மத்தேயு 22:21 விளக்கம் - தேவனுடையதை தேவனுக்கு செலுத்துங்கள்

மத்தேயு 22:21 விளக்கம் 

இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். -மத்தேயு 22 : 21

வசனத்தின் பின்னணி:

  • பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்கள், இயேசுவிடம் வந்து இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ என்று கேட்கிறார்கள்.
  • இது ஒரு சிக்கலான கேள்வி.
  • அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்து வரிக்காசை எனக்கு காண்பியுங்கள் என்று சொன்னார். 
  • அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
  • இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

வசனத்தின் அர்த்தம்:

  • "இராயனுடையதை இராயனுக்கும்" — ரோமர் 13:7
    அந்த சுரூபம் இராயனுடையது என்பதால் அதை அவருக்கே செலுத்துங்கள். நாட்டின் அரசாங்கத்திற்கு தேவையான வரிகளை இராயனுக்கு வழங்குங்கள். 
  • "தேவனுடையதை தேவனுக்கும்" — 1 பேதுரு 2:17
    தேவனுடைய சுரூபம் மனிதனில் இருப்பதால் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.(ஆதி 1:26)

“பணக்காசுகளில் காணப்படுகிற உலக ராஜாவின் உருவம்,

மனிதனில் காணப்படுகிற பரலோக ராஜாவின் உருவம்."


இயேசு உண்மையில் சொல்வது, "உங்களின் சரீரம் அரசு கட்டுப்பாடில் இருக்கலாம்ஆனால் உங்கள் ஆத்துமா தேவன் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.

உலக அரசின் கடமைகள்

தேவன் முன் கடமைகள்

வரி செலுத்துதல்

ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுத்தல்

அரசாங்கத்திற்கு கீழ்ப்படிதல்

தேவனுக்கு கீழ்ப்படிதல்

சட்டதிட்டங்களை கடைபிடித்தல்

பைபிள் வார்த்தைகளை கடைபிடித்தல்


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4