Posts

Showing posts from March, 2025

ஊரீம் மற்றும் தும்மீம்

Image
ஊரீம் மற்றும் தும்மீம்  இந்தப் பதிவில் ஊரீம் தும்மீம் என்றால் என்ன என்பதையும், அதை எதற்கு உபயோகப்படுத்தினார்கள் என்றும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த கற்கள் தேவையா இல்லையா என்பதையும் என்றும் பார்க்கப் போகிறோம்.  ஊரீம், தும்மீம் என்றால் என்ன? ஊரீம் என்றால் ஒளி (Light) தும்மீம் என்றால் முழுமை அல்லது பரிபூரணம் (Perfection) எதற்கு உபயோகப்படுத்தினார்கள்? ஊரீம் மற்றும் தும்மீம்  என்பது ஒரு வித கற்கள் இந்த கற்கள் பிரதான ஆசாரியர் அணியக்கூடிய மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டு இருக்கும். இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர், தேவனுடமிருந்து வெளிப்பாட்டை பெறுவதற்கான அல்லது அவரது சித்தத்தை அறிவதற்கான ஒரு வழியாக இதைப் பயன்படுத்தப்படுத்தினர் ஆசாரியர்கள் மக்களுக்காக ஆண்டவரிடம் விசாரிக்கும் போதும் அந்த கற்களில் இருந்து ஒளி வீசும் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஊரீம் என்பது வெள்ளை நிறக்கல் என்றும், தும்மீம் என்பது கறுப்பு நிறக்கல் என்றும், வெள்ளை நிறத்தில் இருந்து ஒளி புறப்பட்டால் பதில் சரி என்றும், கறுப்பு நிறத்தில் இருந்து  ஒளி புறப்பட்டால் பதில் வேண்டாம் என்றும் ஆசாரியர்கள்...

முன்னணை(Manger) என்றால் என்ன?

Image
முன்னணை(Manger) என்றால் என்ன?   பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2 : 12 இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள முன்னணை(Manger) என்றால் என்ன? இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் நியாயப்பிரமாண காலத்திற்கு செல்ல வேண்டும். அக்காலத்தில் மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை மந்தையின் துருக்கம்(Tower of the flock) என்ற மேல் வீட்டறையில் இருந்து கண்காணிப்பார்கள்.( படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) அப்போது பெரிய மிருகங்கள் அந்த ஆடுகளை தாக்காதவாறு பார்த்துக் கொள்வார்கள்.  அதற்கு கீழ் ஒரு அறை இருக்கும்.  ( படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) ஆடு தன் குட்டிகளை பெற்றெடுக்கும் இடம் அது. அந்த ஆட்டுகுட்டிகள் பிரத்யேகமாக தேவாலயத்துக்கு கொடுப்பதற்காகவே கவனமாக வளர்க்கப்படும்.  அதில், சுண்ணாம்பு கல்லால் செய்த ஒரு சின்ன தொட்டி இருக்கும்.  ( படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) அதற்குப் பெயர் தான் முன்னணை .  ஒரு ஆடு குட்டிப் போட்டால், அந்த குட்டியை மேய்ப்பர்கள் எடுத்து அதை பரிசோதித்து பார்த்து, அதில் எந்த குறைபாடோ, ஊனமோ இல...

இயேசுவின் இதயத்திலிருந்து "இரத்தமும் தண்ணீரும்" ஏன் பீறிட்டது என்பது குறித்து ஒரு மருத்துவரின் பதிவீடு

Image
இயேசுவின் இதயத்திலிருந்து "இரத்தமும் தண்ணீரும்" ஏன் பீறிட்டது என்பது குறித்து ஒரு மருத்துவரின் பதிவீடு அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.  - யோவான் 19 : 33 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.  - யோவான் 19 : 34 இந்த நிகழ்வை நேரில் கண்ட சாட்சியான சீஷனாகிய யோவான், பின்னர் தனது நற்செய்தியில் இதைப் பதிவு செய்ததால், இந்த "இரத்தமும் தண்ணீரும்" ஊற்றப்பட்டதற்கு மருத்துவ விளக்கம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சம்பந்தமாக, ஓய்வுபெற்ற இருதய-தொராசி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்டனி டி போனோ - a retired cardio-thoracic surgeon, Dr. Antony de Bono ("இரத்தமும் தண்ணீரும்" ஊற்றப்பட்டதற்கு ஒரு எளிய காரணம் இருப்பதாகக் கருதுகிறார். இயேசுவுக்கு ஒரு இரத்தக் குழாய் இருந்தது, அது மரித்த உடலில், அவை இரண்டு அடுக்குகளாகப் (2 layers) பிரிக்கப்பட்டன:  கீழே கனமான சிவப்பு அணுக்கள் (the heavier red cells) மற்றும் மேலே லேசான நீர் போன்ற பிளாஸ...

முத்திரை

முத்திரை உலக மேலதிகாரிக்கு கொடுக்கப்படும் உலக முத்திரை, கையெழுத்தும் சேர்த்தாலே, சட்டம் கூட அதற்கு மண்டியிடும். ஆனால், உலக முத்திரை வேண்டாம் எனக்கு! விலைமதிப்பற்ற பரலோக முத்திரை, அவர் எனக்கே அளித்திருக்கிறார்! பரிசுத்த ஆவியின் முத்திரை! வெற்றுக் காகிதமாய், வேண்டாத பொருளாய் இருந்த எனக்கு, கொடுக்கப்பட்ட முத்திரை, என்னை பரலோகத்தில் கொண்டு சேர்க்கும் முத்திரை! என்னில் தங்கியிருக்கும் அந்த முத்திரை, பாவங்களை வெறுக்க வைத்த முத்திரை, நேரம், காலத்திக்கு உட்படாத முத்திரை, என்னை முற்றிலும் மாற்றிய அந்த முத்திரை. விலை கொடுத்து வாங்கியது இல்லை, அவர் கிருபை எனை மறந்ததும் இல்லை. மரிக்கும் தருவாயில், அந்த முத்திரை என்னிடம் இருந்தால், பரலோகத்தின் வாசல் தானாய் திறக்கும்! என் அடையாளம் – இயேசு! என் உறவு – பிதாவாகிய தேவன்! என் முத்திரை – பரிசுத்த ஆவி! ( எபேசியர்  1:13, 4:30)

சமாரியா - பெயர்க்காரணம்

சமாரியா என்ற பெயர் எப்படிப் பிறந்தது? ஒம்ரி ராஜா,  சேமர்  என்பவரிடம் இருந்து மலை ஒன்றை வாங்கினான். அந்த இடத்தில் ஒரு பட்டணத்தைக் கட்டினான்.  அவருடைய பெயரையே அந்த இடத்திற்கு வைக்கும் வகையில் "சமாரியா"  (Samaria) என்று பெயரிட்டான். இது பைபிள் சொல்லும் நேரடியான காரணம்.  பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.  -1 இராஜாக்கள் 16 : 24 

மத்தேயு 22:21 விளக்கம் - தேவனுடையதை தேவனுக்கு செலுத்துங்கள்

மத்தேயு 22:21 விளக்கம்  இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.   -மத்தேயு 22 : 21 வசனத்தின் பின்னணி: பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்கள், இயேசுவிடம் வந்து  இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ  என்று கேட்கிறார்கள். இது ஒரு சிக்கலான கேள்வி. அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்து வரிக்காசை எனக்கு காண்பியுங்கள் என்று சொன்னார்.  அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். வசனத்தின் அர்த்தம்: "இராயனுடையதை இராயனுக்கும்"  —  ரோமர் 13:7 அந்த சுரூபம் இராயனுடையது என்பதால் அதை அவருக்கே செலுத்துங்கள். நாட்டின் அரசாங்கத்திற்கு தேவையான வரிகளை இராயனுக்கு வழங்குங்கள்.  "தேவனுடையதை தேவனுக்கும்"  — 1 பேதுரு 2:17 தேவனுடைய சுரூபம் மனிதனில் இருப்பதால் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.(ஆதி 1:26) “பணக்காசுகளில் ...

பானபலி (Drink Offering)

பானபலி (Drink Offering) பானபலி என்றால் என்ன? கர்த்தருக்கு முன்பாக காற்படி திராட்சரசத்தை பலியாக செலுத்துவதாகும்.  பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.  - எண்ணாகமம் 15 : 5 Numbers 15:5 And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb. அளவீட்டைப் புரிந்துகொள்வது  ஒரு ஹின் (hin ) என்பது திரவ அளவீட்டின் பண்டைய எபிரேய அலகு.  1 ஹின் ≈ 6 லிட்டர் (அல்லது சுமார் 1.5 கேலன்கள்).  ஒரு ஹினில் (¼ ஹின்) கால் பங்கு சுமார் 1.5 லிட்டர் (அல்லது 1.5 குவார்ட்ஸ் ஒயின்) ஆகும். எப்படி செலுத்தப்பட்டது: இதை தனியாக செலுத்த முடியாது. தகனபலியோடு கூட, போஜனபலியையும், பின்பு பானபலியையும் வார்க்க வேண்டும்.  பானபலி செலுத்தி விட்டால் பலி முடிந்தது என்று அர்த்தம்.  பானபலி செலுத்தி விட்டால் பலிகள் முழுமையடையும் (Complete offering) கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும் , திராட்சப்பழரசத்திலே காற்படி...