யாத்திராகமம் 32:20 விளக்கம்

யாத்திராகமம் 32:20 விளக்கம்

  • யாத் 32 ம் அதிகாரத்தில் எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் பொன் கன்றுக்குட்டி செய்து வணங்கியதை வாசிக்கிறோம்.
அவர்களுக்கு மோசே கொடுத்த தண்டனை:

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
 -யாத்திராகமம் 32 : 20

ஏன் மோசே அப்படிப்பட்ட தண்டனையை கொடுத்தார், அதன் அர்த்தம் என்ன? 
  • புருஷனுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் உறவு கொண்ட ஒரு பெண்ணை 
  • அவளது நம்பிக்கை துரோகத்தை உணர்த்தும் விதமாக ஒரு மண்பாண்டத்தில் பரிசுத்த நீரை ஊற்றி அதில் தரையிலிருக்கும் புழுதியை கொஞ்சம் எடுத்து அந்த தண்ணீரில் கலந்து அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுப்பார்கள். 
  • இது எண் 5:11-27 ல் கொடுக்கப்பட்டு உள்ளது. 
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்தில் போட்டு,
 -எண்ணாகமம் 5 : 17
  • அவள் தவறு செய்திருந்தால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜனங்களுக்குள் அடையாளமாக இருப்பாள். 
இங்கு அதையே மோசே ஒரு அடையாளமாக செய்வதைக் காணலாம். 
  • ஆண்டவர், இஸ்ரவேலர் பிதாவாகிய தேவனை விட்டு விலகி அந்நிய தேவர்களை பின்பற்றிய போதெல்லாம் புருஷனுக்கு துரோகம் செய்த ஸ்திரீயையே அவர்களுக்கு ஒப்பிட்டு சொல்லுவதை பழைய ஏற்பாடு முழுவதும் வாசிக்கலாம் (குறிப்பாக ஓசியா புத்தகத்தில்).

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4