Posts

Showing posts from January, 2023

பிரசங்கி 9:11 உள்ள சமயமும் என்ற வார்த்தையின் விளக்கம்

பிரசங்கி 9:11 விளக்கம் நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும்  சமயமும் தேவச்செயலும்  நேரிடவேண்டும்.  - பிரசங்கி 9 : 11 சமயமும் time - English Eth - Hebrew Kairos - Greek சமயம் - தமிழ் “  eth ”, which means “the right time” சரியான நேரம் அதினதின் காலத்தில் ஒவ்வொன்றும் நேர்த்தியாக நடக்கும். 

காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில்

காத்திருக்கிறேன் கர்த்தரின் கரங்களில் நான் : எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? கர்த்தர் : பொறுமையாக காத்திரு. நான் : எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் அப்பா. கர்த்தர் : பதில் இல்லை…… நான் : எனக்கு பதில் சொல்லுங்களேன் அப்பா… கர்த்தர் : மறுபடியும் பதில் இல்லை…… நான் : உங்கள் வார்த்தைக்கு  கீழ்ப்படிய மனதாயிருக்கிறேன் ஆனால் மாம்சத்தின் ஏக்கம் என்னை அலைகழிக்கிறதே!😭😭😭 கர்த்தர் : கர்த்தரைத் தேடு மற்றதை மறந்து விடுவாய் நான் : சரிங்க அப்பா. தேடுகிறேன் (ஜெபித்தேன் 3 வேளையும், வேதம் வாசித்தேன் 2 வேளை) கர்த்தர் : 🥰 நான் : சில நேரங்களில் ஜெபிக்க முடியவில்லை, வேதம் வாசிக்க முடியவில்லை. உலக வேலைகள் என்னை இழுக்கிறதே! கர்த்தர் : அது பரவாயில்லை. இன்று மறுபடியும் என்னைத் தேடு நான் : சரிங்க அப்பா. தேடுகிறேன் (இது போல பலமுறை நடந்தது) நான் : அப்பா, திருமண எதிர்ப்பார்ப்புகள் என்னை பாடாய் படுத்துகிறதே! கர்த்தர் : இணையதளத்தில் எதையும் பார்க்காதே அது உன் ஆசையை தூண்டும் நான் : என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லையே (இன்றுவரை)  கர்த்தர் : ஜெபித்துக் கொண்டே இரு. ஒரு நாள் அனைத்தும் மாறும். நான் : ...

கொடுக்காமல் போவது எப்படி?

கொடுக்காமல் போவது எப்படி? எனக்கு  பணத்திற்கு குறைவில்லை ஆகாரத்திற்கு குறைவில்லை உடைகளுக்கு குறைவில்லை சுகத்திற்கு குறைவில்லை அன்பிற்கு குறைவில்லை ஒரு  குறையும் இல்லை இந்த ஒன்றை தவிர (திருமணம்) அனைத்தையும் நான் கேட்காமலே எனக்கு நிறைவாக கொடுத்த தேவன் நான் வாய்விட்டு கேட்டப் பிறகும் இந்த ஒரு காரியத்தை எனக்கு கொடுக்காமல் போவது எப்படி? என்னை நேசிக்கிற தேவன், நான் ஏங்கினதை எனக்கு கொடுக்காமல் போவது எப்படி? என் கண்ணீரைக் கண்ட தேவன் அதற்கு பதில்  கொடுக்காமல் போவது எப்படி? என் முழு மனதையும் அறிந்த தகப்பன்  தன் மகளுக்கு பிடித்ததை  கொடுக்காமல் போவது எப்படி? அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?  - லூக்கா 18 : 7

கல்யாணம்

கல்யாணம் எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? யாரோடு நடக்கும்? இப்படி ஓராயிரம் கேள்விகள் என் மனதில் விடை தெரியாமல் தவிக்கிறேன்.  இன்று, நேற்று அல்ல நான் இரட்சிக்கப்பட்ட  நாள் முதற்கொண்டு ஒரு வாழ்க்கைக்காக ஏங்குகிறேன் ஆனால் கர்த்தரோ  ஏனோ காத்திரு, காத்திரு என்றே பதில் உரைக்கிறார் காத்திருக்கவும் முடியாமல் ஆசைகளை அடக்கவும் முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் கேள்விகளுக்கு பதிலும் தெரியாமல் இன்னும் கல்யாணம் ஆகலயா என்று ஒருவர் வினவும் போது என் மனசு தவிக்கிற தவிப்பையும் என் மனசு சுக்குநூறாக உடைந்து தவிக்கிறதையும் என் தேவன் தவிர ஒருவரும் அறியார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.  - யோபு 23 : 10

பரிசுத்த ஆவியின் வரம்

பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஜெபிப்பவர்களுக்கு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.  - எபிரேயர் 2 : 4 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.  - 1 கொரி 12 : 7 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.  - 1 கொரி 12 : 11 பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஒரு ஆவியின் வரம். ‘எனக்கு அந்த வரத்தை தாரும்’ என்று ஜெபிப்பதினால் நாம் அதைப் பெற்றுக் கொள்ள போவதில்லை. ‘வரம்’ என்பது தேவ விருப்பம். அதை யாருக்கு எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருக்கிறாரோ அப்போது அவர்களுக்கு கொடுக்கப்படும். தேவனுக்கு சித்தம் இருந்தால், அவர் அதை நமக்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, ஆவியின் வரங்களுக...

ஜெபம்- அப்பாவிடம் மகன்/மகள் பேசுதல்

ஜெபம்- அப்பாவிடம் மகன்/மகள் பேசுதல் சில நாட்களாக எப்படி ஜெபிக்க வேண்டும் என்று பல காணொலிகளை இணையதளத்தில் கண்டு, வியப்படைந்தேன்!!! ஒரு குழந்தைக்கு  தன் தகப்பனிடம் இப்படி தான் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஒருவர் வேண்டுமோ!!! எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.  - எபேசியர் 6 : 18

சங்கீதம் 118:8 சுவாரஸ்யமான உண்மை

சங்கீதம் 118:8  சுவாரஸ்யமான உண்மை சங்கீதம் 118ஐ நாம் படிக்கும்போது, ​​அது பைபிளில் உள்ள மிகக் குறுகிய சங்கீதத்திற்கும் (சங். 117) மிக நீளமான சங்கீதத்திற்கும் (சங். 119) இடையில் இணைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கிறோம். இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பைபிளின் முதல் அத்தியாயமான ஆதியாகமம் 1 முதல் சங்கீதம் 117 வரை 594 அத்தியாயங்களும்,  பைபிளின் கடைசி அத்தியாயமான சங்கீதம் 119 முதல் வெளிப்படுத்துதல் 22 வரை 594 அத்தியாயங்களும் உள்ளன.  எண்களைக் கூட்டினால், அது நமக்கு 1188ஐக் கொடுக்கிறது.  மேலும் சங்கீதம் 118:8-ல் அது கூறுகிறது: " மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” இந்த விவரங்கள் அனைத்தும் கர்த்தருடைய வார்த்தையில் உள்ள இந்த மையக் கருப்பொருளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

தரிசனம்

தரிசனம் என் நேசரை! தரிசிக்க ஜெபிக்கிறேன் ஆனால் முடியவில்லை  ஆனால் மணவாளன் (இயேசு) மணவாட்டியை(நான் - சபை)  காணாமல் போவது தான் எப்படி? கண்டேத் தீருவேன் என் மணவாளனை! அது வரை விசுவாசத்தினால் தரிசிப்பேன் அதரிசனமானவரை!!! விசுவாசத்தினாலே அவன்(மோசே) அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.  - எபிரேயர் 11 : 27

God’s heart of mercy revealed in Methuselah’s name

God’s heart of mercy revealed in Methuselah’s name Methuselah was the longest living man who died at 969 years of age. But why did God prolong his life? In Hebrew, his name means “his death shall bring.” The times before the flood were filled with wickedness. God was so grieved that he prophesied judgment over mankind after Methuselah’s death. Even though God had to send judgment, His heart was not for men to perish and He prolonged Methuselah’s life. because they formerly did not obey, when God’s patience waited in the days of Noah, while the ark was being prepared, in which a few, that is, eight persons, were brought safely through water. -1 Peter 3:20 கர்த்தரின் கிருபையின் இதயம் மெத்தூசலாவின் பெயரில் வெளிப்பட்டது 969 வயதில் இறந்த மெத்தூசெலா மிக நீண்ட காலம் வாழ்ந்தவர். ஆனால் கர்த்தர் ஏன் அவருடைய ஆயுளை நீட்டித்தார்? எபிரேய மொழியில், அவருடைய பெயர் "அவருடைய மரணம் கொண்டுவரும்" என்று பொருள்படும். வெள்ளத்திற்கு முந்தைய காலங்கள் அக்கிரமத்தால் நிறைந்திருந்தன. கர்த்தர் மிகவும் துக...

யாருமில்லை என்று கலங்குகிறாயோ!

யாருமில்லை என்று கலங்குகிறாயோ! அ ன்பில்லாத வாழ்வில்  அ ரவணைக்க யாருமில்லை என்று கலங்குகிறாயோ! க லங்கி தவிக்கும் போது கா ப்பாற்ற யாருமில்லை என்று கலங்குகிறாயோ! ச ங்கடத்தில் இருக்கும் பொழுது ச ந்தோஷத்தை கொடுக்க யாருமில்லை என்று கலங்குகிறாயோ! ப ணம் நிறைந்த வாழ்வில் பா சம் காட்ட யாருமில்லை என்று கலங்குகிறாயோ! மா யையான உலகில் ம ன்னிக்க யாருமில்லை என்று கலங்குகிறாயோ! த த்தளிக்கும் போது தா ய் பாசம் காட்ட யாருமில்லை என்று கலங்குகிறாயோ! ந ன்றியற்ற உலகில் நே சிக்க யாருமில்லை என்று கலங்குகிறாயோ! வ லி நிறைந்த வாழ்வில் வ ழி காண்பிக்க யாருமில்லை என்று கலங்குகிறாயோ! நீ அ ழைக்க விருப்பப்பட்டால் நீ அ ழைத்தால் இ ரட்சகராகிய இ யேசு இ ரக்கம் காட்டி அ ன்பு காட்டி ஆ றுதல் சொல்லி உன்னை அ ரவணக்க உன் அ ருகி்ல் இருப்பார் என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.    - சங்கீதம் 42 : 11

ஆவி, ஆத்துமா, சரீரம் - Justin Prabhakaran Sermon

ஆவி, ஆத்துமா, சரீரம் - Justin Prabhakaran Sermon சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.  - 1 தெசலோனிக்கேயர் 5 : 23 மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்ற இம்மூன்றும் உள்ளவனாயிருக்கிறான்.  மனிதன் முப்பரிமானவன் (Man is a 3 dimensional being). சரீரம் என்ற ஒன்று நமக்கு இருக்கிறது. அதில் எந்த சந்தேகமுமில்லை.  தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.  - எபிரேயர் 4 : 12  ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக  ஆத்துமாவையும், ஆவியையும் பிரிக்க முடியும் என்று அறியலாம்.  இவை இரண்டும் வெவ்வேறானவை. பிரித்து அறியப்படக்கூடியவை.  ஆத்துமாவையும், ஆவியையும் எதைக் கொண்டு பிரிக்க ம...

Love

                    What is Love?   is it the one comes in adult age?  Is getting married love?  Is lust love?  Is kissing love?  Just talking on the phone for hours is love? Is Incessant messages love?  Is being next to each other love? Is hang out together love? Is buying and giving gifts love?  Is falling with someone's physical beauty love? Is admiring one’s speech love? Saying “I love you” is love? Then What is love?? ? Seriously I don't know  But one thing I know is  It’s a feeling beyond everything. No one can give written explanation for it!

திருமண வாழ்க்கை

         திருமண   வாழ்க்கை   வி ட்டுக் கொடுக்காத   திருமண   வாழ்க்கையும்   உண்டு . வி ட்டுப்   போகிற   திருமண   வாழ்க்கையும்   உண்டு . ப ணத்தை   மட்டுமே   மையமாக   கொண்ட   திருமண   வாழ்க்கையும்   உண்டு . பா டுகள்   பட்டாலும்   அன்போடு   வாழ்கின்ற   திருமண   வாழ்க்கையும்   உண்டு . பண   கஷ்ட த்தோடு   வாழ்கின்ற   திருமண   வாழ்க்கையும்   உண்டு . மன   இஷ்ட த்தோடு   வாழ்கின்ற   திருமண   வாழ்க்கையும்   உண்டு . பொ றுமையோடு வாழ்கின்ற  திருமண   வாழ்க்கையும்   உண்டு . பெ ருமையோடு வாழ்கின்ற  திருமண   வாழ்க்கையும்   உண்டு . க ள்ளம்   நிறைந்த   திருமண   வாழ்க்கையும்   உண்டு . கா தல்   நிறைந்த   திருமண   வாழ்க்கையும்   உண்டு . ஊ ருக்காக   சேர்ந்து   வாழ்கின்ற   திருமண   வாழ்க்கையும்   உண்டு . உ யிராக   நினைத்து   வாழ்கின்...