உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4

உன்னதப்பாட்டு-அதிகாரம் 4-விளக்கம்

வசனம் 1-5:
மணவாளனாகிய இயேசு கிறிஸ்து, மணவாட்டியாகிய சபையிடம் எதிர்ப்பார்க்கும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன? என்பதனை சொல்லுகிறது. 

நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 1

விளக்கம்:
நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி
  • இரு தடவை ஒரு விஷயம் வந்தால் அது உறுதிப்படுத்துதலைக் குறிக்கும். 
  • பரிசுத்தம், நீதியையும் குறிக்கும். 
ரூபவதி
  • Ya'p’pah in Hebrew - meaning வெள்ளைநிற ரூபவதி
  • அந்த சொல்லுக்குள்ளே வெண்நிறம் அடங்கியிருக்கிறது. 
  • ஆகவே, இது வெறும் அழகல்ல.
  • வெள்ளை பரிசுத்தத்தை குறிக்கும். 
  • ஆண்டவராகிய இயேசுவால் பரிசுத்தம் ஆக்கப்பட்ட சபையே! நீ பரிசுத்தமாய் அழகாய் இருக்கிறாய் என்று சொல்கிறார். 
  • அதுமாத்திரமல்ல வெள்ளை நீதியையும் குறிக்கும். நீதி என்பது தேவனுடன் நமக்கு இருக்கிற உறவு. 
உன் முக்காட்டின் 
  • T’sama (ட்சாமா) in Hebrew.
  • இது ஒரு முகத்திரை
  • ஆனால் முகம் தெரியும், ஆனால் தெளிவாக தெரியாது. 
  • இது 1 கொரி 11 ன் தலையை சுற்றி போடுகிற முக்காடு அல்ல. 
  • திரை போட்டவர்களாய் அசுத்தங்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். 
உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது
  • வேதத்தின்படி பலிக்கொடுக்க பயன்படுத்தப்படும் ஒரே பறவை புறா. 
  • ஏனென்றால் அது தான் பரிசுத்தமான பறவை. 
  • அந்த கண்கள் சமாதானம் நிறைந்த கண்கள். 
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
 -மத்தேயு 6 : 22
  • ஆண்டவருக்கு இச்சையுள்ள கண், அசுத்தமுள்ள கண் விருப்பமில்லை. 
  • சபை இச்சை இருக்கக் கூடாத ஒரு இடம். 
  • ஆகவே, கிறிஸ்தவர்களிடத்தில் தேவன் எதிர்ப்பார்ப்பது பரிசுத்தம், நீதி, இச்சை அடக்கம் என்பதே. 
உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது

ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
 -1 கொரி 11 : 15
  • கூந்தல் என்பது பெண்ணின் மகிமை
  • தன்னுடைய மணவாட்டியாகிய சபை தம் மகிமையை இழக்க கூடாது. 
  • இரட்சிக்கப்பட்ட பிறகு நாம் மகிமையாக்கப்பட்டிருக்கிறோம். 
  • நிலவின் ஒளி போன்ற ஒரு மகிமை.
  • நிலவுக்கு சுய ஒளி இல்லை. 
  • ஆனால் சூரியனிலிருந்து வருகின்ற அந்த ஒளியை, நிலவு எடுத்துக் கொண்டு அந்த மகிமையை பிரதிபலிக்கிறது
  • அதுபோல, நமக்கென சுயமகிமை இல்லை. 
  • எனவே, நீதியின் சூரியனாகிய இயேசுவின் ஒளி நம் மேல் பட பட நாம் இயேசுவின் ஒளியை பிரதிபலிக்கிறோம். 
  • அதை ஆண்டவராகிய இயேசு நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். 
வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது
  • ஆண்டவருக்கு பலி செலுத்தக் கூடிய அந்த விலங்குகளின் பட்டியல் யாத்திரகமம் 25:1-7 ல் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கர்த்தருக்கேற்ற விலை உயர்ந்த காணிக்கை
ஆண்டவராகிய இயேசு நம்மிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது:
  • நீதியுள்ளவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். 
  • அந்த திரை போட்டவர்களாக அசுத்தங்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். 
  • இச்சை அடக்கத்தோடு கவனமாய் இருக்க வேண்டும்.
  • இயேசுவினிடத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ளுகிற மகிமையை தக்க வைத்து கொண்டு, ஒரு விலை உயர்ந்த விலங்குகளின் காணிக்கையை போல நாம் இருக்க வேண்டும். 

உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 2

விளக்கம்:
உன்பற்கள்
புன்சிரிப்பு
  • மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுது புன்சிரிப்பு வரும். 
  • சபை சமாதானமாய், புன்சிரிப்போடு இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். 
இரட்டைக் குட்டியீன்றவைகளுமான 
  • மேல் உதட்டையும். கீழ் உதட்டையும் குறிக்கிறது.
  • மேல் உதடு மேலே போக, கீழ் உதடு கீழே வர அந்த பற்கள் வெளியே தெரியும். 
  • அந்த ஆடு குட்டி போட்டிருக்கிறது என்றால், அது மலடில்லை. 
  • அது கனி தருகின்ற ஆடு. 
  • அது போல சபை கனிதருகின்ற ஆடு. 
  • கனிதருகின்ற, புன்சிரிப்போடு ஆண்டவர் முன்பாக நிற்க வேண்டிய ஒரு மணவாட்டி நாம். 

உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 3

விளக்கம்:
முக்காட்டின் 
முகத்திரை

உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்
  • உதடுகளில் பாவம் இருக்கக் கூடாது
மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
 -லேவியராகமம் 5 : 4

உன் வாக்கு 
சிவப்பு நூல்- இயேசுவின் இரத்தம்
  • இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நமது வாயின் சொற்கள் இருக்க வேண்டும். 
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
 -எபிரேயர் 13 : 15
  • தேவன் நம்மை பரிசுத்ததிற்கு அழைத்திருக்கிறபடியினால், நம் வாயின் சொற்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். 
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் 

அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
 -எரேமியா 3 : 3
  • முக்காடில்லாத கன்னங்கள் வேசியின் கன்னங்களுக்கு ஒப்பாயிருக்கிறது. 
  • நான் ஆவிக்குரிய விபச்சாரியாக இருக்கக் கூடாது.
  • ஆண்டவராகிய இயேசுவுக்காய் மாத்திரமே என் கன்னங்கள் திறந்திருக்கும். 
  • நான் ஆண்டவராகிய இயேசுவை துக்கப்படுத்தக் கூடிய உபதேசங்கள், பிற கலாச்சார விஷயங்களை நான் அனுமதிக்க மாட்டேன். 
  • என் முக்காட்டுகுள்ளே என் கன்னங்களை வைத்திருப்பேன். 

உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 4

விளக்கம்:
  • கழுத்து தலையையும், சரீரத்தையும் இணைக்கிறதாய் இருக்கிறது. 
  • சரீரம்-சபை
  • தலை-இயேசு
  • நம்மை இயேசுவோடு இணைக்கின்ற அந்த இடம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். 
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
 -எபேசியர் 2 : 8

உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
 -உன்னதப்பாட்டு 4 : 5

விளக்கம்:
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
 -1 தெசலோனிக்கேயர் 5 : 8
  • சபை ஒரு மார்க்கவசத்தை அணிந்திருக்க வேண்டுமாம். 
  • அந்த மார்க்கவசம் விசுவாசம், அன்பு என்ற இரு விஷயங்களை தன்னுடனே வைத்திருக்க வேண்டுமாம். 
உன் இரண்டு ஸ்தனங்களும் (மார்பகங்கள்)
விசுவாசம், அன்பு இது இரண்டும் தான் சபையின் மார்க்கவசம். 
  • அன்பு-Agape 
  • விசுவாசம்- 1) தேவன் மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை
  • 2)தேவனுக்காக நாம் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்க வேண்டிய அந்த தன்மை. 
  • நாம் அனைவருமே விசுவாசிகள் தான்.
  • ஆனால் நாம் எந்த அளவிற்கு அவர் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறோம். 
தெசலோனிக்கேயர் 5வது அதிகாரத்தில், விசுவாசம், அன்பு இந்த இரண்டும் மார்க்கவசமாக குறிப்பிடப்படுகிறது. எபேசியர் 6வது அதிகாரத்தில் நீதி மார்க்கவசமாக குறிப்பிடப்படுகிறது. விசுவாசம் ஒரு கேடகம் ஆக காட்டப்பட்டுள்ளது. ஏன்? 
  • தெசலோனிக்கேயர் 5வது அதிகாரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசம், அன்பு ஒரு ஆவிக்குரிய போராட்டத்தை குறித்து பேசுகிறது.
  • எனவே, இங்கு விசுவாசம் மார்க்கவசமாக காட்டப்பட்டுள்ளது. 
  • எபேசியர் 6 வது அதிகாரத்தில் வருகிற அந்த சர்வாயுத வர்க்கம் இயேசுவுக்காக அல்ல, எதிராகிய பிசாசினுடைய தாக்குதலில் இருந்து நம்மை காத்துகொள்வதற்கு. 
  • எனவே, இங்கு விசுவாசம் கேடகமாகவும், நீதி, மார்க்கவசமாகவும் காட்டப்பட்டுள்ளது. 
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
 -எபேசியர் 6 : 14

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
 -எபேசியர் 6 : 16

பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.
 -உன்னதப்பாட்டு 4 : 6

விளக்கம்:
  • முதல் 5 வசனங்களில் சபை எப்படி இருக்க வேண்டும் என்ற தன் எதிர்ப்பார்ப்பை சொல்லிவிட்டு.
  • அந்த சபை அப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்த வசனத்தை சொல்கிறார். 
  • இதை மணவாளன் தான் பேசுகிறார். 
யூதர்களின் கலாச்சாரம்:
  • யூதர்களுடைய திருமணங்கள் இரவில் தான் நடக்கும்.
  • இந்த திருமண இரவுக்கு 7 நாட்களுக்கு முன்னேயே விருந்து உபசாரம் தொடங்கிவிடும்.
  • 7 நாட்களும் நடக்கும். 7வது நாளும் நடக்கும். 
  • இரவில் தான் திருமணம் நடக்கும். 
  • இப்போது, மணவாட்டி அவளுடைய வீட்டிலே இருந்து மணவாளனுடைய தந்தையின் வீட்டிற்கு கொண்டு வரப் படுவாள். 
  • இதை அடையாள ரீதியாய் நாம் பார்ப்போமானால், மணவாளனாகிய இயேசு கிறிஸ்து பாதி வழி வரை வந்து.
  • மத்திய ஆகாயம் வரை வந்து அதனது சபையாகிய மணவாட்டியை எடுத்து கொண்டு (Rapture).
  • அப்படியே அந்த மணவாட்டியை கொண்டு போய் தன் பிதாவின் வீடாம் பரலோகத்தில் விட்டு விடுவார். 
  • அந்த 7 நாட்களும் மணவாட்டி, மணவாளனின் தந்தை வீட்டிலிருந்து தன்னை ஆயத்தம் பண்ணிக் கொள்ளும்படி அங்கே விடப்பட்டிருப்பாள்.
  • அவள் ஆயத்தம் பண்ணப்பட்டு கொண்டிருக்கும் போது விருந்துபசாரம் நடைபெறும். 
  • மக்கள் வந்து உணவருந்தி பரிசு பொருட்களெல்லாம் வழங்கி விட்டு போவார்கள். 
  • அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் கானா ஊர் கலியாண வீட்டிலே திராட்சை ரசம் குறைவுப்பட்ட போது, இயேசு முதல்முறையாக அற்புதம் செய்தார்.
  • மணவாளன் பயங்கர எதிர்ப்பார்ப்போடு காத்து கொண்டிருக்கிறார். 
  • அந்த உணர்வை ஆண்டவராகிய இயேசு இந்த வசனத்தில் அழகாக காட்டுகிறார்.  
பகல் குளிர்ச்சியாகி 
பகல் எப்பொழுது குளிர்ச்சியாகும்? இரவிலே தான். திருமண நேரம் நெருங்குகிறது என்பதை காட்டுகிறது. 

நிழல் சாய்ந்து போகும்வரைக்கும்
இரவு எப்பொழுது வரும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? என்ற ஆவல். 

நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்
வெள்ளைப்போளமலையிலும்- பரலோகம்
சாம்பிராணிமலையிலும்-எருசலேம்
  • பரலோகத்திற்கு போய் வரக் கூடிய ஒரே மனுஷர் மனுஷகுமாரனாகிய இயேசு. 
  • மணவாட்டி ஆயத்தம் ஆகும்  அந்த நேரத்திலே, இருப்பு கொள்ளாமல் எப்போ, எப்போ என்று மணவாளனாகிய நான் பரலோகத்திற்கும், எருசலேமிற்கும் போக்கு வரத்தாய் இருப்பேன் என்கிறார். 
  • இயேசுவுடைய இரகசிய வருகை எப்போது வரும் என்ற ஆவல், நமக்கு மட்டுமல்ல.
  • அவரும் எதிர்ப்பார்ப்போடு தான் காத்துக்கொண்டு இருக்கிறார். 
  • ஆனால் நம் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் தாமதிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
 -உன்னதப்பாட்டு 4 : 7

விளக்கம்:
ரூபவதி
வெள்ளை என்பது  பரிசுத்தம், நீதியைக் குறிக்கும். 
  • நீதி என்றால் உறவு. நாம் நிறைய நேரம் ஜெபத்தில் செலவிட வேண்டும். 
  • முதல் ஐந்து வசனங்களில் அவர் முன் வைத்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்து.
  • உன்னை மாற்றி கொண்டு இருந்தால், உன்னில் பழுதொன்றுமில்லை என்று இயேசு சொல்கிறார். 
  • இது அவருடைய ஆதங்கத்தை, ஆவலை,ஆசையை காட்டுகிறது. 
  • நம் கடமை என்னவென்றால், நம்மை இன்னும், இன்னும் பரிசுத்தமாக்கி கொள்வது மட்டுமே.
  • ஒரு மணவாட்டி திருமணத்திற்கு முன்பு, தன்னை எப்படியெல்லாம் பழுதில்லாமல் காட்ட முயற்சிப்பாலோ
  • அதே போல நாமும் நம் பழுதுகளை எல்லாம் கலைந்து, முடிந்த வரை நம்மை பரிசுத்தப்படுத்தி ஒரு நல்ல மணவாட்டியாக செல்ல வேண்டும். 
  • அவர் நம்மை பூரண ரூபவதி என்று சொல்லும் அளவிற்கு, நம் நடக்கைகள் பரிசுத்தமாக இருக்க வேண்டும். 
  • பழுதில்லாத மணவாட்டியாக நாம் அவருக்கு காட்சியளிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் நம்மை பரிசுத்தப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். 

லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
 -உன்னதப்பாட்டு 4 : 8

விளக்கம்:
  • சபையின் இப்போதய நிலைமை என்ன? 
  • நாம் என்ன நிலைக்கு போக இயேசுவானவர் விரும்புகிறார்?  என்பதனை காட்டுகிற ஒரு தீர்க்கத்தரிசன வசனம் இது. 
லீபனோன் அமைந்துள்ள இடம்:
  • இஸ்ரவேலுக்கு வடக்கே, இடது பக்கத்தில் லீபனோனும், வலது பக்கத்தில் சிரியாவும் அமைந்துள்ளது. 
  • இஸ்ரவேலில் நீங்கள் Tel-Dan-Reserve யாராவது போனீர்கள் என்றால் 
  • அந்த யோர்தான் நதி உருவாகிற அந்த காட்டுக்குள்ளே நடந்து, 
  • அந்த சல சல வென்று அந்த தண்ணீர் சத்தத்தை கேட்டு கொண்டு, 
  • அந்த அடர்ந்த குட்டி கானக பகுதியிலே நடந்து போயிருந்தால் நீங்கள் ஓரிடத்திற்கு வருவீர்கள்.
  • யெரொபெயாம் மன்னன் வடக்கிலே தாணிலே கட்டியிருந்த அந்த கன்றுகுட்டிகள் செய்த அந்த மேடை வைத்திருந்த இடத்திற்கு வருவீர்கள்.
  • அதனுடைய இடிபாடுகள் இன்னும் இருக்கின்றன.
  • அந்த இடத்திலிருந்து இஸ்ரவேலுக்கு வடக்கே, இடது பக்கத்தில் லீபனோனும், வலது பக்கத்தில் சிரியாவும் அமைந்துள்ளது. 



அந்த பக்கத்திலே ஒரு பெரிய மலை இருக்கிறது. அது தான் எர்மோன் மலை. 

எர்மோன் மலை


  • எர்மோன் மலை ஒரு அழகான மலை. 
  • பனிக்காலத்திலே, பனிப்பொழிந்து அந்த பனியினாலே அந்த மலை மூடப்பட்டிருக்கும். 
  • ஹெர்மோன் in Hebrew 
  • ஹெர் என்றால் மலை
  • மோன் என்பது அதனுடைய பெயர்
  • இந்த லீபனோன் என்பது இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கிறது. 
  • இஸ்ரவேலின் வடக்கு எல்லைக்கு வெளியே இருக்கிறது. 
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
 -சங்கீதம் 133 : 1

எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.  
 -சங்கீதம் 133 : 3

லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா
  • இரண்டு தரம் ஒரு வார்த்தை வந்தால் அதில் ஆணித்தரம், உறுதி இருக்கிறது. 
  • மணவாளியே என்று பாசமாக அழைப்பது இந்த இடத்தில் தான் முதல் தடவை வருகிறது. 
  • முந்தய வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஏக்கத்தின் விளைவாய், பாசமாக மணவாளியை அழைக்கிறார். 
லீபனோனிலிருந்து என்னோடே வா
  • லீபனோன் உலகத்தை குறிக்கும். 
  • இஸ்ரவேல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறிக்கும். 
  • இயேசுவானவர் சபையை பார்த்து சொல்கிறார், நீ உலகத்தை விட்டு வெளியே வா என்று. 
  • இந்த இடத்தில்  இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 
  • ஒன்று, சபை எடுத்துக்கொள்ளப்படும் போது நாம் உலகத்தை விட்டு போக போகிறோம். 
  • இரண்டாவது, நீ என்றுடைய மணவாளி ஆகி விட்டும், ஏன் இன்னும் உலகத்திலேயே இருக்கிறாய். வந்துவிடு என்னிடம் என்று இயேசு சொல்கிறார். 
அமனாவின் கொடுமுடியிலிருந்தும்

நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.
 -2 இராஜாக்கள் 5 : 12
  • அது ஒரு நதி
  • லீபனோனின் ஒரு மலையிலிருந்து உருவாகிறது. 
  • அந்த நதி உருவாகிற மலையிலிருந்து தெற்கு நோக்கி பார்த்தால் இஸ்ரவேலின் பள்ளத்தாக்குகள் பசுமையாய், அழகாய் தெரியும். 
சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும்
  • கொடுமுடி- top of the mountain 
  • எர்மோன் மலையிலிருக்கிற கொடுமுடிக்கும் சேனீர் என்று பெயர். 
  • நீ சபையிலே இருந்து உலகத்தைப் பார்க்கும் போது அது கவர்ச்சியாய் உனக்கு தெரியலாம். 
  • ஆனால், கொடுமுடியிலிருந்து உலகத்தை பார். 
  • அப்போது தான் உனக்கு புரியும் தேவ இராஜ்யம் எவ்வளவு அழகானதென்று.
சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்
  • சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும்- தேவனுடைய இராஜ்யம்
  • சிவிங்கி-Leopard-சிறுத்தை-தேவனுடைய இராஜ்யம்
  • தேவனுடைய இராஜ்யத்திலிருந்து உலகத்தை கீழேப் பார் என்று சபையை பார்த்து மணவாளன் சொல்கிறார்.
  • அப்போது தான் உலகத்திலிருப்பது ஒன்றுமில்லை என்று உனக்கு புரியும் என்கிறார். 

என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.
 -உன்னதப்பாட்டு 4 : 9

விளக்கம்:
என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே
  • ஆபிரகாம் தன் சகோதரியை திருமணம் செய்தார்.
  • ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதிலிருந்து சகோதரியை திருமணம் செய்ய முடியாது. 
  • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து, சகோதரியே என்று சொன்னால் அது தவறு ஏதும் இல்லை. 
  • ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவன், நமக்கும் பிதாவாக இருக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இயேசுவுக்கு சகோதரர்கள். 
Greek words for babies:
  • Brephos புதிதாய் பிறந்த குழந்தையை குறிக்கும்
  • Paedaea தவழும் குழந்தையை குறிக்கும்
  • Nepios தத்தி, தத்தி நடக்கும் குழந்தையை குறிக்கும்
  • Teknon  எந்த வயதினர் ஆனாலும் பெற்றாருக்கு பிள்ளைகள் என்பதை குறிக்கும்.
  • இது அனைத்துமே ஆண்பாலையும் குறிக்கும். பெண்பாலையும் குறிக்கும். 
  • Huios ஆண்பிள்ளைகளை மாத்திரம் தான் குறிக்கும். இந்த சொல் தான் ஆண்டவராகிய இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (Huios) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
 -யோவான் 3 : 16
  • அது போல நம்மையும் மகன்களாக தத்தெடுத்து இருக்கிறார் என்று வாசிக்கிறோமே! 
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் (Huios) ஆவியைப் பெற்றீர்கள்.
 -ரோமர் 8 : 15
  • பிதாவுக்கு நாம் எல்லோருமே மகன்கள்
  • இயேசுவானவருக்கு நாம் எல்லோருமே மணவாட்டிகள்.
  • ஆபிரகாம் சாராளை பார்த்தது போல, மணவாளன் மணவாட்டியை பார்க்கின்றார்.
உன் கண்களிலொன்றினாலும்
  • இயேசுவானவர் சபையை பார்த்து சொல்கிறார், 
  • நீ இன்னும் என்னை முழுமையாக பார்க்கவில்லை.
  • உனக்கு இன்னும் என்னுடைய ரூபம் தெரியாது.
  • ஆனால், முழுக்க என்னை நீ பார்க்காமல் எந்தளவுக்கு உனக்கு நான் வெளிப்பட்டு இருக்கிறேனோ
  • அந்த அளவுக்கு நீ என்னை பார்க்கிற பார்வை இருக்கிறதே, 
  • அந்த பார்வையால் நான் கவரப்பட்டிருக்கிறேன்.
  • நம்முடைய ஆவிக்குரிய கண்களால், நம்முடைய விசுவாசத்தால் நாம் அவரைப் பார்க்கிறோம். 
  • அந்தப் பார்வையே அவருக்கு இன்பமாய் இருக்கிறதாம். 
  • மாம்ச கண்ணால் நாம் அவரை காணவில்லை.
  • ஆவிக்குரிய கண்களால் மாத்திரம் நாம் அவரை காண்கிறோம். 
உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்
  • சரப்பணி - like a pendant - விசுவாசம்.
  • நீ எந்தளவுக்கு என் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறாயோ, அந்த அளவுக்கு நீ என் இருதயத்தை கவர்ந்து கொண்டாய் என்று இயேசு சபையை பார்த்து சொல்வதாக கூறப்பட்டுள்ளது. 

உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
 -உன்னதப்பாட்டு 4 : 10

விளக்கம்:
என் சகோதரியே! என் மணவாளியே
முந்தைய வசனத்திலேயே பார்த்தோம். 

திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது
  • யூதர்களுடைய கலாச்சாரத்தில் மிகவும் பெருமதியான பானம் திராட்சைரசம். 
  • பானங்களில் சிறந்த பானம் திராட்சைரசம். 
  • அதையும் விட சிறந்தது உன் நேசம். 
  • நீ சுவையானவள் என்கிறார் இயேசு சபையை பார்த்து.
கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது
  • கந்தவர்க்கங்கள் - பலிகள்
  • பரிமள தைலங்கள் - ஸ்தோத்திரபலி
  • மோசே காலத்திலிருந்து புதிய ஏற்பாட்டு காலம் வரைக்கும் 5 விதமான பலிகளை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கொடுத்து கொண்டு வந்தார்கள்.
  • இதை அத்தனையும் விட, சபையே நீ எனக்கு கொடுக்கிற ஸ்தோத்திரபலி எனக்கு பிரியமானது என்கிறார்.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
 -ரோமர் 12 : 1

திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது
  • நேசம் மற்றும் அன்பு
  • Aga’va அஹாவா in Hebrew, அந்த சொல்லில் இருந்து தான் கிரேக்க மொழியில் Agape வந்தது. 
நேசம் 
  • அஹாவா, A’hava (Hebrew) - அன்பின் உச்சம்.
  • டோட், Doh’t (Hebrew) - இது A’hava அன்பு அல்ல; அதை விட தரத்தில் குறைந்தது. 
Greek words -அன்பு
  • Agape - ஆவி, spirit
  • Phileo, Storge- ஆத்துமா, Soul
  • Storge- இருதயம், Heart
  • Phileo- மூளை, Brain
  • Eros- சரீரம், Body 
உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது
டோட் அன்பு
  • சபையால், அவருக்கு Agape அன்பை கொடுக்க முடியாது என்று இயேசுவுக்கு தெரியும். 
  • ஆனால் அதை விட குறைவான Doh’t அன்பாவது கிடைக்கிறதே என்று திருப்திப்படுகிறார். 
  • இது அவருடைய கிருபையை தான் காட்டுகிறது. 
  • நான் எதிர்ப்பார்க்கிற அளவு, நீ என்னில் அன்பு கூறவில்லை தான், ஆனாலும் அந்த கொஞ்ச அன்பையே நான் மிகவும் பெருமதியாக நினைக்கிறேன். 
  • God’s Positive approach towards us. 

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 11

விளக்கம்:
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது
  • தேன்- தேவனுடைய வார்த்தை. 
  • சபையின் வாயில் தேவனுடைய வார்த்தை இருக்கும் பொழுது அது மணவாளனுக்கு தேன் போல இருக்குமாம். 
  • தனது தேசத்தை பாலும், தேனும் ஓடுகிற தேசம் என்றவர் ஆண்டவர். 
உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது
  • வஸ்திரம் நீதியைக் குறிக்கும். 
  • புத்தகத்திலிருக்கும் வார்த்தைகள் நம் இருதயத்திற்கு வர வேண்டும். 
  • அது எந்தளவுக்கு  நம் வாயினில் உச்சரிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்வாயில் தேனாய் ஒழுகும். 
  • உன் நீதியின் வாசனை லீபனோனுக்கு ஒப்பாக இருக்கிறது. 
  • இங்கு லீபனோன் என்பது அங்கு இருக்கும் மரங்களின் வாசனை, நறுமணம் அதை தான் இயேசு சொல்லுகிறார். 

என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
 -உன்னதப்பாட்டு 4 : 12

விளக்கம்:
நீ அடைக்கப்பட்ட தோட்டமும்
  • ஒரு தோட்டத்தில் என்னென்ன இருக்கிறது. 
  • ஒரு அழகான தோட்டத்தை கற்பனை செய்வோம்.
  • இது அடைக்கப்பட்ட தோட்டம். 
  • கண்டவனெல்லாம் அந்த தோட்டத்தை அனுபவிக்க முடியாது. 
  • சபையிலே ஆண்டவராகிய இயேசு மாத்திரம் தான் மகிமைப்பட வேண்டும். 
  • உங்கள் சபைகளுக்கு இரட்சிக்கப்படாத அரசியல்வாதி வரக் கூடாது.
  • பிற மத தலைவர்கள் உங்கள் சபைக்குள் வரக் கூடாது. 
  • சபையிலே இயேசு கிறிஸ்துவை தவிர வேறு யாருக்கும் மகிமை கிடையாது. 
  • கண்டவனும் வந்து அந்த தோட்டத்தின் மகிமையை அனுபவிக்க முடியாது. 
  • தேவனுக்கு மட்டுமே மகிமை. 
  • Pastor கு மகிமை போக கூடாது. 
  • ஏனென்றால் அது ஒரு அடைக்கப்பட்ட தோட்டம்.
  • இது ஒரு தோட்டம், காடு அல்ல. 
  • ஆண்டவராகிய இயேசுவுக்கு உங்கள் சபை ஒரு அழகான, செழிப்பான தோட்டமாம். 
  • அதை அவர் ரசிக்கிறார். 
மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
 -யோவான் 4 : 14
  • கிறிஸ்தவனுடைய நீரூற்று- தேவனுடைய வார்த்தை, மகிமை. 
  • அது ஆண்டவருக்காக மாத்திரமே. 
  • தேவனுடைய வார்த்தையாகிய நீரூற்று மறைவு கட்டப்பட்டு இருக்கிறது. 
  • தேவனுடைய வார்த்தையை கண்டவர்களுக்கும் கொட்ட கூடாது. 
  • உலக மக்களின் WhatsApp group ல லாம் தேவனுடைய வார்த்தையை போடக் கூடாது.
  • அவர்களுக்கு அதனுடைய மகிமை புரியாது. 
  • அந்த வார்த்தையின் மகிமை தெரிந்தவர்களுக்கு போக வேண்டும். 
  • அது அடைக்கப்பட்ட நீரூற்று. 
முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்
  • கிணற்றின் வாயை மூடி போட்டு மூடி ஒரு சிறு இடத்தை மட்டும் திறந்து வைப்பது. 
  • கிணற்று நீர் பழுதாக கூடாது. 
  • கிணற்று நீர் அதிலிருந்து, தானே ஊறுகின்ற நீர்.
  • கிணற்று நீரை ஆற்று நீர் அள்ளி கொண்டு போக முடியுமா?
  • ஆற்று நீர் கள்ள உபதேசம்.
  • நம்முடைய கலாச்சாரத்தை சபைக்குள் கொண்டு வரக் கூடாது. 
  • நம்முடைய கிணற்று நீரை, ஆற்று நீர், கடல் நீர் அனைத்தும் கலங்கடிக்கிறது. 
  • சபை என்பது கிணற்று நீர். 
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
 -எபேசியர் 4 : 30
  • நமது கிறிஸ்தவம் வெளியே உள்ளவர்களால் கலங்கடிக்கப்பட கூடாது. 
  • நம்முடைய உபதேசம் கிணற்று நீர். 
  • ஆண்டவர் நம்மை ஒரு கிணராக பார்க்கிறார்.
  • அவருடைய அற்புதத்தால் அதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். 
  • கிணற்றுக்கு வெளியிலே இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
  • ஆகவே, சபைக்குள்ளே இருந்து தான் உபதேசம் வர வேண்டும்.
  • வெளியே இருக்கிற உபதேசம் சபைக்குள் வரக் கூடாது. 

உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
 -உன்னதப்பாட்டு 4 : 13

விளக்கம்:
  • 4 விதமான செடுகள்
  • அடுத்த வசனத்தில் விளக்கம் உள்ளது. 

நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 14

விளக்கம்:
  • 8 விதமான மரங்கள் . 
  • மொத்தம் 12 விதமான மரங்களின் பெயர்கள் அடங்கியுள்ளன. 
  • இந்த 12 வகையான மரங்களும் அழகானவை, நல்லவை, பிரயோஜனமானவை. 
  • ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.
  • ஆண்டவர் சபையை பார்க்கும் பொழுது 12 விதமான மரங்களை கொண்ட தோட்டத்தைப் போல பார்க்கிறாராம். 
  • நமது வேதத்தில் 12 என்ற எண் 187 தடவை வருகிறது.
  • அது ஒரு முக்கியமான இலக்கம். 
  • 12 என்பது வித்தியாசங்கள் கொண்ட ஒரு முழுமை.
  • வித்தியாசமான மனிதர்கள் கொண்ட சபையை ஆண்டவர் ரசிக்கிறார். 

தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
 -உன்னதப்பாட்டு 4 : 15

விளக்கம்:
  • கடைசியாக மணவாளன் பேசி முடிக்கிறார்.
  • தோட்டத்திற்கு நீர் வேண்டும். 
  • சபை நித்திமாய் பரலோகத்தில் இருக்க போகிறது.
  • லீபனோன் இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கிறது. 
  • ஒரு தோட்டத்தில் இருக்கிற ஓடை, தோட்டத்திற்கு வெளியே இருந்து கூட வரலாம். 
  • மணவாளன் சொல்லுகிறார், உள்ளே இருந்தும் ஆசீர்வாதம் வரும். 
  • வெளியே இருந்தும் ஆசீர்வாதம் வரும். 

வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.  
 -உன்னதப்பாட்டு 4 : 16

விளக்கம்:
  • இதையெல்லாம் கேட்ட மணவாளி பேசுகிறாள். 
  • சபை உணருகிறது, எந்தளவு இயேசுவானவர் சபையின் மீது பாசம், நேசம், அன்பு வைத்திருக்கிறார் என்று. 
  • எந்த அளவுக்கு அவர் சபையை பொக்கிஷமாக கருதுகிறார் என்று. 
வாடையே! எழும்பு
வாடையே என்றால் பெரிய காற்று

என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து
சபை அவருடையது

தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக
சபையிலிருந்து வரும் நன்மைகள் அனைத்தும் அவருக்கே. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2