வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 17 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 17 விளக்கம்

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
 -வெளிப்படுத்தல் 17 : 1
  • இந்த 17-18 வது அதிகாரத்தில் வருபவைகள் நிறைய அடையாளங்கள் மற்றும் குறிப்புகளை கொண்டது.
  • இதை நாம் சாதாரணமாக வாசிக்கும் போது புரியாது. 
  • இங்கு யோவானுக்கு தேவதூதர் பேசுகிறார். 
  • இந்த உலகத்தின் மனிதர்களை ஏமாற்றிய, வஞ்சித்த மகா வேசிக்கு என்ன நடக்கப் போகிறது என்று சொல்லுகிறேன். 
  • இங்கு தண்ணீர் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக தண்ணீரைக் குறிக்கவில்லை. 
  • இங்கு பெண் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக பெண்ணைக் குறிக்கவில்லை. 
  • இங்கு வேசித்தனம் என்று குறிப்பிடப்படும் போது அது நேரடியாக வேசித்தனத்தை குறிக்கவில்லை. 
  • அந்த தேவதூதர் யோவானோடு பேசும் பொழுது யோவானுக்கு என்ன புரிந்தது. 
  • முதலாம் நூற்றாண்டிலே யோவான் போன்ற மக்கள் எதைக் குறித்து அறிந்திருந்தார்கள்/ எதற்கு ஒப்பிட்டு இருந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். 
  • அந்த இடத்தில் திரளான தண்ணீர்கள் என்று சொல்லும் போது வெகு திரளான ஜனக்கூட்டம், ஜாதிகள். 
  • அந்த ஜனங்கள் மீது ஒரு பெண் இருக்கிறாள். 
  • முழு உலகத்தாரையும் அடிமைப்படுத்தி, அந்த உலகத்தாரை மிதித்து கொண்டு அந்த உலகத்தாருடைய சரீரங்களில் உட்கார்ந்து கொண்டு தீமையான வேசி ஒருத்தி இருக்கிறாளாம். 
  • அதாவது பாபிலோன். 
  • அப்படியென்றால் விக்கிரக ஆராதனை. 
  • உலகத்திலுள்ள மிகப் பழமையான பாரம்பரியம் என்று  சொன்னால் அது பாபிலோனிய கலாச்சாரம் அல்லது நாகரீகம். 
  • மேசா - நிலம் 
  • போ - இரண்டு
  • தாமியா - நதி
  • மெசொபொத்தாமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவில் உண்டான நாகரீகம்.
  • முதலாவது அந்த நாகரீகத்தை நிர்வகித்தவனுடைய பெயர் கில்காமேஷ். 
  • அந்த பெயர் நிம்ரோத் என்று பைபிளில் சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • அவன் தான் உலகத்தில் தோன்றிய முதலாவது ராஜா. 
  • அவன் தேவனுடைய கட்டளைக்கு எதிராக செயல்பட்டு, 
  • தேவன் மனிதர்களை பிரிந்து போக சொன்னார்.
  • ஆனால் அவர்கள் ஓரிடத்தில் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினான். 
  • அது தான் பரலோகத்தின் வாசல், 
  • பாபேல் 
  • பாப் - வாசல்
  • எல் - தேவன்
  • பாபேல் கோபுரத்தை அவன் உண்டுபண்ணினான். 
  • ஒரே பாஷையை பேசினார்கள். 
  • அந்த இடத்தில் தான் தேவன் அந்த நாகரீகத்தையே தகர்த்து எறிந்து, பாஷகளை தாறுமாறாக்கினார். 
  • அந்த இடத்தில் இருந்து சிதறிப் போனவர்கள் 3 காரியங்களை எடுத்துச் சென்றார்கள். 
  • மதம், அரசியல் ஆட்சி முறை, பொருளாதாரம். 
  • மத ரீதியான பாபிலோன், அரசியல் ரீதியான பாபிலோன், அரசியல் ரீதியான பாபிலோன். 
  • அங்கு சிதறிப் போன எல்லா மக்களோடும் போனது. 
  • ஒரு பகுதி போனது நைல் நதியின் தென் பகுதியிலே, அங்கு எகிப்தை உண்டு பண்ணினார்கள். 
  • இன்னும் ஒரு  கூட்டம் மொகன்ஜதாரோ ஹரப்பா என்ற இடத்திற்கு போனது. 
  • இன்னும் ஒரு  கூட்டம் ரைன் நதி என்று சொல்லப்படுகிற ஐரோப்பிய பிரதேசத்திற்கு இடத்திற்கு போனது. 
  • அந்த 3 இடங்களுக்கும் பாபிலோனிய மதம், பொருளாதாரம், அரசியல் எல்லாம் கூட சென்றது. 
  • மொகன்ஜதாரோ ஹரப்பா என்று சொல்லுகிற அந்த கூட்டத்தில் தான் நாமும் அடங்குகிறோம். 
  • எகிப்துக்கு போன மக்கள் கூட்டத்தில் இருந்து தான் ஆப்பிரிக்கர்கள் வந்தார்கள். 
  • ரைன் நதியில் இருந்த மக்கள் தான் ஐரோப்பியர்களாக மாற்றப்பட்டார்கள். 
  • அங்கே சிதறிப் போகாத அந்த மக்களிடத்தில் இருந்து தான் மத்திய கிழக்கு ஜனக்கூட்டம் உண்டானது. 
  • நாம் எந்த நாட்டிற்கு போனாலும் பாபிலோனிய அரசியல் முறைமை அதில் இருக்கிறது. 
  • அது ராஜ அரசாட்சியாய் இருக்கலாம், ஜனநாயக ஆட்சியாக இருக்கலாம், வெவ்வேறுப்பட்ட ஆட்சி முறையாக இருக்கலாம். 
  • அந்த பாபிலோனிய ஆட்சிமுறைக்குள் தான் முழு உலகமும் கட்டுப்பட்டு இருக்கிறது. 
  • அப்படியே பாபிலோனிய மதமும் எல்லா பாஷகளுக்குள்ளும், மதங்களுக்குள்ளும் போனது. 
  • கிறிஸ்தவம் என்பது ஒன்று மதம், ஒன்று உறவு. 
  • உண்மையான கிறிஸ்தவன் என்பவன் மதம் இல்லாதவன்.
  • தேவனுக்கும், மனிதனுக்கும் ஆன உறவை மறுபடியும் புதுப்பித்ததனால் அது உறவு, அது மதம் அல்ல. 
  • ஆனால் கிறிஸ்தவ மதம் என்பது கட்டப்பட்டு இருப்பது பாபிலோனிய மத முறைமையிலே. 
  • யேசபேலின் ஆவி பாபிலோனில் இருந்து உண்டான ஆவி. 
  • அந்த கில்காமேஷ் என்பவன் அவனுடைய தாயையே திருமணம் முடித்தான். 
  • அவளுடைய பெயர் தான் சிவிலமேஷ். 
  • அவர்கள் இருவருக்கும் பிறந்த பையன் தான் தம்மூஸ். 
  • இப்படிப்பட்ட கேவலமான, அசிங்கமான  விஷயங்களை உலகத்திற்கு கொண்டு வந்தான்.
  • இந்த பெண் உலகத்தையே வெறிக் கொள்ள செய்திருந்தாள். 

அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
 -வெளிப்படுத்தல் 17 : 2
  • முழு உலகத்தையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிற இந்த பெண்ணின்/வேசியை முடிவை தான் இங்கு பார்க்கிறோம். 

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவுப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 17 : 3
  • வெளி 13 ல் 7 தலைகளை குறித்தும், 10 கொம்புகளை குறித்தும் நாம் பார்த்தருக்கிறோம். 

அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
 -வெளிப்படுத்தல் 17 : 4
  • சிவப்பு நிறமுள்ள மிருகம்
  • வேதத்தில் சிவப்பு நறம் என்று வந்தால்
  • தேவனுடைய நாமத்தை பற்றி சொல்லும் போது சிவப்பு என்று வந்தால் அது இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தைக் குறிக்கிறது. 
  • பிசாசை குறித்து சொல்லப்படும் பொழுது சிவப்பு என்று வந்தால் அது பாவத்தை குறிக்கிறது. 
  • இங்கு சிவப்பு நிற ஆடை அணிந்திருந்த ஸ்திரீ என்று சொல்லும் போது முழு ஜனத்தினுடைய இரத்தமும் சிந்தப்படுகிற ஒரு சூழ்நிலையில் அதின் மேல் இருக்கிறாள் என்று அர்த்தம். 
  • ஏனென்றால் பிசாசுக்கு தேவை ஆபேல் தொடங்கி இன்று வாழ்கின்ற சிறு குழந்தைகள் வரை அவர்களுடைய இரத்தம் சிந்தப்பட வேண்டும். 
  • ஆனால் தேவனுக்கு தேவை. 
  • எல்லோருடைய இரத்தத்திற்காகவும் இயேசுவின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். 
இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு,
  • பொன் - ஆட்சி, ஆளுமை. முன்பு ராஜாக்களுக்கு கொடுக்கப்படுகின்ற பரிசு பொன்.
  • இது பாபிலோனிய அரசு ஆளுகையை குறிப்பிடுகிறது. 
  • இரத்தினங்கள் - பண்மையில் சொல்லப்படுகிறது. 
  • அந்த காலகட்டத்திலே மத வாழிபாட்டு ஸ்தலங்களை உண்டு பண்ணுகிற பொழுது விலையேறப்பெற்ற கற்களை கொண்டு தான் அவர்கள் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள். 
  • இது அடையாளப்படுத்துவது மதத்தை.
  • முத்துக்கள் என்று சொல்லப்படும் போது மனிதர்கள் முன்பு வியாபாரம் பண்ணினார்கள். 
  • இது பொருளாதாரத்தை அடையாளப்படுத்துகிறது. 
  • அந்த ஸ்திரீ அனைத்து அந்திக்கிறிஸ்துக்களையும் தன்னில் கொண்டு இருக்கிறாள். 

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
 -வெளிப்படுத்தல் 17 : 5
  • அந்த பெயரில் 3 இரகசியங்கள் இருக்கிறது. 
  • Mystery 
  • பாபிலோன் மிக பரந்த அளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 
  • அரசியல் ரீதியான பாபிலோன் - அந்திக்கிறிஸ்து
  • மத ரீதியான பாபிலோன் - கள்ளத் தீர்க்கத்தரிசி
  • பொருளாதார ரீதியான பாபிலோன் - மிருகம்
  • இந்த மூவரும் தான் இந்த 7 ஆண்டுகளை ஆட்சி செய்வார்கள். 

அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
 -வெளிப்படுத்தல் 17 : 6
  • இது யாரைக் குறித்து பேசுகிறது. 
  • பரிசுத்தவான்கள் என்றால் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த பரிசுத்தவான்கள். 
  • தேவனுக்காக எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 
  • ஆகாப் யேசபேலுடைய ஆட்சிக் காலகட்டத்திலே, ஆயிரக்கணக்கான தீர்க்கத்தரிசிகளை யேசபேல் கொலை செய்தாள். (1 இராஜாக்கள் 17,18,19)
  • இயேசுகிறிஸ்துவினுடைய சாட்சிகள் என்று சொல்வது யார்?
  • இயேசுவின் இரத்த சாட்சிகள். முதலாம் நபர் ஸ்தேவான். 
  • அன்று தொடங்கி இன்று வரை யாரெல்லாம் இரத்த சாட்சியாக மரித்தார்களோ அவர்கள் எல்லோரும். 
  • அப்படி கொலை செய்த ஆவி யேசபேலாக கிரியை செய்கிறது. கிரியை செய்து தோற்று போனான்
  • இரண்டாவது அந்திக்கிறிஸ்துவின் ஆவியாக செயல்படுகிறது. 
  • அதற்கு பாஸ்டர் கொடுத்த பெயர் யெரொபெயாமின் ஆவி கிரியை செய்து தோற்று போனான்.
  • மூன்றாவது மரண பாதாளத்தின் ஆவி. 
  • நிறைய பேர் சாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
 -வெளிப்படுத்தல் 17 : 7
  • 7 தலைகள் என்பது 9 வது வசனத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. 
  • 10 கொம்புகள் என்பது 12வது வசனத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. 

நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
 -வெளிப்படுத்தல் 17 : 8
  • அந்த மிருகம் நாசமடையப் போகிறது. 

ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
 -வெளிப்படுத்தல் 17 : 9
  • 7 மலைகள். 
  • ரோம பட்டணம் மாத்திரம் தான் 7 மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது. 
  1. Aventine 
  2. Palatine
  3. Capitoline 
  4. Caelian 
  5. Quirinal
  6. Viminal
  7. Esquiline
  • இந்த 7 மலைகள் தான் ரோம பட்டணத்தை சூழ இருப்பது. 
  • வெளி 13 ல் உலகத்தினுடைய கடைசி இராஜ்யம் எப்படி ரோம நகரத்தில் இருந்து வரும் என்று. 
  • இன்றைக்கு ரோம அதிராஜ்யம் இல்லை. 
  • இருந்தது, இப்போது இல்லை, ஆனால் இனி வரப் போகிறது.
  • ரோம அதிராஜ்யம். அது தான் உலகத்தை மிக கொடுமையான விதத்திலே ஆட்சி செய்தது. 
  • கி.மு 47 ல் மிகவும் பயங்கரமாய் அந்த ராஜ்யம் ஆரம்பித்தது.
  • அதற்கு முன்பு ரோம் என்கிற பட்டணமாக அது இருந்தது.
  • அதற்கு பின்பு தான் அது அதிராஜ்யமாக மாறியது. 
  • கி.பி 476 லே தான் அது விழுந்தது. 
  • 476 எயும் 47 யும் கூட்டிப் பார்த்தால் 523 வருகிறது. 
  • கிட்டத்தட்ட 500 வருடங்களாக இந்த ஆட்சி இருந்தது. 
  • முழு உலகத்தையும் 500 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம்.

அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
 -வெளிப்படுத்தல் 17 : 10
  • இது ரோம சாம்ராஜ்யம் அல்ல
  • ஏன்?
  • யோவான் இருந்ததான முதலாம் நூற்றாண்டில் இராஜாக்கள் என்றால்
  • இது உலகத்தை ஆண்ட 7 சாம்ராஜ்யங்களை குறித்து பேசுகிறது. 
  • முதலாவது சாம்ராஜ்யம் மிசஹா - எகிப்து- ஆபிரகாம் காலத்தில் இருந்து எகிப்து இருக்கிறது. - கி.மு  39ல் கிளியோபேட்ரா மூலமாக அது விழுந்தது. Julius Caesar காலத்தில்
  • இரண்டாவது சாம்ராஜ்யம் அசீரியர்கள் - பாபிலோனிய நேபுகாத்நேச்சார்-ல் தோற்கடிக்கப்பட்டார்கள். கி.மு 6ம் நூற்றாண்டிலே
  • மூன்றாவதாக பாபிலோனிய சாம்ராஜ்யம் - அது தான் யூதர்களை சிறைக்கைதிகளாய்கொண்டு போனது கி.மு 586 ல்.
  • நான்காவதாக அவர்கள் கி.மு 539 லே, மேதிய-பெர்சிய ராஜ்யத்தினால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
  • ஐந்தாவதாக கி.மு 331 லே மகா Alexander னாலே தோற்கடிக்கப்பட்ட பெர்சியா, அந்த சாம்ராஜ்யத்தில் இருந்து விழுந்ததும் கிரேக்க சாம்ராஜ்யம் உண்டானது. 
  • அது தான் 5 பேர் விழுந்தார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. 
  • ஒருவன் இருக்கிறான் என்ற சொல்வது ரோம சாம்ராஜ்யம்.

இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
 -வெளிப்படுத்தல் 17 : 11
  • ஏழாவதாக வருவன் வருவான் என்று சொல்லப்படுவது அது தான் கடைசி காலத்தில் வரப்போவதான அந்திக்கிறிஸ்துவின் சாம்ராஜ்யம்.

நீ கண்ட பத்துக் கொம்புகளும், பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
 -வெளிப்படுத்தல் 17 : 12
  • தேவன் யோவானுக்கு இந்த தரிசனத்தை காண்பித்த போது அது முதலாம் நூற்றாண்டு ஆகும். 
  • அந்த காலகட்டத்தில் இந்த ராஜாக்கள் 10 பேரும் வரவில்லை. 
  • அதனால் தான் இன்னும் அவர்கள் ராஜ்யம் பெறவில்லை என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. 
  • ஐரோப்பிய சங்கத்தில் 10 நாடுகள் பிரதான அங்கமாக இருக்கிறது. 
  • அவர்கள் தான் இன்னும் அநேக காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். 
  • அவர்களுக்கு ஒரு மணி நேரமளவும் காலம் கொடுக்கப்படுகிறது, ராஜ்யம் பண்ணுவதற்கு. 
  • நம்முடைய ஒரு மணி நேரம் அல்ல. 
  • வெளிப்படுத்தலில் 7 ஆண்டுகள், 1000 ஆண்டுகளை பற்றி எல்லாம் நாம் பார்க்கிறோம். அவற்றோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 
  • இந்த 10 நாடுகளும் ஆளுகை செய்ய போவது மிக குறுகிய காலம்.
  • எ.கா நாம் சொல்லுவோமே, இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று, அப்படி.
  • ஐரோப்பிய சங்கத்தில் பிரதான அங்கமாக இருக்கிற அந்த 10 நாடுகளுக்கு இப்போது அந்த அதிகாரம் இல்லை. 
  • அவர்களுக்கு அந்த கடைசி காலத்தில் ஒரு அதிகாரம் கொடுக்கப்படுமாம். 
  • ஐரோப்பிய நாடுகள் முழுவதும் Euro என்ற ஒரு பண முறைமையை கொண்டு வந்தார்கள். 
  • இப்போது ஐரோப்பிய சங்கம் இரகசியமாக வேலைதிட்டங்களை ஆரம்பிக்கிறார்கள். 
  • இரகசியமாக வளர முயர்ச்சிப்பார்கள். வளருவார்கள். 
  • 7 ஆண்டுகள் உபத்திரவ காலத்திலே அமெரிக்கா ஒரு பெரிய நாடாக இருக்காது. 
  • ரஷ்யா ஒரு பெரிய தேசமாக இருக்காது. 
  • இப்போது நமக்கு கிடைத்திருக்கிற காலகட்டத்தை மிகவும் சிறந்த முறையிலே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
 -வெளிப்படுத்தல் 17 : 13
  • எல்லாவற்றுக்கும் தலைமையான அந்திக்கிறிஸ்து - அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து
  • ஆனால் இந்த மிருகம் - பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து
  • ராஜாக்கள் 10 பேரும் பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்துவைக்கு தான் அதிகாரத்தை கொடுப்பார்களாம். 
  • அப்படியானால் உலகத்தை கைப்பற்றுவது எந்த முறையை கொண்டு. பொருளாதாராத்தை வைத்து
  • அப்படியானால் ஐரோப்பிய சங்கம் உருவாக்கப்பட்டதை ஏன்?
  • European Union/council என்ற பெயர் வரும் முன்னதாக  European economical council என்பது தான் அதன் பெயர். 
  • அதாவது ஐரோப்பிய பொருளாதார சங்கம். 
  • அவர்கள் பெயரை மாற்றினாலும், குறிக்கோளை மாற்றவில்லை. 
  • அவர்களுக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் உலகத்தின் பொருளாதாரத்தை கைப்பற்றுவது. 

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
 -வெளிப்படுத்தல் 17 : 14
  • இவ்வேழு ஆண்டுகள் முடியும் போது இயேசு கிறிஸ்துவானவர் தன்னுடைய சேனையோடு கூட வருவார். 
  • அவரோடு கூட இந்த அந்திக்கிறிஸ்து யுத்தம் பண்ணுவான். 
  • அது நமக்கு தெரிந்த யுத்தம் அல்ல. 
  • தேவன் தம்முடைய வார்த்தையினாலே அவனை அழிப்பார். 

பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
 -வெளிப்படுத்தல் 17 : 15
  • இந்த வசனத்தில் இருந்து 18:24 வரை, பாபிலோனுடைய வீழ்ச்சியைக் குறித்து பாடல் மூலமாக தூதர்கள் பாடி காண்பிக்கிறார்கள். 
  • பாடலில் செல்லப்பட்டதை கற்றுக்கொடுப்பதில் பிரயோஜனம் இல்லை. 
  • பாபிலோன் எப்படியாய் உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. 
  • இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எப்படி பாபிலோனுக்கு தங்களை விற்றுப் போட்டார்கள். 
  • இப்போது பாபிலோன் அழிந்து விட்டது தானே என்று  தூதர்கள் சந்தோஷத்தில் பாடல் பாடுகிறார்கள். 

நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
 -வெளிப்படுத்தல் 17 : 16
  • தேவ தூதர்களின் பாடல்

தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
 -வெளிப்படுத்தல் 17 : 17
  • தேவ தூதர்களின் பாடல்

நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.  
 -வெளிப்படுத்தல் 17 : 18
  • தேவ தூதர்களின் பாடல்

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4