ரோமர் 6:14 விளக்கம்

ரோமர் 6:14 விளக்கம்

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
 -ரோமர் 6 : 14
  • நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது என்று வேதம் சொல்லுகிறது. 
  • ஆனால் நம்மைப் பாவம் மேற்கொள்ளுகிறதே.
  • அப்படியானால் நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கவில்லை என்றே அர்த்தமாகிறது அல்லவா? 
  • அப்படியானால் இது என்ன?
இங்கு மேற்கொள்ளமாட்டாது என்று கொடுக்கப்பட்டதன் அர்த்தம் என்ன?
  • English - shall have dominion over
  • Greek - kyrieuo
  • கிரேக்க வார்த்தையின் அர்த்தம் - to rule , have power over.

"பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என்பதன் அர்த்தம் என்ன?

  • பாவம் நம்மை தாக்குவதற்கும்,ஆளுகை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. 
  • பாவத்தினால் நம்மை முற்றிலும் ஆட்கொள்ள முடியாது என்பதை தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது. 
  • நமது ஆவி மட்டுமே மறுபடியும் பிறந்திருப்பதினால், சரீர இச்சைகள், நமது பழைய சிந்தனைகள், பழைய வாழ்க்கை, உலக சவகாசம் இதன் மூலம் இச்சைகள், பாவங்கள் நமக்குள் வரும். 
  • அதை எதிர்த்து நிற்கக் கூடிய கிருபையை கர்த்தர் நமக்கு மறுபிறப்பின் மூலம் தந்து இருக்கிறார். 
  • கிருபை நமக்கு என்ன போதிக்கிறதோ, அதன்படி நாம் வாழ்ந்தால், நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டு இருப்போம். 
கிருபை நமக்கு எதை போதிக்கிறது?

ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
 -தீத்து 2 : 11
நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
 -தீத்து 2 : 12
நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
 -தீத்து 2 : 13

நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டு இருந்தால், நமக்குள் இருக்கிற ஆவி நம்மை பாவத்தை வெறுக்கச் செய்யும். 

“மீண்டும் பிறப்பது” என்பதன் அர்த்தம் என்ன?
  • உண்மையில், "மீண்டும் பிறந்து" என்ற சொற்றொடர் "மேலிருந்து பிறந்தது" என்று பொருள்படும். 
  • உங்கள் தாய் உங்களுக்கு சரீரப் பிறப்பைக் கொடுத்தது போல், 
  • நீங்கள் நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், உங்களுக்கு ஆவிக்குரிய பிறப்பைத் தர பரிசுத்த ஆவியானவர் தேவை. 
  • நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் இருந்தீர்கள்.
  • கிறிஸ்துவின் மூலம் ஆவிக்குரிய ரீதியில் உயிருடன் மீண்டும் பிறக்கிறீர்கள்.
நாம் மறுபடியும் பிறந்து இருந்தும் ஏன் பாவம் செய்கிறோம்?

  • நாம் உண்மையிலேயே நம் ஆவியில் புதியவர்களாக ஆக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து விழுந்து போன உலகில் வாழ்கிறோம். 
  • மேலும் பாவத்தை நோக்கிய மனநிலைமையையும் கொண்டிருக்கிறோம். 
  • நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இரட்சிப்பில் தொடங்கிய நமது மீட்பு, இயேசு திரும்பி வந்து இந்த பாவ சரீரங்களை தம்முடையது போல் மகிமையுள்ளதாக மாற்றும் வரை முழுமையடையாது.
  • மீட்பு முழுமையடையும் நாள் நாம் இயேசுவுடைய இரகசிய வருகையின் நாள். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4