முத்திரை

முத்திரை

உலக மேலதிகாரிக்கு கொடுக்கப்படும் உலக முத்திரை,

கையெழுத்தும் சேர்த்தாலே,
சட்டம் கூட அதற்கு மண்டியிடும்.

ஆனால்,
உலக முத்திரை வேண்டாம் எனக்கு!
விலைமதிப்பற்ற பரலோக முத்திரை,
அவர் எனக்கே அளித்திருக்கிறார்!


பரிசுத்த ஆவியின் முத்திரை!


வெற்றுக் காகிதமாய்,
வேண்டாத பொருளாய் இருந்த எனக்கு,
கொடுக்கப்பட்ட முத்திரை,
என்னை பரலோகத்தில் கொண்டு சேர்க்கும் முத்திரை!


என்னில் தங்கியிருக்கும் அந்த முத்திரை,

பாவங்களை வெறுக்க வைத்த முத்திரை,

நேரம், காலத்திக்கு உட்படாத முத்திரை,

என்னை முற்றிலும் மாற்றிய அந்த முத்திரை.


விலை கொடுத்து வாங்கியது இல்லை,
அவர் கிருபை எனை மறந்ததும் இல்லை.

மரிக்கும் தருவாயில்,
அந்த முத்திரை என்னிடம் இருந்தால்,
பரலோகத்தின் வாசல் தானாய் திறக்கும்!


என் அடையாளம் – இயேசு!
என் உறவு – பிதாவாகிய தேவன்!
என் முத்திரை – பரிசுத்த ஆவி!

(எபேசியர் 1:13, 4:30)

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4