பானபலி (Drink Offering)
பானபலி (Drink Offering)
பானபலி என்றால் என்ன?
- கர்த்தருக்கு முன்பாக காற்படி திராட்சரசத்தை பலியாக செலுத்துவதாகும்.
பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.
-எண்ணாகமம் 15 : 5
Numbers 15:5 And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb.
அளவீட்டைப் புரிந்துகொள்வது
- ஒரு ஹின்(hin ) என்பது திரவ அளவீட்டின் பண்டைய எபிரேய அலகு.
- 1 ஹின் ≈ 6 லிட்டர் (அல்லது சுமார் 1.5 கேலன்கள்).
- ஒரு ஹினில் (¼ ஹின்) கால் பங்கு சுமார் 1.5 லிட்டர் (அல்லது 1.5 குவார்ட்ஸ் ஒயின்) ஆகும்.
எப்படி செலுத்தப்பட்டது:
- இதை தனியாக செலுத்த முடியாது. தகனபலியோடு கூட, போஜனபலியையும், பின்பு பானபலியையும் வார்க்க வேண்டும்.
- பானபலி செலுத்தி விட்டால் பலி முடிந்தது என்று அர்த்தம்.
- பானபலி செலுத்தி விட்டால் பலிகள் முழுமையடையும் (Complete offering)
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
-லேவியராகமம் 23 : 13
எப்போதெல்லாம் பானபலி செலுத்தப்பட்டது
- தினசரி பலிகளின் போது (எண் 28:7-8)
- ஓய்வு நாளின் (Sabbath) போது (எண் 28:9-10)
- மாதத்தின் முதல் நாளின் பலியில் (எண் 28:14)
- பஸ்கா (Passover) பண்டிகையின் போது(எண் 28:24, 31)
பானபலி இயேசுவில் எவ்வாறு நிறைவேறியது?
- இயேசு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் (மத்தேயு 26:28).
- அவர் தன்னுடைய இரத்தம் முழுவதையும் சிந்தினார்.
- இது பழைய ஏற்பாட்டின் பானபலியை நிறைவு செய்தது.
2 தீமோத்தேயு 4:6
ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
- பவுல் தன் உயிரை பானபலி போல வார்க்கப்போகிறேன் என்று கூறுகிறார்.
- தான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம்.
- அப்படியென்றால், பானபலி வார்க்கப்பட்டால், உயிர் தன் உடலை விட்டு பிரிந்து விடும் என்று அர்த்தம்.
பிலிப்பியர் 2:17
மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.
- “வார்க்கப்பட்டுபோனாலும்” என்று வாசிக்கிறோம்.
- அப்படியென்றால் மரித்துப் போனாலும் என்று அர்த்தம்.
யோவான் 19:33-34
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
- அப்படியே இயேசுவை, அவர் மரித்த பிறகும், போர்சேவகன் அவர் விலாவிலே ஈட்டியாலே குத்தின போது அவருடைய முழு இரத்தமும் அவர் உடம்பிலிருந்து வெளியேறினது.
- பானபலி இயேசுவில் செலுத்தப்பட்டது.
- முழுமையான பலியை சிலுவையில் நிறைவேற்றினார். (Complete surrender)
- பழைய ஏற்பாட்டின் படி (எண் 15:5) அந்த நேரம் 1.5 லிட்டர் இரத்தம் அதாவது 1/4படி இரத்தம் தான் சிந்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
Comments
Post a Comment