யாக்கோபின் 12 புத்திரர்களும், அர்த்தங்களும்
12 புத்திரர்கள்
1) ரூபன்
……………கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார் (ஆதி 29 : 32)
2) சிமியோன்
……………நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார். (ஆதி 29 : 33)
3) லேவி
………என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார். (ஆதி 29 : 34)
4) யூதா
…… 12 புத்திரர்கள்….இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். (ஆதி 29 : 35)
5) தாண்
…………தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார். (ஆதி 30 : 6)
6) நப்தலி
…….நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன். (ஆதி 30 : 8)
7) காத்
……..ஏராளமாகிறதென்று சொல்லி (ஆதி 30 : 11)
8) ஆசேர்
…… லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள். (ஆதி 30 : 13)
9) இசக்கார்
…… லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி (ஆதி 30 : 18)
10) செபுலோன்
……….தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, (ஆதி 30 : 20)
பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
-ஆதியாகமம் 30 : 21
-ஆதியாகமம் 30 : 21
11) யோசேப்பு
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, (ஆதி 30 : 23-24)
12) பென்யமீன்
மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.(ஆதி 35 : 18)
பெனொனி - வருத்தத்தின் மகன்
பென்யமீன் - என் வலது கரத்தின் மகன்
Comments
Post a Comment