ஆதியாகமத்தில் உருவாக்கப்பட்ட பலிபீடங்கள்

ஆதியாகமத்தில் பலிபீடங்கள் குறித்த முக்கிய அம்சங்கள்

நோவாவின் காலத்தில்
  • ஆதியாகமத்தில் முதன்முதலாக பலிபீடத்தை கட்டியவர் நோவா
  • அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான் (ஆதி 8 : 20)

ஆபிரகாமின் காலத்தில்:

சீகேம்:

  • அவர் மோரே என்னும் சம பூமிமட்டும் வந்து, அங்கு ஒரு பலிபீடத்தை அமைத்தார்.
  • கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். (ஆதி 12 : 7)

பெத்தேல்:

  • பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். (ஆதி 12 : 8).

மம்ரே (எப்ரோன்):

  • அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். (ஆதி 13 : 18)

மோரியா மலை:

  • தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். (ஆதி 22 : 9).


ஈசாக்கின் காலத்தில்:
  • அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். (ஆதி 26 : 25)
  • இது கானான் தேசத்தில், அவர் இருந்தபோது நடைபெற்றது.

யாக்கோபின் காலத்தில்

பெத்தேல்:

  • அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். (ஆதி 35 : 7)
  • ஏல்பெத்தேல்
    • பெத்தேல் என்றால் “தேவனுடைய வீடு” என்று அர்த்தம். 
    • ஏல்பெத்தேல் “தேவனுடைய வீட்டின் தேவன்” என்று அர்த்தம். 
சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணம்:
  • அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான். (ஆதி 33 : 20)
  • ஏல் எலோகே இஸ்ரவேல்" என்பது எபிரேய மொழியில் இருந்து வந்த சொற்களாகும். இதன் அர்த்தம்:
    • "ஏல்" (El): “தேவன் அல்லது வல்லமையுள்ளவர்”.
    • "எலோகே" (Elohe): "இஸ்ரவேலின் தேவன்"
    • "இஸ்ரவேல்" (Israel): "தேவனுடன் போராடியவர்" அல்லது "தேவனால் ஆட்கொள்ளப்பட்டவர்" என்ற பொருள் கொண்ட பெயர்.
    • "இஸ்ரவேலின் உண்மையான தேவன்” என்று அர்த்தம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4