயம் நம்மை பலவீனமாக்கும்; ஆனால் தேவன் மீது நம்பிக்கை வைத்தோமானால் அவருடைய பாதுகாப்பு நம்மை சூழ்ந்து கொள்ளும்.
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
-சங்கீதம் 18 : 17
தேவனை நம்புகிறவர்களுக்கு அவர் கேடகம்
-நீதிமொழிகள் 30 : 5
தேவன் அவரை நம்புகிறவர்களுக்கு கேடகமாக இருப்பார்.
நம்பிக்கை என்றால் என்ன:
தேவனுடைய வார்த்தையை நம்புவது
அவர்மேல் முழுமையாக சார்ந்திருப்பது
அவர் சொல்வதற்கு கீழ்ப்படிவது
தேவன் நம்மை சத்துருக்களிடமிருந்து காப்பார்
-2 சாமுவேல் 22 : 1
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
-2 சாமுவேல் 22 : 31
தாவீது பல ஆபத்துகளை சந்தித்தார்:
எல்லோருடைய கையும் ஆபத்தாக இருந்தது.
ஆனால் சவுலின் கை தாவீதை நேரடியாக தாக்கும் வகையில் இருந்தது.
ஆனால் தேவன் தாவீதை பாதுகாத்தார்.
தேவனுடைய கேடகம் நம்மை இரண்டு விஷயங்களிலிருந்து காக்கிறது
1. ஆபத்து (Danger) – அனைவருக்கும் பொதுவானது
உதாரணம்: விபத்து, நோய், இயற்கை ஆபத்துகள்.
சங்கீதம் 91
தேவன் நம்மை பல ஆபத்துகளிலிருந்து காக்கிறார்.
ஞானமான செயல்முறை (Wisdom Principle)
எதாவது ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் அங்கிருந்து உடனே விலக வேண்டும்
ஓடிச் செல்வது பயந்த செயலல்ல; அது ஞானமான செயல்
2. தாக்குதல் (Attack) – குறிப்பாக திட்டமிட்டு செய்யப்படுவது
தாக்குதல் என்பது நம்மை நோக்கி திட்டமிட்டு செய்யப்படும் ஒன்று.
அந்த நேரத்தில்:
நாம் எப்போதும் ஓட முடியாது
சில நேரங்களில் நின்று விசுவாசத்தோடு எதிர்கொள்ள வேண்டும்
அப்போது தேவனுடைய கேடகம் நம்மை பாதுகாக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் உள்ள பொதுவான உண்மைகள்
இந்த வசனங்களில் இருந்து மூன்று முக்கியமான உண்மைகள் தெரிகின்றன:
1. யார் நம்முடைய கேடகம்?
2. யாருக்கு இந்த பாதுகாப்பு?
கர்த்தரை நம்புகிறவர்களுக்கு
3. எப்படி நம்ப வேண்டும்?
தேவனுடைய வார்த்தையின் மூலம்
நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கும்போது,
அவருடைய பாதுகாப்பு நம்மைச் சூழ்ந்திருக்கும்.
முடிவுரை
பயம் நம் வாழ்க்கையில் வரும்போது நினைவில் கொள்ளுங்கள்:
கர்த்தர் நம்முடைய கேடகம்
அவர் நம்மை ஆபத்திலிருந்து காக்கிறார்.
அவர் நம்மை தாக்குதல்களிலிருந்து காக்கிறார்.
அவருடைய பாதுகாப்பு அவரை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும்.
Comments
Post a Comment