வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 21 விளக்கம்
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
-வெளிப்படுத்தல் 21 : 1
-வெளிப்படுத்தல் 21 : 1
- யோவானுக்கு மாத்திரம் தேவன் இதை காண்பித்தார்.
- எதிர்காலத்தில் நாம் இதையெல்லாம் காண்போம்.
- புதிய பூமி பழைய பூமியில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.
- ஆனால் புதிய பூமி மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாக இருக்கும்.
-வெளிப்படுத்தல் 21 : 2
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இனி ஒரு பொழுதும் அவர் இந்த பூமிக்கு தன் சபையை கொண்டு வருவதில்லை.
- ஆனால் இந்த புதிய பூமிக்கு இயேசு தன் மனைவியை கொண்டு வருவார்.
- பரிசுத்த நகரம் - எருசலேம் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருமாம்.
- யோவான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் மட்டும் காணவில்லை.
- அவர் வானத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு நகரத்தை கண்டார்.
- அது தான் புதிய எருசலேம்.
பரலோகத்தில் உள்ள எருசலேம்
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
-கலாத்தியர் 4 : 26
கட்டினது யார்?
ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
-எபிரேயர் 11 : 10
புதிய எருசலேம் - தேவனுடைய நகரம்
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 12
-வெளிப்படுத்தல் 21 : 3
- தேவன் மனிதனை படைத்தது அவனோடு ஒரு நல்ல உறவை வைத்துக் கொள்ளும்படியாக.
- Normal ஆக இருப்பார் தேவன்.
- புதிய எருசலேமில் தேவன் தாமே தம் மக்களுடன் வாழ்வார்.
- அவர் தமது மக்களுடன் எப்போதும் இருப்பார்.
-வெளிப்படுத்தல் 21 : 4
- மரணம், துக்கம் இதெல்லாம் தற்போதைய உலகத்துக்குரியவைகள்
- ஆனால் புதிய பூமியில் இது போன்ற எதுவும் இருக்காது.
- அழுவதற்கு காரணமே இருக்காது.
- மகிழ்ச்ச மாத்திரமே குடியிருக்கும் உலகம்.
-வெளிப்படுத்தல் 21 : 5
- Iddu - இதோ- Greek
- நிச்சயமாகவே
- புதிய வானத்தையும், புதிய பூமியையும் யோவான் தரிசனத்தில் கண்டார்.
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
-ஏசாயா 65 : 17
- ஏசாயா சொன்ன தீர்க்கத்தரிசனமும் நிறைவேறும்.
- அவர் வார்த்தை சத்தியமானவைகள்.
-வெளிப்படுத்தல் 21 : 6
- கர்த்தரே ஆதியும், அந்தமும் ஆனவர்.
- தாகமாயிருக்கிறவன் என்றால் உண்மையை தேடுகிறவன் என்று அர்த்தம்.
- அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் கிறிஸ்துவுக்குள் ஜீவனைக் கொடுப்பார்.
- நமக்கு கொடுத்திருக்கிறது போல
- அதுவும் இலவசமாக கொடுக்கிறவர்.
-வெளிப்படுத்தல் 21 : 7
- ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று கீழ்க்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறார்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
-வெளிப்படுத்தல் 2 : 17
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
-வெளிப்படுத்தல் 2 : 26
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 5
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
-வெளிப்படுத்தல் 3 : 12
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
-வெளிப்படுத்தல் 3 : 21
- நாம் அவருடைய குமாரனாக இருப்போம்.
-வெளிப்படுத்தல் 21 : 8
பயப்படுகிறவர்களும்
- பயம்
- Greek - Phoebia
- அது அல்ல இங்கு சொல்லப்படுவது.
- Dailia - ஆவிக்குரிய பயம்
- மனிதர்கள் மத்தியில் நான் இயேசுவை பின்பற்றுகிறவன் என்று சொல்லுவதற்கு இருக்கிற பயம்.
அவிசுவாசிகளும்
- Greek word - Pistos
- தேவன் நம்மை நம்பி ஒன்றை கொடுக்கிறார்.
- அவர் நம்புகிறார் நான் அதற்கு உண்மையுள்ளவனாக இருப்பேன் என்று.
- ஆனால் அந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்வது.
அருவருப்பானவர்களும்
- தேவன் அருவருக்கின்றதை செய்வது
இவர்கள் எல்லாம் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற நரகத்தில் போடப்படுவார்கள்.
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
-1 கொரி 6 : 9
திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
-1 கொரி 6 : 10
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
-1 கொரி 6 : 11
- இத்தகைய பாவங்களை செய்தவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பு பெற்று, அவருடைய இரத்தத்தின் மூலம் அந்த பாவங்கள் கழுவப்பட்டால் நாம் பரலோகத்திற்கு செல்லலாம்.
- இல்லையென்றால் நரகம் தான்.
-வெளிப்படுத்தல் 21 : 9
- இயேசு கிறிஸ்துவினுடைய மனைவியை உனக்கு காண்பிக்கிறேன் என்று சொல்லி
- ஆட்டுக்குட்டியானவரின் மனைவி என்றால் சபை.
- அந்த சபை தான் புதிய எருசலேமில் வாழப் போகிறது.
-வெளிப்படுத்தல் 21 : 10
- அதாவது பரிசுத்த நகரமாகிய அந்த எருசலேம் தான் இயேசுவினுடைய மனைவியாம்.
- தேவதூதன் யோவானை ஒரு மலையின் மேல் ஆவியில் கொண்டு போய் பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிற சபையை காண்பித்தான்.
- அவர்கள் தேவனுடைய மகிமையை பெற்றவர்களாய் இருந்தார்கள்.
-வெளிப்படுத்தல் 21 : 11
- யோவான் தான் கண்டதை தனக்கு தெரிந்த வகையில் விளக்குகிறார்.
- அவர் பூமியில் கண்டிருந்த இரத்தினக்கல், வச்சிரக்கல்லை ஒப்பிட்டு சொல்கிறார்.
- ஆனால் அது உண்மையிலேயே விவரிக்கக் கூடாத அளவுக்கு பிரகாசமாக இருந்தது.
- அதின் என்பது அவள் என்று வரவேண்டும்.
- புதிய நகரம் - பெண்பால்
- இயேசுவானவர் தன்னுடைய மனைவியை பரிசுத்த நகரமாக ஒப்பிட்டு பாதுகாக்கின்றார்.
- நாம் பரலோகத்திற்கு சென்ற பிறகு நாம் அவருக்குள் வாழ்வோம்.
- நாம் புதிய பூமிக்கு வரும் போது அவருடைய மகிமையோடு வருவோம்.
-வெளிப்படுத்தல் 21 : 12
- அந்த புதிய பூமியை சுற்றிலும் உயரமான மதில் இருந்தது.
- மொத்தம் 12 வாசல்கள் இருந்தன.
- அந்த பரிசுத்த நகரம் சதுரமாக இருந்தது.
- எனவே 4 திசைகளிலும் 3 வாசல்கள் இருந்தன.
- நெகேமியா புத்தகத்தில் கொடுக்கப்பட்டது போல இங்கும் 12 வாசல்கள் இருக்கின்றன.
70 வருட சிறையிருப்புக்கு பிறகு எருசலேமில் மறுகட்டமைக்கப்பட்ட 12 வாசல்கள்
(1) ஆட்டு வாசல் - நெகேமியா 3:1
(2) மீன் வாசல் - நெகேமியா 3:3
(3) பழைய வாசல் - நெகேமியா 3:6
(4) பள்ளத்தாக்கின் வாசல் - நெகேமியா 3:13
(5) குப்பைமேட்டு வாசல் - நெகேமியா 3:14
(6) ஊருணி வாசல் - நெகேமியா 3:15
(7) தண்ணீர் வாசல் - நெகேமியா 3:26
(8) குதிரை வாசல் - நெகேமியா 3:28
(9) கிழக்கு வாசல் - நெமேகியா 3:29
(10) மிப்காத் என்னும் வாசல் -நெகேமியா 3:31
(11) எப்பிராயீம் வாசல் -நெகேமியா 8:16
(12) காவல்வீட்டு வாசல் -நெகேமியா 12:39
-வெளிப்படுத்தல் 21 : 13
- ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஒரு தூதன் இருந்தான்.
- ஒவ்வொரு வாசலின் மேலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் எழுதப்பட்டு இருந்தது.
-வெளிப்படுத்தல் 21 : 14
- இந்த 12 அஸ்திபாரக் கற்களும் 12 அப்போஸ்தலர்களை குறிக்கிறது.
-வெளிப்படுத்தல் 21 : 15
- ஒரு தூதன் அந்த நகரத்தை அளக்கிற பொற்கோலைப் பிடித்திருந்தான்.
-வெளிப்படுத்தல் 21 : 16
- ஸ்தாதி - furlong, stadia
- 12000 furlongs - 1500 miles
- 2400 km
-வெளிப்படுத்தல் 21 : 17
- தூதன் அந்த மதிலை அளந்து பார்க்கிறான்.
- முழம் - cubit
- 1 cubit - 18 inches or 45 cm
- 144 முழம் - 216 feet or 65 meters thick
-வெளிப்படுத்தல் 21 : 18
- வச்சிரக்கல் - jasper
- பளிங்குக்கு ஒப்பான - clear glass
- சுத்தப்பொன் - pure gold
- இங்கு யோவான் அவருக்கு விவரிக்க தெரிந்த வகையில் விவரிக்கிறார்.
- நிஜமாகவே அது பூமியில் காணப்படுகிற பொன், வச்சிரக்கல்லா என்றால் அது இல்லை.
-வெளிப்படுத்தல் 21 : 19
- அந்த நகரத்தின் மதில்களின் அஸ்திபாரங்கள் விலை உயர்ந்த கற்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- பார்வைக்கு ஜொலிப்பாக இருந்தது.
(1) வச்சிரக்கல் - Jasper
(2) இந்திரநீலம் - Sapphire
(3) சந்திரகாந்தம் - Chalcedony
(4) மரகதம் - Emerald
-வெளிப்படுத்தல் 21 : 20
(5) கோமேதகம் - Sardonyx
(6) பதுமராகம் - Sardius
(7) சவர்ணரத்தினம் - Chrysolite
(8) படிகப்பச்சை - Beryl
(9) புஷ்பராகம் - Topaz
(10) வைடூரியம் - Chrysoprasus
(11) சுநீரம் - Jacinth
(12) சுகந்தி - Amethyst
-வெளிப்படுத்தல் 21 : 21
- முத்து - Pearl
- ஒவ்வொரு வாசலும் முத்து போல காட்சியளித்தது.
- வீதிகள் முழுவதும் பொன் போல மின்னியது.
-வெளிப்படுத்தல் 21 : 22
- மனிதன் தேவனை சந்திப்பதற்கு தான் ஆலயம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
- ஆனால் இப்போது தேவனும் மனிதனோடு கூடி வாழ்ந்தால் ஆலயம் எதற்கு?
- தேவ ஆட்டுக்குட்டியானவரே ஆலயமாக அந்த புதிய பூமியில் இருப்பார்.
-வெளிப்படுத்தல் 21 : 23
- தேவனே அந்த பூமிக்கு வெளிச்சமாக இருந்தார்.
- சூரியனோ, சந்திரனோ எதற்கு? தேவையில்லை.
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
-யோவான் 1 : 9
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
-யோவான் 8 : 12
-வெளிப்படுத்தல் 21 : 24
- இரட்சிக்கப்பட்ட புறஜாதியார், யூதர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் அந்த பூமியின் வாழ்க்கையில் ஜெயங்கொண்டால் புதிய பூமியில் அவர்கள் பங்கடைவார்கள்.
- தேவனுடைய வெளிச்சத்திலே நடப்பார்கள்.
-வெளிப்படுத்தல் 21 : 25
- அங்கு இருள், இருட்டு, இரவு என்ற ஒன்று இல்லவே இல்லை.
- வெளிச்சம் மாத்திரமே குடிகொண்ட ஒரு வாழ்க்கை.
-வெளிப்படுத்தல் 21 : 26
- மக்கள் திறந்த வாயிலின் வழியாக மகிமையையும், கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.
-வெளிப்படுத்தல் 21 : 27
- ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்ழில் எழுதப்பட்டவர்கள் மாத்திரமே அந்த நகரத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
Comments
Post a Comment