ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?

  • ஆரோகண சங்கீதம் இது ஆங்கிலத்தில் Songs of Ascent என்று அழைக்கப்படும்
  • இது சங்கீதம் 120 முதல் 134 வரை உள்ள 15 சங்கீதங்களை குறிப்பிடுகிறது. 
  • இந்த சங்கீதங்கள் எபிரேய மொழியில் "Shir HaMa'alot" (שִׁיר הַמַּעֲלוֹת) என அழைக்கப்படுகின்றன,
  • அதன் அர்த்தம் "ஏறும் பாடல்கள்" அல்லது "படிகட்டுகளில் ஏறிச் செல்லும் பாடல்கள்" என்பதாகும்.

ஆரோகண சங்கீதம் – நோக்கம்:

  • இந்த சங்கீதங்களை மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்ரவேலர்கள் எருசலேம் ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் போதும், குறிப்பாக மூன்று பெரிய விழாக்களில் (பஸ்கா, பெந்தகொஸ்தே, குதிரைவிழா) பாடினர் என்று நம்பப்படுகிறது. 
  • இந்த பயணங்கள் நிறைய சவால்கள் நிறைந்தவைகளாக இருந்தன. 
  • அந்தப் பயணத்தின்போது தேவனை நினைத்து பாடப்படும் ஆராதனையான இவை, ஆவிக்குரிய எழுச்சியையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன.

முக்கிய அம்சங்கள்:

  • பயணத்திற்குரிய துணிவு, நம்பிக்கை, பாதுகாப்பு, சிரமங்களில் உள்ள ஆவிக்குரிய நிலை ஆகியவை இதில் அடங்கியுள்ளன.
  • தேவனை நோக்கிச் செல்லும் ஒரு "ஆரோகணப் பயணத்தை" குறிக்கின்றன.
  • இவை சாலேமில் உள்ள தேவாலயத்திற்குள் ஏறிச் செல்லும் போது தேவனுக்கான ஆராதனையை பிரதிபலிக்கின்றன.

இந்த வகையான பாடல்கள் ஒருவர் தேவனை நோக்கி தங்கள் மனதை ஊற்றும் வகையில் அமைந்துள்ளன.


சங்கீதம் 120-134 எதைக் குறித்து பேசுகின்றன எனக் கீழேப் பார்ப்போம்


சங்கீதம் 120 - சத்தியத்தைக் பேசும் போதிலும் வஞ்சகர்கள் இடையே வாழும் வேதனை.
சங்கீதம் 121 - பயணத்தில் தேவன் எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சங்கீதம் 122 - தேவாலயத்திற்குப் போவது பெரும் ஆனந்தம்; எருசலேமுக்கான ஜெபம்.
சங்கீதம் 123 - கண்களை உயர்த்தி ஆண்டவரை நோக்கும் நம்பிக்கை மற்றும் கிருபையை நாடுதல்.
சங்கீதம் 124 - தேவன் நம்மோடு இல்லையென்றால் நமக்கு என்னென்ன அபாயங்கள் நிகழ்ந்திருக்கும்என்பதை நினைவு கூறுதல்
சங்கீதம் 125 - ஆண்டவரை நம்புவோர் அழியமாட்டார்கள் என்கிற நம்பிக்கை.
சங்கீதம் 126 - ஆசீர்வாதங்களைப் பெற்ற மகிழ்ச்சி; கண்ணீரோடே விதைக்கிறவர்கள் மகிழ்ச்சியுடன் அறுப்பார்கள். 
சங்கீதம் 127 - தேவன் இல்லாமல் வீடு, வேலை எல்லாம் பயனற்றது; பிள்ளைகள் ஆண்டவரின் ஆசீர்வாதம்.
சங்கீதம் 128 - குடும்ப ஆசீர்வாதங்கள் மற்றும் எருசலேமுக்கு சமாதானம்.
சங்கீதம் 129 - இஸ்ரவேல் அடிமைத்தனத்தில் இருந்த போது அனுபவித்த துயரங்கள்.
சங்கீதம் - 130 பாவமன்னிப்பு மற்றும் மீட்பு குறித்த ஆழ்ந்த நம்பிக்கை.
சங்கீதம் - 131 அகம்பாவமற்ற, சமாதானமுள்ள மனப்பான்மை.
சங்கீதம் - 132 தேவாலய அமைப்பும், தேவனுடைய வாக்குறுதிகளும்.
சங்கீதம் - 133 சகோதர அன்பின் அழகு மற்றும் ஆசீர்வாதம்.
சங்கீதம் - 134 இரவில் தேவனுக்கு ஆராதனை செலுத்தும் ஊழியக்காரர்களுக்கான ஆசீர்வாதம்.



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4