யாத்திராகமம் 19 – தேவனுடைய அன்பு
யாத்திராகமம் 19 – தேவனுடைய அன்பு
யாத்திராகமம் 19 – தேவன் மோசேயிடம் எத்தனை முறை "ஜனங்கள் அழிந்து போகாதபடி மலையின் மேல் வராதிருக்கடவர்கள்" என்றார்?
மொத்தம் மூன்று முறை:
முதன்முறையாக (யாத்திராகமம் 19:12-13):
- தேவன் மோசேயிடம், ஜனங்கள் சீனாய் மலையைத் தொடக்கூடாது; தொட்டால், அவர்கள் இறந்து விடுவார்கள் என்று அறிவுறுத்துகிறார்.
- இதனால், மக்கள் மலைக்கு வராதிருக்க ஒரு எல்லை போடப்படுகிறது.
- தேவன் மோசேயிடம் மீண்டும் சொல்கிறார்:
- "ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையை கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்கள் அநேகர் அழிந்து போகாதபடிக்கும் அவர்களை எச்சரி” என்று மீண்டும் சொல்கிறார்.
- ஆசாரியர்களும் தங்களைப் பரிசுத்தமாக்க வேண்டும், இல்லையெனில் அவர்களும் அழிய நேரிடும் என்று சொல்கிறார்.
- மக்கள் ஏற்கனவே தேவனுடைய கட்டளையை மறந்துவிடாமல் இருக்கிறார்கள் என்று மோசே நினைத்தாலும்,
- தேவன் மீண்டும், "மக்கள் கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள்!" என்று வலியுறுத்துகிறார்.
- ஆசாரியர்கள் மற்றும் ஜனங்கள் எல்லை மீறினால் அழிவார்கள் என்று அவர் மீண்டும் எச்சரிக்கிறார்.
இந்தச் சம்பவத்தில் உள்ள இரகசியம்
மனிதன் பாவத்துடன் நேரடியாக தேவனை அணுக முடியாது
- தேவன் பரிசுத்தர்; மனிதன் பாவம் நிறைந்தவன்.
- தேவனை உண்மையிலேயே காண பரிசுத்தம் அவசியம்.
ஏசாயா 6 : 5
“யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.”
எபிரேயர் 12 : 14
தேவன் மனிதனை பாதுகாக்க விரும்புகிறார்
- தேவன் "நீங்கள் என்னை நேரடியாக காண வந்தால், உயிரோடிருக்க முடியாது" என்று மூன்று முறை எச்சரிக்கிறார்.
- இது தேவனுடைய கிருபை – மனிதன் தேவனுடைய(பிதா) நீதியான நியாயத்திற்குள் விழாமல் காக்க அவரே முயற்சிக்கிறார்.
- தேவன் மக்களை அழிக்க விரும்பவில்லை, அவர்களை பாதுகாக்கவே எச்சரிக்கிறார்.
-2 பேதுரு 3 : 9
இயேசுவின் இரத்தத்தின் ஊடாக, பரிசுத்த ஸ்தலத்தில் நுழைவதற்கு தைரியம் பெற்றிருக்கிறோம். (எபிரேயர் 10:19)
தேவனுடைய அன்பும், கிருபையும் இதிலுள்ளது
- தேவன் மூன்று முறை எச்சரிக்கிறார் – இதுவே அவரது நீண்ட பொறுமையையும், அன்பையும் காட்டுகிறது.
- தேவன் உடனடியாக தண்டிக்கவில்லை; பதிலாக மறுபடியும், மறுபடியும் நினைவூட்டுகிறார்.
- மனிதர்கள் தேவனை நேரடியாக காண முடியாது என்றாலும், தேவன் மோசேயை நடுவராக வைத்தார் – இது இயேசுவின் முன்மாதிரியாக அமைகிறது.
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
-1 தீமோத்தேயு 2 : 5
தற்போது, புதிய ஏற்பாட்டில்
யாத்திராகமம் 19 இல் தேவனுடைய பரிசுத்தமும், மனிதனைப் பாதுகாக்கும் அவருடைய கிருபையும் வெளிப்படுகிறது.
Comments
Post a Comment