வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 20 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 20 விளக்கம்
ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
-வெளிப்படுத்தல் 20 : 1
-வெளிப்படுத்தல் 20 : 1
- இது அந்த 7 ஆண்டுகள் முடிந்ததும், இயேசு வருகிறார்.
- அப்பொழுது இயேசுவுக்கு எதிர்த்து யுத்தம் பண்ண மெகிதோ பள்ளத்தாக்கில் அந்திக்கிறிஸ்து சேனைகளுடன் நிற்கிறான் அல்லவா?
- அப்பொழுது இயேசு அந்த அந்திக்கிறுஸ்துவை அழிப்பார் தானே!
- அதன் பின்பு நடக்கிற சம்பவம் இது.
- ஒரு பெரிய தேவதூதன் இறங்கி வருகிறான்.
- அவனுடைய கையில் பாதாளத்தினுடைய திறவுகோல் இருந்ததாம்.
- அது நரகம் அல்ல.
-வெளிப்படுத்தல் 20 : 2
- அர்மகெதோன் யுத்தத்திற்கு பின்பாக. தேவ தூதன் வந்து சாத்தான்-சர்ப்பத்தை பிடித்து அவனை பாதாளத்தில் போட்டு மூடி முத்திரை போடுவான் ஆயிரம் ஆண்டுகளுக்கு.
- இவன் தான் அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து - சாத்தான், சர்ப்பம், பிசாசு, வலுசர்ப்பம்.
- இது தான் அன்று ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்த சர்ப்பம்.
- பாதாளம் உண்டாக்கப்பட்டது பிசாசு வேதனைப்படுவதற்கு, அங்கு அவன் ஆட்சி செய்வதற்கு அல்ல.
- பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த பரிசுத்தவான்கள் - நோவா, ஆபிரகாம், தாவீது etc… அறிந்தவர்களும், நாம் அறியாத இலட்சக்கணக்கான பரிசுத்தவான்களும், இயேசு கிறிஸ்து வந்து சென்ற பிறகு, அவரை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவர்கள் ஆனவர்களும் அவர்கள் மரித்த பின்பு சொல்லுகின்ற இடம் பரதீஸ். பரலோகம் அல்ல.
- ஆனால் சபை எடுத்துக்கொள்ளப்படும் போது மரித்தவர்களும் எழுந்திருப்பார்கள். அவர்களோடு கூட உயிரோடு இருக்கிற கிறிஸ்தவர்களும் போவார்கள். பவுல் தெசலோனிக்கேயர் நிரூபத்தில் இதை தெளிவாக சொல்லுகிறார். எனவே, அப்போது பரதீஸில் இருக்கிறவர்களும் மறுபடியும் உயிரடைகிறபடியினால் பரதீஸ் என்ற ஒன்று இல்லாமல் அவர்கள் எல்லாரும் பரலோகத்திற்கு போவார்கள். பரதீஸ் காணப்பட மாட்டாது.
- சபை மாத்திரம் அவருடைய மணவாட்டியாக மாறுவார்கள். மணவாளனுடைய தோழர்களாக அந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இருப்பார்கள். ஆனால் தேவன் இல்லாமல் மரிக்கிறவர்கள் பாதாளத்திற்கு போவார்கள். நரகம் அல்ல.
- இந்த நரகத்திற்கு இன்னும் யாரும் போவில்லை. அது ஒரு அக்கினிக்கடல் .
- கடைசியில் பாதாளம் அப்படியே நரகத்திற்குள் தள்ளப்படும்.
- பரலோகத்தில் சபை சந்தோஷமாக இருக்கிறது.
- பாதாளத்திலே சபை கட்டப்பட்டு இருக்கிறது.
- பூமியிலே என்ன நடக்கப் போகிறது.
-வெளிப்படுத்தல் 20 : 3
- அது கொஞ்ச நாட்கள் விடுதலை ஆக வேண்டும்.
-வெளிப்படுத்தல் 20 : 4
- சிங்காசனங்கள் என்று பண்மையிலே சொல்லப்படுகிறது.
- அவைகளில் உட்கார்ந்து இருந்தவர்கள் யார்?
- இங்கு யோவானிடம் பேசப்பட்டது அராமிய மொழி.
- ஆனால் எழுதப்பட்டது கிரேக்க மொழியில்.
- கிரேக்க மொழியிலும், அராமிய மொழியிலும் அவர்கள் என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன என்று பார்க்க வேண்டும்.
- கிரேக்க மொழியில் அவர்கள் என்று சொல்லப்படும் போது அது
- ஆண்களை, பெண்களை, பொருட்களை என்று தனித்தனியாக குறிக்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தையாக இருக்கிறது.
- இயேசுவானவர் சேனையோடு வந்தார் அல்லவா?
- அவர்கள் யார்?
- தேவ தூதர்கள், அதோடு கூட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்.
- அந்த இருவரும் சிங்காசனத்தில் அமர்ந்தார்களா? இல்லை.
- கிரேக்க மொழியின்படி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அந்த சிங்காசனங்களில் அமர்ந்தார்களாம்.
- இவர்கள் சிங்காசனத்தில் அமர்வது நியாயந்தீர்ப்பதற்காக.
- தேவ தூதர்களுக்கு நியாயந்தீர்க்க அதிகாரம் கிடையாது.
- உன்னை நியாயந்தீர்த்து, பூமியில் இருந்து விடுதலையாக்கி, பரலோகம் கொண்டு செல்வது தான் சபை எடுத்துக்கொள்ளப்படுதல்.
- அதுவே ஒரு நியாயத்தீர்ப்பு தான்.
- சிங்காசனத்தில் இருந்து நியாயந்தீர்ப்பதும் அண்மை அல்ல, நியாயந்தீர்க்கப்படுவதும் சபை அல்ல.
- சபைக்கு கிடைத்த கடைசி நியாயத்தீர்ப்பு என்னவென்றால் சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.
- கடைசி 7 ஆண்டுகளில் வாழ்கிற மக்களை நியாயந்தீர்த்தார்கள்.
- 7 ஆண்டுகளில், கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் அவர்களுக்கு இப்போது தெரியும் , 666 இலக்கம் பெறக் கூடாது என்று
- இந்த மிருகத்தை நாம வணங்கக் கூடாது என்று தெரியும்
- ஆகவே இவர்கள் இயேசுவுக்காக நிற்பதற்கு ஆயத்தம் ஆகிறார்கள்.
- அந்த 7 ஆண்டுகளில் அந்திக்கிறிஸ்து இப்படிப்பட்டவர்களை சிரச்சேதம் செய்து கொலை செய்வான் அல்லவா?
- அவர்கள் தான்.
- பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கடைசி 7 ஆண்டுகளில் (பழைய ஏற்பாட்டு 7 ஆண்டுகள்)
- தானியேலுக்கு ஆண்டவர் 490 வருடங்களை கொடுத்தார்.
- நெகேமியா மதிலை கட்ட ஆரம்பித்த நாள் முதல் அந்த 490 ஆண்டுகள் ஆரம்பிக்கும்.
- அது கி.மு 453 ல் ஆரம்பித்தது.
- இயேசு கிறிஸ்து கி.பி 30 களில் மரித்தார்.
- 453+30=483
- 483 முடிந்தவுடன் பழைய ஏற்பாட்டு காலம் இடை நிறுத்தப்பட்டது.
- கிருபையின் காலம் தொடங்கியது.
- கிருபையின் காலம் முடிவடைவது சபை எடுத்துக்கொள்ளப்படும் போது.
- அதன் பின்பு மீண்டும் 7 ஆண்டுகள் பழைய ஏற்பாட்டுக் காலம்.
- அந்த 7 ஆண்டுகளும், 483 ஆண்டுகளும் ஒன்று சேரும் போது 490 ஆண்டுகள் நிறைவடைகிறது.
- பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கடைசி 7 ஆண்டுகளில் (பழைய ஏற்பாட்டு 7 ஆண்டுகள்) நியாயந்தீர்க்கிற போது, இவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டு அவர்கள் அந்த முத்திரையை பெறுவதில்லை.
- அந்திக்கிறிஸ்துவை ஆராதிப்பதில்லை.
- ஆகவே அவர்களை கழுத்தை வெட்டுவார்கள்.
- தேவன் யூதர்களை மூன்றரை ஆண்டுகள் இரகசியமாக மறைத்து வைத்து பாதுகாக்கின்றார்.
- அவர்கள் அனைவரையும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் நியாயந்தீர்ப்பார்கள்.
அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
- அவர்களுக்கு ஒரு தருணம் கிடைக்கின்றது, இயேசுவின் அரசாட்சியில் 1000 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு.
- அவர்கள் வெறுமனே வாழ்வதில்லை.
- உலகத்தை ஆட்சி செய்வார்கள்.
- யாரை எதிர்த்து ஆட்சி செய்வார்கள்.
-வெளிப்படுத்தல் 20 : 5
- இவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மனைவி அல்ல.
- இவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய ஆசாரியர்கள் அல்ல.
- இவர்கள் இயேசு கிறிஸ்துவோடு 1000 ஆண்டுகள் இந்த பூமியில் ஆட்சி செய்வார்கள்.
- இயேசு தன்னுடைய சபையாகிய மனைவியை வீட்டில் வைத்து பராமரிப்பார்.
-வெளிப்படுத்தல் 20 : 6
- அந்த 7 ஆண்டுகளில் கிறிஸ்துவுக்காக மரிக்கிறவர்கள் தான் உயிரோடு எழும்பி ஆசாரியர்களாக ஆண்டவர் பயன்படுத்துவார்.
- ஆண்டவர் ஆதாமுக்கு கொடுத்த அதிகாரத்தை அவன் சாத்தானிடத்தில் விற்றுப் போட்டான்.
- இப்போது மீண்டும் தேவன் மனிதனுக்கு அந்த ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறார்.
- அது தான் ஆயிரம் வருட அரசாட்சி.
- பிசாசு இல்லாததனால் எந்த ஒரு கெட்ட விஷயமும் இல்லை.
- எவ்வளவு அழகான மனரம்மியமான உலகம்.
-வெளிப்படுத்தல் 20 : 7
- எரேமியா 35 - ரேகாபியர்கள்
- இது போன்ற மக்களும் அந்த ஆயிரம் வருட அரசாட்சியில் இருப்பார்கள்.
- ஆனால் அவர்களுக்கு பிசாசினால் எந்த ஒரு சோதனையும் இல்லையே!
- எனவே சாத்தான் கொஞ்சகாலம் விடுதலையாவான்.
-வெளிப்படுத்தல் 20 : 8
- எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டது இந்த கோக், மாகோக் தான்.
- அது ரஷ்யா அல்ல.
- 1000 வருஷம் இயேசுவின் ஆட்சியில் இருந்த பிறகு, சாத்தானுக்கு ஒரு வாய்ப்பு, நீ போய் இந்த மக்களை சோதித்து பார் என்று.
- இவ்வளவு நாள் இயேசுவின் அரசாட்சியில் வாழ்ந்தவர்கள் சாத்தானுக்கு செவிக் கொடுக்க கூடாது.
- ஆனால் அதிலும் கொஞ்ச பேர் சாத்தானின் பொய்யினால் வஞ்சிக்கப்படுவார்கள்.
-வெளிப்படுத்தல் 20 : 9
- இந்த பெருந்திரளான மக்கள் பிசாசோடு சேர்ந்து எருசலேமிற்கு விரோதமாக யுத்தம் பண்ண வருகிறார்களாம்.
-வெளிப்படுத்தல் 20 : 10
- இந்த 1000 ஆண்டு நிறைவு பெறுகிற பொழுது கொஞ்ச காலம் சாத்தானுக்கு கொடுக்கப்படும்.
- ஆயிரம் ஆண்டுகள் இயேசுவின் ஆட்சியில் இருந்தவர்களையும் மோசம் போக்குவதற்கு.
- ஒரு கூட்டம் வஞ்சிக்கப்படும்.
- அவர்கள் இயேசுவுக்கு எதிராக யுத்தம் பண்ண வருவார்கள்..
- அவர்கள் இந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டு விடுவார்கள்.
- இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத நல்லவர்களுக்கும், ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கிறார்.
- அப்பொழுது சாத்தான் இல்லாத உலகத்தில் அவர்களும் நன்றாய் இருப்பார்கள் தானே!
- எனவே அவர்களுக்கு ஒரு சோதனையாக பிசாசை கொஞ்சகாலம் விடுதலையாக்குகிறார்.
- அந்த இடத்தில் சாத்தான் பட்சமாய் சாய்கிறவர்களுக்கு கதை முடிந்தது.
- மற்றவர்களுக்கு பரலோக வாழ்வு கிடைக்கின்றது.
-வெளிப்படுத்தல் 20 : 11
- 11-15 வசனங்கள்
- வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு.
- கடைசி நியாயத்தீர்ப்பு
- பின்பு என்பது கிரேக்க மொழியில் என்ன அர்த்தமென்றால், இந்த சம்பவங்களுக்குப் பிறகு.
- வெளி 4 ம் அதிகாரத்திலே சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் திரித்துவ தேவன்.
- இங்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பது திரித்துவ தேவன்.
- பூமியும், வானமும் அழிந்து போக போகின்றது.
- ஆதி 1:1 ல் சடுதியாக உண்டான வானமும், பூமியும் வெளி 20:11 ல் சடுதியாய் திடீரென்று இல்லாமல் போனது.
- மத் 24:35 வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் வார்த்தை ஒழிந்து போகாது.
-வெளிப்படுத்தல் 20 : 12
- இது சபை அல்ல.
- சபைக்கு கிடைக்கின்ற கடைசி நியாயத்தீர்ப்பு சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.
- இயேசு தன் மனைவியாகிய சபையை அங்கு வைத்து நியாயந்தீர்த்து அசிங்கப்படுத்த மாட்டார்.
- ஜீவபுஸ்தகம் ஆட்டுக்குட்டியானவருடையது.
- அதில் எழுதப்பட்டு இருப்பது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள்.
- புஸ்தகங்கள் என்றால் என்ன? தெரியாது.
- மல்கியா 3:16 ஞாபகப் புத்தகம்- அது போல ஒரு புத்தகமாக இருக்கலாம்.
-வெளிப்படுத்தல் 20 : 13
- தேவன் தேவையான அளவுக்கு சந்தர்ப்பத்தை தருகிறார்.
- தேவனை அறியாமல் மரித்தவர்களுக்கும் கூட.
- அவர்களுக்கும் அந்த 1000 வருட அரசாட்சியில் வாழ இடமளிக்கின்றார்.
- இவ்வளவு சந்தர்ப்பங்களையும் கொடுத்து, அந்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் நழுவ விட்டு, பிசாசுக்கு ஏற்ற வண்ணமாக வாழ்ந்தால் நரகத்தில் தள்ளப்படுவது நிச்சயமே.
-வெளிப்படுத்தல் 20 : 14
- இரண்டாம் மரணம் என்பது நரகத்தில் போடப்படுவதாகும்.
-வெளிப்படுத்தல் 20 : 15
- அக்கினிக்கடல் என்பது நரகம்.
- ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் அந்த எரிநரகத்திலே போடப்படுவார்கள்.
Comments
Post a Comment