ரோமர் 6:14 விளக்கம்
ரோமர் 6:14 விளக்கம்
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
-ரோமர் 6 : 14
-ரோமர் 6 : 14
- நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது என்று வேதம் சொல்லுகிறது.
- ஆனால் நம்மைப் பாவம் மேற்கொள்ளுகிறதே.
- அப்படியானால் நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை என்றே அர்த்தமாகிறது அல்லவா?
- அப்படியானால் இது என்ன?
இங்கு மேற்கொள்ளமாட்டாது என்று கொடுக்கப்பட்டதன் அர்த்தம் என்ன?
- English - shall have dominion over
- Greek - kyrieuo
- கிரேக்க வார்த்தையின் அர்த்தம் - to rule , have power over.
"பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என்பதன் அர்த்தம் என்ன?
- பாவம் நம்மை தாக்குவதற்கும்,ஆளுகை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
- பாவத்தினால் நம்மை முற்றிலும் ஆட்கொள்ள முடியாது என்பதை தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது.
- நமது ஆவி மட்டுமே மறுபடியும் பிறந்திருப்பதினால், சரீர இச்சைகள், நமது பழைய சிந்தனைகள், பழைய வாழ்க்கை, உலக சவகாசம் இதன் மூலம் இச்சைகள், பாவங்கள் நமக்குள் வரும்.
- அதை எதிர்த்து நிற்கக் கூடிய கிருபையை கர்த்தர் நமக்கு மறுபிறப்பின் மூலம் தந்து இருக்கிறார்.
- கிருபை நமக்கு என்ன போதிக்கிறதோ, அதன்படி நாம் வாழ்ந்தால், நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டு இருப்போம்.
கிருபை நமக்கு எதை போதிக்கிறது?
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
-தீத்து 2 : 11
நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,-தீத்து 2 : 12
நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
-தீத்து 2 : 13
நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டு இருந்தால், நமக்குள் இருக்கிற ஆவி நம்மை பாவத்தை வெறுக்கச் செய்யும்.
“மீண்டும் பிறப்பது” என்பதன் அர்த்தம் என்ன?
- உண்மையில், "மீண்டும் பிறந்து" என்ற சொற்றொடர் "மேலிருந்து பிறந்தது" என்று பொருள்படும்.
- உங்கள் தாய் உங்களுக்கு சரீரப் பிறப்பைக் கொடுத்தது போல்,
- நீங்கள் நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், உங்களுக்கு ஆவிக்குரிய பிறப்பைத் தர பரிசுத்த ஆவியானவர் தேவை.
- நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் இருந்தீர்கள்.
- கிறிஸ்துவின் மூலம் ஆவிக்குரிய ரீதியில் உயிருடன் மீண்டும் பிறக்கிறீர்கள்.
நாம் மறுபடியும் பிறந்து இருந்தும் ஏன் பாவம் செய்கிறோம்?
- நாம் உண்மையிலேயே நம் ஆவியில் புதியவர்களாக ஆக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து விழுந்து போன உலகில் வாழ்கிறோம்.
- மேலும் பாவத்தை நோக்கிய மனநிலைமையையும் கொண்டிருக்கிறோம்.
- நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இரட்சிப்பில் தொடங்கிய நமது மீட்பு, இயேசு திரும்பி வந்து இந்த பாவ சரீரங்களை தம்முடையது போல் மகிமையுள்ளதாக மாற்றும் வரை முழுமையடையாது.
- மீட்பு முழுமையடையும் நாள் நாம் இயேசுவுடைய இரகசிய வருகையின் நாள்.
Comments
Post a Comment