Posts

Showing posts from January, 2025

யாத்திராகமம் 19 – தேவனுடைய அன்பு

யாத்திராகமம் 19 – தேவனுடைய அன்பு  யாத்திராகமம் 19 – தேவன் மோசேயிடம் எத்தனை முறை "ஜனங்கள் அழிந்து போகாதபடி மலையின் மேல் வராதிருக்கடவர்கள்" என்றார்? மொத்தம் மூன்று முறை: முதன்முறையாக (யாத்திராகமம் 19:12-13): தேவன் மோசேயிடம், ஜனங்கள் சீனாய் மலையைத் தொடக்கூடாது; தொட்டால், அவர்கள் இறந்து விடுவார்கள் என்று அறிவுறுத்துகிறார். இதனால், மக்கள் மலைக்கு வராதிருக்க ஒரு எல்லை போடப்படுகிறது. இரண்டாம்முறை (யாத்திராகமம் 19:21-22): தேவன் மோசேயிடம் மீண்டும் சொல்கிறார்: "ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையை கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்கள் அநேகர் அழிந்து போகாதபடிக்கும் அவர்களை எச்சரி” என்று மீண்டும் சொல்கிறார்.  ஆசாரியர்களும் தங்களைப் பரிசுத்தமாக்க வேண்டும், இல்லையெனில் அவர்களும் அழிய நேரிடும் என்று சொல்கிறார். மூன்றாம்முறை (யாத்திராகமம் 19:24): மோசே, மக்கள் ஏற்கனவே தேவனுடைய கட்டளையை மறந்துவிடாமல் இருக்கிறார்கள் என்று நினைத்தாலும், தேவன் மீண்டும், "மக்கள் கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள்!" என்று வலியுறுத்துகிறார். ஆசாரியர்கள் மற்றும் ஜனங்கள் எல்லை மீற...

யாத்திராகமம் 17:8-16 – ஆவிக்குரிய விளக்கம்

  யாத்திராகமம் 17:8-16 – ஆவிக்குரிய விளக்கம் சம்பவம்: அமலேக்கியர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணினார்கள். யோசுவா போர்க்க்களத்தில் யுத்தம் பண்ணினார். மோசே மலையுச்சியின் மேல் தேவனுடைய கோலை உயர்த்தி பிடித்துக் கொண்டு இருந்தார் ஆரோன் மற்றும் ஊர் மோசேயின் கை அசந்து போகும் போது அவன் கைகளை தாங்கினார்கள். இறுதியாக, இஸ்ரவேல் வெற்றி பெற்றது, மற்றும் தேவன் அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.  ஆவிக்குரிய கருத்துக்கள் 1. பகைவரான அமலேக்கியர் – பாவத்தின் ஒப்புமை அமலேக்கியர்  தேவனுடைய ஜனத்துக்கு எதிராக வந்தார்கள் , இது பாவம் மற்றும் சாத்தான் நம்மை எதிர்த்து நிற்பதை எடுத்துக்காட்டுகிறது. இஸ்ரவேலர்கள்  எகிப்திலிருந்து மீட்கப்பட்ட பிறகு  இந்தத் தாக்குதல் நடந்தது. இதுவே  முடிவற்ற ஆவிக்குரிய யுத்தம்  – இரட்சிப்புக்கு பிறகு, உலகமும், சாத்தானும், மாம்ச ஆசைகளும் நம்மைத் தொடர்ந்து தாக்கும். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக...

ஆதியாகமம் 5 - ஆயுட்கால அட்டவணை

ஆதியாகமம் 5 அட்டவணை பெயர் மொத்த   ஆயுட்காலம் ஆதாம் 930  ஆண்டுகள் சேத் 912  ஆண்டுகள் ஏனோஸ் 905  ஆண்டுகள் கேனான் 910  ஆண்டுகள் மகலாலெயேல் 895  ஆண்டுகள் யாரேத் 962  ஆண்டுகள் ஏனோக்கு 365  ஆண்டுகள் மெத்தூசலா 969  ஆண்டுகள் லாமேக்கு 777  ஆண்டுகள் நோவா 950  ஆண்டுகள்

ஆதியாகமத்தில் உருவாக்கப்பட்ட பலிபீடங்கள்

ஆதியாகமத்தில் பலிபீடங்கள் குறித்த முக்கிய அம்சங்கள் நோவாவின் காலத்தில் ஆதியாகமத்தில் முதன்முதலாக பலிபீடத்தை கட்டியவர்  நோவா .  அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான் (ஆதி 8 : 20) ஆபிரகாமின் காலத்தில்: சீகேம்: அவர் மோரே என்னும் சம பூமிமட்டும் வந்து, அங்கு ஒரு பலிபீடத்தை அமைத்தார். கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான் . (ஆதி 12 : 7) பெத்தேல்: பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி , கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். (ஆதி 12 : 8). மம்ரே (எப்ரோன்): அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை...

ஆபிரகாம் பயணித்த இடங்கள்

ஆபிரகாம் பயணித்த இடங்கள் ஆபிரகாமின் பயணங்கள் (அவர் மெசொப்பொத்தோமியாவில் இருந்து கிளம்பியபோது) பின்வருமாறு: 1. ஊர் (Ur of the Chaldeans): இது மெசொப்பொத்தோமியாவில் இருந்த நகரம், ஆபிரகாம் வாழ்ந்த நகரம். அப்போது தான் கர்த்தர் ஆபிராமை அழைத்தார்.  ஆதியாகமம் 11:31–12:1 2. ஆரான் (Haran): ஆபிராம், அவரது தந்தை தேராகு மற்றும் குடும்பத்துடன்  ஆரான்  நகருக்கு சென்றார். தேராகு ஆரானில் மரித்தார். ஆதியாகமம் 11:31–32 3. கானான் தேசம்: ஆண்டவரின் கட்டளையின்படி, ஆபிரகாம் ஆரானில் இருந்து  கானான்  தேசத்திற்கு சென்றார். ஆதியாகமம் 12:5–6 அவர் முதலில்  சீகேமில் (Shechem)  தங்கி, "மோரே என்னும் சம பூமிமட்டும்" வந்தார். பின்னர்,  பெத்தேல்  மற்றும்  ஆய்  இந்த இரண்டு பட்டணங்களுக்கும் இடையே கூடாரம் அமைத்தார். 4. எகிப்து (Egypt): கானானில் பஞ்சம் ஏற்பட்டபோது, ஆபிரகாம் தனது மனைவியுடன்  எகிப்துக்கு  சென்றார். அங்கே அவர் சாராய் (Sarai) தனது மனைவியென சொல்லாமல்  "என் சகோதரி"  என்று கூறினார். ஆதியாகமம் 12:10–20 5. பெத்தேல் (Bethel): எகிப்திலிருந்து திர...

பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகி

பானபாத்திரக்காரன் (Butler or cup-bearer) பானபாத்திரக்காரன்" என்பவர் “பார்வோனுக்கு பானம் பரிமாறும் மனிதன்” என்று பொருள். அதாவது திராட்சரசம் பரிமாறுவர்.  சுயம்பாகி (Baker or chief Baker) “சுயம்பாகி" என்பது உணவை சமைப்பவர் என்று பொருள். இவரே ராஜா உண்ணும் உணவை முதலில் சாப்பிடுபவர்.  அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் ராஜா அதை உண்ணுவார். அடங்கியிருக்கும் இரகசியம் - ஆதி 40:21:22 “பானபாத்திரக்காரன்” என்பது  கிறிஸ்துவின் இரத்தத்தை குறிக்கிறது.  “சுயம்பாகி” என்பது  கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறது.  கிறிஸ்துவின் இரத்தமே நமக்கு ஜீவன் தருகிறது. அதனாலேயே இங்கு அந்த  பானபாத்திரகாரன் உயிரோடே வைக்கப்பட்டார். கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டது. அதனாலேயே அந்த  சுயம்பாகி கொல்லப்பட்டான்.  நாம் கர்த்தரின் சரீரத்தோடு ஆவியில் மரித்து, அவர் சிந்தின இரத்தத்தின் மூலம் ஆவியில் உயிரடைந்தற்கு அடையாளமாகவே திருவிருந்து எடுக்கிறோம். இந்த சுயம்பாகி மற்றும் பானபாத்திரகாரன் சம்பவத்தில் இவ்வளவு பெரிய இரகசியம் இருப்பது இன்றே எனக்கு தெரிந்தது. 

சிருஷ்டிப்பு

ஆண்டவர் சிருஷ்டிப்பு 7 நாள் நிகழ்வுகள்: 1. முதல் நாள்: வெளிச்சம் ஆண்டவர் வெளிச்சத்தை படைத்தார். வெளிச்சத்தையும் இருளையும் பிரித்தார். வெளிச்சத்துக்கு "பகல்" என்று, இருளுக்கு "இரவு" என்று பெயரிட்டார். (ஆதியாகமம் 1:3–5) 2. இரண்டாம் நாள்: வானம் ஆண்டவர் நீரின் மத்தியில் ஒரு ஆகாயவிரிவை உருவாக்கினார். மேலுள்ள நீர் மற்றும் கீழுள்ள நீர் என்று தனியாக பிரிக்கப்பட்டது. வானத்துக்கு "ஆகாயம்" என்று பெயரிட்டார். (ஆதியாகமம் 1:6–8) 3. மூன்றாம் நாள்: நிலம், கடல் மற்றும் தாவரங்கள் கீழுள்ள நீர் ஒன்று சேர்ந்து "கடல்" என்றழைக்கப்பட்டதாலும், காய்ந்த நிலம் "பூமி" என்று அழைக்கப்பட்டதாலும் புதிய நிலை உருவானது. பூமியில் பச்சை தாவரங்கள், மரங்கள் மற்றும் விதைகளைக் கொண்ட தாவரங்களை படைத்தார். (ஆதியாகமம் 1:9–13) 4. நான்காம் நாள்: சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆண்டவர் ஆகாயவிரிவில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உருவாக்கினார். அவை பகலையும் இரவையும் ஆளும் விளக்குகளாக இருந்தன. (ஆதியாகமம் 1:14–19) 5. ஐந்தாம் நாள்: கடல் உயிரினங்கள் மற்றும் பறவைகள் கடலில் மீன்க...

யாக்கோபின் 12 புத்திரர்களும், அர்த்தங்களும்

12 புத்திரர்கள்  1) ரூபன் ……………கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார் (ஆதி 29 : 32) 2) சிமியோன்   ……………நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி , இவனையும் எனக்குத் தந்தார். (ஆதி 29 : 33) 3) லேவி   ………என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் . (ஆதி 29 : 34) 4) யூதா …… 12 புத்திரர்கள்….இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். (ஆதி 29 : 35) 5) தாண்   …………தேவன் என் வழக்கைத் தீர்த்து , என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார். (ஆதி 30 : 6) 6) நப்தலி   …….நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன். (ஆதி 30 : 8) 7) காத் …….. ஏராளமாகிறதென்று சொல்லி (ஆதி 30 : 11) 8) ஆசேர் …… லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள். (ஆதி 30 : 13) 9) இசக்கார்   …… லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி (ஆதி 30 : 18) 10) செபுலோன் ……….தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்...

தாண் கோத்திரம்

தாண் கோத்திரம் யார் இந்த தாண்:  தாண் கோத்திரம்  என்பது யாக்கோபின் பன்னிரு மகன்களில் ஒருவரான தாணின் சந்ததிகளாகும்.  தாண், ராகேலின் பணிவிடைக்காரியாகிய பில்காளின் முதல் மகன் ஆவார் ( ஆதியாகமம் 30:5-6). பெயர்க்காரணம்: அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.  -ஆதியாகமம் 30 : 6 ஆதியாகமம் 49:16-18: தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.  -ஆதியாகமம் 49 : 16 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.  -ஆதியாகமம் 49 : 17 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.  -ஆதியாகமம் 49 : 18 யாக்கோபின் ஆசீர்வாதம் (ஆதி. 49:16-18): தாண் கோத்திரம்  நீதியை வழங்கும்  தன்மையைக் கொண்டதாக இருக்கும். அதேசமயம்,  சர்ப்பம் போன்ற தந்திரத்தன்மை  கொண்டதாகவும், எதிரிகளை தோற்க...

கானானில் இருந்து எகிப்துக்கு போன 70 பேரின் பட்டியல்

கானானில் இருந்து எகிப்துக்கு போன 70 பேரின் பட்டியல்  பைபிளில்   ஆதியாகமம் 46   அதிகாரத்தில் யாக்கோபின் குடும்பத்தினர் (இஸ்ரவேல்) கானானிலிருந்து எகிப்துக்கு சென்ற 70 பேரின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாக்கோபின் சந்ததிகளை விவரிக்கிறது. பட்டியல்  யாக்கோபின்  மகன் யோசேப்பின் அழைப்பின் காரணமாக எகிப்துக்கு பயணம் செய்தவர்களைக் கொண்டது. பட்டியல்: யாக்கோபின் குடும்பத்தினர் லேயாள் வழி வந்தவர்கள் லேயாள் யாக்கோபின் முதல் மனைவியாக இருந்தவர். அவரின் சந்ததிகள்: 1) ரூபன்   (யாக்கோபின் முதற்பிறந்தவர்) ஆனோக்கு  பல்லூ  எஸ்ரோன்  கர்மீ  (ரூபனின் 4 பிள்ளைகள்) 2) சிமியோன்  எமுவேல்  யாமின்  ஓகாத்  யாகீன்  சொகார் கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் (சிமியோனின் 6 பிள்ளைகள்) 3) லேவி  கெர்சோன்  கோகாத்  மெராரி  (லேவியின் 3 பிள்ளைகள்) 4) யூதா  ஏர் (இறந்து விட்டார்) ஓனான் (இறந்து விட்டார்) சேலா  பாரேஸ்  எஸ்ரோன்  ஆமூல்  சேரா  (யூதாவின் 5 பிள்ளைகள்) 5) இசக்கார்  தோலா  பூவா...

ஆதியாகமம் புத்தகத்தில் காணப்படும் ஆசாரியன்

ஆதியாகமம் புத்தகத்தில் 3 விதமான ஆசாரியர்களை நீங்கள் காண முடியும். 1)  சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான் ; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.  -ஆதியாகமம் 4 : 22 இது ஆங்கிலத்தில் Tubalcain, an instructer of every artificer in brass and iron என்று கொடுக்கப்பட்டு இருக்கும்.  அதன் அர்த்தம் பயிற்றுவிப்பாளர்.

யார் இந்த ரேகாபியர்கள்

ரேகாபியர்கள்: ஒரு சரியான ஆய்வு ரேகாபியர்கள் என்பது பழைய ஏற்பாட்டில் காணப்படும் இஸ்ரவேல் சமூகத்தின் ஒரு சிறப்பு வாய்ந்த மக்கள் குலமாகும்.  அவர்கள் எரேமியா 35-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  ரேகாபியர்கள் ரேகாபின் சந்ததிகளாக விளங்கிய மக்கள்.  குறிப்பாக, யோனதாப் எனும் ரேகாபின் மகன் இவர்களுக்குள் முக்கியமான பாத்திரம் வகித்தார். வாழ்க்கை முறையும் வாழ்க்கை தத்துவமும் ரேகாபியர்கள் தனது வாழ்க்கையை தங்கள் முற்பிதா யோனாதாப் கற்பித்தபடி தலைமுறை தலைமுறையாக ஒழுக்கமான முறையில் வாழ்ந்தனர். அவர்கள்: மது அருந்தாமை  - அவர்கள் வாழ்வில் திராட்சரசம் அருந்துவதை தவிர்த்தனர். வீடுகளில் வாழாமை  - அவர்கள் வீடுகளில் குடியேறாமல் கூடாரங்களில் குடியிருந்தனர். நிலத்தைப் பயிரிடாமை   - நிலத்தை வாங்கி விவசாயம் செய்யாமல், விதைக்காமல், அறுக்காமல் வாழ்ந்தனர். எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த ரேகாபியர்கள் எரேமியா 35-ஆம் அதிகாரத்தில், தேவன் எரேமியாவிற்கு ரேகாபியர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டினார்.  எரேமியா அவர்கள் திராட்சரசத்தை அருந்துமாறு கேட்டபோதும், அவர்கள் தங்கள் முன்னோர்க...

மத்தேயு 27:34 விளக்கம்

இயேசு சிலுவையில் முதன்முறை கசப்பு கலந்த காடியை குடிக்க மனதில்லாதிருந்தார் (மத்தேயு 27:34), ஆனால் அவர் அந்த காடியை இரண்டாவது முறை குடித்தார் (யோவான் 19:30). ஏன்?   இங்கு குறிப்பிடப்படும் காடி என்பது கிரேக்க மொழியில் Oxos என்று அழைக்கப்படும். ரோமானியர்கள் உடலில் உறைந்த இரத்தத்தை வெளியே கொண்டு வருவதற்காக இந்த மருந்தை பயன்படுத்தினார்கள்.  சிலுவையில் மரிப்பவர்களின் உடலில் இருந்து வருகிற ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.  எனவே தான் சிருவையில் தொங்கி கொண்டிருந்த இயேசுவுக்கும் இதைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் சிலுவையில் இருந்தபோது, அவருடைய இரத்தத்தில் கொஞ்சம் அவருடைய விலாவில் உறைந்திருந்தது.  எனவே அவர் அந்த காடியை இரண்டாவது முறை எடுத்த பின்னர் தன் ஆவியை விட்டார்.  பின்னர், போர்ச்சேவகர் ஒரு ஈட்டியால் அவரது விலாவை குத்தியபோது, இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவான் 19:34).  கடைசியில் கொஞ்சம் இரத்தம் அவர் உடலில் உறைந்திருப்பதை அவர் அறிந்ததினால் அந்த காடியை எடுத்தார்.  அதைத் தன் உடலில் இருந்து அகற்ற, இயேசு காடியை குடித்தார். ...