ஆவி, ஆத்துமா, சரீரம்

ஆவி, ஆத்துமா, சரீரம் 

பைபிளின்படி “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்றால் என்ன? 

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

 -1 தெசலோனிக்கேயர் 5 : 23


இங்கு மனிதன் மூன்று பாகங்களாக குறிப்பிடப்படுகிறான்:


சரீரம் (Body – Greek: sōma) - Physiological

  • நம்முடைய உடம்பாகிய சரீரம்.
  • சரீரம் (1) பார்ப்பது, (2) கேட்பது, (3) சுவாசிப்பது, (4) சுவைப்பது, (5) தொடுவது போன்ற 5 உணர்வுகள் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது.
  • சரீரம் மரணத்திற்கு உட்பட்டது.
  • சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக விளங்குகின்றது.

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

 -1 கொரி 6 : 19


ஆத்துமா (Soul – Greek: psuchē) - Psychological

  • ஆத்துமா என்பது முடிவெடுக்கும் பகுதியாக அமைகின்றது.
  • ஆத்துமாவால் நாம் யார் என்பதற்கான அடையாளம் ஏற்படுகிறது.
  • நம்முடைய உள்ளார்ந்த மனிதனின் மனது (mind), உணர்வு (emotions), சிந்தனை(thinking), மற்றும் ஆசை (will) ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • ஆத்துமாவில் உங்கள் மனம், விருப்பம், உணர்ச்சிகள் ஆகியவை வாழ்கின்றன. 
உங்கள் மனம் - நீங்கள் கற்பனை செய்வது. 
உங்கள் விருப்பம் - நீங்கள் விரும்புவது. 
உங்கள் உணர்ச்சிகள் - நீங்கள் உணருவது. 
  • ஆத்துமா என்பது உடலுக்கும் ஆவிக்கும் இடையிலான நடுநிலையான பகுதியாகும். 
  • ஆத்துமா நித்தியமானது, மேலும் அனைவருக்கும் ஒரு ஆத்துமா மீட்கப்பட்ட மற்றும் மீட்கப்படாத நிலையில் உள்ளது.
  • ஆத்துமாக்கு சுய சித்தம் (free will) கொடுக்கப்பட்டுள்ளது. 
துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.
 -நீதிமொழிகள் 21 : 10
Proverbs 21:10 The soul of the wicked desireth evil: his findeth no favour in his eyes.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
 -3 யோவான் 1 : 2

சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
 -யோபு 12 : 10
Job 12:10 In whose hand is the soul of every living thing, and the breath of all mankind.


ஆவி (Spirit – Greek: pneuma) - Spiritual

  • இது நாம் தேவனோடு தொடர்புக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
  • மனிதனுடைய ஆவி பாவத்தின் காரணமாக “மரித்திருந்தது” , ஆனால் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய ஜீவனைப் பெறுகிறது.
  • தேவனுடனான தொடர்பும், வழிகாட்டலும் ஆவியின்மூலம் வருகின்றன.
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
 -எபேசியர் 2 : 1

இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

 -பிரசங்கி 12 : 7


நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.

 -1 கொரி 2 : 10 

மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

 -1 கொரி 2 : 11

நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

 -1 கொரி 2 : 12


அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

 -1 கொரி 6 : 17


மனிதன் = உள்ளே ஆவி → அதனை சுற்றி ஆத்துமா → அதனை மூடிக்கொண்டுள்ள சரீரம்



சுருக்கமான விளக்கம்:

  • சரீரம் – இந்த உலகை உணர்வதற்கான ஒரு பகுதி.
  • ஆத்துமா – நம்முடைய தனிப்பட்ட விருப்பம்.
  • ஆவி – தேவனோடு உள்ள ஆவிக்குரிய உறவிற்கான பகுதி.
நாம் சில வித்தியாசங்களை தெரிந்துகொண்டால் இன்னும் அதிகமாக இந்த ஆவி, ஆத்துமா, சரீரத்தை அறிந்துகொள்ள முடியும். 

(1) ஜீவனும், நித்திய ஜீவனும் வித்தியாசங்கள்

ஜீவன் (Life)

நித்திய ஜீவன் (Eternal Life)

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

 -லேவியராகமம் 17 : 14

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

 -யோவான் 17 : 3

உயிர் என்றால் இரத்தம் (மாம்சமும், இரத்தமும்)

மாம்சமும், இரத்தமும் சுதந்தரிக்காது. ஆவியும், ஆத்துமாவும் சுதந்தரித்துக் கொள்ளும்

சரீரம் சார்ந்தது - தேவன் கொடுக்கும் பரிசு

ஆவியை சார்ந்தது - இயேசுவில் கிடைக்கும் கிருபையின் பரிசு

மனிதர்கள் அனைவரும் ஜீவனை அதாவது உயிரைப் பெற்றுள்ளனர்.

இயேசுவை விசுவாசிப்பவர்கள், அவர் கட்டளைகளின்படி நடப்பவர்கள் மாத்திரமே சுதந்தரித்துக் கொள்ள முடியும். 

தற்காலிகமானது

நிரந்தரமானது 

தேவனோடு உறவு இல்லை

தேவனோடு நிரந்தர உறவு

உயிர் உலகத்திலேயே மரித்து போய்விடும். 

மரிக்க முடியாத, மரிக்கக்கூடாத பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ள நித்திய வாழ்வு.

மரணம் முடிவை தரும்

மரணம் ஒரு தொடக்கமாக மாறும்


(2) ஆவியும், பரிசுத்த ஆவியானவரும் வித்தியாசங்கள்


நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்- ரோமர் 8 : 16


மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

 -1 கொரி 2 : 11


மனிதனின் ஆவி (Human Spirit)

பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit)

கர்த்தரால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்டவை (Created by God)

நித்தியமானவர் (Eternal, uncreated -God himself)

மனிதன் தேவனுடன் உறவாடுவதற்காக உருவாக்கப்பட்டது (Connects Man with God)

தேவன் மனிதனுக்குள் வசிக்கிறார். (Connects God with man - dwelling in us)

அனைத்து மனிதரிலும் இருக்கிறது - மரித்தோ, உயிர்த்தோ (Present in everyone)

விசுவாசிக்கும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களிடத்தில் (Only in believers - in fullness)

பாவத்தினால் வந்த ஆவிக்குரிய மரணம்(spiritually dead in sin)

என்றென்றும் உயிரோடு இருக்கிறார். (Always alive, eternal)

மனசாட்சி (Conscience), உள்ளுணர்வு(intuition), துதி (worship)

கண்டித்து உணர்த்துதல் (Conviction), மறுவாழ்வு(regeneration), வழிகாட்டி (guidance)

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம் ….நீதிமொழிகள் 20 : 27

தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடி…ஆதியாகமம் 1 : 2

ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கே திரும்பும். பிரசங்கி 12 : 7

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன். யோவான் 14 : 26



(3) ஜீவசுவாசமும், ஜீவாத்துமாவும் வித்தியாசங்கள்

  • மனிதனுக்கு ஜீவசுவாசம் நாசியில் ஊதப்பட்டதால் ஜீவசுவாசத்தையும் (உயிரையும், சுவாசத்தையும்), ஆவியையும் பெற்று ஜீவாத்துமாவானான். (யோபு 30:23)
  • மிருகங்கள் வார்த்தையினால் சிருஷ்டிக்கப்பட்டதால் ஜீவசுவாசத்தை பெற்றது. (ஆதி 7:15) அதாவது உயிரையும், சுவாசத்தையும் பெற்றது. ஜீவாத்துமாவையும்(soul) பெற்றது. ஆனால் அது பேசும் சக்தியைப் பெறவில்லை. தேவனுடைய உருவில் உருவாக்கப்படவில்லை. பரத்திற்கு ஏறும் நித்திய ஆத்துமாவையும், ஆவியையும் பெறவில்லை. (பிரசங்கி 3:21)


ஜீவசுவாசம் (breath of life)

ஜீவாத்துமா (living soul) 

Nishmat Chayim (Hebrew word)

Nephesh Chayah (Hebrew word)

கர்த்தரிடம் இருந்து வருகிறது (From God)

சுவாசமும், ஆத்துமாவும் ஜீவனடைந்தது)(The result of breath and soul) 

உயிரின் சுவாசம் (உயிரோட்டம்)

உயிரோடும், ஆளுமையுடன் கூடிய ஆத்துமா

ஊதப்படுகிறது

உருவாக்கப்படுகிறது

உயிரோட்டம் கொடுக்கும்

ஆவிக்குரிய அடையாளம் கொடுக்கும்

மனிதன், மிருகம் (ஆதி 7:22)

மனிதன் பிரதானமாக (ஆதி 1:20-21). பேசுகிற மனுஷனானான் (Speaking being) 

மரிக்கும் போது தேவனிடம் சென்று விடும் (யோபு 34:14)

சதாகாலமும் உயிரோடு இருக்கும்

சுவாசம் ஜீவனைக் கொடுத்தது (யோபு 33:4). ஜீவன் உயிரைக் கொடுத்தது. உயிர் இரத்தத்தைக் கொடுத்தது. (லேவி 17:14)

ஆத்துமா ஆவியுடன் சேர்ந்து தேவனுடன் உறவாடும்.

Temporary - நியாயத்தீர்ப்பு இல்லை

Permanent - நியாயத்தீர்ப்பு உண்டு


(4) மிருகங்களுக்கு ஆத்துமாவும்,ஆவியும் உண்டா?


ஆம். மிருகங்களுக்கு ஆத்துமா உண்டு:


பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

 -ஆதியாகமம் 1 : 20

Genesis 1:20 And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl that may fly above the earth in the open firmament of heaven.

  • இந்த இடத்தில் வருகிற ஜீவஜந்துக்கள் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் living creature என்று சொல்லப்படும். 
  • இந்த life என்ற வார்த்தை எபிரேய மொழியில் nephesh என்று அழைக்கப்படும். 
  • அதன் அர்த்தம் ஆத்துமா(soul) ஆகும். 
ஆம். மிருகங்களுக்கு ஆவி உண்டு:

மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

 -பிரசங்கி 3 : 19

எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

 -பிரசங்கி 3 : 20


உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

 -பிரசங்கி 3 : 21

Ecclesiastes 3:21 Who knoweth the spirit of man that goeth upward, and the spirit of the beast that goeth downward to the earth?

  • இந்த வசனம், மனிதரும் மிருகங்களும் ஒரே சுவாசம் (ruach) அல்லது ஒரு ஆவியைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. 
  • ஆனால் மனிதனுடைய ஆவி மேலே செல்கிறது, மிருகத்தின் ஆவி பூமிக்குத் திரும்புகிறது என்று ஒரு வேறுபாடும் காட்டுகிறது.
  • மிருகங்களுக்கு ஜீவ சுவாசம் (spirit of life) மற்றும் ஆவி இருக்கிறது. ஆனால் மனிதர்களை போல தேவனுடன் உறவாடும் ஆவி இல்லை என்று வேதம் போதிக்கிறது.

(5) ஜீவாத்துமா மனிதனுக்கும் உண்டு; மிருகங்களுக்கும் உண்டு

கேள்வி

மிருகங்கள் (Animals)

மனிதன் (Humans)

ஜீவாத்துமா உண்டா?? (Living soul??- nephesh in Hebrew). ஜீவசுவாசம் உண்டா? (Breath of life)

ஆம் 

ஆம்

தேவனுடைய உருவில் உருவாக்கப்பட்டதா? (Made in God’s image)

இல்லை

ஆம்

நித்திய ஆத்துமா? (Eternal Soul?)

இல்லை 

இழக்கவும் முடியும். (Can be lost)


முடிவுரை:

  • ஆம். 
  • ஜீவன் வேறு. நித்திய ஜீவன் வேறு.
  • மனித ஆவி வேறு. பரிசுத்த ஆவியானவர் வேறு.
  • ஜீவசுவாசம் வேறு. ஜீவாத்துமா வேறு. 
  • மனிதன், மிருகம் இரண்டுக்குமே ஆவி, ஆத்துமா, சரீரம் உண்டு. 
  • ஆனால் அந்த ஆவி நாசியிலே  ஊதப்படாததால் தேவனோடு உறவாட முடியாது. 
  • அதனால் பேசவும் முடியாது. 
  • மனிதனுக்கு மாத்திரமே பிரத்யேகமாக தேவனுடன் உறவாடும் ஆவி உண்டு.
  • உலகத்திலேயே பேசுகிற ஒரே ஜீவன் மனிதன் மாத்திமே!
  • தேவனோடு பேச முடிந்தவனும் மனிதன் மட்டுமே.
  • ஆவி அவனுக்குள் உயிரடைந்து இருந்தால், இதையெல்லாம் அவன் செய்ய முடியும். 
  • இந்த ஆவி மரித்த நிலையில் இருந்தாலும் சரி, உயிர்த்த நிலையில் இருந்தாலும் சரி, தேவனிடமே சென்று விடும். 
  • ஆத்துமா என்பது நியாயத்தீர்ப்படைந்து பரலோகத்திற்கோ, நரகத்திற்கோ செல்லும். 
  • சரீரம் மண்ணுக்கே திரும்பும். 
  • மிருகங்களின் ஆவி, ஆத்துமா, சரீரம் பூமிக்கேத் திரும்பும். 
  • இதுவே அந்த ஆவி, ஆத்துமா, சரீரத்தின் இரகசியம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4