இயேசு தோட்டக்காரராக உயிர்த்தெழுந்தார்
இயேசு தோட்டக்காரராக உயிர்த்தெழுந்தார்
- இயேசு உயிர்த்தெழுந்த சம்பவம் 4 சுவிசேஷ புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
- நாம் யோவான் 20:1-15 ல் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை காண்போம்
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.
-யோவான் 20 : 1
யார் இந்த மகதலேனா மரியாள்
- மகதலேனா மரியாள் - மரியாள் என்பது அவள் பெயர்; மெக்தல் என்ற நகரத்தை சேர்ந்தவள்.
- மெக்தல் கப்பர்நகூம்-கும், திபேரியாவுக்கும் இடையிலே இருக்கிறது.
- அது ஒரு சிறு கிராமம்
- அதாவது கலிலேயா கடலோரத்திலே இருக்கிறது.
- அங்கு பேசப்படும் மொழி அராமிய மொழி.
இயேசுவுக்கும், மெக்தல் என்ற இடத்திற்கும் உள்ள தொடர்பு:
- இயேசுவானவர் நாசரேத் என்ற ஊரில் தான் வளர்ந்தார்.
- நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது.
- இயேசுவானவர் தன் 3 வருட ஊழியத்தை கப்பர்நகூமில் தான் செய்தார்.
- பக்கத்து கிராமம் தான் மெக்தல்.
எனவே, இயேசுவும், மகதலேனா மரியாளும் பக்கத்து பக்கத்து கிராமத்தில் தான் இருந்தார்கள்.
மொழிகள்:
இயேசுவானவர் வாழ்ந்த காலத்தில் பேசப்பட்ட மொழிகளாவன
- இஸ்ரவேலை ஆட்சி செய்த ரோமர்கள் லத்தீன் மொழியில் பேசினார்கள். (நூற்றுக்கு அதிபதி, ரோமப் போர்சேவகர்கள், ஆளுநர்கள்)
- கிரேக்க மொழி சர்வதேச மொழியாக இருந்தது. (உத்தயோகபூர்வமாக, புறஜாதிகளை சந்திக்கும் பொழுது)
- எபிரேய மொழி யூதர்களுடைய மொழியாக இருந்தது. (மத சம்பந்தமான நிகழ்வுகள், தேவாலயத்தில், ஜெப ஆலயத்திலே) மத்தேயு 21-25
இயேசு புறஜாதியாருக்கு பிரசங்கிக்கும் பொழுது கிரேக்க மொழியில் பேசினார்.
இயேசு ஜெப ஆலயத்தில் பிரசங்கிக்கும் பொழுது எபிரேய
மொழியில் பேசினார்.
- அராமிய மொழி தான் அன்றைய யூதர்களின் பேச்சு மொழியாய் இருந்தது. அராமிய மொழி இடத்திற்கு இடம் வித்தியாசமாக பேசப்படும்.
ஏன் மகதலேனா மரியாள் இயேசுவை தோட்டக்காரர் என்று எண்ணினாள்?
இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
-யோவான் 20 : 15
- ஏன் மகதலேனா மரியாளுக்கு இயேசுவை அடையாளம் தெரியவில்லை.
- ஏனென்றால் அவர் எருசலேம் தோட்டக்காரர் உடுத்தியிருந்தது போல உடுத்தி இருந்திருக்க வேண்டும்.
- இயேசுவானவர் வேண்டுமென்றே தோட்டக்காரர் போல அவளுக்கு காட்சியளித்தார்.
- ஏன்?
மனிதன் - எபிரேய மொழிப் பதங்கள்
- Ish - ஆண்-ஆண்பால் மட்டுமே
- Ish-ah - பெண்- பெண்பால் மட்டுமே
- Adam - மனிதன்- ஆண்பால், பெண்பால்
- இங்கு இயேசுவானவர் மகதலேனா மரியாளை Ish-ah என்று அழைக்கிறார்.
வேதத்தில் 3 தோட்டங்கள் குறித்து பேசப்படுகின்றன
- ஏதேன் தோட்டம் - அனைத்து வகை மரங்கள், செடிகள்
- கெத்சமனே தோட்டம் - ஒலிவ மர தோப்பு
- கல்லறை (கொல்கொதா) தோட்டம் - திராட்சை தோப்பு
இயேசுவின் கல்லறை கொல்கொதா தோட்டத்தில் இருந்தது
இயேசுவின் இரத்தம்:
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
-லூக்கா 22 : 44
- Hematohydrosis - அதிகமான மன அழுத்தத்தினால் வியர்வை மூலம் இரத்தம் வெளிப்படுதல்.
- இது தான் இயேசுவுக்கு நேர்ந்தது
கொல்கொதா தோட்டம்:
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
-யோவான் 19 : 41
John 19:41 Now in the place where he was crucified there was a garden; and in the garden a new sepulchre, wherein was never man yet laid.
- கொல்கொதா என்பதே தோட்டம் தான்.
- கொல்கொதா என்றால் கபாலஸ்தலம் அதாவது மண்டை ஓடு என்று அர்த்தம்.
- லத்தீன் மொழியில் அந்த இடத்தை “கல் வரி” என்று அழைப்பார்கள்.
- அது தான் “கல்வாரி” என்று தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.
- சாலமோன் எருசலேம் தேவாலயத்தை கட்டும் பொழுது அந்த மலையில் இருந்து பெயர்த்து கொண்டு வந்த கற்களை தான் அதற்கு பயன்படுத்தினான்.
- எனவே ஆங்காங்கே ஓட்டைகள் ஆக, அது ஒரு மண்டை ஓடு போல காட்சியளிக்கும்.
இரண்டு சந்திகள் இருக்கின்றன
- எருசலேம்-யோப்பா சந்தி- கொல்கொதா
- எருசலேம்-தமஸ்கு சந்தி - பெயர்செபா இருக்கிறது
- பிலாத்துவின் அரண்மனை சிங்கவாசலுக்கு அருகே இருக்கிறது. அங்கு தான் பிலாத்துவின் அரண்மனையும் இருக்கிறது. இந்த சந்தி தான் இயேசுவானவர் வசிக்கும் இடத்திற்கு பக்கம்.
ஏன் இயேசு கொல்கொதா என்னும் தோட்டத்தில் உள்ள சிலுவையிலே அறையப்பட்டார்?
- ஏன் பெயர்செபாவில் இருக்கும் சிலுவையில் இயேசு அறையப்படாமல் அவர் எருசலேம்-யோப்பா சந்தியில் காணப்படுகிற கொல்கொதாவிலே சிலுவையில் அறையப்பட்டார்.
- ஏனென்றால் அது தேவனுடைய திட்டம்.
- அங்கு தான் தோட்டம் இருக்கிறது.
- தோட்டம் இருக்கிற இடத்தில் தான் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பது தான் தேவ திட்டம்.,
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
-ஆதியாகமம் 2 : 8
- மனுஷன் - Adam
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள உண்டாக்கி என்பதன் எபிரேய வார்த்தை nawtah என்பதாகும்.
- ஆங்கிலத்தில் “planted” என்று கொடுக்கப்பட்டு இருக்கும்.
- அதன் அர்த்தம் பயிரிட்டு, நட்டு என்பதாகும்.
- யார் தோட்டத்தில் பயிரிடுவார்கள்?
- தோட்டக்காரர்கள்.
அதே nawtah என்கிற வார்த்தை இடம் பெறும் வசனம்:
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
-ஆதியாகமம் 9 : 20
ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
-ஆதியாகமம் 21 : 33
- தேவன் தான் ஏதேன் தோட்டத்தை நாட்டினார்
The God gave man a tree of life
The man gave God a tree of death
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
-கலாத்தியர் 3 : 13
- மரம் என்பது சிலுவை என்ற சாவு மரம்
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
-ஆதியாகமம் 3 : 24
- அப்படியென்றால் ஏதேன் தோட்டத்திற்கு வேறு எங்கும் வாசல் கிடையாது.
- கிழக்கு வாசல் மூலம் மாத்திரமே உட்பிரவேசிக்க முடியும்.
- இனி அவர்கள் ஏதேன் தோட்டத்துக்குள் வர வேண்டுமானால் கிழக்கு வாசல் வழியே வர வேண்டும்.
கேருபீன்கள்:
- கேருபீன்கள் - kehuv in Hebrew
- தேவ தூதர்களின் ஒரு பகுதியினர் காவல் காக்கிறவர்கள் என்று அர்த்தம்.
- Kehuv, kehav in Hebrew - பட்டயத்தை குறிக்கும்.
- பீன்கள் - பண்மை - 2 கேருபீன்கள்.
- சுடரொளி பட்டயம் - kehav
ஏதேன் தோட்டத்தின் நதிகள்:
- ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஒரு சமுத்திரம் ஒரு கண்டம் இந்த பூமியில் இருந்தது.
- வெட்டாந்தரை என்று உள்ளது- தரைகள் என்று அல்ல
- ஜலப்பிரளயத்திற்கு பின்பு 7 கண்டங்கள், 7 சமுத்திரங்கள் என்று ஆனது.
- ஏதேனில் இருந்த 2 நதிகளின் பெயர்கள் ஈராக்கில் உள்ள நதிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.
- Euphrates, Tigris
- ஆனால் ஏதேன் அல்ல
இயேசுவின் மரணம்
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
-மத்தேயு 27 : 51
Flavius Josephus
- சரித்திர எழுத்தாளர் முதலாம் நூற்றாண்டிலே வாழ்ந்தார்.
- அவர் பெயர் Flavius Josephus.
- அவர் ஒரு யூதன்.
- ஆனால் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல.
- அவர் யூத சரித்திரத்தை எழுதின புத்தகங்கள் உண்டு.
- The Antiquities of Jews, the Jewish wars.
The book of Jewish wars - புத்தகத்தில் கொடுக்கப்பட்டவை
- யூதர்கள் ஒரு தாவீதின் குமாரனை மேசியா என்று நம்பி ரோமர்களுடைய ஆட்சியிலிருந்து இவர் தங்களை மீட்டெடுப்பார் என்று நம்பினார்கள்.
- அவருடைய பெயர் இயேசு.
- கடைசியில் அந்த இயேசுவை ரோமர்களை கொண்டே சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
- அவர் சிலுவையில் அறைந்து உயிர் விட்ட பொழுது தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருந்த அநேக ஆசாரியர்கள் திடீரென பூமி அதிர்ந்ததும் கலங்கினார்கள்.
- திரும்பி பார்க்கும் பொழுது ஒரு நெருப்பு பட்டயம் போல ஒன்று மேலே இருந்து திரைச்சீலையை வெட்டிக் கொண்டு வந்ததைக் கண்டு பயந்து அரண்டு பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே ஓடினார்கள்.
கிழக்கு வாசல் மூடப்பட்டு இருந்தது:
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
-யாத்திராகமம் 26 : 31
- திரைச்சீலை 3 தடித்த நூல்களாலும், 1 மெல்லிய நூலாலும் உண்டாக்கப்பட்டு இருந்தது.
- அதை வெட்டுவது எளிதான காரியம் அல்ல.
- மூன்று பக்கம் மூடியிருக்கும்.
- கிழக்கு பக்கம் திரைச்சீலையால் மூடியிருக்கும்.
- ஏதேன் தோட்டத்தின் கிழக்கு வாசல் எப்படி மூடியிருந்ததோ, அதே போல மகா பரிசுத்த ஸ்தலத்தின் கிழக்கு வாசலும் திரைச்சீலையால் மூடப்பட்டு இருந்தது.
அடையாளம்:
- ஆதி 3:24 ன் படி ஏதேன் தோட்டத்தின் கிழக்கு வாசலை மூடி கேரூபீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் ஆண்டவர் வைத்தார்.
- அந்த ஏதேன் தோட்டத்தின் காவலின் அடையாளமாக சுடரொளி பட்டயம், கேரூபீன்கள் இவை இரண்டும் அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையில் விசித்திர வேலையாக (Embroidery) பண்ணப்பட்ட இருந்தது.
- ஏதேன் தோட்டம் என்பது தேவன் வந்து உலாவின இடம், தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்
- அதே போல மகா பரிசுத்த ஸ்தலமும் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்த இடம்.
திரை:
திறக்கப்பட்டது:
- அன்று தேவனால் மூடப்பட்ட ஏதேன் தோட்டத்தின் வாசலின் கதவு, சிலுவையில் இயேசு மரித்ததன் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரை கிழிந்ததன் (சுடரொளி பட்டயம் திரையை மேலிருந்து கீழாக சரியாக நடுவில் வெட்டிக் கொண்டு வந்தது) மூலம் திறக்கப்பட்டது.
- அதன் முலம் கேரூபீன்களும் இரண்டாக தகர்க்கப்பட்டது.
- மறுபடியும் தோட்டத்திற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
மகா பரிசுத்த ஸ்தலம்:
- மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் எல்லோராலும் நுழைய முடியாது.
- பிரதான ஆசாரியன் மட்டும் Yom Kippur என்று சொல்லப்படுகின்ற ஒப்புரவாக்குதலின் பண்டிகையின் போது, வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் அந்த மகா பரிசுத்த ஸதலத்திற்குள் நுழைய முடியும்.
தோட்டத்தில் நுழையும் சந்தர்ப்பம்:
- அன்று வாழ்ந்த ஆதாம், ஏவாள் ஏக்கத்தோடு ஏதேன் தோட்ட வாசலை பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
- பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஆசாரியர்களும் அந்த மகா பரிசுத்த ஸதலத்தின் திரையை ஏக்கத்தோடு பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரூபீன்களும், சுடரொளி பட்டயமும்.
- ஆனால் இயேசுவானவர் சபையாகிய நமக்கு அந்த தோட்டத்திற்குள் நுழைவதற்கான அதிகாரத்தை கொடுத்து இருக்கிறார்.
- நாம் எவ்வளவு பாக்கியவான்கள்.
திரித்துவ தேவன்:
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
-யோவான் 15 : 1
- பிதா திராட்சை தோட்டக்கரர்.
- இயேசுவும் திராட்சைத் தோட்டக்காரராக மகதலேனா மரியாளுக்கு காட்சியளித்தார்.
- பிதாவும் அவரே! இயேசுவும் அவரே!திரித்துவ தேவனும் அவரே.
Comments
Post a Comment