ஆவி, ஆத்துமா, சரீரம் பைபிளின்படி “ஆவி, ஆத்துமா, சரீரம்” என்றால் என்ன? சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. -1 தெசலோனிக்கேயர் 5 : 23 இங்கு மனிதன் மூன்று பாகங்களாக குறிப்பிடப்படுகிறான்: சரீரம் (Body – Greek: sōma ) - Physiological நம்முடைய உடம்பாகிய சரீரம். சரீரம் (1) பார்ப்பது, (2) கேட்பது, (3) சுவாசிப்பது, (4) சுவைப்பது, (5) தொடுவது போன்ற 5 உணர்வுகள் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது. சரீரம் மரணத்திற்கு உட்பட்டது. சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக விளங்குகின்றது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் , நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? -1 கொரி 6 : 19 ஆத்துமா (Soul – Greek: psuchē ) - Psychological ஆத்துமா என்பது முடிவெடுக்கும் பகுதியாக அமைகின்றது. ஆத்துமாவால் நாம் யார் என்பதற்கான அடையாளம் ஏற்படுகிறது. நம்முடைய உள்ளார்ந்த மனிதனி...
Comments
Post a Comment