மத்தேயு 22:21 விளக்கம் - தேவனுடையதை தேவனுக்கு செலுத்துங்கள்
மத்தேயு 22:21 விளக்கம்
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். -மத்தேயு 22 : 21
வசனத்தின் பின்னணி:
- பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்கள், இயேசுவிடம் வந்து இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ என்று கேட்கிறார்கள்.
- இது ஒரு சிக்கலான கேள்வி.
- அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்து வரிக்காசை எனக்கு காண்பியுங்கள் என்று சொன்னார்.
- அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
- இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
வசனத்தின் அர்த்தம்:
- "இராயனுடையதை இராயனுக்கும்" — ரோமர் 13:7
அந்த சுரூபம் இராயனுடையது என்பதால் அதை அவருக்கே செலுத்துங்கள். நாட்டின் அரசாங்கத்திற்கு தேவையான வரிகளை இராயனுக்கு வழங்குங்கள். - "தேவனுடையதை தேவனுக்கும்" — 1 பேதுரு 2:17
தேவனுடைய சுரூபம் மனிதனில் இருப்பதால் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.(ஆதி 1:26)
“பணக்காசுகளில் காணப்படுகிற உலக ராஜாவின் உருவம்,
மனிதனில் காணப்படுகிற பரலோக ராஜாவின் உருவம்."
இயேசு உண்மையில் சொல்வது, "உங்களின் சரீரம் அரசு கட்டுப்பாடில் இருக்கலாம். ஆனால் உங்கள் ஆத்துமா தேவன் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.
உலக அரசின் கடமைகள் |
தேவன் முன் கடமைகள் |
வரி செலுத்துதல் |
ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுத்தல் |
அரசாங்கத்திற்கு கீழ்ப்படிதல் |
தேவனுக்கு கீழ்ப்படிதல் |
சட்டதிட்டங்களை கடைபிடித்தல் |
பைபிள் வார்த்தைகளை கடைபிடித்தல் |
Comments
Post a Comment