வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 19 விளக்கம்

இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
 -வெளிப்படுத்தல் 19 : 1
  • ஆட்டுக்குட்டியானவர் - இயேசுவானவரின் கல்யாணம்
  • தேவனாகிய இயேசு கிறிஸ்துவா? மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவா?
  • தேவன் ஒரு முறை மனுஷனானார். 
  • தேவன் மனிதனாக இருக்கும் பொழுது தான் அவர் திருமணம் முடிக்க முடியும். 
  • மனிதனாகிய இயேசு கிறிஸ்துவுக்கே. 
  • யோவான் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை பார்த்து சொல்லுகிறார்.
  • இதோ முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியானவர் என்று. 
  • அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியாக அங்கு அடிக்கப்பட்டார். 
  • யூத முறைமையின் படி ஒரு ஆண் திருமணம் முடிப்பது 40 வயதிலே தான்.
  • இயேசு 33 வருஷம் பூமியில் மனிதனாக வாழ்ந்து விட்டார்.
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இயேசுவானவர் பரலோகத்தில் மீண்டுமாக ஆட்டுக்குட்டியானவராக காணப்படுவார். 
  • மீண்டும் மனித வயதை தன்னிடத்தில் எடுக்கின்றார். 
  • மனிதனாக 7 வருடம் வாழுவார். 
  • 7 ஆண்டுகள் பூமியில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி.
  • 7 ஆண்டுகள் பரலோகத்தில் சபையானது திருமணத்திற்காக ஆயத்தமாக்கப்படுகிறது.
  • அப்போது அந்த 7 ஆண்டுகளுக்குள் 33+7=40 வயதாக அவருடைய வயது கூட்டப்படுகிறது. 
  • எவ்வளவு அழகாக இங்கு யூத கலாச்சாரத்தை அவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். 
  • யூத கலாச்சாரமானது தேவன் திட்டம் பண்ணி உருவாக்கி கொடுத்த கலாச்சாரம். 

தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
 -வெளிப்படுத்தல் 19 : 2
  • கர்த்தர் நீதியுள்ளவர்.
  • நீதியின்படி நியாயத்தீர்க்கிறவர்
கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
 -சங்கீதம் 119 : 137

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.
 -சங்கீதம் 19 : 9

மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
 -வெளிப்படுத்தல் 19 : 3
  • புகை நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
 -ஏசாயா 34 : 10

இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 19 : 4
  • இந்த 24 மூப்பர்கள் தேவதூதர்களை குறிக்கிறது. 
  • தேவனை தொழுது கொள்ளுகிறார்கள். 

மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
 -வெளிப்படுத்தல் 19 : 5
  • எல்லோரும் கர்த்தரை துதியுங்கள் என்ற சத்தம் கேட்டது. 

அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
 -வெளிப்படுத்தல் 19 : 6
  • கர்த்தரே ராஜரீகம் பண்ணிகிறவர்.

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 19 : 7
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் போது தேவ தூதர்களுக்கு ஒரே சந்தோஷம். 
  • இந்த இடத்தில் தான் முதல் முறையாக சபையை பார்த்து மனைவி என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • முன்பு மணவாட்டி என்று சொல்லப்பட்டது. 

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
 -வெளிப்படுத்தல் 19 : 8
  • பிரகாசமுள்ள- கிறிஸ்தவனுக்கு நித்திய நித்தியமாய் கிடைக்கப் போகின்ற ஒரு வரப்பிரசாதம் பிரகாசம்.
  • மக்களுடைய பிரச்சனைகளால் அவர்கள் முகம் இருளடைந்து இருக்கிறது. 
  • ஆனால் இப்போது நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 
  • பரிசுத்தவான்களுடைய நீதி என்று சொல்லப்படுவது என்ன?
  • இயேசுகிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் தான் என்னுடைய இரட்சகர் என்று விசுவாசித்து அவரை பின்பற்றுகிற கிறிஸ்தவர்கள். 
  • கிறிஸ்தவர்கள் தான் நீதிமான்கள். 
  • நீதி என்பது கிரியை அல்ல. 
  • அந்த நீதி என்பது தேவனோடு உள்ள நேர்த்தியான உறவு. 

பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
 -வெளிப்படுத்தல் 19 : 9
  • யார் இவர்கள்? 
  • இயேசுகிறிஸ்துவானவர் சபையை திருமணம் முடிக்க வேண்டுமென்றால், அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? 
  • ஆதாம் முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரையிலே அந்த காலகட்டத்தை இரண்டாக பிரிக்கலாம். 
  • ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து வரை; இயேசு கிறிஸ்து முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை
  • இயேசு கிறிஸ்து முதல் சபை எடுத்துக்கொள்ளப்படும் வரை - இதில் உள்ளவர்கள் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் 
  • அவர்கள் தான் மணவாட்டியாக ஆகப் போகிறார்கள். 
  • ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து வரை - இங்கு சொல்லப்படுவது - பழைய ஏற்பாட்டு காலத்திலே இருந்த பரிசுத்தவான்கள். 
  • அந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தான் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள்.  

அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
 -வெளிப்படுத்தல் 19 : 10
  • யோவான் தேவ தூதனை வணங்க போன போது அவன் தேவனை தொழுது கொள் என்று சொன்னான். 
  • தேவ தூதர்களிடம் நாம் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். 
  • Talmud, Mishna, Genaha ஆகிய புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள யூத கலாச்சாரத்தைக் குறித்துப் பார்ப்போம். 
  • யூத திருமணங்கள் நடப்பது, மணவாளனுடைய தகப்பன் வீட்டிலே. 
  • திருமணம் 7 ம் நாள் என்றால், முதல் தேதியில் இருந்தே function நடக்கும். 
  • எனவே எல்லோரும் பரிசுகளை எடுத்துக்கொண்டு வருவார்கள், சாப்பிட்டு விட்டு மணவாளனை வாழ்த்தி விட்டு செல்வார்கள்.
  • ஆனால் மணவாட்டி உள்ளே இருப்பாள், வளர யாராலும் பார்க்க முடியாது. 
  • முழு திருமண செலவும் மாப்பிள்ளையினுடைய அப்பா செய்வார். 
  • திருமண பரிசுகள் கிடைப்பதும் மணவாளனுக்கு. 
  • ஆனால் 7 ம் தேதி இராத்திரி திருமண வைபவத்தை நடத்தும் பொழுது தகப்பனுடைய அந்த வீட்டு அறைக்குள்ளே யாருக்கு போக முடியும் தெரியுமா? 
  • மாப்பிள்ளையினுடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், திருமண முடிக்கப் போகிற பெண். அவளுடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள்,
  • அதன் பின்பு அந்த திருமணத்தை நடத்துகிற நபி அல்லது ஆசாரியன். 
  • இவர்கள் தான் திருமணம் நடக்கும் அறையில் இருப்பவர்கள். 
  • அதை தவிர மணவாளனுடைய நண்பர்களுக்கு அந்த இடத்திற்கு வர முடியும். 
  • அப்படி யாருக்காவது அந்த 7 ம் நாள் இராத்திரியிலே வருவதற்குரிய அழைப்பிதழ் இருந்தால் அது அவரு பெரிய கௌரவம். 
  • அதை தான் நாம் இப்பொழுது பார்த்தோம். 
  • அந்த கடைசி 7 ஆண்டுகள் முடிந்ததும் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டு இருக்கிறது அல்லவா? அதற்கு இது தான் காரணம். 
  • திருமண அறையில் எல்லோரும் சேர்ந்து திருமணத்தை நடத்திக் கொடுத்தப் பின்பு , மணமக்களை ஆசீர்வதித்து விட்டு எல்லோரும் வெளியே போய் விடுவார்கள். 
  • மணவாளனும், மணவாட்டியும் அறையில் இருக்க, கதவு பூட்டப்படும். 
  • மறுநாள் காலையிலே மணவாளன், மணவாட்டி எழும்பும் முன்னதாக எழுந்து விட வேண்டும்
  • எழுந்து வெளியே போய், படுத்திருக்கிற நண்பர்களை எழுப்பிக் கொண்டு மெதுவாகப் போய் ஏதாவது மிருகத்தை வேட்டையாடிக் கொண்டு வர வேண்டும். 
  • போய்விட்டு சூரியன் நடுவானில் வரும் முன்பதாக அதாவது நண்பகல் 12 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். 
  • மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மாப்பிள்ளை எந்த மிருகத்தைக் கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். 
  • அவன் எந்த மிருகத்தை பிடித்து கொண்டு வருகிறானோ, அதை வைத்து தான் அவன் நன்றாக குடும்பம் நடத்துவானா என்று பார்ப்பார்கள். 
  • எ.கா பூனையை கொண்டு வந்தால் அது கேவலம். 
  • எனவே அவன் முடிந்தவரை பெரிய மிருகத்தை பிடிக்க பார்ப்பான். 
  • சிங்கம் போன்ற மிருகத்தை பிடித்துக் கொண்டு வந்தால் அந்த மனைவிக்கு பெருமை. உன்னுடைய புருஷன் வீரம் நிறைந்தவன் என்று சொல்லுவார்கள். 
  • உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் காப்பாற்றி விடுவான் என்று சொல்லுவார்கள்.

பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
 -வெளிப்படுத்தல் 19 : 11
  • பின்பு - எதன் பின்பு? 
  • 19:7 ல் நடைபெற்ற சம்பவம் - சபை மனைவியாக ஆனது.
  • அதற்கு பின்பு, ஆட்டுக்குட்டியாடவரின் திருமணத்திற்கு பின்பு.
  • முன்பு பூட்டப்பட்டு இருந்த பரலோகம் இப்போது திறக்கப்படுகிறது. 
  • வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி இருந்தவர் இயேசு. 
  • மணவாளன் மணவாட்டிக்கு தெரியாமல் மெதுவாய் கதவை திறக்கிறார். 
  • அவர் ராஜாதி ராஜா.

அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
 -வெளிப்படுத்தல் 19 : 12
  • அக்கினிஜுவாலை என்பது அவர்களில் உக்கிர கோபம். 
  • இயேசு ராஜாவாக இருக்கிறார். அநேக கிரீடங்களை அணிந்திருக்கிறார். - 16 வது வசனம்- அந்த நாமம் என்ன என்று சொல்லுகிறது. 

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
 -வெளிப்படுத்தல் 19 : 13
  • ஏனென்றால் அவருடைய மணவாட்டியை அவர் தன்னுடைய இரத்தத்தினால் பெற்றுக் கொண்டார். 
  • யோவான் 1:1 ல் சொல்லப்பட்டப்படி, அந்த வார்த்தை தேவனாக இருந்தார். 
  • ஒப்பீடாக “நான் திருமணம் முடித்துவிட்டேன்” என்று இயேசு சொல்கிறார். 
  • நான் மனிதனாக பிறந்து, யாருடைய பாவத்தை என் தோள்களில் ஏற்றுக்கொண்டேனோ, அவர்களுக்காக நான் இரத்தம் சிந்தி மரித்து, யாரை கிரயமாக நான் எடுத்துக் கொண்டேனோ, அந்த சபையை தான் நான் திருமணம் முடித்து இருக்கிறேன். 

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
 -வெளிப்படுத்தல் 19 : 14
  • இந்த சேனை யார்?
  • மணவாட்டிக்கு சேனை என்று சொல்ல முடியாது. 
  • வேதாகமத்தில் தேவசேனை என்று எதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. 
  • பழைய ஏற்பாட்டு மனிதர்களை குறித்து சொல்லி இருக்கிறார். 
  • அவர்களோடு கூட தேவதூதர்கள்
  • நமக்கு ஆவிக்குரிய யுத்தம் தான் உண்டு. 
  • நாம் பிசாசுக்கு பயந்து ஓடுவதை நிறுத்திவிட்டு, எதிர்த்து நில்லுங்கள் அவனுக்கு முன்னால். 

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
 -வெளிப்படுத்தல் 19 : 15
  • யார் இந்த புறஜாதிகள்.
  • அந்த மெகிதோ பள்ளத்தாக்கில் வேற்றுகிரகவாசிகளோடு யுத்தம் பண்ண அந்திக்கிறிஸ்து சேனையை வைத்து கொண்டிருக்கிறானே! அவர்கள். 
  • அவர்களுக்கு தெரியாது வருவது இயேசு என்று. 

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
 -வெளிப்படுத்தல் 19 : 16
  • இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாவது பகிரங்க வருகை. 
  • 12 வது வசனத்தில் செல்லப்பட்ட அவருடைய நாமம். 

பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
 -வெளிப்படுத்தல் 19 : 17
  • தூதன் பேசுகிறான்.

நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
 -வெளிப்படுத்தல் 19 : 18
  • தேவன் அவர்களோடு யுத்தம் செய்ய போவதில்லை. 
  • ஒரே ஒரு வார்த்தை தான்
  • முடிந்தது என்று.
  • உலகத்தில் இருக்கிற அனைவரும் மரித்து விழுவார்கள். 
  • தேவதூதர்கள் பட்சிகளை பார்த்து சொல்வார்கள், மனித மாம்சத்தை சாப்பிடுங்கள் என்று. 

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 19 : 19
  • யுத்தம் பண்ணும்படி வருகிறார்கள். 

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 19 : 20
  • மணவாளன் மிருகத்தை பிடித்தார்.
  • அந்திக்கிறிஸ்து என்னும் மிருகத்தை பிடித்தார். 
  • இந்த உலகம் உண்டாக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலே இந்த உலகத்தை பாழாக்கி, நாசப்படுத்தின அந்த மிருகத்தை அவர் பிடிப்பார்.
  • கள்ளத்தீர்க்கத்தரிசியை பிடிப்பார்.
  • சாத்தானை பிடிப்பார். 
  • இந்த அக்கினிக்கடலைத் தான் நாம் நரகம் என்று சொல்லுகிறோம். 
  • நரகமானது இன்னும் திறக்கப்படவில்லை. 
  • இயேசு இல்லாமல் மரிப்பவர்கள் போவது பாதாளத்திற்கு.
  • முதன்முதலில் நரகத்திற்குள் போகப்போவது பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்துவும், மதரீதியான அந்திகிறிஸ்துவும். 

மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.  
 -வெளிப்படுத்தல் 19 : 21
  • மனிதர்களின் மாம்சத்தினால் பறவைகள் திருப்தியடைந்தன. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4