Posts

Showing posts from June, 2024

ஈஸ்டர்

ஈஸ்டர்  “ஈஸ்டர்” என்ற சொல் “ Ishtar” என்ற பாபிலோனிய சொல்லில் இருந்து வந்தது. Ishtar என்பது பாபிலோனியர்கள் வணங்கிய பெண் தெய்வம். பாபிலோனில் Ishtar தூண்கள், வாசல்கள் இருக்கின்றன. தமிழ் வேதாகமத்தில் விக்கிரக தோப்பு என்று நீங்கள் வாசித்தால் அது Ishtar என்ற ஒரு தேவதைக்கு உண்டாக்கப்பட்ட தோப்பு. சபை சரித்திர காலத்திலே உயிர்த்தெழுந்த ஞாயிற்றுகிழமையை பிசாசு ஏமாற்றி Ishtarன் நாளாக பிரகடணம் செய்தது  எனவே இனி “Happy Easter” என்று சொல்லாமல் “  Happy Resurrection today”  உயிர்த்தெழுந்த ஞாயிறு வாழ்த்துக்கள் என்று சொல்லுவோம். 

சீயோனில் தாவீதின் கூடாரம் எத்தனை ஆண்டுகள் இருந்தது?

சீயோனில் தாவீதின் கூடாரம் எத்தனை ஆண்டுகள் இருந்தது 1 இராஜாக்கள் 6: 1 இன் படி, சாலொமோன் ராஜாவான 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார்.  7 ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்தது.  தாவீது ராஜா ராஜாவான பிறகு 8 வது ஆண்டில் தனது கூடாரத்தை நிறுவினார்.  அவர் எருசலேமில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்தார். எனவே அவர் காலத்தில் 33 வருடங்களும், சாலொமோனின் காலத்தில் 11 வருடங்களும் கூடாரம் இருந்தது.  சீயோனில் மொத்தம் 44 ஆண்டுகள் தாவீதின் கூடாரம் இருந்தது. 

திருவிருந்து

  திருவிருந்து என்றால் என்ன? அப்பம் திராட்சைரசம் சரீரம் இரத்தம் பாவத்தை   சுமந்து   தீர்த்த   சரீரம் பரிசுத்த   இரத்தம் ருசி   இல்லை அதீத   ருசி கவலை சந்தோஷம் கல்வாரி வெறுமையாக்கப்பட்ட   கல்லறை மரணம் உயிர்த்தெழுதல் கசப்பு ,  சாட்டை   அடிகள் வெற்றிக்களிப்பு ,  நித்தியஜீவன்

அப்போஸ்தலர்களின் பெயர் அர்த்தங்கள்; 12 Apostles name meanings

அப்போஸ்தலர்களின் பெயர் அர்த்தங்கள் அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,  -மத்தேயு 10 : 2 பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,  -மத்தேயு 10 : 3 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.  -மத்தேயு 10 : 4 1) பேதுரு - கூழாங்கல்; சீமோன் - கேள், செவிக்கொடு 2)  அந்திரேயா - ஆண்மை உள்ளவர் 3) செபெதயு - என்னுடைய பரிசு;  யாக்கோபு - காலை வாருபவன் 4)  யோவான் - தேவன் கிருபையுள்ளவர் 5) பிலிப்பு - குதிரைப்பிரியர் 6) பர்தொலொமேயு - தொலொமேயுவின் மகன் 7)  தோமா - இரட்டை 8) மத்தேயு - கர்த்தரின் பரிசு 9) அல்பேயு - மாறக்கூடிய;  யாக்கோபு - காலை வாருபவன் 10) லெபேயு - இதயம் கொண்ட மனிதன்;  லெபேயு - பெரிய மனசு கொண்ட 11)  சீமோன் - கேள், செவிக்கொடு 12) யூதாஸ்காரியோத்து:  யூதாஸ் - அவன் புகழப்படுவான்; ஸ்காரியோத்து - கீரியாத்தின் மகன் In Engl...

12 வாசல்கள்

70 வருட சிறையிருப்புக்கு பிறகு எருசலேமில் மறுகட்டமைக்கப்பட்ட 12 வாசல்கள் ஆட்டு வாசல் - நெகேமியா 3:1 மீன் வாசல் - நெகேமியா 3:3 பழைய வாசல் - நெகேமியா 3:6 பள்ளத்தாக்கின் வாசல் - நெகேமியா 3:13 குப்பைமேட்டு வாசல் - நெகேமியா 3:14 ஊருணி வாசல் - நெகேமியா 3:15 தண்ணீர் வாசல் - நெகேமியா 3:26 குதிரை வாசல் - நெகேமியா 3:28 கிழக்கு வாசல் - நெமேகியா 3:29 மிப்காத் என்னும் வாசல் -நெகேமியா 3:31 எப்பிராயீம் வாசல் -நெகேமியா 8:16 காவல்வீட்டு வாசல் -நெகேமியா 12:39

தாலந்து

தாலந்து    Hebrew :  Talentheme ( பணம்-பொருளாதார) 3000 வெள்ளி நாணயங்கள் 1 வெள்ளி நாணயம் - 2 Dinarius 1 Dinarius - அதிகபட்ச ஒரு நாள் ஊதியம் 1 வெள்ளி காசு - 2 நாட்களுக்கான அதிகப்படியான ஊதியம்.  3000 வெள்ளிக்காசு - 16 1/2 வருட சம்பளம்.  20 வருடங்கள் - நடுத்தர சம்பளம் 32 கிலோ - 3000 வெள்ளி காசு எவ்வளவு பாரம் தேவனுடைய ஆக குறைவு (1 தாலந்து)  என்பதே அதுவே நம்மால் தாங்க முடியாத அளவு.

Lazarus

Lazarus He is the brother of Mary and Martha. Lazarus is a Greek name which means “God has helped. His real name is Eleazar, which is a Hebrew name means “God helped”. His name was changed after Jesus resurrected him from dead.

மத்தேயு 23:24 விளக்கம்

மத்தேயு 23:24 விளக்கம் குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.  -மத்தேயு 23 : 24 Matthew 23:24 Ye blind guides, which strain at a gnat, and swallow a camel. English : Gnat or gnat-worm  Hebrew : kane or Ken  Greek : Konopes Meaning : a wine gnat or midge that is bred in fermenting and evaporating wine.  அர்த்தம் : திராட்சரசத்தை புளிக்க வைக்கும் போது அதில் வரக்கூடிய ஒரு பூச்சி. பரிசேயர்கள் “ Gnat” என்று சொல்லப்படும் “கொசுவை ஒத்த சிறிய பூச்சி” ஒன்று கூட தாங்கள் குடிக்கும் திராட்சைரசத்தில் விழுந்துவிடாதபடி பார்த்து பார்த்து ஜாக்கிரதையாக வடிக்கட்டி குடிப்பார்களாம்.   நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்ணக்கூடாது என்று விலக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச்சிறியது இந்த பூச்சி தானாம்.( லேவி 11:20 ) யாத் 8:16 ல் பேன்கள் என்று குறிப்பிடப்படுவது இந்த Gnats தான். நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்ணக்கூடாது என்று விலக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகப்பெரியது ஒட்டகமாம். ( லேவி 11:4 ) எனவே தான் இயேசுவானவர் “கொச...

யாத்திராகமம் 32:20 விளக்கம்

யாத்திராகமம் 32:20 விளக்கம் யாத் 32 ம் அதிகாரத்தில் எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் பொன் கன்றுக்குட்டி செய்து வணங்கியதை வாசிக்கிறோம். அவர்களுக்கு மோசே கொடுத்த தண்டனை: அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.  -யாத்திராகமம் 32 : 20 ஏன் மோசே அப்படிப்பட்ட தண்டனையை கொடுத்தார்,  அதன் அர்த்தம் என்ன?   புருஷனுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் உறவு கொண்ட ஒரு பெண்ணை  அவளது நம்பிக்கை துரோகத்தை உணர்த்தும் விதமாக ஒரு மண்பாண்டத்தில் பரிசுத்த நீரை ஊற்றி அதில் தரையிலிருக்கும் புழுதியை கொஞ்சம் எடுத்து அந்த தண்ணீரில் கலந்து அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுப்பார்கள்.  இது  எண் 5:11-27 ல் கொடுக்கப்பட்டு உள்ளது.  ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்தில் போட்டு,  -எண்ணாகமம் 5 : 17 அவள் தவறு செய்திருந்தால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜனங்களுக்குள் அடையாளமாக இருப்பாள்....

லூக்கா 9:23 விளக்கம்

லூக்கா 9:23 விளக்கம் பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.  -லூக்கா 9 : 23 ஒருவன் இயேசுவின் சீஷராக இருக்க விரும்பினால், அவன் "இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடப்பது" மிக அவசியமான ஒன்று என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.  “இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடப்பது” என்றால், ஏதோ ஒரு நாள் மாத்திரமல்ல, அநுதினமும் நடக்க வேண்டிய ஒன்று. எப்படி பாவம் பூமிக்கு வந்தது: ஆதாமும், ஏவாளும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததை "வீழ்ச்சி(Fall)" என்று சொல்லுவார்கள். அவர்கள் பாவம் செய்த அந்த நேரத்தில் இருந்து, மாம்சத்தின்படி வாழ ஆரம்பித்தார்கள். அது கர்த்தருக்கு எதிரான ஒன்று.  அவர்கள் மூலம் அனைத்து மக்களும் மாம்சத்தின்படி வாழும் குணத்தைப் பெற்றிருக்கிறோம். இது நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை பாதித்து இருக்கிறது.  இரட்சிப்பு: நாம் கர்த்தரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, பாவத்தைச் சேவிப்பதையும், நம் சொந்த விருப்பத்தைச் செய்வ...

இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி?

இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி? இயேசு வெள்ளிக்கிழமை மரித்து, ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்றால் அது எப்படி 3 நாளாகும். இயேசு பஸ்கா ஆடாக மரித்தார்.  பஸ்கா ஆடு எத்தனை மணிக்கு கொல்லப்படும். வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தான் பஸ்கா ஆடு கொல்லப்படும்.  அதே நேரத்தில் இயேசு பஸ்கா ஆடாக மரித்தார். யூதர்கள் முறைமைப்படி: யூதர்கள் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போனால் அதை Yom va Laila என்று எபிரேய மொழியில் சொல்லுவார்கள்  Yom - பகல் Va - உம் Laila - இரவு அதாவது ஒரு பகலும், ஒரு இரவும் என்று சொல்லுவார்கள்.  யூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு. 3-6 ஒரு பகல் ஒரு இரவு யூதர்களுக்கு ஒரு நாள் என்பது எப்போது தொடங்கும்? யூதர்களுக்கு ஒரு நாள் பிறப்பது மாலை 6 மணிக்கு யூதர்களுடைய ஓய்வு நாள் எப்போது தொடங்கும்? யூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு. இயேசு 3 நாள் இரவும் பகலும் மரித்திருந்தார் என்பது எப்படி? வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து அதே நாள் மாலை 6 மணி வரைக்கும் - ஒரு நாள். அதே வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து சனி...