Posts

Showing posts from July, 2024

சவுல் மற்றும் பவுல்

  சவுல் மற்றும் பவுல் பழைய   ஏற்பாட்டு   சவுல் புதிய   ஏற்பாட்டு   சவுல் (பவுல்) கேட்டு ,  பிராத்தனை   செய்து   பிறந்த பிள்ளை   என்று   அர்த்தம் சின்னது, சிறியவன், ஆக சிறியது என்று அர்த்தம். பென்யமீன்   கோத்திரத்தான் ,  உயரமானவன் ,  படித்தவர் .  - 1  சாமு  9 : 1-2 எட்டாம்   நாளில்   விருத்தசேதனமடைந்தவன் ,  இஸ்ரவேல் வம்சத்தான் ,  பென்யமீன்   கோத்திரத்தான் ,  எபிரெயரில்   பிறந்த எபிரெயன் ,  நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன் ; பக்திவைராக்கியத்தின்படி   சபையைத் துன்பப்படுத்தினவன் ,  நியாயப்பிரமாணத்திற்குரிய   நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் .  - பிலி  3 : 5-6 சரீரத்தில்   எந்த   பிரச்சனையும்   இல்லை . சரீர   பலவீனம்   இருந்தது  -  கலா  4:13 தேவனுக்கு   பிரியமான   ஒரு   ஆளாக இருந்தான் .  முழு   தேசத்தையும்  ஆளுவதற்கு  இவரை   ராஜாவாக   தெரிவு செய்தது   தேவன் -...

மத்தேயு 1:1 ன் விளக்கம்

மத்தேயு 1:1 ன் விளக்கம் ஆபிரகாமின்  குமாரனாகிய  தாவீதின்  குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:  -மத்தேயு 1 : 1 ஏன் ஆபிரகாம், தாவீது என்ற இரு நபர்கள் பெயர்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது? முதல் காரணம்: ஆபிரகாம் முதல் தாவீது வரையிலான அகலம் 1000 வருஷம். தாவீது முதல் இயேசுகிறிஸ்து வரையிலான காலம் 1000 வருஷம். இரண்டாவது காரணம்: ஆபிரகாம், தாவீது, இயேசுகிறிஸ்து இவர்கள் 3 பேரும்  மெல்கிசெதேக்கு என்னும் பெயரில் ஒன்றுபடுகிறார்கள்.  ஆபிரகாம் அன்றியும்   உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய  மெல்கிசேதேக்கு  அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,  -ஆதியாகமம் 14 : 18 தாவீது நீர்   மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.  -சங்கீதம் 110 : 4 இயேசு கிறிஸ்து அப்படியே வேறொரு இடத்திலும்: நீர்  மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.  -எபிரேயர் 5 : 6 புதியஏற்பாடு என்பது மெல்...

தாவீது பிறக்கும் போதே ராஜாவா?

தாவீது பிறக்கும் போதே ராஜாவா?  சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் போது அவருக்கு சுமார் 15 வயது இருக்கும். ஆனால் அவர் ராஜாவாக பதவி ஏற்கும் போது 30 வயதாய் இருந்தார். ஆனால் தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?   சவுல் 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினார் என்பது நமக்கு தெரியும்.  ஆனால் அவர் ஒரு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி, இரண்டாம் வருஷம் அரசாண்டு கொண்டிருந்த பொழுது (1 சாமு 13:1) ஒரு முறை சாமுவேல் குறித்த காலத்தில் வராத போது, லேவியர்கள் செய்ய வேண்டிய சர்வாங்கதகனபலியை தானே செலுத்துகிறார் (1 சாமு 13:9) ஆனால் சவுல் பென்யமீன் கோத்திரத்தான். அதை செய்திருக்கக் கூடாது. இதன் நிமித்தம் சாமுவேல் சவுலைக் கடிந்து கொண்டு இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார் என்றான். (1 சாமு 13:14).  இந்த சம்பவம் நடந்தது சவுலின் இரண்டாம் வருஷ ராஜ்யபாரத்தில். அப்போதே ஆண்டவர் கட்டளையிட்டு விட்டார்.  ஆனால் வசனம் சொல்லுகிறது தாவீது ராஜாவ...

தானியேல் 4 - புல்லை தின்னும் நேபுகாத்நேச்சார்

தானியேல் 4 - புல்லை தின்னும் நேபுகாத்நேச்சார் தானியேல் 4ம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜா ஒரு நாள் திடீரென்று மிருகத்தைப் போல மாறி புல்லைத் தின்னத் தொடங்கினான் என்று வாசிக்கிறோம். நேபுகாத்நேச்சார், தான் ஒரு மிருகமாக மாறுவதுபோல கனவு கண்டான் என்றும் , அதைக் தொடர்ந்தே அவன் மிருகம் போல மாறி ஏழு ஆண்டுகள் துன்பப்பட்டு பின்பு கர்த்தரிடம் சரணடைந்தான் என்று வேதம் கூறுகிறது.  ஆனால் ஒரு மனிதன் எப்படி புல்லைத் சாப்பிட முடியும். அப்படி யாரையுமே நாம் பார்த்ததில்லையே! அப்படியென்றால் அது என்ன? மனோதத்துவ நிபுணர்கள் இதை Boanthropy என்ற கொடிய மனநோய் என்கிறார்கள்.  அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை ஒரு கால்நடையாக நினைத்துக் கொள்வார்களாம்.  தான் ஒரு கால்நடையாக மாறுவது போன்ற ஆழமான மனதை பாதிக்கும் விதத்தில் ஏற்படும் கனவு இந்த வியாதிக்கு ஒரு முக்கிய காரணம் என்று மனவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Why were the linen clothes of Jesus wrapped and kept in the tomb? (John 20:7)

Why were the linen clothes of Jesus wrapped and kept in the tomb? (John 20:7) A Message to the Disciples – The Folded Napkin Tradition In ancient  Jewish culture , there was a common  custom practiced during meals  between a master and his servant: When a master sat at the table to eat, he would use a  napkin  (or cloth). If he finished his meal and was  done eating , he would  crumple the napkin  and toss it on the table. That told the servant,  “I’m finished, you can clear the table.” However, if the master folded the napkin  neatly  and set it aside, that meant: “I’m not done—I’m coming back.” Now, while this tradition isn't directly mentioned in Scripture, some scholars and Bible teachers suggest this  cultural practice could explain why John specifically notes  that the face cloth was "folded up in a place by itself" (John 20:7). If this is true, then Jesus' folded face cloth could have been  a silent but powerfu...

இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை ஏன் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது?

சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.   -யோவான் 20 : 7  இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை ஏன் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது? யூத கலாச்சாரத்தில், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களுக்கு உணவு பரிமாறினால், எஜமானர் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியில் காத்திருக்க வேண்டும். ஒரு வேளை எந்த எஜமானருக்கு அவசிய வேலை ஒன்று நடுவில் வந்து விட்டால் அவர் ஒரு துணியை சுற்றி (fold it in their method) அந்த மேஜையின்மீது வைத்து விட்டு செல்வார்.  எனவே வேலைக்காரன் அந்த அறைக்குள் சுத்தம் செய்ய வந்தால், அந்த சுருட்டி வைத்திருக்கும் துணியைப் பார்த்து தன் எஜமான் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை, திரும்பி வருவார் என்று அறிவான். இங்கும் நம்முடைய இயேசுவின் வேலை பூமியில் நிறைவடையவில்லை. அவர் திரும்பி வருகிறார் என்பதைக் குறிக்கும் வண்ணமாக கல்லறையில் அந்த சீலை தனியே சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. 

இயேசு சிலுவையில் ஏன் காடியை ஏற்றுக்கொண்டார் (யோவான் 19:30)

இயேசு சிலுவையில் முதன்முறை கசப்பு கலந்த காடியை குடிக்க மனதில்லாதிருந்தார் (மத்தேயு 27:34), ஆனால் அவர் அந்த காடியை இரண்டாவது முறை குடித்தார்.(யோவான் 19:30). ஏன்?   இங்கு குறிப்பிடப்படும் காடி என்பது கிரேக்க மொழியில் Oxos என்று அழைக்கப்படும்.  அதன் அர்த்தம் என்னவென்றால், அது ஒரு மருந்து. ரோமானியர்கள், உடலில் உறைந்த இரத்தத்தை வெளியே கொண்டு வருவதற்காகவும், காயத்தின் வலி குறைவதற்காகவும் இந்த மருந்தை பயன்படுத்தினார்கள். சிலுவையில் மரிப்பவர்களின் உடலில் இருந்து வருகிற ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பார்த்து அந்த ரோமர்கள் ரசித்து சந்தோஷப்படுவார்கள்.  எனவே தான் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த இயேசுவுக்கும் இதைக் குடிக்கக் கொடுத்தார்கள். முதன்முறை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த வலியை அவர் குறைக்க விரும்பவில்லை.  அந்த வலியை முற்றிலும் அவர் சரீரம் சுமந்தால் தான் நம்முடைய பாவம் தீரும். இரண்டாவது முறை ஏன் அந்த காடியை ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் சிலுவையில் இருந்தபோது, அவருடைய இரத்தத்தில் கொஞ்சம் அவருடைய விலாவில் உறைந்திருந்தது.  எனவே அவர் அந்த காடியை இரண்டாவது முறை எடுத்...

ஆகாய், செருபாபேல் பெயர் அர்த்தம்

ஆகாய், செருபாபேல்  பெயர் அர்த்தம் ஆகாய் - பெயர் அர்த்தம்: ஹக்(Hag) என்றால் பண்டிகை என்று அர்த்தம்.   Hag/yah என்றால்  கர்த்தருடைய பண்டிகை என்று அர்த்தம்.  ஹக்(Hag) என்ற எபிரேயச் சொல்லின் அர்த்தம்: சந்தோஷம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்று அர்த்தம். லேவியராகமம் புத்தகத்தில் 7 பண்டிகைகளை குறித்து கர்த்தர் பேசுகிறார்.  அதெல்லாம் கர்த்தருடைய பண்டிகைகள்.  1) பஸ்கா பண்டிகை 2) புளிப்பில்லாத அப்ப பண்டிகை 3) முதற்கனி/பலன் பண்டிகை (அசைவாட்டும் பண்டிகை) 4) Shav’ot என்று சொல்லப்படுகின்ற பெந்தெகொஸ்தே பண்டிகை.  5) எக்காளப் பண்டிகை 6) Yom Kippur என்று சொல்லப்படுகின்ற பாவ நிவிர்த்தி பண்டிகை (Day of Atonement) 7) கூடாரப் பண்டிகை அந்தப் பண்டிகைகளின் அர்த்தம் என்ன?  கர்த்தர் கொண்டாடுகிறார். கர்த்தர் சந்தோஷப்படுகிறார். என்னுடன் சேர்ந்து நீங்களும் சந்தோஷப்படுங்கள் என்று ஆண்டவர் மக்களுக்கு சொல்கிறார்.  நாமும்  கர்த்தரோடு சேர்ந்து அவருடைய சந்தோஷத்தில் நுழைவது என்று அர்த்தம்.  புதிய ஏற்பாட்டில் ரோமர் 12 ல் சந்தோஷப்படுகிறவர்களோடே சந்தோஷப்படுங்கள்; துக்கப்படுகி...

சங்கீதம் 91 விளக்கவுரை

Image
சங்கீதம் 91 விளக்கவுரை பிசாசு இயேசுவை சோதித்தான் அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:  -மத்தேயு 4 : 5 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.  -மத்தேயு 4 : 6 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.  -மத்தேயு 4 : 7 மத் 4:7 எங்கு இருந்து எடுத்து தேவன் சொன்னார் நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.  -உபாகமம் 6 : 16 மாசாவிலே என்ன செய்தார்கள்? இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும் , கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.  -யாத்திராகமம் 17 : 7 இங்கு குறிப்பிடப்படும்  பரீட்சை என்றால் என்ன...

இயேசு தோட்டக்காரராக உயிர்த்தெழுந்தார்

Image
இயேசு தோட்டக்காரராக உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்த சம்பவம் 4 சுவிசேஷ புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.   நாம் யோவான் 20:1-15 ல் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை காண்போம் வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.  -யோவான் 20 : 1 யார் இந்த மகதலேனா மரியாள் மகதலேனா மரியாள்  - மரியாள் என்பது அவள் பெயர்; மெக்தல் என்ற நகரத்தை சேர்ந்தவள். மெக்தல் கப்பர்நகூம்-கும், திபேரியாவுக்கும் இடையிலே இருக்கிறது.  அது ஒரு சிறு கிராமம் அதாவது கலிலேயா கடலோரத்திலே இருக்கிறது.  அங்கு பேசப்படும் மொழி அராமிய மொழி.  இயேசுவுக்கும், மெக்தல் என்ற இடத்திற்கும் உள்ள தொடர்பு: இயேசுவானவர் நாசரேத் என்ற ஊரில் தான் வளர்ந்தார். நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது. இயேசுவானவர் தன் 3 வருட ஊழியத்தை கப்பர்நகூமில் தான் செய்தார். பக்கத்து கிராமம் தான் மெக்தல். எனவே, இயேசுவும், மகதலேனா மரியாளும் பக்கத்து பக்கத்து கிராமத்தில் தான் இருந்தார்கள்.  மொழிகள்: இயேசுவானவர் வாழ்ந்த காலத்தில் பேசப்பட்ட மொழ...

ரோமர் 6:14 விளக்கம்

ரோமர் 6:14 விளக்கம் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.  -ரோமர் 6 : 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது   என்று வேதம் சொல்லுகிறது.  ஆனால் நம்மைப் பாவம் மேற்கொள்ளுகிறதே. அப்படியானால் நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை என்றே அர்த்தமாகிறது அல்லவா?  அப்படியானால் இது என்ன? இங்கு  மேற்கொள்ளமாட்டாது என்று கொடுக்கப்பட்டதன் அர்த்தம் என்ன? English - shall have dominion over Greek - kyrieuo கிரேக்க வார்த்தையின் அர்த்தம் - to rule , have power over. " பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது " என்பதன் அர்த்தம் என்ன? பாவம் நம்மை தாக்குவதற்கும்,ஆளுகை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.  பாவத்தினால் நம்மை முற்றிலும் ஆட்கொள்ள முடியாது என்பதை தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது.  நமது ஆவி மட்டுமே மறுபடியும் பிறந்திருப்பதினால், சரீர இச்சைகள், நமது பழைய சிந்தனைகள், பழைய வாழ்க்கை, உலக சவகாசம்  இதன் மூலம் இச்சைகள்...

யோவான் 14:12 விளக்கம்

யோவான் 14:12 விளக்கம்  மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.  -யோவான் 14 : 12 இவைகளைப்பார்க்கிலும் இங்கு இவைகளைப்பார்க்கிலும் என்று சொல்லப்படுகிறதன் கிரேக்க வார்த்தை என்னவென்றால் Megas.  அதன் பொருள் அளவு, எண்ணிக்கை.   என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் இயேசுவானவர் செய்த எந்தவொரு அற்புதத்தையும் நம்மால் செய்ய முடியாது. உதாரணமாக (1) இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார் (யோவான் 2:1-11). (2) 38 வருடங்களாக ஊனமுற்ற மனிதனை அவர் குணப்படுத்தினார் (யோவான் 5:1-9). (3) அவர் 5,000 பேருக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்தார் (யோவான் 6:1-14). (4) அவர் தண்ணீரில் நடந்தார் (யோவான் 6:19). (5) லாசருவை மரித்தோரில் இருந்து எழுப்பினார் (யோவான் 11:43-44) இவைகளில் எந்த கிரியையையும் விசுவாசிக்கிற அனைவராலும்    செய்ய முடியாது.  அதற்கென்று அபிஷேகிக்கப்பட்டவர்கள் வி...