வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 15 விளக்கம்
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.
-வெளிப்படுத்தல் 15 : 1
-வெளிப்படுத்தல் 15 : 1
- தேவன் தன்னுடைய கோபத்தில் உலகத்தை கண்டிக்கின்றார்.
- அவைகள் எல்லாம் முடிவுறும் வகையில் இந்த 7 வாதைகள்.
- இதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
- இனி நாம் படிக்க போகின்றவைகள் மிக அலங்காரமானவைகள்.
- 7 ஆண்டுகள் முடிவடையப் போகிறது. 3-4 மாதங்களே உள்ளன.
- தேவனுக்கு உக்கிர கோபம் வருகிற சந்தர்ப்பம் உண்டு.
- இப்போது அவர் கோபம் முடிவடைகிறது.
- கடைசியாற தேவனுடைய உக்கிர கோபத்தை 7 விதங்களிலே தேவன் காண்பிக்கப் போகிறார்.
- அவருடைய கடுங்கோபமாகிய 7 வாதைகளையும் அவர் கொட்டும் முன்னதாக சொல்லப்படுகின்ற முதல் வசனம் தான் இது.
- ஆச்சர்யமான அடையாளத்தை கண்டேன் என்று சொல்லப்படுகிறது.
- கிரேக்க மொழியில் இது “ஒப்பீடு” என்று அர்த்தம்.
அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
-வெளிப்படுத்தல் 15 : 2
- சுரமண்டலங்களை பிடித்துக்கொண்டு என்பது அடையாளமாக சொல்லப்படுகிறது.
- சந்தோஷத்தை குறிப்பிடுகிறது
- கண்ணாடிக்கடல் என்பது பரலோகத்திலே தேவனுடைய வார்த்தையை குறிப்பிடுகிறது.
அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற
- அந்திக்கிறஸ்துவை/சாத்தானை/அவனுடைய முழு இராணுவத்தையும்
- இவை எல்லாவற்றையும் தோற்கடித்து மேற்கொண்ட அவருடைய வார்த்தையை தான் இங்கு இப்படி சொல்லுகிறார்கள்.
- இங்கு வசனத்திற்கு முன்பாக ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருக்கிறது.
மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள்
- யார் இவர்கள்?
- கிறிஸ்தவர்களாக இருந்து கைவிடப்பட்டு அதன் பின்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, எப்படியாவது இந்த 7 ஆண்டுகளில் இருந்து தப்பித்து கொள்ளுவோம் என்று வாழ்ந்த மிகவும் கவனமாக அந்திக்கிறிஸ்துவினிடத்தில் இருந்து தப்பி தப்பி, சாப்பிடாமல், குடிக்காமல் உபத்திரவத்தை அனுபவித்து, 666 என்ற இலக்கத்தை எடுக்காமல், அந்திக்கிறிஸ்துவை வணங்காமல் அந்த 7 வருடங்களை வெற்றிக் கொண்டவர்கள் தான் இவர்கள்.
- அவர்கள் இயேசுவுக்கு மணவாட்டியாக ஆக முடியாது. ஆனால் பரலோகத்தில் இருக்கலாம்.
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
-வெளிப்படுத்தல் 15 : 3
- அவர்கள் ஒரு பாட்டை பாடுகிறார்கள்.
- இந்தப் பாடல் ஒரு அடையாளமாகவே குறிப்பிடப்படுகிறது.
- இந்த இடத்தில் ஒப்புடைமையாக/ அடையாளமாக பேசப்படுகிறது.
- பழைய ஏற்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். மோசே மற்றும் எலியா.
- ஆனால் சில சூழ்நிலைகளிலே முழு பழைய ஏற்பாட்டிற்கும் பிரதிநிதியாக காண்பிக்கப்படுகிற சூழ்நிலைகளும் உண்டு.
- இப்போது நாம் இங்கு பார்க்கிற கண்ணாடிக்கடல் என்பது வார்த்தை.
- இந்த இடத்தில் மோசேயின் பாட்டு என்று சொல்லும் பொழுது அது பழைய ஏற்பாடு.
- ஆட்டுக்குட்டியானவருடைய பாடல் என்று சொல்லும் போது அது புதிய ஏற்பாடு.
- அப்படியானால் இந்த இரண்டு பாட்டையும் பாடுகிறார்கள் என்று சொன்னால் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் முழுமையாக்கி அது நிறைவேறி, அதில் இருக்கிற வாக்குத்தத்தங்கள், பொருத்தனைகள், அதிலிருக்கிற உடன்படிக்கைகள், அதிலிருக்கிற ஆசீர்வாதங்கள், அவை எல்லாவற்றையும் தேவன் சம்பூரணப்படுத்தி இருக்கிறார்.
- அந்த மகிழ்ச்சியினாலே வருகின்ற ஒரு பாடல்.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
-வெளிப்படுத்தல் 15 : 4
- இப்பொழுது யோவான் பார்க்கிறார்.
- 7 வருடங்கள் முடிவடைய போகின்றது.
- இப்பொழுது 666 ஐ எடுக்காதவர்கள், அந்திக்கிறிஸ்துவினாலே தோற்கடிக்கப் படாதவர்கள் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மீது நின்று பாடுகிறார்கள்.
- அவர்கள் உம்முடைய கிரியைகள் மகத்துவமானது என்று சொல்லிப் பாடுகிறார்கள்.
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
-வெளிப்படுத்தல் 15 : 5
- திறக்கப்பட்டது என்பது கிரேக்க மொழி அர்த்தத்தின்படி திறக்கப்பட்டு இருந்தது என்று இருக்க வேண்டும்.
- பரலோகத்தில் இருக்கிற தேவாலயம் திறக்கப்பட்டது (வெளி 11:19)
- 7 ஆண்டுகளில், முதல் மூன்றரை ஆண்டுகள் முடிகின்ற பொழுது
- இது இப்பொழுது இரண்டாவது மூன்றரை ஆண்டுகள் முடிகின்ற தருணம்.
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
-வெளிப்படுத்தல் 15 : 6
- இவர்கள் யார்? தேவதூதர்கள்.
- தேவனுடைய உக்கிர கோபமாகிய 7 வாதைகளையும் இந்த பூமியின் மேலே ஊற்றப் போகின்ற 7 தூதர்கள்.
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங்கொடுத்தது.
-வெளிப்படுத்தல் 15 : 7
- இவைகள் அடையாளமாக தான் பேசப்படுகிறது.
- அடையாளம் என்று சொல்லப்படுகிற பொழுது அங்கு உண்மையாக ஒரு பாத்திரம் இருக்கவில்லை.
- அவர் உண்மையாகவே மார்க்கவசங்கள் கட்டியிருக்கவில்லை.
- பொற்கச்சைகளை கட்டியிருந்தார்கள் என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?
- அதாவது வெற்றி பெறுகிறவர்கள்.
- வெளி 1 ல் இயேசு கிறிஸ்து பொற்கச்சைகளை அணிந்திருந்தார் என்று நாம் பார்த்தோம்.
- நான்கு ஜீவன்கள் என்று சொல்லப்படுகிற தேவதூதர்களில் ஒருவன்
- இயேசுகிறிஸ்துவினுடைய ராஜரீகம், ஊழியத்தன்மை, மனிதத்தன்மை, தேவத்துவம் அந்த 4 விடயங்களையும் அடையாளப்படுத்துகிற 4 தூதர்களை குறித்து நாம் முன்பு பார்த்தோம்.
- அந்த 4 பேரில் ஒருவன் தான் இந்த பாத்திரத்தை கொடுக்கிறான்.
- அதாவது இயேசுகிறிஸ்துவை பிரதிநிதித்துவப் படுத்துகிற ஒரு தூதன் தான் இதைக் கொடுக்கிறான்.
- அதிலே, அடையாளப்படுத்துவது அதாவது இந்த கடைசி கோபம், திரித்துவ தேவனிலே இயேசுகிறிஸ்துவினுடைய கோபம்.
அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
-வெளிப்படுத்தல் 15 : 8
- ஏன்?
- இப்போது தேவாலயத்தைக் குறித்தும், அங்கு இருக்கிற உடன்படிக்கைப் பெட்டியைக் குறித்தும் இங்கு சொல்லப்படவில்லை.
- இங்கு பேசப்படுவது பரலோகத்தைக் குறித்து
- இந்த இடத்தில் கடைசி 7 வாதைகள்/கோபத்தை பாருங்கள் என்று சொல்வதற்கு தான் தேவன் இதை சொல்கிறார்.
- இந்த உலகத்திற்கு கடைசி தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்படப் போகிறது.
- யார் மீது?
- பூமியில் இப்போது இருப்பது சாத்தான், அந்திக்கிறிஸ்து, மிருகம், பொய்யான தீர்க்கத்தரிசி, அதோடு அவனுடைய கூட்டம்.
- இவர்கள் மீது தான்.
- தேவன் பரிதாபப்படுவதற்கு தேவனுடைய யாரும் அங்கு இல்லை.
Comments
Post a Comment