ஆவி, ஆத்துமா, சரீரம்
ஆவி, ஆத்துமா, சரீரம்
பைபிளின்படி “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்றால் என்ன?
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
-1 தெசலோனிக்கேயர் 5 : 23
இங்கு மனிதன் மூன்று பாகங்களாக குறிப்பிடப்படுகிறான்:
சரீரம் (Body – Greek: sōma) - Physiological
- நம்முடைய உடம்பாகிய சரீரம்.
- சரீரம் (1) பார்ப்பது, (2) கேட்பது, (3) சுவாசிப்பது, (4) சுவைப்பது, (5) தொடுவது போன்ற 5 உணர்வுகள் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது.
- சரீரம் மரணத்திற்கு உட்பட்டது.
- சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக விளங்குகின்றது.
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
-1 கொரி 6 : 19
ஆத்துமா (Soul – Greek: psuchē) - Psychological
- ஆத்துமா என்பது முடிவெடுக்கும் பகுதியாக அமைகின்றது.
- ஆத்துமாவால் நாம் யார் என்பதற்கான அடையாளம் ஏற்படுகிறது.
- நம்முடைய உள்ளார்ந்த மனிதனின் மனது (mind), உணர்வு (emotions), சிந்தனை(thinking), மற்றும் ஆசை (will) ஆகியவற்றைக் குறிக்கிறது.
- ஆத்துமாவில் உங்கள் மனம், விருப்பம், உணர்ச்சிகள் ஆகியவை வாழ்கின்றன.
- ஆத்துமா என்பது உடலுக்கும் ஆவிக்கும் இடையிலான நடுநிலையான பகுதியாகும்.
- ஆத்துமா நித்தியமானது, மேலும் அனைவருக்கும் ஒரு ஆத்துமா மீட்கப்பட்ட மற்றும் மீட்கப்படாத நிலையில் உள்ளது.
- ஆத்துமாக்கு சுய சித்தம் (free will) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவி (Spirit – Greek: pneuma) - Spiritual
- இது நாம் தேவனோடு தொடர்புக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
- மனிதனுடைய ஆவி பாவத்தின் காரணமாக “மரித்திருந்தது” , ஆனால் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய ஜீவனைப் பெறுகிறது.
- தேவனுடனான தொடர்பும், வழிகாட்டலும் ஆவியின்மூலம் வருகின்றன.
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
-பிரசங்கி 12 : 7
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
-1 கொரி 2 : 10
மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
-1 கொரி 2 : 11
நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
-1 கொரி 2 : 12
அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
-1 கொரி 6 : 17
மனிதன் = உள்ளே ஆவி → அதனை சுற்றி ஆத்துமா → அதனை மூடிக்கொண்டுள்ள சரீரம்
சுருக்கமான விளக்கம்:
- சரீரம் – இந்த உலகை உணர்வதற்கான ஒரு பகுதி.
- ஆத்துமா – நம்முடைய தனிப்பட்ட விருப்பம்.
- ஆவி – தேவனோடு உள்ள ஆவிக்குரிய உறவிற்கான பகுதி.
ஜீவன் (Life) |
நித்திய ஜீவன் (Eternal Life) |
சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். -லேவியராகமம் 17 : 14 |
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். -யோவான் 17 : 3 |
உயிர் என்றால் இரத்தம் (மாம்சமும், இரத்தமும்) |
மாம்சமும், இரத்தமும் சுதந்தரிக்காது. ஆவியும், ஆத்துமாவும் சுதந்தரித்துக் கொள்ளும் |
சரீரம் சார்ந்தது - தேவன் கொடுக்கும் பரிசு |
ஆவியை சார்ந்தது - இயேசுவில் கிடைக்கும் கிருபையின் பரிசு |
மனிதர்கள் அனைவரும் ஜீவனை அதாவது உயிரைப் பெற்றுள்ளனர். |
இயேசுவை விசுவாசிப்பவர்கள், அவர் கட்டளைகளின்படி நடப்பவர்கள் மாத்திரமே சுதந்தரித்துக் கொள்ள முடியும். |
தற்காலிகமானது |
நிரந்தரமானது |
தேவனோடு உறவு இல்லை |
தேவனோடு நிரந்தர உறவு |
உயிர் உலகத்திலேயே மரித்து போய்விடும். |
மரிக்க முடியாத, மரிக்கக்கூடாத பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ள நித்திய வாழ்வு. |
மரணம் முடிவை தரும் |
மரணம் ஒரு தொடக்கமாக மாறும் |
(2) ஆவியும், பரிசுத்த ஆவியானவரும் வித்தியாசங்கள்
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்- ரோமர் 8 : 16
மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
-1 கொரி 2 : 11
மனிதனின் ஆவி (Human Spirit) |
பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit) |
கர்த்தரால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்டவை (Created by God) |
நித்தியமானவர் (Eternal, uncreated -God himself) |
மனிதன் தேவனுடன் உறவாடுவதற்காக உருவாக்கப்பட்டது (Connects Man with God) |
தேவன் மனிதனுக்குள் வசிக்கிறார். (Connects God with man - dwelling in us) |
அனைத்து மனிதரிலும் இருக்கிறது - மரித்தோ, உயிர்த்தோ (Present in everyone) |
விசுவாசிக்கும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களிடத்தில் (Only in believers - in fullness) |
பாவத்தினால் வந்த ஆவிக்குரிய மரணம்(spiritually dead in sin) |
என்றென்றும் உயிரோடு இருக்கிறார். (Always alive, eternal) |
மனசாட்சி (Conscience), உள்ளுணர்வு(intuition), துதி (worship) |
கண்டித்து உணர்த்துதல் (Conviction), மறுவாழ்வு(regeneration), வழிகாட்டி (guidance) |
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம் ….நீதிமொழிகள் 20 : 27 |
தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடி…ஆதியாகமம் 1 : 2 |
ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கே திரும்பும். பிரசங்கி 12 : 7 |
பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன். யோவான் 14 : 26 |
(3) ஜீவசுவாசமும், ஜீவாத்துமாவும் வித்தியாசங்கள்
- மனிதனுக்கு ஜீவசுவாசம் நாசியில் ஊதப்பட்டதால் ஜீவசுவாசத்தையும் (உயிரையும், சுவாசத்தையும்), ஆவியையும் பெற்று ஜீவாத்துமாவானான். (யோபு 30:23)
- மிருகங்கள் வார்த்தையினால் சிருஷ்டிக்கப்பட்டதால் ஜீவசுவாசத்தை பெற்றது. (ஆதி 7:15) அதாவது உயிரையும், சுவாசத்தையும் பெற்றது. ஜீவாத்துமாவையும்(soul) பெற்றது. ஆனால் அது பேசும் சக்தியைப் பெறவில்லை. தேவனுடைய உருவில் உருவாக்கப்படவில்லை. பரத்திற்கு ஏறும் நித்திய ஆத்துமாவையும், ஆவியையும் பெறவில்லை. (பிரசங்கி 3:21)
ஜீவசுவாசம் (breath of life) |
ஜீவாத்துமா (living soul) |
Nishmat Chayim (Hebrew word) |
Nephesh Chayah (Hebrew word) |
கர்த்தரிடம் இருந்து வருகிறது (From God) |
சுவாசமும், ஆத்துமாவும் ஜீவனடைந்தது)(The result of breath and soul) |
உயிரின் சுவாசம் (உயிரோட்டம்) |
உயிரோடும், ஆளுமையுடன் கூடிய ஆத்துமா |
ஊதப்படுகிறது |
உருவாக்கப்படுகிறது |
உயிரோட்டம் கொடுக்கும் |
ஆவிக்குரிய அடையாளம் கொடுக்கும் |
மனிதன், மிருகம் (ஆதி 7:22) |
மனிதன் பிரதானமாக (ஆதி 1:20-21). பேசுகிற மனுஷனானான் (Speaking being) |
மரிக்கும் போது தேவனிடம் சென்று விடும் (யோபு 34:14) |
சதாகாலமும் உயிரோடு இருக்கும் |
சுவாசம் ஜீவனைக் கொடுத்தது (யோபு 33:4). ஜீவன் உயிரைக் கொடுத்தது. உயிர் இரத்தத்தைக் கொடுத்தது. (லேவி 17:14) |
ஆத்துமா ஆவியுடன் சேர்ந்து தேவனுடன் உறவாடும். |
Temporary - நியாயத்தீர்ப்பு இல்லை |
Permanent - நியாயத்தீர்ப்பு உண்டு |
(4) மிருகங்களுக்கு ஆத்துமாவும்,ஆவியும் உண்டா?
ஆம். மிருகங்களுக்கு ஆத்துமா உண்டு:
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
-ஆதியாகமம் 1 : 20
Genesis 1:20 And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl that may fly above the earth in the open firmament of heaven.
- இந்த இடத்தில் வருகிற ஜீவஜந்துக்கள் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் living creature என்று சொல்லப்படும்.
- இந்த life என்ற வார்த்தை எபிரேய மொழியில் nephesh என்று அழைக்கப்படும்.
- அதன் அர்த்தம் ஆத்துமா(soul) ஆகும்.
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
-பிரசங்கி 3 : 19
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
-பிரசங்கி 3 : 20
உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
-பிரசங்கி 3 : 21
Ecclesiastes 3:21 Who knoweth the spirit of man that goeth upward, and the spirit of the beast that goeth downward to the earth?
- இந்த வசனம், மனிதரும் மிருகங்களும் ஒரே சுவாசம் (ruach) அல்லது ஒரு ஆவியைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
- ஆனால் மனிதனுடைய ஆவி மேலே செல்கிறது, மிருகத்தின் ஆவி பூமிக்குத் திரும்புகிறது என்று ஒரு வேறுபாடும் காட்டுகிறது.
- மிருகங்களுக்கு ஜீவ சுவாசம் (spirit of life) மற்றும் ஆவி இருக்கிறது. ஆனால் மனிதர்களை போல தேவனுடன் உறவாடும் ஆவி இல்லை என்று வேதம் போதிக்கிறது.
கேள்வி |
மிருகங்கள் (Animals) |
மனிதன் (Humans) |
ஜீவாத்துமா உண்டா?? (Living soul??- nephesh in Hebrew). ஜீவசுவாசம் உண்டா? (Breath of life) |
ஆம் |
ஆம் |
தேவனுடைய உருவில் உருவாக்கப்பட்டதா? (Made in God’s image) |
இல்லை |
ஆம் |
நித்திய ஆத்துமா? (Eternal Soul?) |
இல்லை |
இழக்கவும் முடியும். (Can be lost) |
முடிவுரை:
- ஆம்.
- ஜீவன் வேறு. நித்திய ஜீவன் வேறு.
- மனித ஆவி வேறு. பரிசுத்த ஆவியானவர் வேறு.
- ஜீவசுவாசம் வேறு. ஜீவாத்துமா வேறு.
- மனிதன், மிருகம் இரண்டுக்குமே ஆவி, ஆத்துமா, சரீரம் உண்டு.
- ஆனால் அந்த ஆவி நாசியிலே ஊதப்படாததால் தேவனோடு உறவாட முடியாது.
- அதனால் பேசவும் முடியாது.
- மனிதனுக்கு மாத்திரமே பிரத்யேகமாக தேவனுடன் உறவாடும் ஆவி உண்டு.
- உலகத்திலேயே பேசுகிற ஒரே ஜீவன் மனிதன் மாத்திமே!
- தேவனோடு பேச முடிந்தவனும் மனிதன் மட்டுமே.
- ஆவி அவனுக்குள் உயிரடைந்து இருந்தால், இதையெல்லாம் அவன் செய்ய முடியும்.
- இந்த ஆவி மரித்த நிலையில் இருந்தாலும் சரி, உயிர்த்த நிலையில் இருந்தாலும் சரி, தேவனிடமே சென்று விடும்.
- ஆத்துமா என்பது நியாயத்தீர்ப்படைந்து பரலோகத்திற்கோ, நரகத்திற்கோ செல்லும்.
- சரீரம் மண்ணுக்கே திரும்பும்.
- மிருகங்களின் ஆவி, ஆத்துமா, சரீரம் பூமிக்கேத் திரும்பும்.
- இதுவே அந்த ஆவி, ஆத்துமா, சரீரத்தின் இரகசியம்.
Comments
Post a Comment