இயேசு சிலுவையில் ஏன் காடியை ஏற்றுக்கொண்டார் (யோவான் 19:30)

இயேசு சிலுவையில் முதன்முறை கசப்பு கலந்த காடியை குடிக்க மனதில்லாதிருந்தார் (மத்தேயு 27:34), ஆனால் அவர் அந்த காடியை இரண்டாவது முறை குடித்தார்.(யோவான் 19:30). ஏன்? 

  • இங்கு குறிப்பிடப்படும் காடி என்பது கிரேக்க மொழியில் Oxos என்று அழைக்கப்படும். 
  • அதன் அர்த்தம் என்னவென்றால், அது ஒரு மருந்து.
  • ரோமானியர்கள், உடலில் உறைந்த இரத்தத்தை வெளியே கொண்டு வருவதற்காகவும், காயத்தின் வலி குறைவதற்காகவும் இந்த மருந்தை பயன்படுத்தினார்கள்.
  • சிலுவையில் மரிப்பவர்களின் உடலில் இருந்து வருகிற ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பார்த்து அந்த ரோமர்கள் ரசித்து சந்தோஷப்படுவார்கள். 
  • எனவே தான் சிலுவையில் தொங்கி கொண்டிருந்த இயேசுவுக்கும் இதைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
  • முதன்முறை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • ஏனென்றால் அந்த வலியை அவர் குறைக்க விரும்பவில்லை. 
  • அந்த வலியை முற்றிலும் அவர் சரீரம் சுமந்தால் தான் நம்முடைய பாவம் தீரும்.
  • இரண்டாவது முறை ஏன் அந்த காடியை ஏற்றுக்கொண்டார் என்றால்
  • அவர் சிலுவையில் இருந்தபோது, அவருடைய இரத்தத்தில் கொஞ்சம் அவருடைய விலாவில் உறைந்திருந்தது. 
  • எனவே அவர் அந்த காடியை இரண்டாவது முறை எடுத்த பின்னர் தன் ஆவியை விட்டார். 
  • பின்னர், போர்ச்சேவகர் ஒரு ஈட்டியால் அவரது விலாவை குத்தியபோது, இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவான் 19:34). 
  • கடைசியில் கொஞ்சம் இரத்தம் அவர் உடலில் உறைந்திருப்பதை அவர் அறிந்ததினால் அந்த காடியை எடுத்தார். 
  • அதைத் தன் உடலில் இருந்து அகற்ற, இயேசு காடியை குடித்தார். 
  • இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் இதுதான்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4