சவுல் மற்றும் பவுல்
சவுல் மற்றும் பவுல்
பழைய ஏற்பாட்டு சவுல் | புதிய ஏற்பாட்டு சவுல் (பவுல்) |
கேட்டு, பிராத்தனை செய்து பிறந்தபிள்ளை என்று அர்த்தம் | சின்னது, சிறியவன், ஆக சிறியது என்று அர்த்தம். |
பென்யமீன் கோத்திரத்தான், உயரமானவன், படித்தவர். -1 சாமு 9 : 1-2 | எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல்வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்தஎபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படிபரிசேயன்;பக்திவைராக்கியத்தின்படி சபையைத்துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படிகுற்றஞ்சாட்டப்படாதவன். -பிலி 3 : 5-6 |
சரீரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. | சரீர பலவீனம் இருந்தது - கலா 4:13 |
தேவனுக்கு பிரியமான ஒரு ஆளாகஇருந்தான். முழு தேசத்தையும் ஆளுவதற்கு இவரை ராஜாவாக தெரிவுசெய்தது தேவன் - 1 சாமு 9:16 | தேவனுக்கு எதிரி. தேவனுடைய சபையை துன்பப்படுத்தின ஒரு ஆள் - அப் 9:1 |
சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, அவர் அவனுக்கு மறுஉத்தரவுஅருளவில்லை - 1 சாமு 28:6 | பவுலோடு கடைசிவரை கர்த்தர் இருந்தார். |
ஆரம்பத்தில் சவுலோடு இருந்த ஆண்டவர் முடிவில் அவரோடு இருக்கவில்லை. | ஆரம்பத்தில் பவுலோடு இல்லாத ஆண்டவர், முடிவில் அவரோடு இருந்தார். |
ஆரம்பத்தில் ஆண்டவர் ஏன் சவுலோடு இருந்தார்? தன் பார்வைக்கு சிறியவனாக, மனத்தாழ்மையாக இருந்தார்- 1 சாமு 15:17 | ஆரம்பத்தில் ஆண்டவர் ஏன் பவுலோடு இருக்கவில்லை? அவன் மனமேட்டிமையாய் சபையை துன்பப்படுத்தினான். தன்னை பெருமையாக பேசிக் கொண்டான் - பிலி 3:5-6 |
இறுதியில் ஆண்டவர் ஏன் சவுலோடு இருக்கவில்லை? மனமேட்டிமைஅடைந்து லேவியர்கள் செய்யவேண்டியசர்வாங்க தகனபலியை தானேசெலுத்துகிறார் - 1 சாமு 13:9,14; கீழ்ப்படியாமை - 1 சாமு 15:22 | இறுதியில் ஆண்டவர் ஏன் பவுலோடு இருந்தார்? ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். -பிலி 3 : 7 தன் பெயரையே பவுல் (சிறியவன்) எனமாற்றிக்கொண்டார் - அப் 13:9 |
சவுல் சூனியக்காரிகளை தேசத்தைவிட்டு துரத்தினவர். இப்போது சாகும்முன்பு, சூனியக்காரிக்கிட்ட போகிறார். | பவுல், நல்ல போராட்டம் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்று சொல்கிறார் - 2 தீமோ 4:7 |
தொடங்குகிற விதம் முக்கியமில்லை | முடிக்கிற விதம் தான் முக்கியம். |
ராஜ்யபாரம் அவனைவிட்டு போனது. அந்த ராஜ கிரீடத்தை அவனிடமிருந்து வாங்கி தாவீதிடம் கொடுக்கிறார்- 1 நாளா 10:13-14 | நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது - 2 தீமோ 4:8 |
வாழும் போது கிரீடம் தேவையில்லை | சாகும் போது ராஜாவாக சாக வேண்டும். |
Comments
Post a Comment