வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 16 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 16 விளக்கம்

அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழுதூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 16 : 1
  • எங்கே இருந்து அந்த சத்தம் வருகிறது. 
  • பரலோகத்தில் இருக்கிற தேவாலயத்தில் இருந்து 
  • தேவனுடைய ஆலயத்திலே அல்ல அவருடைய சிங்காசனம் இருப்பது. 
  • தேவனுடைய சிங்காசனம் பரலோகத்திலே இன்னுமொரு இடத்திலே இருக்கிறது. 
  • ஆயினும் இந்த சத்தம், தேவனுடைய சத்தத்தைப் போன்று 
  • அப்படியானால் இந்த சத்தம் சிங்காசனத்தில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும். 
  • அப்படியானால் தேவனுடைய ஆலயத்திலிருந்து எப்படி வர முடியும்.
  • தேவனுடைய ஆலயத்திற்குள்ளே இருப்பது என்ன? 
  • உடன்படிக்கைப் பெட்டி. 
  • உடன்படிக்கைப்பெட்டி தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 
  •  உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருப்பது என்ன?  10 கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் இரண்டு, ஆரோனுடைய கோல், மன்னா.
  • அந்த 3ன் மூலம் தேவன் தம்முடைய உடன்படிக்கையை மிக அழகாக காண்பிக்கிறார். 
  • முதலாவது 10 கற்பனைகள் - நான் உங்களுக்கு செய்யச் சொன்னவைகளை செய்து கொண்டு, நான் உங்களுக்கு செய்ய வேண்டாம் என்று சொன்னவைகளை செய்யாமல் இருந்து, நீங்கள் என்னுடைய வார்த்தைக்கு ஏற்ற வண்ணமாக  வாழ்ந்தால் மன்னா என்னும் ஆகாரத்தை உங்களுக்கு கொடுத்து உங்களை நான் பராமரித்து கொள்வேன். 
  • நீங்கள் என்னுடைய வார்த்தைகளை கேளாமல், கீழ்ப்படியாமல் வாழ்ந்தால் அந்த கோலினாலே அடிப்பேன். 
  • இப்பொழுது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்கள் தான் பூமியில் இருக்கிறார்கள். 
  • இப்போது உடன்படிக்கைப்பெட்டியிலே செயல்படப்போவது கோல். 
  • அந்த கோல் முன்பு மோசேக்கு சர்ப்பமாக மாறியது. 
  • சர்ப்பம் தீண்டும். 
  • கோல் சர்ப்பமாக மாறியது. 
  • கோல் கடலை இரண்டாக பிளந்தது.
  • தேவன் தான் பேசுகிறார். நீங்கள் என்னோடு சரியாக செயல்பட்டால, சரியாய் இருப்பேன். நீங்கள் என்னோடு தவறாக செயல்பட்டால் நானும் தவறாக செயல்படுவேன். அது தான் உடன்படிக்கை. 
  • இப்போது விளங்குகிறதா ஏன் இந்த சத்தம் தேவாலயத்தில் இருந்து வருகிறது. 
  • கடைசியான இந்த பூமிக்குரிய நியாயத்தீர்ப்பு அவருடைய உடன்படிக்கையாகிய பெட்டியில் இருந்து வருகிறது.  

முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
 -வெளிப்படுத்தல் 16 : 2
  • உடல் முழுவதும் அழுகி போன காயங்கள்.
  • அதை தொட முடியாது. 
  • 7 வாதைகளில் முதல் வாதை புண்.
  • ஆனால் அவர்கள் சாக மாட்டார்கள். 

இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.
 -வெளிப்படுத்தல் 16 : 3
  • இரண்டாம் வாதை, சமுத்திரம் இரத்தமாகிறது. 
  • சமுத்திரம் என்று ஒருமை வாக்கியத்தில் சொல்லப்பட்டாமல் அது மத்தியத் தரைக்கடல்
  • இரத்தம் வெளியே வந்தவுடன் அது சிவப்பு நிறம்
  • கொஞ்ச நேரம் சென்ற பின்பு அது நிறம் மாறும்,
  • கடுமையான சிவப்பு இல்லையென்றால் கறுப்பு நிறத்தில் இருக்கும். 
  • மோசமான ஒரு துர்நாற்றம் வரும். 
  • இங்கு சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம் போலானது. 
  • அப்போது எவ்வளவு துர்நாற்றம் வரும். 
  • அதில் உள்ள பிராணிகள் எல்லாம் செத்துப்போனால் எவ்வளவு துர்நாற்றம் வரும். 
  • முதல் வாதை இருக்கும் பொழுதே, இரண்டாம் வாதை வந்தது. 

மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.
 -வெளிப்படுத்தல் 16 : 4
  • மூன்றாம் வாதை - சமுத்திரத்தின் அருகாமையில் இருக்கிற மக்களெல்லாம் இந்த நாற்றத்தை தாங்க கூடாமல் ஊருக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 
  • அங்கே ஆறுகளும், ஊற்றுகளும் இரத்தமாகின்றன. 
  • எல்லா தண்ணீரும் இரத்தமாயின. 
  • குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.
  • 666 ஐ பெற்ற ஜனங்கள் தான் இவர்கள். 
  • இந்தக் கூட்டம் தான் காலாகாலமாக கிறிஸ்தவர்களை இரத்தம் சிந்த வைத்தவர்கள். 
  • முதன்முறையாக தேவனுடைய இரத்தசாட்சியாக மரித்தவன் ஸ்தேவான். 
  • பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
  • பவுல் தலையை வெட்டிக் கொன்றார்கள். 
  • யாக்கோபை சிரச்சேதம் செய்து கொன்றார்கள்.
  • அந்திரேயாவை X வடிவ சிலுவையிலே அறைந்தார்கள்.
  • தோமாவை இந்தியாவிலே கொண்டு வந்து கல்லுகளினால் அடித்துக் கொன்றார்கள். 
  • இன்றைக்கும் கிறிஸ்தவ missionary களை கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ISIS கூட கொல்லுகிறர்கள். 
  • 2000 ஆண்டுகளாக பிசாசு மனிதர்களை பயன்படுத்தி பல கிறிஸ்தவர்களை இரத்தம் சிந்தச் செய்தான். 

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
 -வெளிப்படுத்தல் 16 : 5
  • ஏனென்றால் - அடுத்த வசனத்தில்

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 16 : 6
  • ஸ்தேவான் தொடங்கி சபை எடுத்துக்கொள்ளப்படும் வரைக்கும் சிந்தப்பட்ட இரத்தத்தின் கணக்கை, தேவன் தன்னுடைய பிள்ளைகள் சிந்தின இரத்தத்தையும், வேதனையையும் தேவன் குறித்து வைத்திருக்கிறார். 
  • அவர் அடிப்பார்.
  • அவருடைய கோபத்திற்கு தப்புவதற்கு எவனாலும் முடியாது. 

பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 16 : 7
  • தேவதூதன் சொல்லுகிறான்.

நான்காம் தூதன் தன் கலசத்திலிலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 16 : 8
  • நான்காம் வாதை

அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
 -வெளிப்படுத்தல் 16 : 9
  • Ozone layer- பாதுகாப்பு வளையம் தகர்க்கப்படுகிறது.
  • ஒரு பாயை சுற்றுகிறது போல சுற்றினார் என்று யோவான் முந்தின அதிகாரங்களில் குறிப்பிடுகிறார். 
  • இப்போதைய நிலவரம் ozone layer ல் ஓட்டைகள் உண்டாயிருப்பதால் ultra violet rays நம்முடைய சரீரங்களில் படுவதில் இருந்து காக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு மிகுதியாய் இருக்கிற ozone layer ம் சுருட்டப்படும். 
  • 7 ஆண்டுகளுக்கு உலகத்திலே மிகப்பெரிய பிரச்சனை இருக்கப் போகிறது. 
  • இந்த 7 ஆண்டுகள் முடிகிற பொழுது 4 ம் தூதன் கலசத்தில் உள்ளதை சூரியன் மேலே ஊற்றினாராம். 
  • அந்த சூரியன் இன்னும் உஷ்ணமாகி மனிதர்களை சுட்டெரித்ததாம். 
  • ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இன்னும் கொடிய புண் ஆற வில்லை.
  • தண்ணீர் இரத்தமானது அப்படியே இருக்கிறது. 
  • இந்த வேதனையில் அவர்களால் சாகவும் முடியாது, உயிரோடு இருக்கவும் முடியாது. 
  • இந்த 4 வாதைகளும் மனிதர்களுக்கு. 

ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,
 -வெளிப்படுத்தல் 16 : 10
  • இப்போது அவர்களை ஆளுகை செய்கிற அந்திக்கிறிஸ்துவுக்கு.
  • அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து - பிரதான ஸ்தானம்- ரோம். 
  • பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து - பிரதான ஸ்தானம்- பாபிலோன். 
  • மத ரீதியான அந்திக்கிறிஸ்து - பிரதான ஸ்தானம்- எருசலேம். 
  • அடுத்த 3 வாதைகள். 
  • இப்போது மிருகத்திற்கு அடிக்கிறார். 
  • இருளடைந்தது என்றால் மின்சாரம் இல்லாமல் போய்விட்டது. 
  • முன்பு உஷ்ணத்தில் A/C ஐ போட்டுகொண்டு இருந்தவர்களுக்கும் இப்போது பாதிப்பு.
  • மின்சாரம் இல்லாமல் போனது. 

தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
 -வெளிப்படுத்தல் 16 : 11
  • தேவனை தூஷித்தார்கள்.

ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
 -வெளிப்படுத்தல் 16 : 12
  • 17,18 ம் அதிகாரங்களில் தேவன் புதுமையான காரியங்களை செய்யப் போகிறார். 
  • 3 விதமான பாபிலோன் இருக்கிறது
  • இந்த 3 விதமான பபிலோன்களையும் தேவன் ஒன்றன் பின் ஒன்றாக அழித்து போடுவார். 
  • அது ஆரம்பிக்கின்ற இடம் தான் இது. 
  • கிழக்கு என்று சொல்லும் போது அது இந்தியா, சீனா, ஜப்பான் என்னும் தேசங்களை குறிக்கிறது. 
  • அந்திக்கிறிஸ்துவுக்கு எதிராக இந்தியா, சீனா, ஜப்பான் இந்த தேசங்களில் உள்ள ராஜ்யங்கள. அவனுக்கு விரோதமாக எழும்பும். 
  • அவர்களுடைய இராணுவங்கள்,இராணுவ சேனைகள் அந்திக்கிறிஸ்துவுக்கும், அவனுடைய சேனைக்கும் எதிராக வரும். 
  • அப்பொழுது அவர்கள் வரத்தக்கதான அந்த பாதை உண்டாகத்தக்கதாக ஐப்பிராத்து என்கின்ற நதி வற்றிப் போகும். 

அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 16 : 13
  • இவர்கள் 3 பேர் யார்?
  • சர்ப்பம் - அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து
  • மிருகம் - பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து
  • கள்ளத்தீர்க்கத்தரிசி - மத ரீதியான அந்திக்கிறிஸ்து
  • இவர்கள் 3 பேரின் வாயிலும் இருந்து தவளைகளுக்கு ஒப்பான அசுத்த ஆவிகள் வருகிறதாம். 

அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
 -வெளிப்படுத்தல் 16 : 14
  • பிசாசு நன்றாய் அற்புதங்களை செய்வதற்கு அறிந்தவன்.
  • முன்பு, கிறிஸ்தவர்களல்லாத ஏனைய மத மார்க்கதலைவர்களை கொண்டு பெரிய அற்புதங்களையெல்லாம் பிசாசு செய்தான். 
  • அப்பொழுது கிறிஸ்தவர்கள் ஏமாறவில்லை. 
  • ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் இது பிசாசின் வல்லமையினால் செய்கிறார்கள் என்று. 
  • அப்போது கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள், சபையிலே நடக்கிற அற்புதங்கள் தேவன் செய்கிறார். வெளியிலே நடக்கிற அற்புதங்கள் பிசாசு செய்கிறான். 
  • இப்போது ஆட்டுத்தோலை போர்த்திய ஓநாய் போல, சபைகுள்ளேயே பிசாசுகள் இருக்கின்றன. 
  • அப்பாவித்தனமான கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். 
  • ஐபிராத்து நதி வற்றிப்போகும் என்று பார்த்தோமே, கிழக்கு பகுதியில் இருந்து அந்திக்கிறிஸ்துவுக்கு எதிராக யுத்தம் பண்ண வருகிற இராணுவமானது, இந்த அந்திக்கிறிஸ்துவினுடைய அற்புதங்கள், அடையாளங்களைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போவார்கள். 
  • அடிக்க யுத்தம் பண்ண வருகிறவர்கள் அவனை வணங்க ஆரம்பிப்பார்கள்.
  • இன்று அநேக கிறிஸ்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். 
  • நீங்களும் ஏமாற்றப்படலாம், வஞ்சிக்கப்படலாம். 
  • எப்படி கண்டுபிடிப்பது?
  • வேதம் சொல்லுகிறது அவர்கள் கனியினாலே அவர்களை அறிவீர்கள் என்று. 

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
 -வெளிப்படுத்தல் 16 : 15
  • தேவன் இப்போது இந்த வார்த்தையை உங்களுக்கும் எனக்கும் தருகிறார். 
  • வஸ்திரம் என்றால் நீதி. 
  • நீதி என்றால் தேவனுடனான நல்ல உறவு.
  • எப்படி தேவனோடு நல்ல உறவை வைத்துக் கொள்ள முடியும்.
  • தேவனோடு பேச வேண்டும் - ஜெபம்
  • தேவன் பேசுவதை நாம் கேட்க வேண்டும் - வேத வாசிப்பு.
  • தேவன் சொல்லுகிற சபைக்கு போக வேண்டும். 
  • நாம் நமக்கு குறிக்கப்பட்ட சபைக்கு போகவில்லையென்றால் அது ஆவிக்குரிய விபச்சாரம்

அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.
 -வெளிப்படுத்தல் 16 : 16
  • இப்பொழுது அந்திக்கிறிஸ்துக்கள் 3 பேரும் ஆட்சியில் இருக்கிறார்கள். 
  • 7 வருடங்களின் மகா உபத்திரவ காலத்திலே, கடைசி சில சந்தர்ப்பத்திலே. 
  • முதல் மூன்றரை ஆண்டுகள் வெளிப்படுத்தலில் சொல்லப்பட்ட சில சில வாதைகள் நடக்கும். 
  • அந்த நாட்களில் யூதர்கள் இருப்பார்கள்.
  • அந்த முதல் மூன்றரை ஆண்டுகள் முடிகின்ற தருணத்தில் தேவன் யூதர்களை கொண்டு போய் மறைவிடத்திலே ஒளித்து வைத்து பாதுகாப்பார்.
  • அப்பொழுது பூமியிலே மற்கவர்களுக்கு என்ன நடக்கும். 
  • அந்திக்கிறிஸ்து தன்னுடைய முழு ஆட்சியையும் நடப்பிக்கிறான். 
  • அப்பொழுது அந்திக்கிறிஸ்து தன்னுடைய ஆட்சியை 3 பிரிவுகளாக வகுத்துக் கொள்ளுகிறான். 
  • அரசியல் ரீதியான அந்திக்கிறிஸ்து - வலுசர்ப்பம் - முழு உலகத்தையும் ஆட்சி செய்வான். முழு உலகமும் ஒரு மனிதனுடைய ஆட்சியின் கீழ் வருகிறது.
  • மத ரீதியான அந்திக்கிறிஸ்து - கள்ளத்தீர்க்கத்தரிசி- முழு உலகத்தில் இருக்கிற எல்லா மதங்களையும் ஒன்றிணைத்து அவன் சர்வ மதத்தை உருவாக்கி அந்த மதத்தை ஒரு மதமாக்கி அதன் பிரதிநிதியாக தன்னுடைய ஆட்சியை நடத்துவான். 2 வது மூன்றரை ஆண்டுகளுக்குள்ளே பூமியிலே மனிதர்கள் அந்த அந்திக்கிறிஸ்துவை வணங்குவார்கள். உலகத்தில் இருக்கிற அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக இந்த மத ரீதியான அந்திக்கிறிஸ்து வருவான்.
  • பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து - முழு உலக பொருளாதாரத்திலும் உறுதிப்பாடு இருக்காது, மேலே, கீழே என்று போய் கொண்டிருக்கும். பொருளாதாரம் வீழ்ந்து போகிற தருணத்திலே, இந்த பொருளாதார ரீதியான அந்திக்கிறிஸ்து எழும்புவான். 
  • இவன் உருவாக்குகின்ற பொருளாதார சூழ்நிலையை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். 
  • முழு உலகத்திற்கும் ஒரே பணம் வரும். 
  • இதெல்லாம் முதல் மூன்றரை ஆண்டுகள் நடக்கும். 
  • இரண்டாவது மூன்றரை ஆண்டில் தேவனுடைய உக்கிர கோபம் ஊற்றப்படுகிற பொழுது முதல் 6 வாதைகளுக்குள் ஏற்படுகின்ற வேதனைகள், சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருக்கும். 
  • அப்போதை தான் மக்களுக்கு புரியும் அந்திக்கிறிஸ்து நமக்கு உதவி செய்யப் போவதில்லை என்று.
  • அப்போது எல்லோரும் அந்திக்கிறிஸ்துவுக்கு எதிராக யுத்ததிற்கு போவார்கள். 
  • அவர்கள் பாபிலோனுக்கு போகக்கூடியதாக Euphrates நதியானது வற்றிப் போகும். 
  • அவர்கள் போய் அவனை தாக்கும் முன்னதாக அந்திக்கிறிஸ்து அவர்களிடம் சொல்லுவான்.
  • இவ்வாறு இந்த உலகத்தை கலகப்படுத்தினவர்கள் யார் தெரியுமா? 7 வருடங்களுக்கு முன்பு உலகத்தில் கிறிஸ்தவர்கள் என்ற முட்டாள் கூட்டம் இருந்ததே! அவர்களை வேற்றுக்கிரக வாசிகள் கடத்திக் கொண்டு போனார்களே. அவர்கள் தான் நம்மையும் பிடிப்பதற்காக இந்த வாதைகளை கொடுக்கிறார்கள் என்று சொல்லுவான். 
  • எனவே, நாம் எல்லோரும் சேர்ந்து இந்த வேற்றுக்கிரக வாசிகளை அடிப்போம். 
  • உங்கள் இராணுவத்தையும், இந்த இராணுவத்தையெல்லாம் ஒன்று சேர்க்கக்கூடிய ஓரிடத்திற்கு நாம் கூடி வருவோம். 
  • உலகத்தின் மத்திய இடத்திற்கு போவோம். அதாவது இஸ்ரவேல்.
  • இஸ்ரவேலிலே இவ்வளவு பெரிய இராணுவத்தை வைக்கக் கூடிய ஒரே ஒரு இடம் தான் உண்டு. மெகிடோ.
  • Har என்று எபிரேய மொழியிலே சொல்லுவது அதாவது உயரமான இடம். 
  • அது வல்லமையுள்ள உயர்ந்த இடம். 
  • நாம் போவோம் மெகிதோவுக்கு. அங்கு போய் நம்முடைய மேன்மையை காண்பித்து, ஆகவே நாம் ஹர்-மெகிதோ வில் இருந்து வேற்றுகிரக வாசிகளை தாக்குவோம் என்று சொல்லுவான்
  •  ஹர்-மெகிதோ என்பது தான் அர்மெகதோன்.
  • அவன் வந்து எல்லாவற்றையும் ஒன்றிணைப்பான். 

ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
 -வெளிப்படுத்தல் 16 : 17
  • அர்மெகதோனுக்கு இந்த இராணுவமெல்லாம் கூட்டிச் சேர்த்தப் பின்பு ஏழாம் தூதன் தேவனுடைய கோபாக்கினையின் கடைசி பாத்திரமாக கலசத்தை ஊற்றுகிறான். 
  • அப்பொழுது தான் தேவன் அந்திக்கிறிஸ்துவை அடிக்க ஆரம்பிக்கிறார். 
  • ஒரேடியாக அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடிப்பார். 
  • இதை அடித்து முடிக்கின்ற கடைசி அடி 16:17 - அதிகாரம் 19 வரை நீளுகிறது. 
  • இரண்டே இரண்டு முறை தான் அந்த சத்தம் கேட்கும். 
  • இயேசு கிறிஸ்து ஒரு முறை சிலுவையிலே இருந்து சொன்னார். முடிந்தது என்று. 
  • நான் வந்து மனிதர்களுக்குரிய இரட்சிப்பின் செயலை செய்து முடித்து விட்டேன் என்று சொன்னார். 
  • மீண்டுமாய் பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் பிறக்கிறது. 
  • ஆயிற்று. அதாவது முடிந்தது என்ற சத்தம். 
  • பாபிலோன், விக்கிர ஆராதனை, இஸ்ரவேல் எதிரிகள் முடிந்தது.

சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
 -வெளிப்படுத்தல் 16 : 18
  • மிகப்பெரிய பூமி அதிர்ச்சி

அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 16 : 19
  • பாபிலோன் என்பது பிசாசின் தலைநகரம் அல்லவா.
  • 3 விதமான பாபிலோனுக்கும் அடி விழுக போகிறது. 

தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
 -வெளிப்படுத்தல் 16 : 20
  • தீவுகள், மலைகள் அழிந்து போயின.

தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.  
 -வெளிப்படுத்தல் 16 : 21
  • கல்மழையினால் வந்த உபத்திரவம் மிகக் கொடியதாக இருந்தது. 
  • ஆனால் மரணிக்க மாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4