வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம்

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 14 : 1
  • பின்பு என்பது கிரேக்க மொழியில் Kai என்று பயன்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.
  • 13ம் அதிகாரத்தில் உள்ள சம்பவங்கள் நடைபெற்ற பின்பு.
  • நாம் 13 ம் அதிகாரத்தில் பார்த்தது பொய்யான ஆட்டுக்குட்டி.
  • இங்கு நாம் பார்ப்பது மெய்யான ஆட்டுக்குட்டி.
  • இயேசு கிறிஸ்து.
  • பொய்யான ஆட்டுக்குட்டி, robot செய்து அதற்கு உயிர் கொடுத்து, அந்த மிருகத்தினுடைய இலக்கத்தைப் போட்டது என நாம் பார்த்தோம்.
  • அந்த 666 ஐ நெற்றியிலே, வலதுகையிலே பதித்தார்கள்.
  • Illuminati என்ற பிசாசினுடைய விசுவாசிகள் அவர்களுடைய அடையாளம் 2 விரல்களை(சுண்டு விரல் மற்றும் ஆள் காட்டி விரலை காண்பிப்பது.
  • அதினுடைய அர்த்தம் 6
  • கடலில் இருந்து வந்த இரண்டாவது மிருகத்தின் இலக்கமும் இது தான்.
  • அந்த இரண்டு கொம்புகள் உள்ள மிருகத்தை இப்படியாக அவர்கள் காண்பிக்கிறார்கள்.
  • இதினாலே அடையாளப்படுத்துவது பிசாசு (Free mason, satanism)
  • 666 க்கு இப்போதே இந்த உலகம் தயாராக ஆரம்பித்து விட்டது. 
  • முதல் மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு தான் இந்த 14 வது அதிகார சம்பவங்கள் தொடங்குகிறது. 
  • இந்த 666 சம்பவம் நடக்கும் போது, chip நெற்றிகளில் போடப்படும், அவர்கள் போய் நின்றாலே ATM கதவு திறக்கும். 
  • பொய்யான ஆட்டுக்குட்டியான பிசாசு அவனுடைய விசுவாசிகளுக்கு 666 இலக்கத்தை நெற்றியிலோ, கையிலோ குத்தி விடுவான். 
  • மெய்யான ஆட்டுகுட்டியானவர் அவருடைய முதற்கனிக்கு நெற்றியிலே பெயர் எழுதுவார். 
  • அது 14 வது அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 
சீயோன் மலையின்மேல் 
  • இது எல்லோரும் பார்க்கிற எருசலேமின் அருகில் இருக்கிற சீயோன் மலை அல்ல.
  • இந்த இடத்தில் சீயோன் மலை என்று சொல்லப்படுவது பரலோகத்தைக் குறிக்கிறது. 
  • சீயோன் மலை என்று வேதாகமத்தில் குறிப்பிடப்படும் போது அது உண்மையிலே எருசலேமின் அருகில் இருக்கிற சீயோன் மலையை குறித்து பேசுகிறது.
  • சில இடங்களில் தேவனுடைய பிரசன்னத்தை சீயோன் மலை என்று குறிப்பிடுகிறது. 
  • சில இடங்களில் சீயோன் மலை பரலோகத்தை குறிக்கிறது. 
  • இப்போது இந்த இடத்தில் பரலோகத்தினுடைய காட்சி ஆரம்பிக்கிறது. 
அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 
  • இயேசு கிறிஸ்துவினுடைய பெயர் இவர்களுக்கு எழுதப்பட்டதன் காரணம் என்ன?
  • இவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மணவாட்டி.
  • சபை. எவ்வளவு பாக்கியம்?
  • பிதாவுடைய பெயரை தன் பிள்ளைக்கு தான் எழுத முடியும். 
  • இயற்கையாகவே அப்பாவினுடைய பெயர் பிள்ளைக்கு கிடைத்துவிடும். 
  • நாம் இரட்சிக்கப்பட்ட உடனேயே நாம் தேவனுடைய பிள்ளை என்ற உரிமை நமக்கு கிடைக்கிறது. 
  • நாம் அவருடைய மணவாட்டி என்பதனால் அவருடைய பெயரும், நம்முடைய பெயரும் இணைக்கப்படுகிறது. 
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் 
  • யார் இவர்கள்?
  • கி.பி 371, Aries என்ற ஒருவன் இயேசுவானவர் தேவன் அல்ல என்று சொன்னான். 
  • Constantine என்ற ராஜாவுக்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்தான்.
  • அவர் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டினார். 
  • Aries பாதிரியார் பிரசங்கம் பண்ணுகிறார். 
  • இயேசு கிறிஸ்து தேவன் அல்ல என்று பிரசங்கிக்கிறான்.
  • அப்பபொழுது Athenes என்ற சாதாரண ஒரு பிரஜை, அதற்கு எதிராக அவன் பேசினான்.
  • எப்படியோ ஒரு பெரிய தர்க்கத்தின் பின்னதாக, இந்த Aries தோற்கடிக்கப்பட்டார்.
  • அவனுடைய வாய் மூடப்பட்டது.
  • Arianism அப்படியே இழுத்து மூடப்பட்டது. 
  • கி.பி 371ல் அல்ல, கி.பி 369 ல் அது உண்டாக்கப்பட்டது.
  • அதற்கு விரோதமாக ஒரு பெரிய கூட்டம் கூடினது.
  • இந்த 19ம் நூற்றாண்டிலே அமெரிக்காவில் ஒரு போதகருடைய மகன் Charles Wessel, அவன் Aries னுடைய காரியங்களை வாசித்து அவனுக்குள்ளே ஒரு பிசாசு புகுந்தது.
  • அவன். Aries-னுடைய காரியங்களை எடுத்து மீண்டும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான். 
  • அப்படியாக ஆரம்பிக்கப்பட்டது தான் Jehovah witnesses என்ற பெய்யான உபதேசம்.
  • Watch Tower Society என்பார்கள். 
  • அவர்களை ஒருக்காலும் உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். 
  • இன்னொரு கூட்டம் இருக்கிறது - CPM
  • தங்கம் போட மாட்டார்கள், ஊழியம் செய்கிறவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். 
  • இந்த இரு கூட்டத்தாரும் தாங்கள் தான் அந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என நினைக்கிறார்கள். 
  • ஆனால் அது அப்படி அல்ல.

அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.
 -வெளிப்படுத்தல் 14 : 2
  • கர்த்தருடைய சத்தம்.
  • யோவான் தனக்கு எப்படி புரிந்ததோ அப்படி எழுதுகிறார். 

அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
 -வெளிப்படுத்தல் 14 : 3

இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
  • அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரும் ஒரு பாடல் பாடுகிறார்களாம். 
  • அவர்களுக்கு மட்டும் தான் அந்த பாடல் விளங்குகிறதாம்.
பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட 
  • கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள்.
  • இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள். 
  • அப்படியென்றால் கிறிஸ்தவர்கள்.
  • கண்டிப்பாக யூதர்களாக இருக்க முடியாது. 
  • அப்படியென்றால் இது 7 ம் அதிகாரத்தில் பார்த்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் அல்ல.
  • அங்கு வருவது நூற்றுக்கு நூறு வீதம் யூதர்கள்.
  • அங்கு தெளிவாக கோத்திரம், கோத்திரமாக தெரிந்து கொண்டார் என வருகிறது. (12*12000)
  • யோவானும் இந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரில் ஒருவர். 

ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
 -வெளிப்படுத்தல் 14 : 4
  • யூதர்களில் மாத்திரம் அல்ல, எல்லா ஜாதிகளிலும் இருந்து 
  • அப்படியானால் இவர்கள் யார்?
  • பிலிப்பயர் நிரூபத்தில் நாய்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
  • அதன் அர்த்தம் பொய்யான உபதேசிகளுக்கு ஜாக்கிரதையாக இருங்கள் என்று அர்த்தம்.
  • பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். பெண்களுடைய பேச்சுக்கு விலகி இருங்கள் என்று.
  • அதற்கு அர்த்தமும் பொய்யான உபதேசம் தான்.
  • பாபிலோன் என்பது பொய்யான உபதேசம் அல்லவா?
  • பாபிலோன் மகாவேசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.(அதிகாரம் 18-19)
  • அதாவது பாபிலோன் என்பது உலகத்திற்கே பொய்யான உபதேங்களை கொண்டு போன ஒரு தேசம்.
  • யேசபேல் பெய்யான உபதேசம், தீர்க்கத்தரிசிகளை கொலை செய்தவள்.
  • எனவே வேதாகமத்தின் படி ஸ்திரீகள் என்று குறிப்பிடப்படுவது 
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; 
  • அவர்கள் வேசித்தனம் பண்ணவில்லை.
  • பொய்யான உபதேசங்களுக்கு இடம் அளிக்கவில்லை.
கற்புள்ளவர்கள் இவர்களே
  • ஆனால் திருமணம் ஆகாதவர்கள் எனலறு அர்த்தம் அல்ல.
  • பேதுரு திருமணம் முடித்து இருந்தார் (எ.கா)
  • கிரேக்க மொழி சொல்லின் அர்த்தப்படி இது இவர்களுடைய குணாதிசயம் அழகானது.
ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; 
  • விசுவாசிக்கும், சீஷனுக்கும் வித்தியாசம் உண்டு.
  • விசுவாசிகள், கர்த்தாவே என்னோடே கூட வந்தருளும் என்பார்கள்.
  • விசுவாசிகள் முன்பாக போய் கொண்டு இயேசுவை பின்னாலே கூட்டிக் கொண்டு சொல்வார்கள் 
  • ஆனால் சீஷர்கள் கர்த்தருக்கு பின்பாக போகிறவர்கள். 
  • முழு உலகத்திற்கும் போய் எல்லோரையும் சீஷராக்குங்கள் என்று இயேசு சொல்கிறார்  (மத் 28)
  • இயேசுவின் பின்னே போகிறவன் சீஷன்.
  • இந்த 1,44,000 பேரும் (சீஷர்கள்) ஆட்டுக்குட்டியானவர் எங்கு எங்கு போகிறாரோ, அங்கே எல்லாம் போகிறவர்கள்.
  • நான் போகிற இடமெல்லாம் வாரும் என்று சொல்லுகிற விசுவாசி ஒன்றுக்கும் உதவாதவன்.
  • நீர் போகிற இடமெல்லாம் நான் வருவேன் என்று சொல்லுபவன் தான் சரியான கிறிஸ்தவன்/சீஷன்.
இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
  • முதற்பலன் என்பது பழைய ஏற்பாட்டில் உள்ளது. 
  • அதாவது கர்ப்பத்தை திறக்கின்றவன். 
  • கர்ப்பத்திற்குள் போவது குழந்தை தான்.
  • முதற்பிறந்தவர்கள் தாயினுடைய கர்ப்பத்தை திறந்தவர்கள்.
  • கர்ப்பத்தை திறக்கிறவன் எனக்கு சொந்தம் என்று ஆண்டவர் சொல்லுகிறார். 
  • பெற்றோர் தேவனிடம் இந்த பிள்ளைகளை மீண்டும் பணம் செலுத்தி திரும்பி வாங்கிக் கொள்ள வேண்டும். 
  • வேதாகம சட்டம் - முதற்பிள்ளைகளாக பெற்றோர் 8 ம் நாளிலே கூடாரத்திற்குள் போய் ஆசாரியர்களுக்கு ஊடாக தேவனுக்கு காணிக்கைகளை செலுத்தி, என்னென்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டும். 
  • அது போல தேவன் இந்த முதற்பலனைக் குறித்து மிகவும் ஆர்வத்தோடு செயல்படுகிறவர். 
  • முதன்முதலாக இரட்சிக்கப்பட்ட மனிதனில் இருந்து முதல் 1,44,000 பேர் மட்டுமே.
  • வேதாகம காலத்திலேயே அந்த எண்ணிக்கை வந்திருக்கும். 
  • அவர்கள் தான் இயேசு கிறிஸ்துவின் முதற்பலன். 

இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
 -வெளிப்படுத்தல் 14 : 5
  • உண்மையாகவே, முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை பார்க்கிற பொழுது அவர்களுக்குள் பொய் இருக்கவில்லை.
  • பொய் சொன்னவர்களுக்கு என்ன நடந்தது என்ன அப் 5 வது அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.

பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
 -வெளிப்படுத்தல் 14 : 6
  • இந்த சுவிசேஷம் என்ன?
  • யாருக்கு இந்த சுவிசேஷம் பிரசிங்கிக்கப்படப் போகிறது?
  • 3 தேவ தூதர்கள். 
  • இந்த சம்பவம் நடைபெறுவது 7 ஆண்டுகள் உபத்திரவ காலத்தின் நடுப்பகுதியில்.
  • அதாவது இஸ்ரவேலரை தேவன் அந்த தேசத்தில் இருந்து வெளியே கொண்டு போய் பாதுகாப்பான ஒரு இடத்திலே வைத்து வைத்திருக்கிறார்.
  • இந்த சூழ்நிலையிலே 3 அந்திக்கிறிஸ்துக்கள் வெளிப்பட்டார்கள். 
  • 1)அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து (சர்ப்பம்) 
  • 2) பெருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து (கடலில் இருந்து எழும்பி வந்த மிருகம்) 
  • 3) மத ரீதியான அந்திக்கிறிஸ்து (ஆட்டுக்குட்டியை போல கொம்புகளை வைத்து கொண்டு வந்த மிருகம்)
  • இப்போது பரலோகத்தில் 1,44,000 பேர் பாடலை பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
  • அந்த சம்பவத்தில் தான் ஒன்றன் பின் ஒன்றாக 3 தேவதூதர்கள் வருகிறார்கள். 
நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
  • நித்திய சுவிசேஷம் வேறு, இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் வேறு (கிருபையின் சுவிசேஷம்)
  • கிருபையின் சுவிசேஷத்தை அறிவிக்கிற பொறுப்பு சபையினுடையது; தேவதூதர்களின் பொறுப்பு அல்ல.
  • சபை இல்லாத காலத்தில் அறிவிக்கப்படுகிற சுவிசேஷம் தான் நித்திய சுவிசேஷம்.
  • கிருபையின் சுவிசேஷம் என்பது தேவன் மனிதனாகிறார். அவர் சிலுவையில் மரிக்கிறார்; மறுபடியும் உயிர்த்தெழுகிறார். 
  • அவருடைய இரத்தத்தை சிந்தினதால் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கிறது. 
அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் 
  • கடைசி 3 வருடங்கள், பூமியில் வாழப்போகிற மக்களுக்கு கடைசி சந்தர்ப்பம்.

மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.
 -வெளிப்படுத்தல் 14 : 7
  • இந்த இடத்திலே இந்த தூதன் சொல்லுகிற சுவிசேஷம் என்றவென்று 7ம் வசனத்தில் பார்ப்போம்.
  • இது நம்முடைய சுவிசேஷம் அல்ல.
  • 1) தேவனுக்கு பயப்படுங்கள். 
  • 2) தேவனை மகிமைப்படுத்துங்கள்.
  • 3) அவருடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது.
  • 4) இவையெல்லாவற்றையும் படைத்த தேவனை தொழுது கொள்ளுங்கள்.
  • இந்த 4 விஷயங்கள் அடங்கிய சுவிசேஷம், இது தான் நித்திய சுவிசேஷம்.
  • கைவிடப்பட்ட மற்றவர்களுக்காக, 7 வருடங்களின் சரியாக நடுப்பகுதியில் , கடைசியாக ஒரு சந்தர்ப்பம்.
  • இந்த தூதன் வந்து சுவிசேஷத்தை அறிவித்து விட்டு போனப்பிறகு இன்னொரு தூதன் வருகிறான். 

வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
 -வெளிப்படுத்தல் 14 : 8
  • இரண்டாம் தூதன் பாபேல் கோபுரம் கட்டப்பட்ட காலம் முதல் வெளிப்படுத்தல் உடைய இந்த சந்தர்ப்பம் வரை முழு உலகத்தையுமே ஏமாற்றிக் கொண்டிருந்த பாபிலோன் ஆவி (பிசாசு, அந்திக்கிறிஸ்து).
  • மத ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலக மதங்களுக்குள்ளும் தாக்கத்தை உண்டு பண்ணின,
  • அரசியல் ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலகத்தினுடைய அரசியலையும் தாறுமாறாக்கின,
  • பொருளாதார ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலகத்தினுடைய பொருளாதாரத்திற்குள்ளும் பிசாசினுடைய காரியங்களை உட்பிரவேசிக்கப் பண்ணின,
  • தேவனை ஆராதிக்கிற ஆராதனையை அகற்றி பிசாசுக்கு ஆராதிக்கின்ற வேசித்தனத்தை உண்டுபண்ணின
  • அந்த மகா பாபிலான் இப்பொழுது விழப் போகின்றது. 
  • முடிவு உண்டாகிறது.
  • அது தான் இந்த இரண்டாவது தூதனுடைய அறிவிப்பு.
  • 15-17 ம் அதிகாரங்களில் அந்த பாபிலோன் விழுந்து அழிகின்ற முறையை அங்கு தேவன் சொல்லியிருக்கிறார். 

அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
 -வெளிப்படுத்தல் 14 : 9
  • நெற்றியிலோ, வலது கையிலோ 666 இலக்கத்தை எவன் எவன் எடுத்தானோ, அவர்களுக்கு 

அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
 -வெளிப்படுத்தல் 14 : 10
  • இந்த இடத்திலே மிகவும் ஒப்பீட்டு முறையிலே பேசப்படுகின்ற ஒரு உதாரணத்தை பார்க்கிறோம்.
  • புளித்து போன திராட்சை ரசத்தை எடுத்தால் அதை குடித்ததும் வெறி உண்டாகும். 
  • அதோடு கூட ஏதாவது ஒன்றை கலந்தால் அந்த வெறி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • தேவனுடைய கோபம், அவருடைய உக்கிரம் கலப்பில்லாத திராட்சைரசம் போன்றதாம். 
  • சில நேரங்களில் தேவனுக்கு கோபம் வரும்போது, அந்த கோபத்திற்குள்ளே கிருபை, அன்பு, உறவு அதெல்லாம் கலந்து இருக்கும். 
  • கோபத்தோடு இதெல்லாம் கலக்கும்போது கோபம் அப்படியே குறையும்.
  • அதனால் தான் நாம் தப்பி இருக்கிறோம்.
  • நமக்கும் அப்படி தான்.
  • இங்கு நடப்பது அவருடைய கலப்பில்லாத கோபம்.
  • இறுதி மூன்றரை ஆண்டுகளில் நெற்றியிலோ, வலது கையிலோ 666 இலக்கத்தை பெற்றவனுக்கு தேவனுடைய கொஞ்சம் கூட இரக்கமோ, கிருபையோ, தயவோ இல்லாமல் மிகக் கொடூரமான உக்கிரம். 
அக்கினியினாலும் கந்தகத்தினாலும் 
  • அக்கினியும், கந்தகமும் நிறைந்த இடம் நரகம்/பாதாளம்.

அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
 -வெளிப்படுத்தல் 14 : 11
  • இந்த நரகம் நித்திய நரகம் என்று சொல்லப்படுகிறது.
  • அங்கே ஒரு இளைப்பாறுதலும் இல்லை.
  • ஆகவே இது ஒரு பயங்கரமான இடம்.
  • இது 2வது மூன்றரை ஆண்டுகளில் நடக்கிறது.
  • இந்த இடத்தில் கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். 

தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
 -வெளிப்படுத்தல் 14 : 12
  • இந்த இடத்திலே இயேசு கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறதினாலே், இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல; இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.
  • அவர்களுக்கு தெரியும், இனி எப்படியும் இயேசுவுடைய மணவாட்டி ஆக முடியாது.
  • ஆனால் எப்படியாகிலும் பரலோகத்தில் நுழைந்து விடக் கூடிய ஒரு முறை இருக்கிறது என்று அவர்கள் அறிவார்கள்.
  • அந்த இலக்கத்தை பெறாமல், அவனை வணங்காமல் இருக்க வேண்டும். 
  • 7 வருடங்களும் மிகப் பொறுமையாக கழிக்க வேண்டும். 
  • ஆனால் அப்படி இருப்பது மிக கடினம்.
  • ஒன்றும் வாங்கவும் முடியாது; மறைந்து மறைந்து வாழ வேண்டும். 
  • அது தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
 -வெளிப்படுத்தல் 14 : 13
  • அதாவது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள், 666 இலக்கத்தை பெறாதவர்கள்.
  • ஒரு வேளை பட்டினியினால் மரிக்கலாம்.
  • அல்லது அந்த மூன்றரை ஆண்டுகளில் வருகிற உபத்திரவத்தினால் மரிக்கலாம்.
  • அல்லது அந்திக்கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு மரிக்கலாம்.
  • அந்த இறுதி மூன்றரை ஆண்டுகளுக்குள் முத்திரையைப் பெறாமல் அந்த மிருகத்தை வணங்காமல் அப்படி மரிக்கப் போகிறவர்கள் பாக்கியவான்கள் என்று வசனம் சொல்லுகிறது.
  • ஏனென்றால் அவர்களுடைய கடைசி சந்தர்ப்பத்தை பிடித்துக் கொள்ளுகிறார்கள்.
  • இந்த வசனத்தை நாம் சாதாரணமாக பார்த்தால், இந்த வார்த்தைக்கு முன்பு என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ளாவிட்டால் இதை நாம் தவறாக புரிந்து கொள்ளுவோம். 
  • இந்த இடத்தில் சொல்லப்படுகிறது, பின்பு என்று
  • இதற்கு பின்பு என்றால் எந்த சந்தர்ப்பத்தின் பின்பு.
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது; 7 வருட உபத்திரவ காலம் ஆரம்பிக்கப்பட்டு அதிலும் மூன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. 
  • எனவே, அந்த மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு,
  • அதாவது இப்பொழுது 666 வந்து விட்டது.
  • இப்போழுது அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சி மிக உக்கிரமாக இருக்கிறது.
  • இப்பொழுது இருந்து அந்த அந்திக்கறிஸ்துவினுடைய இலக்கத்தை பெறாமல் மரிக்கிறவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. 
  • அவர்கள் மீண்டும் கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக மாற முடியாது. 
  • மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டாள்.
  • அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சியில் வாழ்ந்து கொண்டு, துக்கத்தோடு, வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்குள்ளே அந்த கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்குள் சிலர், 666 ஐ எடுக்காமல் அவர்கள் அந்திக்கிறிஸ்துவினாலே உபத்திரவப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.
  • அப்படி மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள். 
  • அது் தான் இந்த 2வது சந்தர்ப்பம். 
பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; 
  • அவர்கள் பட்ட பிரசாயங்கள், கஷ்டங்கள்
  • இப்போது சபை இல்லை, பரிசுத்த ஆவியானவர் இல்லை, இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னம் இல்லை.
  • அந்த முதல் மூன்றரை ஆண்டுகள் எத்தனை வேதனைக்குள் இந்த கிறிஸ்தவர்கள் இருந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். 
  • இப்போது பரிசுத்த ஆவியானவர் இருக்கும் போதே இவ்வளவு கஷ்டம் நமக்கு. 
அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; 
  • விசுவாசிகள் போனபின்பு விசுவாசம் இல்லை.
  • கிரியை மாத்தரமே.
  • அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு உட்படாமல் துன்பத்தில் செய்கிற கிரியைகள். 

பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 14 : 14
  • அதாவது 7 வாதைகளுக்கு (அதி 15:1) முன்பு நடக்கப் போகிற சம்பவங்கள். 
  • தேவனுடைய கோபாக்கினைக்கும் ஒரு முடிவு உண்டு.
  • தேவனுடைய கோபம் எங்கே ஆரம்பிக்கிறது?
  • ஆட்டுக்குட்டியானவர் முத்திரிக்கப்பட்ட புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு முத்திரையாக உடைத்த போது.
  • அது தான் மிகப்பெரிய கோபம். அது போல் இன்னும் உலகத்திற்கு உபத்திரவம் வரவில்லை.
Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி

A-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்று சொல்லுகிறவர்கள்
Post-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பின்பு தான் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லுகிறவர்கள். 
Pre-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பின்பு தான் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லுகிறவர்கள் - அதாவது நாம்.

Dispensationalism - நாம் கடைசி காலகட்டத்திற்குள் பிரவேசிக்கிறோம். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு தான் உபத்திரவம் வருகிறது.

Dispensational-pre-Millennialism 

Dispensational - தேவன் காலகட்டத்திற்கு என்று காரியங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சில காரியங்கள் நடக்கிறது. 

1) Pre-Tribulational-Dispensational-pre-Millennialism - காலகட்டத்தை நம்புகின்ற, உபத்திவத்திற்கு முன்பு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு சபை  எடுத்துக்கொள்ளப்படுதல் (நாம் நம்புவது)
2) Mid-Tribulational-Dispensational-pre-Millennialism - 7 வருடங்களின் சரியான நடுப்பகுதியில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பது
3) Post-Tribulational-Dispensational-pre-Millennialism - உபத்திவங்களின் பின்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்பது.
  • பிசாசிற்கு தெரியும் வெளி 15:1 ல் சொல்லப்படுகிற அந்த 7 உபத்திரவங்கள் வந்த பிறகு அவன் கதை முடிந்தது. 
  • அதன் பின்பு அவனை நித்திய நரகத்திற்குள் தன்னை போடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். 
  • பிசாசிற்கு நன்றாக தெரியும் வெளிப்படுத்தல் புத்தகத்தைப் பற்றி, அவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இங்கு யோவான் மீண்டும் ஒரு முறை இயேசு கிறிஸ்துவைக் காண்கிறார். 

அந்த மேகத்தின்மேல் 
  • சிங்காசனத்தில் இருந்து அல்ல. 
  • மேகங்களுக்கு மேல்
  • மேகம் வானத்தில் இருக்கிறது. 
  • அது பரலோகம் அல்ல. 
  • பரலோகத்தில் மேகம் இல்லை. 
  • அங்கு இருந்து பூமியில் என்ன நடக்கிறது என்று இயேசு பார்த்து கொண்டிருக்கிறார்.
  • 1) பொற்கிரீடம் - ராஜத்துவத்தைக் காட்டுகிறது (அந்த 7 வருடம் இந்த பூமி அந்திக்கிறஸ்துவின் ஆட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் அழியும் வரை அதை ஆட்சி செய்பவர் தேவன். நல்ல/கெட்ட ராஜாவாக இருந்தாலும. அவன் நியமிக்கப்படுவது தேவனால். 
  • 2) அறுவடை- நல்ல அறுவடை(தேவைக்கு உதவுகிற, கெட்ட அறுவடை (தேவைக்கு உதவாத)
  • இஸ்ரவேலர்கள் விதைப்பது கோதுமை. எனவே அதில் களைகளை அறுவடை செய்வார்கள். (Talmud ல் கொடுக்கப்பட்டுள்ளது)
  • அதேப் போல தான் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அறுவடைகள் உண்டு 1) ஆத்தும அறுவடை-பெந்தெகொஸ்தே நாளிலே - அப்2 - இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள்- அந்த அறுவடையை எடுத்துக்கொண்டு போக இயேசு மேகங்களுடனே வருவார் 
2) Menorah -7பண்டிகைகள்- 7 அகல்கள் மூலமாக 7 சபைகள் அடையாளப்படுத்தப்படுகிறது. 
1. பஸ்கா - சிலுவை மரணம்
2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை - அவர் பாவமில்லாத சரீரம் -கல்லறை அடக்கம்.
3. முதற்பலன் பண்டிகை- மரித்தோரிலிருந்து முதற்பலனாக அவர் எழுந்தார்.
4. பெந்தெகொஸ்தே - 50 நாட்களுக்கு பிறகு- Shavuot பண்டிகை- அறுவடை. ஆத்தும அறுவடை ஆரம்பித்தது.
5. Shofar பண்டிகை- எக்காள பண்டிகை- இயேசு கிறிஸ்து எக்காள சத்தத்தோடு மீண்டும் வரப் போகிறார். 
6. Yom kippur- பண்டிகை- Day of Atonement- எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்ற பண்டிகை- அந்த நாளிலே தான் பிரதான ஆசாரியன் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திக்குள் போவான். இயேசுவானவர்
நம்மை பிரதான ஆசாரினாக பரலோக ராஜ்யத்துக்குள் கொண்டுப்போகப் போகிறார்.
7. Sukkot- கூடாரப்பண்டிகை- தேவன் உங்களுக்கு கூடாரத்தை தருகிறார். அவர் புதிய வானத்தையும், புதிய பூமியையும் சிருஷ்டித்து நமக்கு தருவார். 


அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
 -வெளிப்படுத்தல் 14 : 15
  • 7 ஆண்டுகளில் சரி நடுப்பகுதியிலே நாம் இருக்கிறோம்.
  • மோசேயும், எலியாவும் உடன்படிக்கைப்பெட்டியை மேலே கொண்டு சென்றவுடன் அங்கே பரலோகம் திறக்கப்படும் என்று வாசித்தோம்.
  • இப்பொழுது 2 தேவாலயம் இருக்கிறது. 
  • இப்போது உடன்படிக்கைப் பெட்டி பரலோக தேவாலயத்திலே இருக்கிறது. 
  • பூமியில் உள்ள தேவாலயத்தில் அந்திக்கிறிஸ்து இருக்கிறான்.
  • தூதர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். 
  • இப்போது இருக்கிற தேவதூதன் பூமியில் இருக்கிற தேவாலயத்தில் இருந்து தான் வருகிறார்கள்.
  • இது ஒப்பீடாக சொல்கிறது; போதும் ஆண்டவரே! பிசாசு யூதர்களை மிதித்தது போதும் கர்த்தாவே!
  • யூதர்களுடைய தேவாலயத்தில் அருவருக்கின்ற செயல்களை செய்ய இடமளித்தது போதும் ஆண்டவரே.
  • கி.மு 586 லே, நேபுகாத்நேச்சார் உடைய தலைவன் அவன் வந்து அந்த இடத்தை தீட்டுப்படுத்த இடமளித்தீர்.
  • கி.மு 167 Antiochus Epiohanus அங்கே பன்றியை பலியிட்டது போதும். 
  • கி.பி. 70 லே Titus, the General வந்து அந்த தேவாலயத்தை தீட்டுப்படுத்த இடமளித்தது போதும்.
  • Sultan sulaiman உடைய காலத்திலே, தேவனுடைய ஆலயம் இருந்த அந்த பூமி Al Axa, Al Amar பள்ளிவாசல்கள் கட்ட இடமளித்தது போதும்.
  • இப்பொழுது இந்த மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு அந்திக்கிறிஸ்து 7 ஆண்டுகள் ஆலயத்தை தீட்டுப்படுத்த இடமளித்தது போதும்.
  • தேவாலயத்திலிருந்து வருகிற தூதன் சொல்லுகிறான் இயேசுவை பார்த்து, போதும், போதும், இப்பொழுது அரிவாளை எடுத்து வெட்டும். 
  • அடி, நுனி என்று வைக்காமல் இயேசு எப்படி வெட்டி சாய்கின்றார் என்று பார்க்க போகிறோம். 
  • இதன் பின்பு வருகிறவையெல்லாம் பிசாசை முற்றிலும் அழிப்பதற்காக சொல்லப்படுகிறவைகள்.
  • பூமியினுடைய அழிவு முத்தி போயிருக்கிறது.

அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
 -வெளிப்படுத்தல் 14 : 16
  • வரப்போகின்ற அதிகாரத்திலே நாம் இதை தான் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
  • இயேசுவானவர் மேகங்கள் மேல் ஒரு அரிவாளை வைத்து அமர்ந்திருக்கிறார்.
  • அவருடைய சிரசின் மேலே பொற்கிரீடம் இருக்கிறது. 
  • இந்த இடத்திலே 3 தேவதூதர்களை பார்க்கிறோம். 
  • ஒருவன் பூமியிலிருக்கிற தேவாலயத்திலிருந்து வருகிறான். 
  • அவன் இயேசுவை பார்த்து சொல்லுகிறான், இப்பொழுது அறுவடை ஆயத்தமாய் இருக்கிறது, அறுத்து விடும் என்று.
  • அப்பொழுது இயேசு அரிவாளை நீட்டுகிற பொழுது அறுவடை அறுக்கப்படுகின்றதாம். 

பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
 -வெளிப்படுத்தல் 14 : 17
  • இன்னொரு தூதன் பரலோகத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து வருகிறான். 
  • அப்படியென்றால் இன்னுமொரு தூதன் பரலோகத்தில் இருந்து அரவாளை பிடித்துக்கொண்டு வர வேண்டும்.
  • அப்படியென்றால் வேறொன்றை அறுப்பதற்கு.
  • இன்னுமொரு தூதன் வருகிறான் பலிபீடத்திலிருந்து.
  • அவன் வந்து அந்த 2ம் தூதனை பார்த்து சொல்லுகிறான், நீயும் அரிவாளை வைத்து அறுவடையை அறுத்து விடு என்று.
  • அந்த இடத்திலே அறுவடையை அல்ல அறுப்பது.
  • இப்பொழுது மூன்றரை ஆண்டுகள் ஒரு புதுமையான அறுவடை இருக்கிறது. அறுத்துக்கொண்டு செல்கிறான். 
  • இவன் எதை அறுக்கப் போகிறான். 
  • திராட்சைப்பழங்களை என்று சொல்லப்படுகிறது.
  • அந்த திராட்சைப்பழங்களை அறுத்து, அதை கூடையில் போட்டு, திராட்சைரச ஆலையிலே போடுவார்கள். 
  • அதை அங்கு வந்து போடுகிற பொழுது, அங்கேப் போடுகிற திராட்சைப்பழங்களினாலே மிதிக்கப்பட்டு சிதறி விடும். 
  • 3ம் தூதன், 2ம் தூதனுக்கு சொல்லுகிறான். 
  • பூமியில் உள்ள திராட்சைப்பழங்களை அறுத்து, அந்த திராட்சை ஆலையிலே போடுங்கள் என்று சொல்லுகிறான். 
  • அதை போட்ட பின்பு, காலை நன்றாக கழுவி, அதில் இறங்கி மிதிப்பார்கள். 
  • இந்த இடத்தில் இப்படி வெட்டிப் போட்டதும், தேவன் அதை மிதிக்கும் பொழுது அந்த இரத்தம் அப்படியே சிதறும். 
  • இயேசுவானவர் சிலுவையில் மரிக்கும் பொழுது அவருடைய சரீரம் உடைக்கப்பட்டது. 
  • இரத்தம் சிந்தப்பட்டது. 
  • இயேசு பாவமற்றவர்.
  • முழு உலகத்தாருடைய பாவங்களையும் தன் மேல் ஏற்றுக் கொண்டார் அல்லவா.
  • அவர் அந்த பாவத்தை எடுத்தது சரீரத்திற்குள்ளா, இரத்தத்திற்குள்ளா? சரீரத்திற்குள்
  • ஏனென்றால் இரத்தம் பாவமற்றது. 
  • மனிதன் பாவியாக மாறுவது இரத்தத்தினாலே?
  • ஆதாமுடைய பாவத்தினால் எல்லா மனிதனுடைய இரத்தமும் பாவம் நிறைந்தது தான்.
  • விஞ்ஞானத்தின்படி தகப்பனுடைய இரத்தம் தான் பிள்ளைக்கு செல்கிறது. 
  • தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது தகப்பனுடைய இரத்தம் தான் உள்ளே செல்கிறது. 
  • இயேசு பாவமற்ற இரத்தத்தை சிந்தும்படி வந்தார்.
  • ஆகவே தான் அவர் மனித தகப்பனின்றி பிறந்தார். 
  • முழு உலகத்தினுடைய பாவத்தையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டதினாலே, பிதாவிற்கு கூட இயேசுவை பார்ப்பதற்கு முடியவில்லை.
  • ஆகவே தான் இயேசு பிதாவை பார்த்து ஏலீ, ஏலீ லாமா சபக்தானி என்று சொன்னார்.
  • பாவமும், பரிசுத்தமும் ஒன்றாக நிலைத்திருக்க முடியாது. 
  • இயேசு உலகத்தினுடைய பாவத்தை தன் சரீரத்தில் சுமந்த போது, பரிசுத்த இரத்தம் தானாகவே வெளியேற ஆரம்பித்தது. 
  • கெத்சமனே தோட்டத்திலேயே அவருடைய இரத்தம் வியர்வைத்துளிகளாக வெளியே வர ஆரம்பித்தது.
  • இறுதியாக இயேசு மரிக்கின்ற பொழுது அவருடைய சரீரத்திலே ஒரு துளி இரத்தம் கூட இருக்கவில்லை. 
  • சரீரம் பாவமானது, இரத்தம் பரிசுத்தமானது. இயேசுவின் மரணம்.
  • அந்த மரணத்தின் மூலமாக நமக்கு ஜீவன் கிடைக்கின்றது. 
  • எனவே அவருடைய பரிசுத்த இரத்தம் நம்மை கழுவுகின்றது. 
  • ஆனால் நாம் சரீரமும் பாவமானது. இரத்தமும் பாவமானது. ஆகவே இது இரண்டும் பிரியத் தேவையில்லை.
  • ஆனால் இயேசுவினுடைய பரிசுத்த இரத்தம் நம் சரீரத்தையும், இரத்தத்தையும் பரிசுத்தப்படுத்துகிறது. 
  • நாம் புது சிருஷ்டிகளாக மாறுகிறோம். 
  • அது தான் இரட்சிப்பு. 
  • பாவ சரீரத்தினுடைய அடையாளம் அப்பம், பரிசுத்த இரத்தத்தினுடைய அடையாளம் திராட்சைரசம்.
  • இது இரண்டையும் எடுத்து இயேசு சொல்கிறார், முதலாவது அப்பத்தையும், இரண்டாவது திராட்சைரசத்தையும் சாப்பிடு. 
  • என் சரீரத்தை நீ சாப்பிடுகிறபடியினால், நான் உனக்காக அடி வாங்கினதால், நீ அடி வாங்கினதாக எண்ணிக்கொண்டு 
  • என் இரத்தத்தை பானம் பண்ணுகிறபடியினால் இது என்னுடைய இரத்தத்தினால் ஆன உடன்படிக்கையால் நீ புது சிருஷ்டியாக மாறுகிறாய்.

திருவிருந்து என்றால் என்ன?


அப்பம்

திராட்சைரசம்

சரீரம்

இரத்தம்

பாவத்தை சுமந்து தீர்த்த சரீரம்

பரிசுத்த இரத்தம்

ருசி இல்லை

அதீத ருசி

கவலை

சந்தோஷம்

கல்வாரி

வெறுமையாக்கப்பட்ட கல்லறை

மரணம்

உயிர்த்தெழுதல்

கசப்பு, சாட்டை அடிகள்

வெற்றிக்களிப்பு, நித்தியஜீவன்




அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
 -வெளிப்படுத்தல் 14 : 18
  • இயேசு தான் வைத்திருக்கிற அரிவாளை கொண்டு கோதுமை அறுவடை.
  • அப்பத்திற்கு
  • மரணத்தையே கொலை செய்யப் போகிறார்.
  • மரணம் இன்னும் இருக்கிறது. 
  • மரணத்திற்கு காரணம் பாவம், பிசாசு.
  • மரணத்தையே மரிக்கச் செய்யப் போகிறார். 

அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
 -வெளிப்படுத்தல் 14 : 19
  • இரண்டாவது தூதன் வைத்திருக்கிற அரிவாள் எதற்கு?
  • திராட்சைப்பழங்களுக்கு
  • உலகத்தானுடைய சந்தோஷம், ஆடல், பாடல்
  • எல்லாவற்றிற்கும் அறுவடை. 

நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.  
 -வெளிப்படுத்தல் 14 : 20

  • திராட்சை ஆலையிலே நடக்கிற அறுவடை. 
  • தூதன் கையில் கொண்டிருக்கிற அரிவாளைக் கொண்டு. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4