வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம்
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
-வெளிப்படுத்தல் 19 : 1
-வெளிப்படுத்தல் 19 : 1
- ஆட்டுக்குட்டியானவர் - இயேசுவானவரின் கல்யாணம்
- தேவனாகிய இயேசு கிறிஸ்துவா? மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவா?
- தேவன் ஒரு முறை மனுஷனானார்.
- தேவன் மனிதனாக இருக்கும் பொழுது தான் அவர் திருமணம் முடிக்க முடியும்.
- மனிதனாகிய இயேசு கிறிஸ்துவுக்கே.
- யோவான் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை பார்த்து சொல்லுகிறார்.
- இதோ முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியானவர் என்று.
- அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியாக அங்கு அடிக்கப்பட்டார்.
- யூத முறைமையின் படி ஒரு ஆண் திருமணம் முடிப்பது 40 வயதிலே தான்.
- இயேசு 33 வருஷம் பூமியில் மனிதனாக வாழ்ந்து விட்டார்.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இயேசுவானவர் பரலோகத்தில் மீண்டுமாக ஆட்டுக்குட்டியானவராக காணப்படுவார்.
- மீண்டும் மனித வயதை தன்னிடத்தில் எடுக்கின்றார்.
- மனிதனாக 7 வருடம் வாழுவார்.
- 7 ஆண்டுகள் பூமியில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி.
- 7 ஆண்டுகள் பரலோகத்தில் சபையானது திருமணத்திற்காக ஆயத்தமாக்கப்படுகிறது.
- அப்போது அந்த 7 ஆண்டுகளுக்குள் 33+7=40 வயதாக அவருடைய வயது கூட்டப்படுகிறது.
- எவ்வளவு அழகாக இங்கு யூத கலாச்சாரத்தை அவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
- யூத கலாச்சாரமானது தேவன் திட்டம் பண்ணி உருவாக்கி கொடுத்த கலாச்சாரம்.
-வெளிப்படுத்தல் 19 : 2
- கர்த்தர் நீதியுள்ளவர்.
- நீதியின்படி நியாயத்தீர்க்கிறவர்
கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
-சங்கீதம் 119 : 137
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.
-சங்கீதம் 19 : 9
-வெளிப்படுத்தல் 19 : 3
- புகை நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
-ஏசாயா 34 : 10
-வெளிப்படுத்தல் 19 : 4
- இந்த 24 மூப்பர்கள் தேவதூதர்களை குறிக்கிறது.
- தேவனை தொழுது கொள்ளுகிறார்கள்.
-வெளிப்படுத்தல் 19 : 5
- எல்லோரும் கர்த்தரை துதியுங்கள் என்ற சத்தம் கேட்டது.
-வெளிப்படுத்தல் 19 : 6
- கர்த்தரே ராஜரீகம் பண்ணிகிறவர்.
-வெளிப்படுத்தல் 19 : 7
- சபை எடுத்துக்கொள்ளப்படும் போது தேவ தூதர்களுக்கு ஒரே சந்தோஷம்.
- இந்த இடத்தில் தான் முதல் முறையாக சபையை பார்த்து மனைவி என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
- முன்பு மணவாட்டி என்று சொல்லப்பட்டது.
-வெளிப்படுத்தல் 19 : 8
- பிரகாசமுள்ள- கிறிஸ்தவனுக்கு நித்திய நித்தியமாய் கிடைக்கப் போகின்ற ஒரு வரப்பிரசாதம் பிரகாசம்.
- மக்களுடைய பிரச்சனைகளால் அவர்கள் முகம் இருளடைந்து இருக்கிறது.
- ஆனால் இப்போது நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
- பரிசுத்தவான்களுடைய நீதி என்று சொல்லப்படுவது என்ன?
- இயேசுகிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் தான் என்னுடைய இரட்சகர் என்று விசுவாசித்து அவரை பின்பற்றுகிற கிறிஸ்தவர்கள்.
- கிறிஸ்தவர்கள் தான் நீதிமான்கள்.
- நீதி என்பது கிரியை அல்ல.
- அந்த நீதி என்பது தேவனோடு உள்ள நேர்த்தியான உறவு.
-வெளிப்படுத்தல் 19 : 9
- யார் இவர்கள்?
- இயேசுகிறிஸ்துவானவர் சபையை திருமணம் முடிக்க வேண்டுமென்றால், அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
- ஆதாம் முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரையிலே அந்த காலகட்டத்தை இரண்டாக பிரிக்கலாம்.
- ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து வரை; இயேசு கிறிஸ்து முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை
- இயேசு கிறிஸ்து முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை - இதில் உள்ளவர்கள் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்
- அவர்கள் தான் மணவாட்டியாக ஆகப் போகிறார்கள்.
- ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து வரை - இங்கு சொல்லப்படுவது - பழைய ஏற்பாட்டு காலத்திலே இருந்த பரிசுத்தவான்கள்.
- அந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தான் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள்.
-வெளிப்படுத்தல் 19 : 10
- யோவான் தேவ தூதனை வணங்க போன போது அவன் தேவனை தொழுது கொள் என்று சொன்னான்.
- தேவ தூதர்களிடம் நாம் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- Talmud, Mishna, Genaha ஆகிய புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள யூத கலாச்சாரத்தைக் குறித்துப் பார்ப்போம்.
- யூத திருமணங்கள் நடப்பது, மணவாளனுடைய தகப்பன் வீட்டிலே.
- திருமணம் 7 ம் நாள் என்றால், முதல் தேதியில் இருந்தே function நடக்கும்.
- எனவே எல்லோரும் பரிசுகளை எடுத்துக்கொண்டு வருவார்கள், சாப்பிட்டு விட்டு மணவாளனை வாழ்த்தி விட்டு செல்வார்கள்.
- ஆனால் மணவாட்டி உள்ளே இருப்பாள், வளர யாராலும் பார்க்க முடியாது.
- முழு திருமண செலவும் மாப்பிள்ளையினுடைய அப்பா செய்வார்.
- திருமண பரிசுகள் கிடைப்பதும் மணவாளனுக்கு.
- ஆனால் 7 ம் தேதி இராத்திரி திருமண வைபவத்தை நடத்தும் பொழுது தகப்பனுடைய அந்த வீட்டு அறைக்குள்ளே யாருக்கு போக முடியும் தெரியுமா?
- மாப்பிள்ளையினுடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், திருமண முடிக்கப் போகிற பெண். அவளுடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள்,
- அதன் பின்பு அந்த திருமணத்தை நடத்துகிற நபி அல்லது ஆசாரியன்.
- இவர்கள் தான் திருமணம் நடக்கும் அறையில் இருப்பவர்கள்.
- அதை தவிர மணவாளனுடைய நண்பர்களுக்கு அந்த இடத்திற்கு வர முடியும்.
- அப்படி யாருக்காவது அந்த 7 ம் நாள் இராத்திரியிலே வருவதற்குரிய அழைப்பிதழ் இருந்தால் அது அவரு பெரிய கௌரவம்.
- அதை தான் நாம் இப்பொழுது பார்த்தோம்.
- அந்த கடைசி 7 ஆண்டுகள் முடிந்ததும் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டு இருக்கிறது அல்லவா? அதற்கு இது தான் காரணம்.
- திருமண அறையில் எல்லோரும் சேர்ந்து திருமணத்தை நடத்திக் கொடுத்தப் பின்பு , மணமக்களை ஆசீர்வதித்து விட்டு எல்லோரும் வெளியே போய் விடுவார்கள்.
- மணவாளனும், மணவாட்டியும் அறையில் இருக்க, கதவு பூட்டப்படும்.
- மறுநாள் காலையிலே மணவாளன், மணவாட்டி எழும்பும் முன்னதாக எழுந்து விட வேண்டும்
- எழுந்து வெளியே போய், படுத்திருக்கிற நண்பர்களை எழுப்பிக் கொண்டு மெதுவாகப் போய் ஏதாவது மிருகத்தை வேட்டையாடிக் கொண்டு வர வேண்டும்.
- போய்விட்டு சூரியன் நடுவானில் வரும் முன்பதாக அதாவது நண்பகல் 12 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும்.
- மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மாப்பிள்ளை எந்த மிருகத்தைக் கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள்.
- அவன் எந்த மிருகத்தை பிடித்து கொண்டு வருகிறானோ, அதை வைத்து தான் அவன் நன்றாக குடும்பம் நடத்துவானா என்று பார்ப்பார்கள்.
- எ.கா பூனையை கொண்டு வந்தால் அது கேவலம்.
- எனவே அவன் முடிந்தவரை பெரிய மிருகத்தை பிடிக்க பார்ப்பான்.
- சிங்கம் போன்ற மிருகத்தை பிடித்துக் கொண்டு வந்தால் அந்த மனைவிக்கு பெருமை. உன்னுடைய புருஷன் வீரம் நிறைந்தவன் என்று சொல்லுவார்கள்.
- உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் காப்பாற்றி விடுவான் என்று சொல்லுவார்கள்.
-வெளிப்படுத்தல் 19 : 11
- பின்பு - எதன் பின்பு?
- 19:7 ல் நடைபெற்ற சம்பவம் - சபை மனைவியாக ஆனது.
- அதற்கு பின்பு, ஆட்டுக்குட்டியாடவரின் திருமணத்திற்கு பின்பு.
- முன்பு பூட்டப்பட்டு இருந்த பரலோகம் இப்போது திறக்கப்படுகிறது.
- வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி இருந்தவர் இயேசு.
- மணவாளன் மணவாட்டிக்கு தெரியாமல் மெதுவாய் கதவை திறக்கிறார்.
- அவர் ராஜாதி ராஜா.
-வெளிப்படுத்தல் 19 : 12
- அக்கினிஜுவாலை என்பது அவர்களில் உக்கிர கோபம்.
- இயேசு ராஜாவாக இருக்கிறார். அநேக கிரீடங்களை அணிந்திருக்கிறார். - 16 வது வசனம்- அந்த நாமம் என்ன என்று சொல்லுகிறது.
-வெளிப்படுத்தல் 19 : 13
- ஏனென்றால் அவருடைய மணவாட்டியை அவர் தன்னுடைய இரத்தத்தினால் பெற்றுக் கொண்டார்.
- யோவான் 1:1 ல் சொல்லப்பட்டப்படி, அந்த வார்த்தை தேவனாக இருந்தார்.
- ஒப்பீடாக “நான் திருமணம் முடித்துவிட்டேன்” என்று இயேசு சொல்கிறார்.
- நான் மனிதனாக பிறந்து, யாருடைய பாவத்தை என் தோள்களில் ஏற்றுக்கொண்டேனோ, அவர்களுக்காக நான் இரத்தம் சிந்தி மரித்து, யாரை கிரயமாக நான் எடுத்துக் கொண்டேனோ, அந்த சபையை தான் நான் திருமணம் முடித்து இருக்கிறேன்.
-வெளிப்படுத்தல் 19 : 14
- இந்த சேனை யார்?
- மணவாட்டிக்கு சேனை என்று சொல்ல முடியாது.
- வேதாகமத்தில் தேவசேனை என்று எதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
- பழைய ஏற்பாட்டு மனிதர்களை குறித்து சொல்லி இருக்கிறார்.
- அவர்களோடு கூட தேவதூதர்கள்
- நமக்கு ஆவிக்குரிய யுத்தம் தான் உண்டு.
- நாம் பிசாசுக்கு பயந்து ஓடுவதை நிறுத்திவிட்டு, எதிர்த்து நில்லுங்கள் அவனுக்கு முன்னால்.
-வெளிப்படுத்தல் 19 : 15
- யார் இந்த புறஜாதிகள்.
- அந்த மெகிதோ பள்ளத்தாக்கில் வேற்றுகிரகவாசிகளோடு யுத்தம் பண்ண அந்திக்கிறிஸ்து சேனையை வைத்து கொண்டிருக்கிறானே! அவர்கள்.
- அவர்களுக்கு தெரியாது வருவது இயேசு என்று.
-வெளிப்படுத்தல் 19 : 16
- இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாவது பகிரங்க வருகை.
- 12 வது வசனத்தில் செல்லப்பட்ட அவருடைய நாமம்.
-வெளிப்படுத்தல் 19 : 17
- தூதன் பேசுகிறான்.
-வெளிப்படுத்தல் 19 : 18
- தேவன் அவர்களோடு யுத்தம் செய்ய போவதில்லை.
- ஒரே ஒரு வார்த்தை தான்
- முடிந்தது என்று.
- உலகத்தில் இருக்கிற அனைவரும் மரித்து விழுவார்கள்.
- தேவதூதர்கள் பட்சிகளை பார்த்து சொல்வார்கள், மனித மாம்சத்தை சாப்பிடுங்கள் என்று.
-வெளிப்படுத்தல் 19 : 19
- யுத்தம் பண்ணும்படி வருகிறார்கள்.
-வெளிப்படுத்தல் 19 : 20
- மணவாளன் மிருகத்தை பிடித்தார்.
- அந்திக்கிறிஸ்து என்னும் மிருகத்தை பிடித்தார்.
- இந்த உலகம் உண்டாக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலே இந்த உலகத்தை பாழாக்கி, நாசப்படுத்தின அந்த மிருகத்தை அவர் பிடிப்பார்.
- கள்ளத்தீர்க்கத்தரிசியை பிடிப்பார்.
- சாத்தானை பிடிப்பார்.
- இந்த அக்கினிக்கடலைத் தான் நாம் நரகம் என்று சொல்லுகிறோம்.
- நரகமானது இன்னும் திறக்கப்படவில்லை.
- இயேசு இல்லாமல் மரிப்பவர்கள் போவது பாதாளத்திற்கு.
- முதன்முதலில் நரகத்திற்குள் போகப்போவது பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்துவும், மதரீதியான அந்திகிறிஸ்துவும்.
-வெளிப்படுத்தல் 19 : 21
- மனிதர்களின் மாம்சத்தினால் பறவைகள் திருப்தியடைந்தன.
Comments
Post a Comment