பானபலி (Drink Offering)

பானபலி (Drink Offering)

பானபலி என்றால் என்ன?

  • கர்த்தருக்கு முன்பாக காற்படி திராட்சரசத்தை பலியாக செலுத்துவதாகும். 

பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

 -எண்ணாகமம் 15 : 5

Numbers 15:5 And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb.


அளவீட்டைப் புரிந்துகொள்வது 

  • ஒரு ஹின்(hin ) என்பது திரவ அளவீட்டின் பண்டைய எபிரேய அலகு. 
  • 1 ஹின் ≈ 6 லிட்டர் (அல்லது சுமார் 1.5 கேலன்கள்). 
  • ஒரு ஹினில் (¼ ஹின்) கால் பங்கு சுமார் 1.5 லிட்டர் (அல்லது 1.5 குவார்ட்ஸ் ஒயின்) ஆகும்.

எப்படி செலுத்தப்பட்டது:

  • இதை தனியாக செலுத்த முடியாது. தகனபலியோடு கூட, போஜனபலியையும், பின்பு பானபலியையும் வார்க்க வேண்டும். 
  • பானபலி செலுத்தி விட்டால் பலி முடிந்தது என்று அர்த்தம். 
  • பானபலி செலுத்தி விட்டால் பலிகள் முழுமையடையும் (Complete offering)

கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

 -லேவியராகமம் 23 : 13


எப்போதெல்லாம் பானபலி செலுத்தப்பட்டது

  1. தினசரி பலிகளின் போது (எண் 28:7-8)
  2. ஓய்வு நாளின் (Sabbath) போது (எண் 28:9-10)
  3. மாதத்தின் முதல் நாளின் பலியில் (எண் 28:14)
  4. பஸ்கா (Passover) பண்டிகையின் போது(எண் 28:24, 31)

பானபலி இயேசுவில் எவ்வாறு நிறைவேறியது?

  • இயேசு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் (மத்தேயு 26:28).
  • அவர் தன்னுடைய இரத்தம் முழுவதையும் சிந்தினார்.
  • இது பழைய ஏற்பாட்டின் பானபலியை நிறைவு செய்தது.

2 தீமோத்தேயு 4:6

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

  • பவுல் தன் உயிரை பானபலி போல வார்க்கப்போகிறேன் என்று கூறுகிறார்.
  • தான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம்.
  • அப்படியென்றால், பானபலி வார்க்கப்பட்டால், உயிர் தன் உடலை விட்டு பிரிந்து விடும் என்று அர்த்தம்.

பிலிப்பியர் 2:17

மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

  • “வார்க்கப்பட்டுபோனாலும்” என்று வாசிக்கிறோம்.
  • அப்படியென்றால் மரித்துப் போனாலும் என்று அர்த்தம். 

யோவான் 19:33-34

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

  • அப்படியே இயேசுவை, அவர் மரித்த பிறகும், போர்சேவகன் அவர் விலாவிலே ஈட்டியாலே குத்தின போது அவருடைய முழு இரத்தமும் அவர் உடம்பிலிருந்து வெளியேறினது.
  • பானபலி இயேசுவில் செலுத்தப்பட்டது.
  • முழுமையான பலியை சிலுவையில் நிறைவேற்றினார். (Complete surrender)
  • பழைய ஏற்பாட்டின் படி (எண் 15:5) அந்த நேரம் 1.5 லிட்டர் இரத்தம் அதாவது 1/4படி இரத்தம் தான் சிந்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4