ஊரீம் மற்றும் தும்மீம்

ஊரீம் மற்றும் தும்மீம் 

இந்தப் பதிவில் ஊரீம் தும்மீம் என்றால் என்ன என்பதையும், அதை எதற்கு உபயோகப்படுத்தினார்கள் என்றும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த கற்கள் தேவையா இல்லையா என்பதையும் என்றும் பார்க்கப் போகிறோம். 

ஊரீம், தும்மீம் என்றால் என்ன?
  • ஊரீம் என்றால் ஒளி (Light)
  • தும்மீம் என்றால் முழுமை அல்லது பரிபூரணம் (Perfection)
எதற்கு உபயோகப்படுத்தினார்கள்?
  • ஊரீம் மற்றும் தும்மீம்  என்பது ஒரு வித கற்கள்
  • இந்த கற்கள் பிரதான ஆசாரியர் அணியக்கூடிய மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டு இருக்கும்.
  • இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர், தேவனுடமிருந்து வெளிப்பாட்டை பெறுவதற்கான அல்லது அவரது சித்தத்தை அறிவதற்கான ஒரு வழியாக இதைப் பயன்படுத்தப்படுத்தினர்
  • ஆசாரியர்கள் மக்களுக்காக ஆண்டவரிடம் விசாரிக்கும் போதும் அந்த கற்களில் இருந்து ஒளி வீசும் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 
  • ஊரீம் என்பது வெள்ளை நிறக்கல் என்றும், தும்மீம் என்பது கறுப்பு நிறக்கல் என்றும், வெள்ளை நிறத்தில் இருந்து ஒளி புறப்பட்டால் பதில் சரி என்றும், கறுப்பு நிறத்தில் இருந்து ஒளி புறப்பட்டால் பதில் வேண்டாம் என்றும் ஆசாரியர்கள் அர்த்தம் கொள்வார்கள் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.  
பிரதான ஆசாரியரின் உடை மற்றும் மார்ப்பதக்கம்:



இந்த ஊரீம் தும்மீம் என்ற சொல் முழு வேதாகமத்திலும் 4 தடவை காணப்படுகிறது. 

1. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் (In the Breastplate)

நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.
 -யாத்திராகமம் 28 : 30

அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
 -லேவியராகமம் 8 : 8

புதிய ஏற்பாட்டில்
  • “நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாக” என்று எபேசியர் 6 : 14 ல் வாசிக்கிறோம். 
  • இன்று வெளிப்புறமான மார்க்கவசம் தேவைப்படாமல், நம் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு, பிரதான ஆசாரியனான இயேசுவைக் கொண்டு நாம் பிதாவிடம் பேச முடியும். 
2. எலெயாசாரின் நியாயத்தீர்ப்புக்குப் பிறகு யோசுவாவுக்காக ஆலோசனை கேட்க (After the Judgment Of Eleazar to ask counsel for Joshua)

அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
 -எண்ணாகமம் 27 : 21

புதிய ஏற்பாட்டில்
  • “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று எபிரேயர் 9 : 27 ல் வாசிக்கிறோம். 
  • எனவே, உடனடியான தண்டனையோ, நியாயத்தீர்ப்போ இப்பொழுது கிடையாது நாம் கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
  • அதேப் போல, நாம் எதைக் குறித்தாவது தேவனிடம் ஆலோசனை கேட்க வேண்டுமாயின் நாம் நேரடியாக கர்த்தரிடத்தில் பேசலாம். 
3. ஆசாரியர்கள் மட்டுமே உதவி செய்ய முடியும். (Only Priests Could Interpret)

ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத் தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். 
-எஸ்றா 2 : 63

ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
 -நெகேமியா 7 : 65

லேவியரைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
 -உபாகமம் 33 : 8

புதிய ஏற்பாட்டில்
  • “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” என்று எபிரேயர் 4 : 15 ல் வாசிக்கிறோம். 
  • நாமும் ராஜாக்களாகவும், ஆசாரியராகவும் இருக்கிறபடியினால் இன்னொரு ஆசாரியன் நமக்கு வேண்டுவதில்லை. 
4. சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது (Withheld the Answer from King Saul)

சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
 -1 சாமுவேல் 28 : 6

புதிய ஏற்பாட்டில்

  • “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” என்று 1 யோவான் 5 : 14 ல் வாசிக்கிறோம். 
  • கர்த்தர்  நமது ஜெபத்திற்கு செவிக்கொடுப்பார், பதில் கொடுப்பார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4