முன்னணை(Manger) என்றால் என்ன?

முன்னணை(Manger) என்றால் என்ன?

 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
லூக்கா 2 : 12


இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள முன்னணை(Manger) என்றால் என்ன?

  • இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் நியாயப்பிரமாண காலத்திற்கு செல்ல வேண்டும்.
  • அக்காலத்தில் மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை மந்தையின் துருக்கம்(Tower of the flock) என்ற மேல் வீட்டறையில் இருந்து கண்காணிப்பார்கள்.(படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
  • அப்போது பெரிய மிருகங்கள் அந்த ஆடுகளை தாக்காதவாறு பார்த்துக் கொள்வார்கள். 
  • அதற்கு கீழ் ஒரு அறை இருக்கும். (படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
  • ஆடு தன் குட்டிகளை பெற்றெடுக்கும் இடம் அது.
  • அந்த ஆட்டுகுட்டிகள் பிரத்யேகமாக தேவாலயத்துக்கு கொடுப்பதற்காகவே கவனமாக வளர்க்கப்படும். 
  • அதில், சுண்ணாம்பு கல்லால் செய்த ஒரு சின்ன தொட்டி இருக்கும். (படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
  • அதற்குப் பெயர் தான் முன்னணை
  • ஒரு ஆடு குட்டிப் போட்டால், அந்த குட்டியை மேய்ப்பர்கள் எடுத்து அதை பரிசோதித்து பார்த்து, அதில் எந்த குறைபாடோ, ஊனமோ இல்லையென்றால் அதை துணிகளில் சுற்றி முன்னணையில் வைப்பார்கள். 
  • அது பத்திரமாக, அந்த சுண்ணாம்பு சூட்டிற்கு இதமாக படுத்துக் கொள்ளும். 
  • பின்பும் அதை கவனமாக ஒரு வயது வரை வளர்ப்பார்கள். 
  • பின்பு அதை ஆசாரியர்கள் வந்து பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு செல்வார்கள். 
  • அதை எடுத்துக் கொண்டு போய் தேவாலயத்தில் பலியிடுவார்கள். 
  • அந்த மேய்ப்பர்களுக்கு பெயரே, தேவாலயத்திற்கு ஆடு கொடுக்கும் மேய்ப்பர்கள். 
  • அதேப் போல இயேசு பிறந்தவுடன், அவரை அந்த ஆட்டுக்குட்டியைப் போலவே அந்த முன்னணையில் துணிகளில் சுற்றி வைத்தார்கள்.
  • ஏனென்றால் அவர் தான் நமக்காக நித்திய பலியாக கொடுக்கப்படப் போகிற ஆட்டுக்குட்டி. 
  • இதுவே அந்த முன்னணையின் இரகசியம். 

“மந்தையின் துருக்கம்” என்ற பதம் பைபிளில் எங்காவது இருக்கிறதா?

  • ஆம். இருக்கிறது. 
(1) மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.

 -மீகா 4 : 8

  • இந்த வசனத்தில் மந்தையின் துருக்கம் என்ற வார்த்தை இஸ்ரவேலரைக் (ஆவிக்குரிய இஸ்ரவேலரையும்) குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. 

(2) இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

 -ஆதியாகமம் 35 : 21 

  • இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் ஏதேர் கோபுரம் மந்தையின் துருக்கத்தைக் குறிக்கிறது.
  • எப்படியென்றால், இந்த ஏதேர் கோபுரத்தின் எபிரேயப் பதம் Migdal Eder, ஆங்கிலத்தில் Tower of the Flock, அதையே தமிழில் ஏதேர் கோபுரம் என்று மொழிப்பெயர்த்துள்ளனர். 
  • இந்த வசனத்தில் ராகேல் இஸ்ரவேலின் இளைய மகனை பெற்றெடுத்த விவரத்தை நாம் காண்கிறோம். 
  • பென்யமீனைப் பெற்றெடுத்த பிறகு அவள் இறந்துவிடுகிறாள், மேலும் 'எப்பிராத்தாவுக்கு செல்லும் வழியில்' அடக்கம் செய்யப்படுகிறாள்.
  • எப்பிராத்தா என்பது பின்னர் பெத்லகேம் என்று அழைக்கப்பட்டது.
  • இஸ்ரவேல் (யாக்கோபு) ஏதேர் கோபுரத்திற்கு அருகில் கூடாரமிட்டு ராகேலின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க அங்கேயே தங்கியதாக இந்த வசனம் கூறுகிறது. 
  • ஆம். இந்த ஏதேர் கோபுரம் மந்தையின் துருக்கத்தை தான் குறிப்பிடுகிறது. 

மந்தையின் துருக்கம்- Tower of the flock/Watch tower




20ம் நூற்றாண்டில் இருந்த மந்தையின் துருக்கம்

கீழ்அறையின் உள்ளே



முன்னணை- Manger





Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4