லூக்கா 9:23 விளக்கம்
லூக்கா 9:23 விளக்கம்
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
-லூக்கா 9 : 23
-லூக்கா 9 : 23
- ஒருவன் இயேசுவின் சீஷராக இருக்க விரும்பினால், அவன் "இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடப்பது" மிக அவசியமான ஒன்று என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
- “இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடப்பது” என்றால், ஏதோ ஒரு நாள் மாத்திரமல்ல, அநுதினமும் நடக்க வேண்டிய ஒன்று.
எப்படி பாவம் பூமிக்கு வந்தது:
- ஆதாமும், ஏவாளும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததை "வீழ்ச்சி(Fall)" என்று சொல்லுவார்கள்.
- அவர்கள் பாவம் செய்த அந்த நேரத்தில் இருந்து, மாம்சத்தின்படி வாழ ஆரம்பித்தார்கள்.
- அது கர்த்தருக்கு எதிரான ஒன்று.
- அவர்கள் மூலம் அனைத்து மக்களும் மாம்சத்தின்படி வாழும் குணத்தைப் பெற்றிருக்கிறோம்.
- இது நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை பாதித்து இருக்கிறது.
இரட்சிப்பு:
- நாம் கர்த்தரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, பாவத்தைச் சேவிப்பதையும், நம் சொந்த விருப்பத்தைச் செய்வதையும் நிறுத்தி, கர்த்தருக்குச் சேவை செய்யத் தொடங்குவோம்.
- அதன் பிறகு நாம் நம் மாம்சத்திலிருந்து வரும் இச்சைகள் மற்றும் ஆசைகளுக்கு சம்மதிக்க கூடாது என்று நினைப்போம்.
மாம்சம்-புதிதாகவில்லை:
- ஆனால் நம்முடைய மனம் புதிதாகி விட்டதால், நமது மாம்சமும் மாறிவிட்டது என்று அர்த்தமல்ல.
- நம்முடைய இச்சைகள் இன்னும் உயிருடன் இருப்பதையும், நாம் சோதிக்கப்படுகிறதையும் நம்மால் உணர முடியும்.
- இதனால்தான் நாம் “தினமும் இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடக்க” வேண்டும்.
சிலுவை மரணம்:
- இயேசுவின் காலத்தில் ஆட்சி செய்த ரோமானியர்களின் முக்கியமான தண்டனையாக சிலுவை மரணம் இடம் பெற்றது.
- சிலுவையில் அறையப்படுகின்ற யாராலும் திரும்பி உயிரோடு வர முடியாது.
- துன்பப்பட்டு கண்டிப்பாக மரித்து விடுவார்கள்.
- அதுப்போல நாமும் ஒரு “உள்ளான சிலுவை-Inner cross” மூலம் அந்த மாம்சத்தை மரணிக்க செய்ய முடியும்.
- "இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு நடப்பது" என்பது நம்முடைய மனதில் நடக்கும் ஒன்று.
- கர்த்தருக்கு பிடிக்காத எண்ணங்கள் நம்முடைய மனதில் வரும் போது, “நாம் அவைகளை செய்ய மறுத்து” அவற்றை ஒரு “உள்ளான சிலுவை-Inner cross” மூலம் அதை மரணிக்க செய்கிறோம்.
- எனவே இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொள்வது என்பது அடிப்படையில் நாம் நம் இச்சைகளுக்கும், விருப்பத்திற்கும் "முடியாது-No!" என்று சொல்லுகிறோம்.
- கர்த்தருக்கு பிரியமானதைச் செய்வதே எனது முழு விருப்பமாக இருந்தாலும், இயற்கையாகவே நாம் கர்த்தரின் விருப்பத்திற்கு எதிரான பாவங்களை செய்வது வேதனையை தான் அளிக்கிறது.
- அதற்கு தான் கர்த்தர் அவருடைய சிலுவையை நமக்கு தந்து இருக்கிறார்.
மாம்சத்திற்கு பிடிக்காது:
- "இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொள்வது" என்பது நம்முடைய மாம்சத்திற்கு வேதனையை உண்டாக்குகிறது.
- ஏனென்றால் அந்த மாம்சம் விரும்பினதை நாம் அதற்கு கொடுக்கவில்லை.
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
-1 பேதுரு 4 : 1
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
-1 பேதுரு 4 : 2
-1 பேதுரு 4 : 2
- பரிசுத்த ஆவியானவர் நமக்கு சிலுவையில் தொங்கிக்கொண்டு இருப்பதற்கான பெலனைத் தருகிறார்.
- நாம் நம்முடைய மாம்சத்தின் கோரிக்கைகளுக்கு "முடியாது-No!" என்று தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்க வேண்டும் - அந்த இச்சைகள் முற்றிலுமாக அழிந்து போகும் வரை.
- பின்னர் நாம் உண்மையிலேயே அந்த மாம்சத்தின் பாவத்திலிருந்து விடுபட்டு இருப்போம்.
- ஒரு மனிதனாக, நம்முடைய மாம்சம் சுயநலம் நிறைந்தது.
- அதனால்தான், நாம் நம் மாம்சம்தை வெறுத்து, நம் வாழ்நாள் முழுவதும் “இயேசுவின் சிலுவையை தினமும் எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும்” என்று இயேசு கூறுகிறார்.
- இந்த சிலுவையை நாம் அநுதினமும், சிறிது சிறிதாகப் பயன்படுத்துவதால், நம்மால் பாவத்தை வென்று இயேசுவைப் போல மாற முடியும்.
Comments
Post a Comment