உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2
உன்னதப்பாட்டு -அதிகாரம் 2 -விளக்கம்
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.
-உன்னதப்பாட்டு 2 : 1
-உன்னதப்பாட்டு 2 : 1
விளக்கம்:
மணவாளன் தன்னைப் பற்றி பேசுகிறார்.
நான்
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (Haya) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
-யாத்திராகமம் 3 : 14
- மோசேக்கு தன்னை வெளிப்படுத்தின தேவனைக் குறிக்கும்.
- அதே சொல்லை இயேசுவானவர் புதிய ஏற்பாட்டில் பலமுறை உபயோகித்து, தான் தான் ஆபிரகாமிற்கு முன்னேயே இருந்த அந்த தேவன்( Haya) என்பதனை காட்டியிருக்கின்றார்.
- எனவே, இயேசுவானவர் தேவனாய் நம்மிடம் பேசுகிறார்.
சாரோனின் ரோஜாவும்
அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள்.
-1 நாளாகமம் 5 : 16
சாரோன் அமைந்திருக்கின்ற இடம்:
Tel-Aviv மற்றும் Haifa இந்த இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்த இடம் தான் சாரோன்.
- சாரோனின் ரோஜாச் செடிக்கு நம் ரோஜாக்களில் உள்ள முள்போல குத்தும் முட்கள் இல்லை.
- முள் போல தோற்றமளிக்கும் ஒரு மெதுவான ஒன்று சில வகை சாரோனின் ரோஜாக்களில் உண்டு.
- ஆனால் அது குத்தாது.
- தொட்டால் மடியும்.
- ஆனால் அதை முள் என்று சொல்லவும் முடியாது.
- Botanical name of this flower: Chabatstseleth
- தமிழிலே இதை பாலைவன ரோஜா என்று கூட சொல்லலாம்.
- அந்த நிலத்துக்கே அழகு கொடுக்கின்ற சின்ன பூக்கள்.
- நமக்கு தெரிந்த ரோஜாவை விட சிறியது.
- அதனுடைய வாசனை தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கும்.
- இதை பயன்படுத்தி வாசனைத் திரவியங்கள் உண்டு பண்ணுவார்கள்.
- நான் சாரோனின் ரோஜாவாய் தொடர்ந்து நறுமணம் வீசுகின்றவராய் இருக்கிறேன் என்று இயேசுவானவர் சொல்கிறார்.
லீலிபுஷ்பம்:
- இஸ்ரவேலிலே பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பத்தில் பூ பூத்தால் மழை வரப் போகிறது என்று நம்புவார்கள்.
- இஸ்ரவேல், மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்.
- அந்த பள்ளத்தாக்குகளில் விளையக்கூடிய பூ தான் இது.
- இந்த பக்கம் ஒரு மலை, இன்னொரு பக்கம் ஒரு மலை, பள்ளத்தாக்கு கீழே இருக்கிறது.
- இயேசுவானவர் பரலோகத்திலிருந்து நமக்காக இறங்கி வந்தவர்.
- பூமி என்பது ஆண்டவரை பொறுத்தவரை ஒரு பள்ளத்தாக்குக்கு சமம்.
- பள்ளத்தாக்குகளை மலர்ந்த இடங்களாக மாற்ற, அந்த தாழ்வான இடங்களுக்கு தேவன் இறங்கி வந்தார்.
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
-ஏசாயா 35 : 1
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
-ஏசாயா 35 : 2
- பள்ளத்தாக்கு என்பது அடையாளரீதியாக ஒரு நல்ல இடம் அல்ல.
- பாபேல் கோபுரம் கட்டப்பட்ட இடம் மெசபொத்தேமியா.
- Accordian மொழியிலே, மெசா-பள்ளத்தாக்கு; பொத்தேமியா-இரு நதிகள்.
- இரு நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கின்ற பள்ளத்தாக்கு.
- அது தான் மெசபொத்தேமியா நாகரீகம் என்று பார்க்கிறோம்.
- பாபிலோன் என்ற பெயர் பாபேல் அந்த சொல்லிருந்து வந்தது.
- பாபேல் என்றால் தேவனுடைய வாசல் என்று பொருள்.
- பள்ளத்தாக்குகளில் தான் நாகரீகம் தோன்றியது.
- அதில் முதல் நாகரீகம் மெசபொத்தேமியா,
- அடுத்த நாகரீகம் மொகஞ்ஜதாரோ ஹரப்பா.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
-சங்கீதம் 23 : 4
நம் ஆண்டவராகிய இயேசு பள்ளத்தாக்காகிய பூமிக்கு, இருளான பூமிக்கு இறங்கி வந்து, இந்த இடத்தை லீலிபுஷ்பம் போல அழகாக்கி வைத்திருக்கிறார்.
முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
-உன்னதப்பாட்டு 2 : 2
-உன்னதப்பாட்டு 2 : 2
விளக்கம்:
- மணவாளன் சபையை பற்றி பேசுகிறார்.
- தன்னை லீலிபுஷ்பத்திற்கு ஒப்பிட்ட நம் தேவன், மணவாட்டியாகிய நம்மையும் லீலிபுஷ்பத்திற்கு ஒப்பிடுகிறார்.
முள்ளுகளுக்குள்ளே (குமாரத்திகளுக்குள்ளே)
முள்ளுகள் என்றால் உலகத்தில் வாழுகின்ற இரட்சிக்கப்படாத மக்கள்.
லீலிபுஷ்பம் (எனக்குப் பிரியமானவளும்)
மணவாட்டி-சபை-இரட்சிக்கப்பட்டவர்கள்
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.
-மத்தேயு 10 : 16
ஆடுகள்-இரட்சிக்கப்பட்டவர்கள்; ஓநாய்கள்-இரட்சிக்கப்படாதவர்கள்.
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
-யோவான் 15 : 19
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
-1 யோவான் 5 : 19
- நாம் லீலியாய் மாறிவிட்டால், முள்ளாய் இருப்பவர்களை பார்த்து வேதனை, கவலை தான் நமக்கு வர வேண்டும்.
- அந்த மக்களையும் லீலிபுஷ்பமாய் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
Martin Luther சொல்கிறார்;
நீ இயேசுவின் லீலியானால், பொறுமையின்மை, குற்றம் பிடித்தல், பெருமை போன்றவற்றால், நீயும் முள்ளாகி விடாதே.
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 2 : 3
-உன்னதப்பாட்டு 2 : 3
விளக்கம்:
மணவாட்டியாகிய சபை பேசுகிறது.
கிச்சிலி மரம்- Tappuwach in Hebrew
- இது ஒரு அடர்த்தியான மரம்.
- அதிக நிழல் தரக்கூடிய மரம்.
- அது போல என் தேவனின் நிழலில் நான் இளைப்பாறுகிறேன் என்று மணைவாட்டியாகிய சபை சொல்கிறது.
காட்டுமரங்களுக்குள்ளே(குமாரருக்குள்ளே)
நாம் எல்லாரும் படைப்பால் தேவனின் பிள்ளைகள் (குமாரர்கள்) ஆக இருந்தாலும், கிறிஸ்துவே தேவனின் பிரதான குமாரர்.
அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது
ஆவியின் கனிகளும் , மற்ற ஆசீர்வாதங்களும்.
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
-சங்கீதம் 91 : 1
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
-ஏசாயா 4 : 5
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
-ஏசாயா 4 : 6
அவருடைய நிழல் எனக்கு ஓய்வு.
என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
-உன்னதப்பாட்டு 2 : 4
-உன்னதப்பாட்டு 2 : 4
விளக்கம்:
மணவாட்டியாகிய சபை பேசுகிறது.
என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்
- Ha’ya’yim in Hebrew ; திராட்சைரசவீடு என்று பொருள்.
- திராட்சைரசம் இஸ்ரவேலருக்கு களிப்பின் பானம், ஒரு மகிழ்ச்சி, சந்தோஷம்.
- இந்த இடத்தின் விசேஷத்துவம் என்னவென்றால், கண்டவர்களும் போகக் கூடிய இடம் அது அல்ல.
- அரசர்களும், முக்கியமானவர்களும் மட்டுமே போகக் கூடிய ஒரு இடம்.
- அரசர்கள் யாருக்கு விருந்து கொடுப்பார்கள்?
- பழைய ஏற்பாட்டில், தானயேல் 5 வது அதிகாரத்தில் பெல்சாத்ஷார் மன்னன் கொடுத்த விருந்தாய் இருக்கட்டும்.
- புதிய ஏற்பாட்டில் ஏரோது மன்னன் கொடுத்த விருந்தாய் இருக்கட்டும்.
- மற்ற அரசர்களுக்கு அல்லது முக்கியமானவர்களுக்கு மட்டுமே விருந்து கொடுப்பார்கள்.
- ஆண்டவராகிய இயேசு என்னை விருந்து சாலைக்கு அழைத்து செல்கிறார் என்றால் நான் அவருக்கு எவ்வளவு முக்கியமான ஆள் நான்.
- விருந்து வைக்கிறேன் வாருங்கள் என்று சொல்லவில்லை.
- அவரே கூட அழைத்து கொண்டு போனார்.
என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே
- விருந்து சாலைக்கு முக்கியமானவர்களை அழைத்து கொண்டு போகும் பொழுது அந்த பிரமுகர்களின் அதி முக்கிய விசேஷமான விருந்தாளியை அந்த விருந்து கொடுப்பவரே வந்து, ஒரு கொடி ஒன்றை பிடித்து அப்படியே கொண்டு போவார்.
- அது ஒரு உயர்ந்த மரியாதை.
- இந்தியாவில் பொன்னாடை போர்த்துவோமே, அதையும் விட ஒரு பெரிய மரியாதை.
- அந்த கொடி நேசம்.
- ராஜாக்களின் விருந்துகளுக்கே போக தகுதி இல்லாத நான், ராஜாதி ராஜாவானவரின் விருந்துக்கு போகவும் தகுதி இல்லாத நான்.
- அப்படிப்பட்ட இடத்திற்கு போனேன்.
- அதுவும் ஆள் விட்டு அனுப்பாமல் அவரே வந்து என்னை அழைத்து கொண்டு போகிறார்.
- VIP க்கு ஏற்ற அந்த கொடியை என் மேல் பறம்ப பண்ணி என்னை அழைத்து செல்கிறார்.
- என் தகுதியின்மையை அவரது நேசம் மூடி விடுகின்றது.
- அது தான் அவர் கிருபை
- Charis in Greek
- Grace in English
- கிருபை in தமிழ்
- Unmerited favor of God
- நாம் பெற்றுக் கொள்ள தகுதி இல்லாத அவருடைய நேசத்தை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
- Di’ga’lo in Hebrew -கொடி
- கௌரவமாய் முக்கியமானவர்களை போர்த்தி அழைத்து கொண்டு வருகிற ஒரு கொடி அது.
திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.(How’laat)
-உன்னதப்பாட்டு 2 : 5
-உன்னதப்பாட்டு 2 : 5
விளக்கம்:
மணவாட்டியாகிய சபை பேசுகிறது.
- வேதத்தின் படி திராட்சைரசம் என்பது, வேதனையாய் இருப்பவர்களுக்கு, கவலையாய் இருப்பவர்களுக்கு திராட்சைரசத்தை கொடுத்து தேற்றுங்கள்.
- திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள் என்று சபை சொல்கிறது.
- ஏன் தேற்ற வேண்டும்?
- குழம்பி போயிருக்கிறேன்.
- ஆனால் இது நல்ல விதமான குழப்பம் தான்.
- ஆச்சர்யத்தால் நான் நா வறண்டு போயிருக்கிறேன்.
- இதற்குரிய எபிரேயச் சொல் How’laat ஹவ்லாட் in Hebrew.
யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; (How’laat) அவன் அவர்களை நம்பவில்லை.
-ஆதியாகமம் 45 : 26
- தனது மகனாகிய யோசேப்பு எப்போதோ செத்துப் போய்விட்டான் என்று எண்ணிகொண்டிருந்த யாக்கோபுக்கு
- அவன் இன்னும் சாகவில்லை, உயிரோடு இருக்கிறான் என்று கேள்விப்பட்டவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
- ஒரு mixed feeling. ஒரு குழப்பம்.
- அந்த சொல் தான் இங்கு How’laat ஹவ்லாட் in Hebrew என்ற சொல்.
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவன் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு (How’laat)
-1 இராஜாக்கள் 10 : 5
- என்னை என் குடும்பமே மதிப்பதில்லை, நண்பர்களும் மதிப்பதில்லை.
- ஆனால் நீர் என்னை விருந்து சாலைக்கு அழைத்து செல்கிறீரே என்ற இன்ப அதிர்ச்சி.
அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
-உன்னதப்பாட்டு 2 : 6
-உன்னதப்பாட்டு 2 : 6
விளக்கம்:
- மணவாட்டியாகிய சபை பேசுகிறது.
- படுக்கை என்பது ஓய்வு, இளைப்பாறுதல்.
- ஆண்டவராகிய இயேசுவின் இடதுகை எனக்கு தலையணையாய் இருக்கிறது.
- எவ்வளவு பாக்கியவான்கள் நாம்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
-மத்தேயு 11 : 28
- இந்த புதிய ஏற்பாட்டு வசனத்தின், தீர்க்கத்தரிசன வசனம் தான் இந்த 6வது வசனம்.
- வலது கை என்பது வல்லமை, ஆசீர்வாதம், பெலம், பாதுகாப்பு, வழிநடத்துதல்.
- அவர் என்னை அணைத்துக் கொள்ளும்போது சகல ஆசீர்வாதங்களும் நமக்கு கிடைக்கின்றது.
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
-உன்னதப்பாட்டு 2 : 7
-உன்னதப்பாட்டு 2 : 7
விளக்கம்:
எருசலேமின் குமாரத்திகளே
யூதர்கள்
ஆணையிடுகிறேன்
ஆணையிடுதல்-கட்டளை
வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
- ஏன் வெளிமான், வெளிமரை.
- ஏனென்றால் அவைகள் அமைதியான மிருகங்கள். கொடிய மிருகங்கள் அல்ல.
- மரை என்பது ஒரு வகை மான்
மரை
- இளைப்பாறுதலில் இருக்கிற என் மணவாட்டியை தயவு செய்து எழுப்பாதீர்கள்.
- அதாவது குழப்பாதீர்கள் (Don’t Disturb) என்று மணவாளன் சொல்கிறார்.
- ஆபத்தில்லாத அமைதியான மிருகங்களின் மேல் ஆணையிடுகிறார்.
- அப்படியென்றால் அது எதை காட்டுகிறது. மணவாளன் அமைதியாக கெஞ்சி கேட்கிறார்.
- விழிக்க பண்ணாதே என்று பிசாசிடம் ஆண்டவர் கெஞ்சவில்லை. கெஞ்சவும் மாட்டார்.
- இது யூதர்களை பார்த்து கெஞ்சி கேட்கிறார்.
விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி
- எழுப்புவது என்றால், அந்த ஆளே வந்து தட்டி எழுப்புவது.
- விழிக்கப்பண்ணுதல் என்றால் மற்றவர்கள் சத்தமாய் பேசிக் கொண்டிருப்பது, பொருட்களை சத்தமாய் உபயோகிப்பது.
- தனது மூத்த பிள்ளையாகிய யூதர்களை பார்த்து, தன் இளைய பிள்ளையாகிய சபை தூங்குகிறாள் எழுப்பாதே என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
- இதை தீர்க்கத்தரிசனமாக 3000 ஆண்டுகளுக்கு முன்னமே, ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
- கி.பி.70 லே சிதறடிக்கப்பட்ட யூதர்கள், 1948 ல் மறுபடியும் வந்தனர்.
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
-பிலிப்பியர் 3 : 2
நாய்கள்-கள்ள உபதேசகர்கள்;
சுன்னத்துக்காரருக்கு-யூத விஷயங்களை நம்மேல் திணிக்கிறவர்கள்.
சுன்னத்துக்காரர்கள் என்பது இஸ்லாமியரை குறிக்கிறதா?
- விருத்தசேதனத்தைத் குறிக்கும் கிரேக்கச்சொல் ‘பெரிடோமே-peridomeh' .
- விருத்தசேதனம் பெற்றவர்கள் என்பது பொதுவாக யூதர்களைத் தான் குறிக்கும்.
- விருத்தசேதமில்லாதவர்கள் என்று குறிப்பிடுவது யூதரல்லாதவர்களையே.
- அதற்கான கிரேக்கச்சொல் ‘அப்பெரிடெமோஸ்’.
- பிலிப்பியர் 3:2 ல் வருவது ‘கட்டாடோமென்-katatome'
- எனும் கிரேக்கச்சொல்.
- இச்சொல் வேதத்தில் வேறெங்கும் இல்லை.
- இதன் அர்த்தம் ‘முறையற்ற விருத்தசேதனம்’ என்பதாகும்.
- யூதரல்லாதவர்கள் யூதர்களாகும்போது விருத்தசேதனம் பண்ணிக்கொள்வது நியாயம்.
- யூதரல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாகும் போது அவர்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பது முறையா? இல்லையே!
- இரட்சிக்கப்படும் புறஜாதியார் யூத மத மற்றும் யூதக் கலாச்சார விடயங்களுக்கு உள்ளடக்கப்படுவது கிறிஸ்தவத்துக்கும் முரணானது.
- யூதத்துவத்துக்கும் முரணானது.
- இஸ்லாம் வந்தது கி.பி 610ம் ஆண்டு.
- அதற்குச் சுமார் 550 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டது பிலிப்பியர் நிரூபம்.
- ஆகவே, பவுலடியார் இஸ்லாமியரைக் குறிக்க வழியில்லை.
- அவர் பயன்படுத்துகின்ற சொல் கோபத்தில் வருகின்றது.
- பயங்கர கோபத்தில் அவர்களை திட்டி குறிப்பிடுகின்றார்.
யூத பழக்கங்கள்:
Tallit- ஜெப சால்வையை போர்த்தி கொள்ளுதல்
Shofar-ஊதிக் கொண்டு வருவது
Menorah- விளக்கு உபயோகிப்பது
Kosher- சுத்த உணவு, அசுத்த உணவு
shabbat-ஓய்வுநாள்
yeshuva -தேவனுடைய பெயரை எபிரேய மொழியில் உபயோகிப்பது
- Parashah
- உலகெங்கிலும் இருக்கின்ற யூதர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் இந்த இந்த வசனங்களை தான் வாசிக்க வேண்டும் என்று எருசலேமில் உள்ள ரபிகளின் தலைமையகம், அந்த வருட ஆரம்பத்திலேயே நிர்ணயிக்கும்.
- ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான அந்த 52 shabbat -கு தேவையான 52 parashah வையும் அவர்கள் கொடுப்பார்கள்.
இவையெல்லாம் நமக்கு தேவையில்லை. எனவே, இவற்றை கொண்டு குழப்பி(எழுப்பி) கொண்டிருக்க வேண்டாம்.
வசனம் 8-17:
கடைசிகால தீர்க்கத்தரிசனங்கள்.
Eschatology -கடைசிக்கால உபதேசம்
Pre-Millennial Pre-Tribulational Rapture Theorist (our Belief)
ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு, உபத்திரவகாலத்திற்கு முன்பு, சபை எடுத்து கொள்ளப்படும் என்பது எங்கள் நம்பிக்கை.
இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
-உன்னதப்பாட்டு 2 : 8
-உன்னதப்பாட்டு 2 : 8
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
- இது சபை எடுத்துக்கொள்ளுதலைக் குறிக்கும்.
- அவர் சபையை எடுத்துக் கொள்ள வரும் போது, அவர் மலைகள்மேல் குதித்தும், மேடுகள்மேல் துள்ளியும் வருவதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரகசிய வருகையை குறித்த தீர்க்கத்தரிசனத்தை சாலொமோன் அன்றே சொல்லியிருக்கிறார்.
இது என் நேசருடைய சத்தம்
எக்காள சத்தம்
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
-1 கொரி 15 : 52
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
-1 தெசலோனிக்கேயர் 4 : 16
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
-1 தெசலோனிக்கேயர் 4 : 17
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
-உன்னதப்பாட்டு 2 : 9
-உன்னதப்பாட்டு 2 : 9
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்.
- இஸ்ரவேலில் இருக்கிற இந்த விலங்குகள் மிகவும் அழகாக துள்ளி குதிக்கும்.
- இதற்கு ஆங்கிலத்தில் Antelope -வெளிமான் என்று சொல்லுவார்கள்.
- மரையை விட மரைக்குட்டி அழகாக துள்ளி குதித்து ஒடும்.
இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து,
- பரலோகத்தை விட்டு புறப்பட்டு வருகின்ற இயேசுவானவர் பூமியை நோக்கி வந்தாலும், பூமிக்குள் வரவில்லையாம்.
- அவர் நடுவானத்திற்கு வந்து,
- இந்த பூமியை நோக்கி பார்க்கிறாராம்.
- பூமியில் இருக்கிற தனது மணவாட்டியையும், மணவாளனின் தோழரையும்(பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) பார்க்கிறார்.
எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று
பூமிக்கு புறம்பே மேகங்களில் நின்று,
பலகணி வழியாய்ப் பார்த்து
Window, ஜன்னல் - வழியாய்ப் பார்த்து
கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
கிராதி-Lattice, Fence,வேலி
அதாவது, மேகங்களின் மேல் இருந்து மணவாட்டியை காண்கிறார் என்று மணவாட்டியே குறிப்பிடுகிறாள்.
என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.
-உன்னதப்பாட்டு 2 : 10
-உன்னதப்பாட்டு 2 : 10
விளக்கம்:
- மணவாளன் பேசுவது போல, மணவாட்டி பேசுகிறாள்.
என் நேசர்
மணவாளன்(இயேசு).
என்னோடே பேசி
சபையாகிய என்னோடே பேசி.
என் பிரியமே! என் ரூபவதியே!
இயேசு சபையை பார்த்து சொல்கிறார்.
எழுந்துவா
இயேசு நம்மை எடுத்துக் கொள்ள மேலே அழைக்கிறார்.
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
-வெளிப்படுத்தல் 4 : 1
- ஆண்டவர், இதற்கு பின்பு சபை மேலே இருக்க வேண்டும் என்று அடையாள ரீதியாக யோவானை ஒரு ஆவிக்குரிய ரீதியில் பரலோகம் கொண்டு போய் இந்த வெளிப்படுத்தின விஷேசத்தை கொடுத்திருக்கிறார்.
- சபை எடுத்துக்கொள்ளப்படும் போது, மணவாளன் மணவாட்டியை வரவேற்கிறார்.
இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.
-உன்னதப்பாட்டு 2 : 11
-உன்னதப்பாட்டு 2 : 11
விளக்கம்:
- மணவாளன் பேசுவது போல, மணவாட்டி பேசுகிறாள்.
மாரிகாலம் சென்றது
- சபையே, உன் பூமிக்குரிய வாழ்க்கை முடிந்துவிட்டது.
- கிருபையின் காலம் முடிந்தது.
- சபையின் காலம் முடிந்தது.
- மாரிக்காலம் என்பது மழை பெய்வதை காட்டுகிறது.
மழைபெய்து ஒழிந்தது
- மழை பெய்வது பரலோகத்தில் அல்ல, பூலோகத்தில் தான்.
- மழை என்பது ஆசீர்வாதத்தையும் குறிக்கும்,
- ஆபத்தையும் குறிக்கும்.
- எனவே, இனி நல்லது கெட்டது எதுவுமில்லை, அனைத்தும் ஒழிந்தது.
பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
-உன்னதப்பாட்டு 2 : 12
-உன்னதப்பாட்டு 2 : 12
விளக்கம்:
- மணவாளன் பேசுவது போல, மணவாட்டி பேசுகிறாள்.
புஷ்பங்கள்
யூதர்கள்
பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது
- சபை எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதற்காக பூமி வெறுமையாகவில்லை.
- இன்னும் பூக்கள் இருக்கிறது.
- அதாவது இன்னும் யூதர்கள் இருக்கிறார்கள்.
குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம்
இஸ்ரவேலில் குருவிகள், காட்டுப்புறா அனைத்தும் சத்தம் போடுகிறது.
நமது தேசத்தில் கேட்கப்படுகிறது
இஸ்ரவேலில் கேட்கப்படுகிறது.
அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.
-உன்னதப்பாட்டு 2 : 13
விளக்கம்:
- மணவாளன் பேசுவது போல, மணவாட்டி பேசுகிறாள்.
அத்திமரத்தை பற்றி ஆபகூக் 3 வது அதிகாரத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இஸ்ரவேலில் அத்திமரம் துளிர்க்கும்.
திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது
சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இஸ்ரவேலில் இதெல்லாம் நடக்கிறது.
என் பிரியமே! என் ரூபவதியே!
சபையை இயேசு இவ்வாறு அழைக்கிறார்
- தானியேல் 9 வது அதிகாரத்தில் அந்த 70 வாரங்கள், அதாவது 70*7=490 வருடங்கள் பற்றி பார்க்கிறோம்.
- அதில் 483 வருடங்கள் முடிந்து விட்டன.
- மீதி 7 வருடங்கள் சபை எடுத்துக்கொண்ட பின்பு தொடரும்.
- அது தான் இஸ்ரவேலருக்கான கடைசி ஏழு வருடம்.
- இஸ்ரவேல் பழைய ஏற்பாட்டு காலம் போல தேவாலயத்தோடு, பலிகளோடு,ஆசாரியர்களோடு
- அவர்களை நடத்தும் இரு சாட்சிகளோடு அவர்கள் பழைய ஏற்பாட்டுக்கு ஒத்த நிலைமையிலே வாழ்வார்கள். (வெளி 11)
- அதை தான் தீர்க்கத்தரிசனமாக இந்த வசனம் சொல்லுகிறது.
- இத்தனையும் நடந்தாலும், சபையே நீ எழுந்து வா என்கிறார் மணவாளன்.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இந்த பூமியிலே இஸ்ரவேலர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள். உறுதிப்பண்ணப்படுவார்கள்.
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.
-உன்னதப்பாட்டு 2 : 14
-உன்னதப்பாட்டு 2 : 14
விளக்கம்:
- மணவாளன் பேசுவது போல, மணவாட்டி பேசுகிறாள்.
- எவ்வளவு காலம் நீ இந்த பூமியிலே தங்கி கஷ்டப்படுவாய்.
- நான் இங்கே இருக்கிறேன். இங்கே வா. உன் முகத்தை காண்பி என்று மணவாளன் சொல்கிறார்.
மணவாட்டியை ,மணவாளன் தனது இரகசிய வருகையின் போது ரசித்து இந்த வார்த்தைகளை சொல்கிறார்.
திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
-உன்னதப்பாட்டு 2 : 15
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்
- சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இஸ்ரவேலருக்கு என்ன நடக்கும் என்பதை இந்த வசனம் காண்பிக்கிறது.
நம்முடைய திராட்சத்தோட்டங்கள்
இஸ்ரவேலர்கள்
பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
- இஸ்ரவேலருக்கு முழு சுதந்திரம் இல்லை.
- சபை எடுத்துக்கொண்ட பிறகு, அந்திக் கிறிஸ்து வருவான்.
- அவன் இஸ்ரவேலரோடு ஒரு உடன்படிக்கை பண்ணுவான்.
- அவன் மோரியா மலையில் தேவாலயத்தை கட்ட அனுமதி கொடுப்பான்.
- எருசலேமிலே மோரியா மலையிலே தேவாலயம் கட்டப்படும்
- ஆனால் Al Amar பள்ளிவாசலோ, Al Axa பள்ளிவாசலோ இடிக்கப்படாது. (வெளி11:1)
- 1260 நாட்களுக்கு புறஜாதியாருக்கு அதை மிதிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
- எருசலேமிலே தேவாலயம் கட்டப்பட்டு, அங்கே பலிகளும் கொடுக்கப்பட்டு மீண்டும் பழைய படி முழு சுதந்திரமும் யூதர்களுக்கு கிடைக்கும் பொழுது அவர்கள் ஒரு பிஞ்சு போல, இளமையான தேசம் போல் காணப்படுவார்கள்.
- அதை தான் இங்கு சொல்லப்படுகிறது.
- இதைக் கெடுப்பதற்கு குழிநரிகள் வருகின்றனவாம்.
- அந்த 7 வருடத்தில் முதல் 3, 1/2 வருடங்கள் யூதர்களுக்கு நன்றாய் தான் இருக்கும். அடுத்த 3 ,1/2 வருடங்கள் அந்திகிறிஸ்து இஸ்ரவேலை அழிக்கத் தேடுவான். (வெளி 12)
6-அரசியல் அந்திக் கிறிஸ்து- பிரதான Antichrist
6-மத அந்திக் கிறிஸ்து - கள்ளத்தீர்க்கத்தரிசி
6-பொருளாதார அந்திக் கிறிஸ்து - மிருகம்
6 என்பது மனிதனை குறிக்கும்
- இஸ்ரவேலர்கள் அதை எடுக்க மாட்டார்கள்.
- எனவே அவர்களை துரத்தி, அதை எடுக்க வைக்க அந்தி கறிஸ்து முயற்ச்சிப்பான்.
- அந்த அந்திகிறிஸ்துக்கள் தான் குழிநரிகளும், சிறுநரிகளும்.
- அவர்களை பிடியுங்கள் என்று இந்த வசனம் சொல்கிறது.
- இயேசுவின் இரண்டாவது வருகையின் போது, அந்த மிருகம் பிடிப்பட்டது.
- ஆயிரம் வருட அரசாட்சி தொடங்குகிறது.
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
-உன்னதப்பாட்டு 2 : 16
-உன்னதப்பாட்டு 2 : 16
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்
- பூமியிலே இது நடக்கும் போது, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சபை சொல்கிறது.
- அங்கு நான் என் நேசரோடு இருக்கிறேன்.
- திருமணத்திற்கு ஆயத்தம் ஆகும் அந்த உணர்வு.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது.
- இன்னும் 7 வருடங்களில் ஆட்டுகுட்டியானவரோடு திருமணம் நடக்க போகிறது.
- அந்த 7 வருடமும் மணவாட்டியினுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை இந்த வசனம் காட்டுகிறது.
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
-உன்னதப்பாட்டு 2 : 17
விளக்கம்:
- மணவாட்டி பேசுகிறாள்
- மணவாளன் எந்த நேரத்திலும் பரலோகத்தில் இல்லையாம்.
- அவர் பூமிக்கும் போய் வருகிறாராம்.
பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்
நீர் பூமியிலே
நீர் திரும்பி
பரலோகத்திற்கு திரும்பி
- அந்த 7 வருட காலங்களில் அவருக்கு பூமியிலும் ஒரு கடமை பாக்கியிருக்கிறது.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு 2 முக்கியமான வேலைகள் அவருக்கு இந்த பூமியிலே இருக்கிறது.
- உலகத்திற்கு அவர் தீர்க்கத்தரிசனமாய் மொழிந்த அந்த நியாயத்தீர்ப்புகளை எல்லாம் செயல்படுத்த வேண்டும்.
- அதே நேரம் இஸ்ரவேலருக்கு அவர் கொடுக்கின்ற பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும்.
- அது போல பரலோகத்தில் தன்னுடைய மணவாட்டி ஆயத்தப்படுதலையும் பார்வையிட வேண்டும்.
- ஆகவே மணவாட்டி சொல்லுகிறாள், உங்களுடைய கடமைகள் அனைத்தும் நான் அறிவேன் என்று.
Comments
Post a Comment