வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 14 விளக்கம்
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
-வெளிப்படுத்தல் 14 : 1
-வெளிப்படுத்தல் 14 : 1
- பின்பு என்பது கிரேக்க மொழியில் Kai என்று பயன்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.
- 13ம் அதிகாரத்தில் உள்ள சம்பவங்கள் நடைபெற்ற பின்பு.
- நாம் 13 ம் அதிகாரத்தில் பார்த்தது பொய்யான ஆட்டுக்குட்டி.
- இங்கு நாம் பார்ப்பது மெய்யான ஆட்டுக்குட்டி.
- இயேசு கிறிஸ்து.
- பொய்யான ஆட்டுக்குட்டி, robot செய்து அதற்கு உயிர் கொடுத்து, அந்த மிருகத்தினுடைய இலக்கத்தைப் போட்டது என நாம் பார்த்தோம்.
- அந்த 666 ஐ நெற்றியிலே, வலதுகையிலே பதித்தார்கள்.
- Illuminati என்ற பிசாசினுடைய விசுவாசிகள் அவர்களுடைய அடையாளம் 2 விரல்களை(சுண்டு விரல் மற்றும் ஆள் காட்டி விரலை காண்பிப்பது.
- அதினுடைய அர்த்தம் 6
- கடலில் இருந்து வந்த இரண்டாவது மிருகத்தின் இலக்கமும் இது தான்.
- அந்த இரண்டு கொம்புகள் உள்ள மிருகத்தை இப்படியாக அவர்கள் காண்பிக்கிறார்கள்.
- இதினாலே அடையாளப்படுத்துவது பிசாசு (Free mason, satanism)
- 666 க்கு இப்போதே இந்த உலகம் தயாராக ஆரம்பித்து விட்டது.
- முதல் மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு தான் இந்த 14 வது அதிகார சம்பவங்கள் தொடங்குகிறது.
- இந்த 666 சம்பவம் நடக்கும் போது, chip நெற்றிகளில் போடப்படும், அவர்கள் போய் நின்றாலே ATM கதவு திறக்கும்.
- பொய்யான ஆட்டுக்குட்டியான பிசாசு அவனுடைய விசுவாசிகளுக்கு 666 இலக்கத்தை நெற்றியிலோ, கையிலோ குத்தி விடுவான்.
- மெய்யான ஆட்டுகுட்டியானவர் அவருடைய முதற்கனிக்கு நெற்றியிலே பெயர் எழுதுவார்.
- அது 14 வது அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
சீயோன் மலையின்மேல்
- இது எல்லோரும் பார்க்கிற எருசலேமின் அருகில் இருக்கிற சீயோன் மலை அல்ல.
- இந்த இடத்தில் சீயோன் மலை என்று சொல்லப்படுவது பரலோகத்தைக் குறிக்கிறது.
- சீயோன் மலை என்று வேதாகமத்தில் குறிப்பிடப்படும் போது அது உண்மையிலே எருசலேமின் அருகில் இருக்கிற சீயோன் மலையை குறித்து பேசுகிறது.
- சில இடங்களில் தேவனுடைய பிரசன்னத்தை சீயோன் மலை என்று குறிப்பிடுகிறது.
- சில இடங்களில் சீயோன் மலை பரலோகத்தை குறிக்கிறது.
- இப்போது இந்த இடத்தில் பரலோகத்தினுடைய காட்சி ஆரம்பிக்கிறது.
அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த
- இயேசு கிறிஸ்துவினுடைய பெயர் இவர்களுக்கு எழுதப்பட்டதன் காரணம் என்ன?
- இவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மணவாட்டி.
- சபை. எவ்வளவு பாக்கியம்?
- பிதாவுடைய பெயரை தன் பிள்ளைக்கு தான் எழுத முடியும்.
- இயற்கையாகவே அப்பாவினுடைய பெயர் பிள்ளைக்கு கிடைத்துவிடும்.
- நாம் இரட்சிக்கப்பட்ட உடனேயே நாம் தேவனுடைய பிள்ளை என்ற உரிமை நமக்கு கிடைக்கிறது.
- நாம் அவருடைய மணவாட்டி என்பதனால் அவருடைய பெயரும், நம்முடைய பெயரும் இணைக்கப்படுகிறது.
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும்
- யார் இவர்கள்?
- கி.பி 371, Aries என்ற ஒருவன் இயேசுவானவர் தேவன் அல்ல என்று சொன்னான்.
- Constantine என்ற ராஜாவுக்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்தான்.
- அவர் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டினார்.
- Aries பாதிரியார் பிரசங்கம் பண்ணுகிறார்.
- இயேசு கிறிஸ்து தேவன் அல்ல என்று பிரசங்கிக்கிறான்.
- அப்பபொழுது Athenes என்ற சாதாரண ஒரு பிரஜை, அதற்கு எதிராக அவன் பேசினான்.
- எப்படியோ ஒரு பெரிய தர்க்கத்தின் பின்னதாக, இந்த Aries தோற்கடிக்கப்பட்டார்.
- அவனுடைய வாய் மூடப்பட்டது.
- Arianism அப்படியே இழுத்து மூடப்பட்டது.
- கி.பி 371ல் அல்ல, கி.பி 369 ல் அது உண்டாக்கப்பட்டது.
- அதற்கு விரோதமாக ஒரு பெரிய கூட்டம் கூடினது.
- இந்த 19ம் நூற்றாண்டிலே அமெரிக்காவில் ஒரு போதகருடைய மகன் Charles Wessel, அவன் Aries னுடைய காரியங்களை வாசித்து அவனுக்குள்ளே ஒரு பிசாசு புகுந்தது.
- அவன். Aries-னுடைய காரியங்களை எடுத்து மீண்டும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான்.
- அப்படியாக ஆரம்பிக்கப்பட்டது தான் Jehovah witnesses என்ற பெய்யான உபதேசம்.
- Watch Tower Society என்பார்கள்.
- அவர்களை ஒருக்காலும் உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்.
- இன்னொரு கூட்டம் இருக்கிறது - CPM
- தங்கம் போட மாட்டார்கள், ஊழியம் செய்கிறவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.
- இந்த இரு கூட்டத்தாரும் தாங்கள் தான் அந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என நினைக்கிறார்கள்.
- ஆனால் அது அப்படி அல்ல.
-வெளிப்படுத்தல் 14 : 2
- கர்த்தருடைய சத்தம்.
- யோவான் தனக்கு எப்படி புரிந்ததோ அப்படி எழுதுகிறார்.
-வெளிப்படுத்தல் 14 : 3
இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
- அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரும் ஒரு பாடல் பாடுகிறார்களாம்.
- அவர்களுக்கு மட்டும் தான் அந்த பாடல் விளங்குகிறதாம்.
பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட
- கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள்.
- இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்.
- அப்படியென்றால் கிறிஸ்தவர்கள்.
- கண்டிப்பாக யூதர்களாக இருக்க முடியாது.
- அப்படியென்றால் இது 7 ம் அதிகாரத்தில் பார்த்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் அல்ல.
- அங்கு வருவது நூற்றுக்கு நூறு வீதம் யூதர்கள்.
- அங்கு தெளிவாக கோத்திரம், கோத்திரமாக தெரிந்து கொண்டார் என வருகிறது. (12*12000)
- யோவானும் இந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரில் ஒருவர்.
-வெளிப்படுத்தல் 14 : 4
- யூதர்களில் மாத்திரம் அல்ல, எல்லா ஜாதிகளிலும் இருந்து
- அப்படியானால் இவர்கள் யார்?
- பிலிப்பயர் நிரூபத்தில் நாய்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
- அதன் அர்த்தம் பொய்யான உபதேசிகளுக்கு ஜாக்கிரதையாக இருங்கள் என்று அர்த்தம்.
- பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். பெண்களுடைய பேச்சுக்கு விலகி இருங்கள் என்று.
- அதற்கு அர்த்தமும் பொய்யான உபதேசம் தான்.
- பாபிலோன் என்பது பொய்யான உபதேசம் அல்லவா?
- பாபிலோன் மகாவேசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.(அதிகாரம் 18-19)
- அதாவது பாபிலோன் என்பது உலகத்திற்கே பொய்யான உபதேங்களை கொண்டு போன ஒரு தேசம்.
- யேசபேல் பெய்யான உபதேசம், தீர்க்கத்தரிசிகளை கொலை செய்தவள்.
- எனவே வேதாகமத்தின் படி ஸ்திரீகள் என்று குறிப்பிடப்படுவது
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே;
- அவர்கள் வேசித்தனம் பண்ணவில்லை.
- பொய்யான உபதேசங்களுக்கு இடம் அளிக்கவில்லை.
கற்புள்ளவர்கள் இவர்களே
- ஆனால் திருமணம் ஆகாதவர்கள் எனலறு அர்த்தம் அல்ல.
- பேதுரு திருமணம் முடித்து இருந்தார் (எ.கா)
- கிரேக்க மொழி சொல்லின் அர்த்தப்படி இது இவர்களுடைய குணாதிசயம் அழகானது.
ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே;
- விசுவாசிக்கும், சீஷனுக்கும் வித்தியாசம் உண்டு.
- விசுவாசிகள், கர்த்தாவே என்னோடே கூட வந்தருளும் என்பார்கள்.
- விசுவாசிகள் முன்பாக போய் கொண்டு இயேசுவை பின்னாலே கூட்டிக் கொண்டு சொல்வார்கள்
- ஆனால் சீஷர்கள் கர்த்தருக்கு பின்பாக போகிறவர்கள்.
- முழு உலகத்திற்கும் போய் எல்லோரையும் சீஷராக்குங்கள் என்று இயேசு சொல்கிறார் (மத் 28)
- இயேசுவின் பின்னே போகிறவன் சீஷன்.
- இந்த 1,44,000 பேரும் (சீஷர்கள்) ஆட்டுக்குட்டியானவர் எங்கு எங்கு போகிறாரோ, அங்கே எல்லாம் போகிறவர்கள்.
- நான் போகிற இடமெல்லாம் வாரும் என்று சொல்லுகிற விசுவாசி ஒன்றுக்கும் உதவாதவன்.
- நீர் போகிற இடமெல்லாம் நான் வருவேன் என்று சொல்லுபவன் தான் சரியான கிறிஸ்தவன்/சீஷன்.
இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
- முதற்பலன் என்பது பழைய ஏற்பாட்டில் உள்ளது.
- அதாவது கர்ப்பத்தை திறக்கின்றவன்.
- கர்ப்பத்திற்குள் போவது குழந்தை தான்.
- முதற்பிறந்தவர்கள் தாயினுடைய கர்ப்பத்தை திறந்தவர்கள்.
- கர்ப்பத்தை திறக்கிறவன் எனக்கு சொந்தம் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
- பெற்றோர் தேவனிடம் இந்த பிள்ளைகளை மீண்டும் பணம் செலுத்தி திரும்பி வாங்கிக் கொள்ள வேண்டும்.
- வேதாகம சட்டம் - முதற்பிள்ளைகளாக பெற்றோர் 8 ம் நாளிலே கூடாரத்திற்குள் போய் ஆசாரியர்களுக்கு ஊடாக தேவனுக்கு காணிக்கைகளை செலுத்தி, என்னென்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- அது போல தேவன் இந்த முதற்பலனைக் குறித்து மிகவும் ஆர்வத்தோடு செயல்படுகிறவர்.
- முதன்முதலாக இரட்சிக்கப்பட்ட மனிதனில் இருந்து முதல் 1,44,000 பேர் மட்டுமே.
- வேதாகம காலத்திலேயே அந்த எண்ணிக்கை வந்திருக்கும்.
- அவர்கள் தான் இயேசு கிறிஸ்துவின் முதற்பலன்.
-வெளிப்படுத்தல் 14 : 5
- உண்மையாகவே, முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை பார்க்கிற பொழுது அவர்களுக்குள் பொய் இருக்கவில்லை.
- பொய் சொன்னவர்களுக்கு என்ன நடந்தது என்ன அப் 5 வது அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.
-வெளிப்படுத்தல் 14 : 6
- இந்த சுவிசேஷம் என்ன?
- யாருக்கு இந்த சுவிசேஷம் பிரசிங்கிக்கப்படப் போகிறது?
- 3 தேவ தூதர்கள்.
- இந்த சம்பவம் நடைபெறுவது 7 ஆண்டுகள் உபத்திரவ காலத்தின் நடுப்பகுதியில்.
- அதாவது இஸ்ரவேலரை தேவன் அந்த தேசத்தில் இருந்து வெளியே கொண்டு போய் பாதுகாப்பான ஒரு இடத்திலே வைத்து வைத்திருக்கிறார்.
- இந்த சூழ்நிலையிலே 3 அந்திக்கிறிஸ்துக்கள் வெளிப்பட்டார்கள்.
- 1)அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து (சர்ப்பம்)
- 2) பெருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து (கடலில் இருந்து எழும்பி வந்த மிருகம்)
- 3) மத ரீதியான அந்திக்கிறிஸ்து (ஆட்டுக்குட்டியை போல கொம்புகளை வைத்து கொண்டு வந்த மிருகம்)
- இப்போது பரலோகத்தில் 1,44,000 பேர் பாடலை பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
- அந்த சம்பவத்தில் தான் ஒன்றன் பின் ஒன்றாக 3 தேவதூதர்கள் வருகிறார்கள்.
நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
- நித்திய சுவிசேஷம் வேறு, இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் வேறு (கிருபையின் சுவிசேஷம்)
- கிருபையின் சுவிசேஷத்தை அறிவிக்கிற பொறுப்பு சபையினுடையது; தேவதூதர்களின் பொறுப்பு அல்ல.
- சபை இல்லாத காலத்தில் அறிவிக்கப்படுகிற சுவிசேஷம் தான் நித்திய சுவிசேஷம்.
- கிருபையின் சுவிசேஷம் என்பது தேவன் மனிதனாகிறார். அவர் சிலுவையில் மரிக்கிறார்; மறுபடியும் உயிர்த்தெழுகிறார்.
- அவருடைய இரத்தத்தை சிந்தினதால் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கிறது.
அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்
- கடைசி 3 வருடங்கள், பூமியில் வாழப்போகிற மக்களுக்கு கடைசி சந்தர்ப்பம்.
-வெளிப்படுத்தல் 14 : 7
- இந்த இடத்திலே இந்த தூதன் சொல்லுகிற சுவிசேஷம் என்றவென்று 7ம் வசனத்தில் பார்ப்போம்.
- இது நம்முடைய சுவிசேஷம் அல்ல.
- 1) தேவனுக்கு பயப்படுங்கள்.
- 2) தேவனை மகிமைப்படுத்துங்கள்.
- 3) அவருடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்தது.
- 4) இவையெல்லாவற்றையும் படைத்த தேவனை தொழுது கொள்ளுங்கள்.
- இந்த 4 விஷயங்கள் அடங்கிய சுவிசேஷம், இது தான் நித்திய சுவிசேஷம்.
- கைவிடப்பட்ட மற்றவர்களுக்காக, 7 வருடங்களின் சரியாக நடுப்பகுதியில் , கடைசியாக ஒரு சந்தர்ப்பம்.
- இந்த தூதன் வந்து சுவிசேஷத்தை அறிவித்து விட்டு போனப்பிறகு இன்னொரு தூதன் வருகிறான்.
-வெளிப்படுத்தல் 14 : 8
- இரண்டாம் தூதன் பாபேல் கோபுரம் கட்டப்பட்ட காலம் முதல் வெளிப்படுத்தல் உடைய இந்த சந்தர்ப்பம் வரை முழு உலகத்தையுமே ஏமாற்றிக் கொண்டிருந்த பாபிலோன் ஆவி (பிசாசு, அந்திக்கிறிஸ்து).
- மத ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலக மதங்களுக்குள்ளும் தாக்கத்தை உண்டு பண்ணின,
- அரசியல் ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலகத்தினுடைய அரசியலையும் தாறுமாறாக்கின,
- பொருளாதார ரீதியான பாபிலோனுக்கூடாக முழு உலகத்தினுடைய பொருளாதாரத்திற்குள்ளும் பிசாசினுடைய காரியங்களை உட்பிரவேசிக்கப் பண்ணின,
- தேவனை ஆராதிக்கிற ஆராதனையை அகற்றி பிசாசுக்கு ஆராதிக்கின்ற வேசித்தனத்தை உண்டுபண்ணின
- அந்த மகா பாபிலான் இப்பொழுது விழப் போகின்றது.
- முடிவு உண்டாகிறது.
- அது தான் இந்த இரண்டாவது தூதனுடைய அறிவிப்பு.
- 15-17 ம் அதிகாரங்களில் அந்த பாபிலோன் விழுந்து அழிகின்ற முறையை அங்கு தேவன் சொல்லியிருக்கிறார்.
-வெளிப்படுத்தல் 14 : 9
- நெற்றியிலோ, வலது கையிலோ 666 இலக்கத்தை எவன் எவன் எடுத்தானோ, அவர்களுக்கு
-வெளிப்படுத்தல் 14 : 10
- இந்த இடத்திலே மிகவும் ஒப்பீட்டு முறையிலே பேசப்படுகின்ற ஒரு உதாரணத்தை பார்க்கிறோம்.
- புளித்து போன திராட்சை ரசத்தை எடுத்தால் அதை குடித்ததும் வெறி உண்டாகும்.
- அதோடு கூட ஏதாவது ஒன்றை கலந்தால் அந்த வெறி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
- தேவனுடைய கோபம், அவருடைய உக்கிரம் கலப்பில்லாத திராட்சைரசம் போன்றதாம்.
- சில நேரங்களில் தேவனுக்கு கோபம் வரும்போது, அந்த கோபத்திற்குள்ளே கிருபை, அன்பு, உறவு அதெல்லாம் கலந்து இருக்கும்.
- கோபத்தோடு இதெல்லாம் கலக்கும்போது கோபம் அப்படியே குறையும்.
- அதனால் தான் நாம் தப்பி இருக்கிறோம்.
- நமக்கும் அப்படி தான்.
- இங்கு நடப்பது அவருடைய கலப்பில்லாத கோபம்.
- இறுதி மூன்றரை ஆண்டுகளில் நெற்றியிலோ, வலது கையிலோ 666 இலக்கத்தை பெற்றவனுக்கு தேவனுடைய கொஞ்சம் கூட இரக்கமோ, கிருபையோ, தயவோ இல்லாமல் மிகக் கொடூரமான உக்கிரம்.
அக்கினியினாலும் கந்தகத்தினாலும்
- அக்கினியும், கந்தகமும் நிறைந்த இடம் நரகம்/பாதாளம்.
-வெளிப்படுத்தல் 14 : 11
- இந்த நரகம் நித்திய நரகம் என்று சொல்லப்படுகிறது.
- அங்கே ஒரு இளைப்பாறுதலும் இல்லை.
- ஆகவே இது ஒரு பயங்கரமான இடம்.
- இது 2வது மூன்றரை ஆண்டுகளில் நடக்கிறது.
- இந்த இடத்தில் கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.
-வெளிப்படுத்தல் 14 : 12
- இந்த இடத்திலே இயேசு கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறதினாலே், இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
- ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல; இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.
- அவர்களுக்கு தெரியும், இனி எப்படியும் இயேசுவுடைய மணவாட்டி ஆக முடியாது.
- ஆனால் எப்படியாகிலும் பரலோகத்தில் நுழைந்து விடக் கூடிய ஒரு முறை இருக்கிறது என்று அவர்கள் அறிவார்கள்.
- அந்த இலக்கத்தை பெறாமல், அவனை வணங்காமல் இருக்க வேண்டும்.
- 7 வருடங்களும் மிகப் பொறுமையாக கழிக்க வேண்டும்.
- ஆனால் அப்படி இருப்பது மிக கடினம்.
- ஒன்றும் வாங்கவும் முடியாது; மறைந்து மறைந்து வாழ வேண்டும்.
- அது தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
-வெளிப்படுத்தல் 14 : 13
- அதாவது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள், 666 இலக்கத்தை பெறாதவர்கள்.
- ஒரு வேளை பட்டினியினால் மரிக்கலாம்.
- அல்லது அந்த மூன்றரை ஆண்டுகளில் வருகிற உபத்திரவத்தினால் மரிக்கலாம்.
- அல்லது அந்திக்கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு மரிக்கலாம்.
- அந்த இறுதி மூன்றரை ஆண்டுகளுக்குள் முத்திரையைப் பெறாமல் அந்த மிருகத்தை வணங்காமல் அப்படி மரிக்கப் போகிறவர்கள் பாக்கியவான்கள் என்று வசனம் சொல்லுகிறது.
- ஏனென்றால் அவர்களுடைய கடைசி சந்தர்ப்பத்தை பிடித்துக் கொள்ளுகிறார்கள்.
- இந்த வசனத்தை நாம் சாதாரணமாக பார்த்தால், இந்த வார்த்தைக்கு முன்பு என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ளாவிட்டால் இதை நாம் தவறாக புரிந்து கொள்ளுவோம்.
- இந்த இடத்தில் சொல்லப்படுகிறது, பின்பு என்று
- இதற்கு பின்பு என்றால் எந்த சந்தர்ப்பத்தின் பின்பு.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது; 7 வருட உபத்திரவ காலம் ஆரம்பிக்கப்பட்டு அதிலும் மூன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது.
- எனவே, அந்த மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு,
- அதாவது இப்பொழுது 666 வந்து விட்டது.
- இப்போழுது அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சி மிக உக்கிரமாக இருக்கிறது.
- இப்பொழுது இருந்து அந்த அந்திக்கறிஸ்துவினுடைய இலக்கத்தை பெறாமல் மரிக்கிறவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.
- அவர்கள் மீண்டும் கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக மாற முடியாது.
- மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டாள்.
- அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சியில் வாழ்ந்து கொண்டு, துக்கத்தோடு, வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்குள்ளே அந்த கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்குள் சிலர், 666 ஐ எடுக்காமல் அவர்கள் அந்திக்கிறிஸ்துவினாலே உபத்திரவப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.
- அப்படி மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
- அது் தான் இந்த 2வது சந்தர்ப்பம்.
பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்;
- அவர்கள் பட்ட பிரசாயங்கள், கஷ்டங்கள்
- இப்போது சபை இல்லை, பரிசுத்த ஆவியானவர் இல்லை, இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னம் இல்லை.
- அந்த முதல் மூன்றரை ஆண்டுகள் எத்தனை வேதனைக்குள் இந்த கிறிஸ்தவர்கள் இருந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
- இப்போது பரிசுத்த ஆவியானவர் இருக்கும் போதே இவ்வளவு கஷ்டம் நமக்கு.
அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்;
- விசுவாசிகள் போனபின்பு விசுவாசம் இல்லை.
- கிரியை மாத்தரமே.
- அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு உட்படாமல் துன்பத்தில் செய்கிற கிரியைகள்.
-வெளிப்படுத்தல் 14 : 14
- அதாவது 7 வாதைகளுக்கு (அதி 15:1) முன்பு நடக்கப் போகிற சம்பவங்கள்.
- தேவனுடைய கோபாக்கினைக்கும் ஒரு முடிவு உண்டு.
- தேவனுடைய கோபம் எங்கே ஆரம்பிக்கிறது?
- ஆட்டுக்குட்டியானவர் முத்திரிக்கப்பட்ட புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு முத்திரையாக உடைத்த போது.
- அது தான் மிகப்பெரிய கோபம். அது போல் இன்னும் உலகத்திற்கு உபத்திரவம் வரவில்லை.
Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி
A-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்று சொல்லுகிறவர்கள்
Post-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பின்பு தான் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லுகிறவர்கள்.
Pre-Millennialism - ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பின்பு தான் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லுகிறவர்கள் - அதாவது நாம்.
Dispensationalism - நாம் கடைசி காலகட்டத்திற்குள் பிரவேசிக்கிறோம். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு தான் உபத்திரவம் வருகிறது.
Dispensational-pre-Millennialism
Dispensational - தேவன் காலகட்டத்திற்கு என்று காரியங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சில காரியங்கள் நடக்கிறது.
1) Pre-Tribulational-Dispensational-pre-Millennialism - காலகட்டத்தை நம்புகின்ற, உபத்திவத்திற்கு முன்பு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு சபை எடுத்துக்கொள்ளப்படுதல் (நாம் நம்புவது)
2) Mid-Tribulational-Dispensational-pre-Millennialism - 7 வருடங்களின் சரியான நடுப்பகுதியில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பது
3) Post-Tribulational-Dispensational-pre-Millennialism - உபத்திவங்களின் பின்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்பது.
- பிசாசிற்கு தெரியும் வெளி 15:1 ல் சொல்லப்படுகிற அந்த 7 உபத்திரவங்கள் வந்த பிறகு அவன் கதை முடிந்தது.
- அதன் பின்பு அவனை நித்திய நரகத்திற்குள் தன்னை போடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.
- பிசாசிற்கு நன்றாக தெரியும் வெளிப்படுத்தல் புத்தகத்தைப் பற்றி, அவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இங்கு யோவான் மீண்டும் ஒரு முறை இயேசு கிறிஸ்துவைக் காண்கிறார்.
அந்த மேகத்தின்மேல்
- சிங்காசனத்தில் இருந்து அல்ல.
- மேகங்களுக்கு மேல்
- மேகம் வானத்தில் இருக்கிறது.
- அது பரலோகம் அல்ல.
- பரலோகத்தில் மேகம் இல்லை.
- அங்கு இருந்து பூமியில் என்ன நடக்கிறது என்று இயேசு பார்த்து கொண்டிருக்கிறார்.
- 1) பொற்கிரீடம் - ராஜத்துவத்தைக் காட்டுகிறது (அந்த 7 வருடம் இந்த பூமி அந்திக்கிறஸ்துவின் ஆட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் அழியும் வரை அதை ஆட்சி செய்பவர் தேவன். நல்ல/கெட்ட ராஜாவாக இருந்தாலும. அவன் நியமிக்கப்படுவது தேவனால்.
- 2) அறுவடை- நல்ல அறுவடை(தேவைக்கு உதவுகிற, கெட்ட அறுவடை (தேவைக்கு உதவாத)
- இஸ்ரவேலர்கள் விதைப்பது கோதுமை. எனவே அதில் களைகளை அறுவடை செய்வார்கள். (Talmud ல் கொடுக்கப்பட்டுள்ளது)
- அதேப் போல தான் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அறுவடைகள் உண்டு 1) ஆத்தும அறுவடை-பெந்தெகொஸ்தே நாளிலே - அப்2 - இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள்- அந்த அறுவடையை எடுத்துக்கொண்டு போக இயேசு மேகங்களுடனே வருவார்
1. பஸ்கா - சிலுவை மரணம்
2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை - அவர் பாவமில்லாத சரீரம் -கல்லறை அடக்கம்.
3. முதற்பலன் பண்டிகை- மரித்தோரிலிருந்து முதற்பலனாக அவர் எழுந்தார்.
4. பெந்தெகொஸ்தே - 50 நாட்களுக்கு பிறகு- Shavuot பண்டிகை- அறுவடை. ஆத்தும அறுவடை ஆரம்பித்தது.
5. Shofar பண்டிகை- எக்காள பண்டிகை- இயேசு கிறிஸ்து எக்காள சத்தத்தோடு மீண்டும் வரப் போகிறார்.
6. Yom kippur- பண்டிகை- Day of Atonement- எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்ற பண்டிகை- அந்த நாளிலே தான் பிரதான ஆசாரியன் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திக்குள் போவான். இயேசுவானவர்
நம்மை பிரதான ஆசாரினாக பரலோக ராஜ்யத்துக்குள் கொண்டுப்போகப் போகிறார்.
7. Sukkot- கூடாரப்பண்டிகை- தேவன் உங்களுக்கு கூடாரத்தை தருகிறார். அவர் புதிய வானத்தையும், புதிய பூமியையும் சிருஷ்டித்து நமக்கு தருவார்.
-வெளிப்படுத்தல் 14 : 15
- 7 ஆண்டுகளில் சரி நடுப்பகுதியிலே நாம் இருக்கிறோம்.
- மோசேயும், எலியாவும் உடன்படிக்கைப்பெட்டியை மேலே கொண்டு சென்றவுடன் அங்கே பரலோகம் திறக்கப்படும் என்று வாசித்தோம்.
- இப்பொழுது 2 தேவாலயம் இருக்கிறது.
- இப்போது உடன்படிக்கைப் பெட்டி பரலோக தேவாலயத்திலே இருக்கிறது.
- பூமியில் உள்ள தேவாலயத்தில் அந்திக்கிறிஸ்து இருக்கிறான்.
- தூதர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.
- இப்போது இருக்கிற தேவதூதன் பூமியில் இருக்கிற தேவாலயத்தில் இருந்து தான் வருகிறார்கள்.
- இது ஒப்பீடாக சொல்கிறது; போதும் ஆண்டவரே! பிசாசு யூதர்களை மிதித்தது போதும் கர்த்தாவே!
- யூதர்களுடைய தேவாலயத்தில் அருவருக்கின்ற செயல்களை செய்ய இடமளித்தது போதும் ஆண்டவரே.
- கி.மு 586 லே, நேபுகாத்நேச்சார் உடைய தலைவன் அவன் வந்து அந்த இடத்தை தீட்டுப்படுத்த இடமளித்தீர்.
- கி.மு 167 Antiochus Epiohanus அங்கே பன்றியை பலியிட்டது போதும்.
- கி.பி. 70 லே Titus, the General வந்து அந்த தேவாலயத்தை தீட்டுப்படுத்த இடமளித்தது போதும்.
- Sultan sulaiman உடைய காலத்திலே, தேவனுடைய ஆலயம் இருந்த அந்த பூமி Al Axa, Al Amar பள்ளிவாசல்கள் கட்ட இடமளித்தது போதும்.
- இப்பொழுது இந்த மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு அந்திக்கிறிஸ்து 7 ஆண்டுகள் ஆலயத்தை தீட்டுப்படுத்த இடமளித்தது போதும்.
- தேவாலயத்திலிருந்து வருகிற தூதன் சொல்லுகிறான் இயேசுவை பார்த்து, போதும், போதும், இப்பொழுது அரிவாளை எடுத்து வெட்டும்.
- அடி, நுனி என்று வைக்காமல் இயேசு எப்படி வெட்டி சாய்கின்றார் என்று பார்க்க போகிறோம்.
- இதன் பின்பு வருகிறவையெல்லாம் பிசாசை முற்றிலும் அழிப்பதற்காக சொல்லப்படுகிறவைகள்.
- பூமியினுடைய அழிவு முத்தி போயிருக்கிறது.
-வெளிப்படுத்தல் 14 : 16
- வரப்போகின்ற அதிகாரத்திலே நாம் இதை தான் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
- இயேசுவானவர் மேகங்கள் மேல் ஒரு அரிவாளை வைத்து அமர்ந்திருக்கிறார்.
- அவருடைய சிரசின் மேலே பொற்கிரீடம் இருக்கிறது.
- இந்த இடத்திலே 3 தேவதூதர்களை பார்க்கிறோம்.
- ஒருவன் பூமியிலிருக்கிற தேவாலயத்திலிருந்து வருகிறான்.
- அவன் இயேசுவை பார்த்து சொல்லுகிறான், இப்பொழுது அறுவடை ஆயத்தமாய் இருக்கிறது, அறுத்து விடும் என்று.
- அப்பொழுது இயேசு அரிவாளை நீட்டுகிற பொழுது அறுவடை அறுக்கப்படுகின்றதாம்.
-வெளிப்படுத்தல் 14 : 17
- இன்னொரு தூதன் பரலோகத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து வருகிறான்.
- அப்படியென்றால் இன்னுமொரு தூதன் பரலோகத்தில் இருந்து அரவாளை பிடித்துக்கொண்டு வர வேண்டும்.
- அப்படியென்றால் வேறொன்றை அறுப்பதற்கு.
- இன்னுமொரு தூதன் வருகிறான் பலிபீடத்திலிருந்து.
- அவன் வந்து அந்த 2ம் தூதனை பார்த்து சொல்லுகிறான், நீயும் அரிவாளை வைத்து அறுவடையை அறுத்து விடு என்று.
- அந்த இடத்திலே அறுவடையை அல்ல அறுப்பது.
- இப்பொழுது மூன்றரை ஆண்டுகள் ஒரு புதுமையான அறுவடை இருக்கிறது. அறுத்துக்கொண்டு செல்கிறான்.
- இவன் எதை அறுக்கப் போகிறான்.
- திராட்சைப்பழங்களை என்று சொல்லப்படுகிறது.
- அந்த திராட்சைப்பழங்களை அறுத்து, அதை கூடையில் போட்டு, திராட்சைரச ஆலையிலே போடுவார்கள்.
- அதை அங்கு வந்து போடுகிற பொழுது, அங்கேப் போடுகிற திராட்சைப்பழங்களினாலே மிதிக்கப்பட்டு சிதறி விடும்.
- 3ம் தூதன், 2ம் தூதனுக்கு சொல்லுகிறான்.
- பூமியில் உள்ள திராட்சைப்பழங்களை அறுத்து, அந்த திராட்சை ஆலையிலே போடுங்கள் என்று சொல்லுகிறான்.
- அதை போட்ட பின்பு, காலை நன்றாக கழுவி, அதில் இறங்கி மிதிப்பார்கள்.
- இந்த இடத்தில் இப்படி வெட்டிப் போட்டதும், தேவன் அதை மிதிக்கும் பொழுது அந்த இரத்தம் அப்படியே சிதறும்.
- இயேசுவானவர் சிலுவையில் மரிக்கும் பொழுது அவருடைய சரீரம் உடைக்கப்பட்டது.
- இரத்தம் சிந்தப்பட்டது.
- இயேசு பாவமற்றவர்.
- முழு உலகத்தாருடைய பாவங்களையும் தன் மேல் ஏற்றுக் கொண்டார் அல்லவா.
- அவர் அந்த பாவத்தை எடுத்தது சரீரத்திற்குள்ளா, இரத்தத்திற்குள்ளா? சரீரத்திற்குள்
- ஏனென்றால் இரத்தம் பாவமற்றது.
- மனிதன் பாவியாக மாறுவது இரத்தத்தினாலே?
- ஆதாமுடைய பாவத்தினால் எல்லா மனிதனுடைய இரத்தமும் பாவம் நிறைந்தது தான்.
- விஞ்ஞானத்தின்படி தகப்பனுடைய இரத்தம் தான் பிள்ளைக்கு செல்கிறது.
- தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது தகப்பனுடைய இரத்தம் தான் உள்ளே செல்கிறது.
- இயேசு பாவமற்ற இரத்தத்தை சிந்தும்படி வந்தார்.
- ஆகவே தான் அவர் மனித தகப்பனின்றி பிறந்தார்.
- முழு உலகத்தினுடைய பாவத்தையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டதினாலே, பிதாவிற்கு கூட இயேசுவை பார்ப்பதற்கு முடியவில்லை.
- ஆகவே தான் இயேசு பிதாவை பார்த்து ஏலீ, ஏலீ லாமா சபக்தானி என்று சொன்னார்.
- பாவமும், பரிசுத்தமும் ஒன்றாக நிலைத்திருக்க முடியாது.
- இயேசு உலகத்தினுடைய பாவத்தை தன் சரீரத்தில் சுமந்த போது, பரிசுத்த இரத்தம் தானாகவே வெளியேற ஆரம்பித்தது.
- கெத்சமனே தோட்டத்திலேயே அவருடைய இரத்தம் வியர்வைத்துளிகளாக வெளியே வர ஆரம்பித்தது.
- இறுதியாக இயேசு மரிக்கின்ற பொழுது அவருடைய சரீரத்திலே ஒரு துளி இரத்தம் கூட இருக்கவில்லை.
- சரீரம் பாவமானது, இரத்தம் பரிசுத்தமானது. இயேசுவின் மரணம்.
- அந்த மரணத்தின் மூலமாக நமக்கு ஜீவன் கிடைக்கின்றது.
- எனவே அவருடைய பரிசுத்த இரத்தம் நம்மை கழுவுகின்றது.
- ஆனால் நாம் சரீரமும் பாவமானது. இரத்தமும் பாவமானது. ஆகவே இது இரண்டும் பிரியத் தேவையில்லை.
- ஆனால் இயேசுவினுடைய பரிசுத்த இரத்தம் நம் சரீரத்தையும், இரத்தத்தையும் பரிசுத்தப்படுத்துகிறது.
- நாம் புது சிருஷ்டிகளாக மாறுகிறோம்.
- அது தான் இரட்சிப்பு.
- பாவ சரீரத்தினுடைய அடையாளம் அப்பம், பரிசுத்த இரத்தத்தினுடைய அடையாளம் திராட்சைரசம்.
- இது இரண்டையும் எடுத்து இயேசு சொல்கிறார், முதலாவது அப்பத்தையும், இரண்டாவது திராட்சைரசத்தையும் சாப்பிடு.
- என் சரீரத்தை நீ சாப்பிடுகிறபடியினால், நான் உனக்காக அடி வாங்கினதால், நீ அடி வாங்கினதாக எண்ணிக்கொண்டு
- என் இரத்தத்தை பானம் பண்ணுகிறபடியினால் இது என்னுடைய இரத்தத்தினால் ஆன உடன்படிக்கையால் நீ புது சிருஷ்டியாக மாறுகிறாய்.
திருவிருந்து என்றால் என்ன?
அப்பம் |
திராட்சைரசம் |
சரீரம் |
இரத்தம் |
பாவத்தை சுமந்து தீர்த்த சரீரம் |
பரிசுத்த இரத்தம் |
ருசி இல்லை |
அதீத ருசி |
கவலை |
சந்தோஷம் |
கல்வாரி |
வெறுமையாக்கப்பட்ட கல்லறை |
மரணம் |
உயிர்த்தெழுதல் |
கசப்பு, சாட்டை அடிகள் |
வெற்றிக்களிப்பு, நித்தியஜீவன் |
-வெளிப்படுத்தல் 14 : 18
- இயேசு தான் வைத்திருக்கிற அரிவாளை கொண்டு கோதுமை அறுவடை.
- அப்பத்திற்கு
- மரணத்தையே கொலை செய்யப் போகிறார்.
- மரணம் இன்னும் இருக்கிறது.
- மரணத்திற்கு காரணம் பாவம், பிசாசு.
- மரணத்தையே மரிக்கச் செய்யப் போகிறார்.
-வெளிப்படுத்தல் 14 : 19
- இரண்டாவது தூதன் வைத்திருக்கிற அரிவாள் எதற்கு?
- திராட்சைப்பழங்களுக்கு
- உலகத்தானுடைய சந்தோஷம், ஆடல், பாடல்
- எல்லாவற்றிற்கும் அறுவடை.
-வெளிப்படுத்தல் 14 : 20
- திராட்சை ஆலையிலே நடக்கிற அறுவடை.
- தூதன் கையில் கொண்டிருக்கிற அரிவாளைக் கொண்டு.
Comments
Post a Comment