வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம்

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
 -வெளிப்படுத்தல் 21 : 1
  • யோவானுக்கு மாத்திரம் தேவன் இதை காண்பித்தார். 
  • எதிர்காலத்தில் நாம் இதையெல்லாம் காண்போம். 
  • புதிய பூமி பழைய பூமியில் இருந்து வித்தியாசமாக இருக்கும். 
  • ஆனால் புதிய பூமி மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாக இருக்கும். 

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 2
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இனி ஒரு பொழுதும் அவர் இந்த பூமிக்கு தன் சபையை கொண்டு வருவதில்லை. 
  • ஆனால் இந்த புதிய பூமிக்கு இயேசு தன் மனைவியை கொண்டு வருவார். 
  • பரிசுத்த நகரம் - எருசலேம் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருமாம். 
  • யோவான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் மட்டும் காணவில்லை. 
  • அவர் வானத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு நகரத்தை கண்டார். 
  • அது தான் புதிய எருசலேம். 
பரலோகத்தில் உள்ள எருசலேம் 

மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
 -கலாத்தியர் 4 : 26

கட்டினது யார்?

ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
 -எபிரேயர் 11 : 10

புதிய எருசலேம் - தேவனுடைய நகரம்

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 12

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
 -வெளிப்படுத்தல் 21 : 3
  • தேவன் மனிதனை படைத்தது அவனோடு ஒரு நல்ல உறவை வைத்துக் கொள்ளும்படியாக. 
  • Normal ஆக இருப்பார் தேவன்.
  • புதிய எருசலேமில் தேவன் தாமே தம் மக்களுடன் வாழ்வார். 
  • அவர் தமது மக்களுடன் எப்போதும் இருப்பார். 

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
 -வெளிப்படுத்தல் 21 : 4
  • மரணம், துக்கம் இதெல்லாம் தற்போதைய உலகத்துக்குரியவைகள்
  • ஆனால் புதிய பூமியில் இது போன்ற எதுவும் இருக்காது. 
  • அழுவதற்கு காரணமே இருக்காது. 
  • மகிழ்ச்ச மாத்திரமே குடியிருக்கும் உலகம்.

சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாத்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
 -வெளிப்படுத்தல் 21 : 5
  • Iddu - இதோ- Greek 
  • நிச்சயமாகவே
  • புதிய வானத்தையும், புதிய பூமியையும் யோவான் தரிசனத்தில் கண்டார். 
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
 -ஏசாயா 65 : 17
  • ஏசாயா சொன்ன தீர்க்கத்தரிசனமும் நிறைவேறும்.
  • அவர் வார்த்தை சத்தியமானவைகள். 

அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
 -வெளிப்படுத்தல் 21 : 6
  • கர்த்தரே ஆதியும், அந்தமும் ஆனவர். 
  • தாகமாயிருக்கிறவன் என்றால் உண்மையை தேடுகிறவன் என்று அர்த்தம். 
  • அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் கிறிஸ்துவுக்குள் ஜீவனைக் கொடுப்பார்.
  • நமக்கு கொடுத்திருக்கிறது போல
  • அதுவும் இலவசமாக கொடுக்கிறவர். 

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
 -வெளிப்படுத்தல் 21 : 7
  • ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று கீழ்க்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறார். 
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 2 : 7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 2 : 11

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
 -வெளிப்படுத்தல் 2 : 17

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
 -வெளிப்படுத்தல் 2 : 26

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 5

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 12

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
 -வெளிப்படுத்தல் 3 : 21
  • நாம் அவருடைய குமாரனாக இருப்போம்.  

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
 -வெளிப்படுத்தல் 21 : 8

பயப்படுகிறவர்களும்
  • பயம்
  • Greek - Phoebia 
  • அது அல்ல இங்கு சொல்லப்படுவது. 
  • Dailia - ஆவிக்குரிய பயம்
  • மனிதர்கள் மத்தியில் நான் இயேசுவை பின்பற்றுகிறவன் என்று சொல்லுவதற்கு இருக்கிற பயம்.
அவிசுவாசிகளும்
  • Greek word - Pistos
  • தேவன் நம்மை நம்பி ஒன்றை கொடுக்கிறார்.
  • அவர் நம்புகிறார் நான் அதற்கு உண்மையுள்ளவனாக இருப்பேன் என்று. 
  • ஆனால் அந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்வது. 
அருவருப்பானவர்களும்
  • தேவன் அருவருக்கின்றதை செய்வது
இவர்கள் எல்லாம் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற நரகத்தில் போடப்படுவார்கள். 

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
 -1 கொரி 6 : 9

திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
 -1 கொரி 6 : 10

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
 -1 கொரி 6 : 11
  • இத்தகைய பாவங்களை செய்தவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பு பெற்று, அவருடைய இரத்தத்தின் மூலம் அந்த பாவங்கள் கழுவப்பட்டால் நாம் பரலோகத்திற்கு செல்லலாம். 
  • இல்லையென்றால் நரகம் தான்.  

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
 -வெளிப்படுத்தல் 21 : 9
  • இயேசு கிறிஸ்துவினுடைய மனைவியை உனக்கு காண்பிக்கிறேன் என்று சொல்லி
  • ஆட்டுக்குட்டியானவரின் மனைவி என்றால் சபை.
  • அந்த சபை தான் புதிய எருசலேமில் வாழப் போகிறது. 

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
 -வெளிப்படுத்தல் 21 : 10
  • அதாவது பரிசுத்த நகரமாகிய அந்த எருசலேம் தான் இயேசுவினுடைய மனைவியாம்.
  • தேவதூதன் யோவானை ஒரு மலையின் மேல் ஆவியில் கொண்டு போய் பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிற சபையை காண்பித்தான்.
  • அவர்கள் தேவனுடைய மகிமையை பெற்றவர்களாய் இருந்தார்கள். 

அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 11
  • யோவான் தான் கண்டதை தனக்கு தெரிந்த வகையில் விளக்குகிறார்.
  • அவர் பூமியில் கண்டிருந்த இரத்தினக்கல், வச்சிரக்கல்லை ஒப்பிட்டு சொல்கிறார்.
  • ஆனால் அது உண்மையிலேயே விவரிக்கக் கூடாத அளவுக்கு பிரகாசமாக இருந்தது. 
  • அதின் என்பது அவள் என்று வரவேண்டும். 
  • புதிய நகரம் - பெண்பால்
  • இயேசுவானவர் தன்னுடைய மனைவியை பரிசுத்த நகரமாக ஒப்பிட்டு பாதுகாக்கின்றார்.
  • நாம் பரலோகத்திற்கு சென்ற பிறகு நாம் அவருக்குள் வாழ்வோம்.
  • நாம் புதிய பூமிக்கு வரும் போது அவருடைய மகிமையோடு வருவோம். 

அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
 -வெளிப்படுத்தல் 21 : 12
  • அந்த புதிய பூமியை சுற்றிலும் உயரமான மதில் இருந்தது. 
  • மொத்தம் 12 வாசல்கள் இருந்தன. 
  • அந்த பரிசுத்த நகரம் சதுரமாக இருந்தது. 
  • எனவே 4 திசைகளிலும் 3 வாசல்கள் இருந்தன.
  • நெகேமியா புத்தகத்தில் கொடுக்கப்பட்டது போல இங்கும் 12 வாசல்கள் இருக்கின்றன.

70 வருட சிறையிருப்புக்கு பிறகு எருசலேமில் மறுகட்டமைக்கப்பட்ட 12 வாசல்கள்


(1) ஆட்டு வாசல் - நெகேமியா 3:1

(2) மீன் வாசல் - நெகேமியா 3:3

(3) பழைய வாசல் - நெகேமியா 3:6

(4) பள்ளத்தாக்கின் வாசல் - நெகேமியா 3:13

(5) குப்பைமேட்டு வாசல் - நெகேமியா 3:14

(6) ஊருணி வாசல் - நெகேமியா 3:15

(7) தண்ணீர் வாசல் - நெகேமியா 3:26

(8) குதிரை வாசல் - நெகேமியா 3:28

(9) கிழக்கு வாசல் - நெமேகியா 3:29

(10) மிப்காத் என்னும் வாசல் -நெகேமியா 3:31

(11) எப்பிராயீம் வாசல் -நெகேமியா 8:16

(12) காவல்வீட்டு வாசல் -நெகேமியா 12:39


வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
 -வெளிப்படுத்தல் 21 : 13
  • ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஒரு தூதன் இருந்தான். 
  • ஒவ்வொரு வாசலின் மேலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. 

நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
 -வெளிப்படுத்தல் 21 : 14
  • இந்த 12 அஸ்திபாரக் கற்களும் 12 அப்போஸ்தலர்களை குறிக்கிறது. 

என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
 -வெளிப்படுத்தல் 21 : 15
  • ஒரு தூதன் அந்த நகரத்தை அளக்கிற பொற்கோலைப் பிடித்திருந்தான். 

அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 16
  • ஸ்தாதி - furlong, stadia
  • 12000 furlongs - 1500 miles
  • 2400 km

அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 17
  • தூதன் அந்த மதிலை அளந்து பார்க்கிறான். 
  • முழம் - cubit
  • 1 cubit - 18 inches or 45 cm
  • 144 முழம் - 216 feet or 65 meters thick

அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 18
  • வச்சிரக்கல் - jasper
  • பளிங்குக்கு ஒப்பான - clear glass
  • சுத்தப்பொன் - pure gold
  • இங்கு யோவான் அவருக்கு விவரிக்க தெரிந்த வகையில் விவரிக்கிறார்.
  • நிஜமாகவே அது பூமியில் காணப்படுகிற பொன், வச்சிரக்கல்லா என்றால் அது இல்லை.

நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
 -வெளிப்படுத்தல் 21 : 19
  • அந்த நகரத்தின் மதில்களின் அஸ்திபாரங்கள் விலை உயர்ந்த கற்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
  • பார்வைக்கு ஜொலிப்பாக இருந்தது. 
(1) வச்சிரக்கல் - Jasper 
(2) இந்திரநீலம் - Sapphire 
(3) சந்திரகாந்தம் - Chalcedony
(4) மரகதம் - Emerald

ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
 -வெளிப்படுத்தல் 21 : 20

(5) கோமேதகம் - Sardonyx
(6) பதுமராகம் - Sardius
(7) சவர்ணரத்தினம் - Chrysolite
(8) படிகப்பச்சை - Beryl
(9) புஷ்பராகம் - Topaz
(10) வைடூரியம் - Chrysoprasus
(11) சுநீரம் - Jacinth
(12) சுகந்தி - Amethyst

பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
 -வெளிப்படுத்தல் 21 : 21
  • முத்து - Pearl
  • ஒவ்வொரு வாசலும் முத்து போல காட்சியளித்தது. 
  • வீதிகள் முழுவதும் பொன் போல மின்னியது. 

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
 -வெளிப்படுத்தல் 21 : 22
  • மனிதன் தேவனை சந்திப்பதற்கு தான் ஆலயம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
  • ஆனால் இப்போது தேவனும் மனிதனோடு கூடி வாழ்ந்தால் ஆலயம் எதற்கு?
  • தேவ ஆட்டுக்குட்டியானவரே ஆலயமாக அந்த புதிய பூமியில் இருப்பார். 

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
 -வெளிப்படுத்தல் 21 : 23
  • தேவனே அந்த பூமிக்கு வெளிச்சமாக இருந்தார். 
  • சூரியனோ, சந்திரனோ எதற்கு? தேவையில்லை. 
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
 -யோவான் 1 : 9

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
 -யோவான் 8 : 12

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
 -வெளிப்படுத்தல் 21 : 24
  • இரட்சிக்கப்பட்ட புறஜாதியார், யூதர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் அந்த பூமியின் வாழ்க்கையில் ஜெயங்கொண்டால் புதிய பூமியில் அவர்கள் பங்கடைவார்கள்.
  • தேவனுடைய வெளிச்சத்திலே நடப்பார்கள். 

அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
 -வெளிப்படுத்தல் 21 : 25
  • அங்கு இருள், இருட்டு, இரவு என்ற ஒன்று இல்லவே இல்லை.
  • வெளிச்சம் மாத்திரமே குடிகொண்ட ஒரு வாழ்க்கை. 

உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
 -வெளிப்படுத்தல் 21 : 26
  • மக்கள் திறந்த வாயிலின் வழியாக மகிமையையும், கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.  
 -வெளிப்படுத்தல் 21 : 27
  • ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்ழில் எழுதப்பட்டவர்கள் மாத்திரமே அந்த நகரத்திற்குள் பிரவேசிப்பார்கள். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4