யாத்திராகமம் 32:20 விளக்கம்
யாத்திராகமம் 32:20 விளக்கம்
- யாத் 32 ம் அதிகாரத்தில் எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் பொன் கன்றுக்குட்டி செய்து வணங்கியதை வாசிக்கிறோம்.
அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
-யாத்திராகமம் 32 : 20
ஏன் மோசே அப்படிப்பட்ட தண்டனையை கொடுத்தார், அதன் அர்த்தம் என்ன?
- புருஷனுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் உறவு கொண்ட ஒரு பெண்ணை
- அவளது நம்பிக்கை துரோகத்தை உணர்த்தும் விதமாக ஒரு மண்பாண்டத்தில் பரிசுத்த நீரை ஊற்றி அதில் தரையிலிருக்கும் புழுதியை கொஞ்சம் எடுத்து அந்த தண்ணீரில் கலந்து அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுப்பார்கள்.
- இது எண் 5:11-27 ல் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்தில் போட்டு,
-எண்ணாகமம் 5 : 17
- அவள் தவறு செய்திருந்தால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜனங்களுக்குள் அடையாளமாக இருப்பாள்.
- ஆண்டவர், இஸ்ரவேலர் பிதாவாகிய தேவனை விட்டு விலகி அந்நிய தேவர்களை பின்பற்றிய போதெல்லாம் புருஷனுக்கு துரோகம் செய்த ஸ்திரீயையே அவர்களுக்கு ஒப்பிட்டு சொல்லுவதை பழைய ஏற்பாடு முழுவதும் வாசிக்கலாம் (குறிப்பாக ஓசியா புத்தகத்தில்).
Comments
Post a Comment