பரிசுத்த ஆவியின் வரம்
பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஜெபிப்பவர்களுக்கு
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
-எபிரேயர் 2 : 4
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
-1 கொரி 12 : 7
இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
-1 கொரி 12 : 11
- பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஒரு ஆவியின் வரம்.
- ‘எனக்கு அந்த வரத்தை தாரும்’ என்று ஜெபிப்பதினால் நாம் அதைப் பெற்றுக் கொள்ள போவதில்லை.
- ‘வரம்’ என்பது தேவ விருப்பம்.
- அதை யாருக்கு எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருக்கிறாரோ அப்போது அவர்களுக்கு கொடுக்கப்படும்.
- தேவனுக்கு சித்தம் இருந்தால், அவர் அதை நமக்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
- எனவே, ஆவியின் வரங்களுக்காக ஜெபிக்க வேண்டாம் என்பது எனக்கு தேவன் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்த பாடம்.
Comments
Post a Comment