யோவான் 14:12 விளக்கம்
யோவான் 14:12 விளக்கம்
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
-யோவான் 14 : 12
-யோவான் 14 : 12
இவைகளைப்பார்க்கிலும்
- இங்கு இவைகளைப்பார்க்கிலும் என்று சொல்லப்படுகிறதன் கிரேக்க வார்த்தை என்னவென்றால் Megas.
- அதன் பொருள் அளவு, எண்ணிக்கை.
இயேசுவானவர் செய்த எந்தவொரு அற்புதத்தையும் நம்மால் செய்ய முடியாது. உதாரணமாக
(1) இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார் (யோவான் 2:1-11).
(2) 38 வருடங்களாக ஊனமுற்ற மனிதனை அவர் குணப்படுத்தினார் (யோவான் 5:1-9).
(3) அவர் 5,000 பேருக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்தார் (யோவான் 6:1-14).
(4) அவர் தண்ணீரில் நடந்தார் (யோவான் 6:19).
(5) லாசருவை மரித்தோரில் இருந்து எழுப்பினார் (யோவான் 11:43-44)
இவைகளில் எந்த கிரியையையும் விசுவாசிக்கிற அனைவராலும் செய்ய முடியாது.
- அதற்கென்று அபிஷேகிக்கப்பட்டவர்கள் வியாதிகளை குணப்படுத்துவார்கள்.
- அப்படியென்றால் இது என்ன?
- அவரைப் போல மூன்றரை வருடங்களும் ஊழியம் செய்வான்.
- அதை விட அதிக காலம் 30 வருடம், 40 வருடம் கூட ஊழியம் செய்வான்.
- இந்த வசனம் எண்ணிக்கை அடிப்படையிலே,தரத்தின் அடிப்படையில் அல்ல.
- இயேசுவானவர் மூன்றரை வருடங்கள் தான் ஊழியம் செய்தார்.
- ஆனால் சீஷர்களாகிய நீங்கள் என்னை விட அதிக கால ஊழியம் செய்வீர்கள் என்றார்.
Comments
Post a Comment