இயேசு சிலுவையில் ஏன் காடியை ஏற்றுக்கொண்டார் (யோவான் 19:30)
இயேசு சிலுவையில் முதன்முறை கசப்பு கலந்த காடியை குடிக்க மனதில்லாதிருந்தார் (மத்தேயு 27:34), ஆனால் அவர் அந்த காடியை இரண்டாவது முறை குடித்தார்.(யோவான் 19:30). ஏன்?
- இங்கு குறிப்பிடப்படும் காடி என்பது கிரேக்க மொழியில் Oxos என்று அழைக்கப்படும்.
- அதன் அர்த்தம் என்னவென்றால், அது ஒரு மருந்து.
- ரோமானியர்கள், உடலில் உறைந்த இரத்தத்தை வெளியே கொண்டு வருவதற்காகவும், காயத்தின் வலி குறைவதற்காகவும் இந்த மருந்தை பயன்படுத்தினார்கள்.
- சிலுவையில் மரிப்பவர்களின் உடலில் இருந்து வருகிற ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பார்த்து அந்த ரோமர்கள் ரசித்து சந்தோஷப்படுவார்கள்.
- எனவே தான் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த இயேசுவுக்கும் இதைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
- முதன்முறை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
- ஏனென்றால் அந்த வலியை அவர் குறைக்க விரும்பவில்லை.
- அந்த வலியை முற்றிலும் அவர் சரீரம் சுமந்தால் தான் நம்முடைய பாவம் தீரும்.
- இரண்டாவது முறை ஏன் அந்த காடியை ஏற்றுக்கொண்டார் என்றால்
- அவர் சிலுவையில் இருந்தபோது, அவருடைய இரத்தத்தில் கொஞ்சம் அவருடைய விலாவில் உறைந்திருந்தது.
- எனவே அவர் அந்த காடியை இரண்டாவது முறை எடுத்த பின்னர் தன் ஆவியை விட்டார்.
- பின்னர், போர்ச்சேவகர் ஒரு ஈட்டியால் அவரது விலாவை குத்தியபோது, இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவான் 19:34).
- கடைசியில் கொஞ்சம் இரத்தம் அவர் உடலில் உறைந்திருப்பதை அவர் அறிந்ததினால் அந்த காடியை எடுத்தார்.
- அதைத் தன் உடலில் இருந்து அகற்ற, இயேசு காடியை குடித்தார்.
- இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் இதுதான்.
Comments
Post a Comment