வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம்

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.
 -வெளிப்படுத்தல் 15 : 1
  • தேவன் தன்னுடைய கோபத்தில் உலகத்தை கண்டிக்கின்றார்.
  • அவைகள் எல்லாம் முடிவுறும் வகையில் இந்த 7 வாதைகள். 
  • இதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இனி நாம் படிக்க போகின்றவைகள் மிக அலங்காரமானவைகள். 
  • 7 ஆண்டுகள் முடிவடையப் போகிறது. 3-4 மாதங்களே உள்ளன. 
  • தேவனுக்கு உக்கிர கோபம் வருகிற சந்தர்ப்பம் உண்டு. 
  • இப்போது அவர் கோபம் முடிவடைகிறது. 
  • கடைசியாற தேவனுடைய உக்கிர கோபத்தை 7 விதங்களிலே தேவன் காண்பிக்கப் போகிறார். 
  • அவருடைய கடுங்கோபமாகிய 7 வாதைகளையும் அவர் கொட்டும் முன்னதாக சொல்லப்படுகின்ற முதல் வசனம் தான் இது.
  • ஆச்சர்யமான அடையாளத்தை கண்டேன் என்று சொல்லப்படுகிறது. 
  • கிரேக்க மொழியில் இது “ஒப்பீடு” என்று அர்த்தம்.

அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 15 : 2
  • சுரமண்டலங்களை பிடித்துக்கொண்டு என்பது அடையாளமாக சொல்லப்படுகிறது. 
  • சந்தோஷத்தை குறிப்பிடுகிறது 
  • கண்ணாடிக்கடல் என்பது பரலோகத்திலே தேவனுடைய வார்த்தையை குறிப்பிடுகிறது. 
அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற
  • அந்திக்கிறஸ்துவை/சாத்தானை/அவனுடைய முழு இராணுவத்தையும் 
  • இவை எல்லாவற்றையும் தோற்கடித்து மேற்கொண்ட அவருடைய வார்த்தையை தான் இங்கு இப்படி சொல்லுகிறார்கள்.
  • இங்கு வசனத்திற்கு முன்பாக ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. 
மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள்
  • யார் இவர்கள்?
  • கிறிஸ்தவர்களாக இருந்து கைவிடப்பட்டு அதன் பின்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, எப்படியாவது இந்த 7 ஆண்டுகளில் இருந்து தப்பித்து கொள்ளுவோம் என்று வாழ்ந்த மிகவும் கவனமாக அந்திக்கிறிஸ்துவினிடத்தில் இருந்து தப்பி தப்பி, சாப்பிடாமல், குடிக்காமல் உபத்திரவத்தை அனுபவித்து, 666 என்ற இலக்கத்தை எடுக்காமல், அந்திக்கிறிஸ்துவை வணங்காமல் அந்த 7 வருடங்களை வெற்றிக் கொண்டவர்கள் தான் இவர்கள். 
  • அவர்கள் இயேசுவுக்கு மணவாட்டியாக ஆக முடியாது. ஆனால் பரலோகத்தில் இருக்கலாம். 

அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
 -வெளிப்படுத்தல் 15 : 3
  • அவர்கள் ஒரு பாட்டை பாடுகிறார்கள். 
  • இந்தப் பாடல் ஒரு அடையாளமாகவே குறிப்பிடப்படுகிறது. 
  • இந்த இடத்தில் ஒப்புடைமையாக/ அடையாளமாக பேசப்படுகிறது. 
  • பழைய ஏற்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். மோசே மற்றும் எலியா.
  • ஆனால் சில சூழ்நிலைகளிலே முழு பழைய ஏற்பாட்டிற்கும் பிரதிநிதியாக காண்பிக்கப்படுகிற சூழ்நிலைகளும் உண்டு. 
  • இப்போது நாம் இங்கு பார்க்கிற கண்ணாடிக்கடல் என்பது வார்த்தை. 
  • இந்த இடத்தில் மோசேயின் பாட்டு என்று சொல்லும் பொழுது அது பழைய ஏற்பாடு. 
  • ஆட்டுக்குட்டியானவருடைய பாடல் என்று சொல்லும் போது அது புதிய ஏற்பாடு. 
  • அப்படியானால் இந்த இரண்டு பாட்டையும் பாடுகிறார்கள் என்று சொன்னால் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் முழுமையாக்கி அது நிறைவேறி, அதில் இருக்கிற வாக்குத்தத்தங்கள், பொருத்தனைகள், அதிலிருக்கிற உடன்படிக்கைகள், அதிலிருக்கிற ஆசீர்வாதங்கள், அவை எல்லாவற்றையும் தேவன் சம்பூரணப்படுத்தி இருக்கிறார். 
  • அந்த மகிழ்ச்சியினாலே வருகின்ற ஒரு பாடல்.  


கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
 -வெளிப்படுத்தல் 15 : 4
  • இப்பொழுது யோவான் பார்க்கிறார். 
  • 7 வருடங்கள் முடிவடைய போகின்றது.
  • இப்பொழுது 666 ஐ எடுக்காதவர்கள், அந்திக்கிறிஸ்துவினாலே தோற்கடிக்கப் படாதவர்கள் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மீது நின்று பாடுகிறார்கள். 
  • அவர்கள் உம்முடைய கிரியைகள் மகத்துவமானது என்று சொல்லிப் பாடுகிறார்கள். 

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
 -வெளிப்படுத்தல் 15 : 5
  • திறக்கப்பட்டது என்பது கிரேக்க மொழி அர்த்தத்தின்படி திறக்கப்பட்டு இருந்தது என்று இருக்க வேண்டும்.
  • பரலோகத்தில் இருக்கிற தேவாலயம் திறக்கப்பட்டது (வெளி 11:19)
  • 7 ஆண்டுகளில், முதல் மூன்றரை ஆண்டுகள் முடிகின்ற பொழுது
  • இது இப்பொழுது இரண்டாவது மூன்றரை ஆண்டுகள் முடிகின்ற தருணம். 
  •  

அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 15 : 6
  • இவர்கள் யார்? தேவதூதர்கள்.
  • தேவனுடைய உக்கிர கோபமாகிய 7 வாதைகளையும் இந்த பூமியின் மேலே ஊற்றப் போகின்ற 7 தூதர்கள். 

அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங்கொடுத்தது.
 -வெளிப்படுத்தல் 15 : 7
  • இவைகள் அடையாளமாக தான் பேசப்படுகிறது. 
  • அடையாளம் என்று சொல்லப்படுகிற பொழுது அங்கு உண்மையாக ஒரு பாத்திரம் இருக்கவில்லை. 
  • அவர் உண்மையாகவே மார்க்கவசங்கள் கட்டியிருக்கவில்லை. 
  • பொற்கச்சைகளை கட்டியிருந்தார்கள் என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா? 
  • அதாவது வெற்றி பெறுகிறவர்கள். 
  • வெளி 1 ல் இயேசு கிறிஸ்து பொற்கச்சைகளை அணிந்திருந்தார் என்று நாம் பார்த்தோம்.
  • நான்கு ஜீவன்கள் என்று சொல்லப்படுகிற தேவதூதர்களில் ஒருவன் 
  • இயேசுகிறிஸ்துவினுடைய ராஜரீகம், ஊழியத்தன்மை, மனிதத்தன்மை, தேவத்துவம் அந்த 4 விடயங்களையும் அடையாளப்படுத்துகிற 4 தூதர்களை குறித்து நாம் முன்பு பார்த்தோம். 
  • அந்த 4 பேரில் ஒருவன் தான் இந்த பாத்திரத்தை கொடுக்கிறான். 
  • அதாவது இயேசுகிறிஸ்துவை பிரதிநிதித்துவப் படுத்துகிற ஒரு தூதன் தான் இதைக் கொடுக்கிறான். 
  • அதிலே, அடையாளப்படுத்துவது அதாவது இந்த கடைசி கோபம், திரித்துவ தேவனிலே இயேசுகிறிஸ்துவினுடைய கோபம். 

அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.  
 -வெளிப்படுத்தல் 15 : 8
  • ஏன்? 
  • இப்போது தேவாலயத்தைக் குறித்தும், அங்கு இருக்கிற உடன்படிக்கைப் பெட்டியைக் குறித்தும் இங்கு சொல்லப்படவில்லை.
  • இங்கு பேசப்படுவது பரலோகத்தைக் குறித்து
  • இந்த இடத்தில் கடைசி 7 வாதைகள்/கோபத்தை பாருங்கள் என்று சொல்வதற்கு தான் தேவன் இதை சொல்கிறார். 
  • இந்த உலகத்திற்கு கடைசி தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்படப் போகிறது.
  • யார் மீது?
  • பூமியில் இப்போது இருப்பது சாத்தான், அந்திக்கிறிஸ்து, மிருகம், பொய்யான தீர்க்கத்தரிசி, அதோடு அவனுடைய கூட்டம். 
  • இவர்கள் மீது தான்.
  • தேவன் பரிதாபப்படுவதற்கு தேவனுடைய யாரும் அங்கு இல்லை.



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4