Posts

Showing posts from September, 2024

தானியேல் புத்தகத்தில் வரும் பெயர்களின் அர்த்தம்

தானியேல் புத்தகத்தில் வரும் பெயர்களின் அர்த்தம் கல்தேயப் பெயர்கள் எபிரேய மொழிகளுடன் தொடர்புடையவை, எல் மற்றும் யா என்ற பெயர்கள் பாபிலோனிய கோட்பாடுகளால் மாற்றப்படுகின்றன. 1) தானியேல் என்றால் “தேவன் என் நியாயாதிபதி”, பெல்தெஷாத்சார் என்றால் “பாகாலின் பொக்கிஷம்”. 2)அனனியா என்றால் “தேவன் என் மீது கிருபையாய் இருக்கக்கடவர்”,  சாத்ராக் என்றால் “சூரியக் கடவுளினால் படைக்கப்பட்டவர்”. 3)மீஷாவேல் என்றால் “தேவனிடமிருந்து வருகிறது”, மேஷாக் என்றால் “ஷாக் என்ற பாபிலோனிய தெய்வத்தின் பெயர்”. 4)அசரியா என்றால் “எனக்கு உதவி செய்யும் தேவன்”, ஆபெத்நெகோ என்றால் @நீகோ என்ற பாபிலோனிய தெய்வத்தின் பெயர்”. The Chaldean names are related to the Hebrew ones, with the names El and Yah replaced by Babylonian theonyms  1) Daniel  means “God is my judge”,  Belteshazzar , means “favored by Bel."  2) Hananiah  means “beloved of the Lord",  Shadrach  means “illumined by Rak," the sun god. 3) Mishael  means “who is as God",  Meshach  means “who is like Shak," the Babylonia...

லூக்கா 19:10 விளக்கம்

லூக்கா 19:10 விளக்கம் இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.  -லூக்கா 19 : 10 இழந்துபோனது என்ன? எதை இரட்சிக்கும்படி மனுஷகுமாரன் வந்தார்? உலகத்தின் மீதான அதிகாரம். ஆதாம் பிசாசிடம் இழந்து போன அந்த அதிகாரத்தை அவனிடமிருந்து மீட்கும்படி இயேசு வந்தார்.  ஆதி 1:28 ல்    கர்த்தர் ஆதாமிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி……….ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்கிறார் ஆதி 9:1-2 ல் கர்த்தர் நோவாவிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்கிறார்…..யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன என்றுக் கூறுகிறார்.  ஏன் நோவாவிடம் “கீழ்ப்படுத்தி” என்று கர்த்தர் கூறவில்லை.  ஏனென்றால் இப்போது பூமியின் அதிகாரம் சாத்தானிடம் போய் விட்டது.  அதை கீழ்ப்படுத்திக் கொள்ள மக்களால் முடியாது.

Adam and jesus

  Adam and Jesus Adam Jesus Gen 3:4-6 Matt  4:2-9 What Satan talked to Adam What Satan talked to Jesus Satan told Adam to eat the fruit. He listened to him. Satan told Jesus to make stones in to bread and eat, because he was very hungry of fasting. He didn’t listened to him. Satan told Adam, that he will not die even if he eat the fruit. He fell in to the Satan’s tricks. Satan told Jesus to throw himself down and he will not die, angels will save him. He doesn’t fall on his tricks. Satan told Adam, You will be like God. He trusted his words. Satan told Jesus, he will give all the kingdoms of the world to him. Jesus doesn’t trust his words. He lost to the Devil He defeated the Devil  He lost the Authority of the world  He restored the Authority of the world.

எலியா ஜெபித்த 5 ஜெபங்கள்

  எலியா ஜெபித்த 5 ஜெபங்கள் முதலாவது ஜெபம் - மழை பெய்யாதபடிக்கு (யாக்கோபு 5:17) இரண்டாவது ஜெபம் - சாறிபாத் விதவையின் மகனை காப்பாற்ற (1 இராஜாக்கள் 17:21-22)- 3 முறை மூன்றாவது ஜெபம் - 1 இராஜாக்கள் 18:36-37 நான்காவது ஜெபம் - 1 இராஜாக்கள் 18:42-45 - 7 முறை ஐந்தாவது ஜெபம் - 1 இராஜாக்கள் 19:4

தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள் வீழ்கிறேன்! என் தவறுகளால் அழுகிறேன்! என் பெலவீனத்தால் எழுகிறேன்! அவர் பெலத்தால்

கிரீடம்

கிரீடம் இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.  -வெளிப்படுத்தல் 3 : 11 இங்கு சொல்லப்படும் கிரீடம் என்பது என்ன? பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.  -லேவியராகமம் 21 : 12 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.  -எபேசியர் 4 : 30

தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார்

தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார். சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் போது அவருக்கு சுமார் 15 வயது இருக்கும். ஆனால் அவர் ராஜாவாக பதவி ஏற்கும் போது 30 வயதாய் இருந்தார். ஆனால் தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?  சவுல் 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினார் என்பது நமக்கு தெரியும்.  ஆனால் அவர் ஒரு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி, இரண்டாம் வருஷம் அரசாண்டு கொண்டிருந்த பொழுது (1 சாமு 13:1)  ஒரு முறை சாமுவேல் குறித்த காலத்தில் வராத போது, லேவியர்கள் செய்ய வேண்டிய சர்வாங்கதகனபலியை தானே செலுத்துகிறார்.  ஆனால் சவுல் பென்யமீன் கோத்திரத்தான்.  இதன் நிமித்தம் சாமுவேலை கடிந்து கொண்டு இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார் என்றான். (1 சாமு 13:14).  இந்த சம்பவம் நடந்தது சவுலின் இரண்டாம் வருஷ ராஜ்யபாரத்தில்.  ஆனால் வசனம் சொல்லுகிறது தாவீது ராஜாவாகும் போது 30 வயதாக இருந்தான் என்று. (2 சாமு 5:4).  சவுல் ரா...

நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது?

  நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது? அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி( Seed-வித்து ) வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக்( transgressions - மீறுதலின் நிமித்தம் ) கூட்டப்பட்டு தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.  -கலாத்தியர் 3 : 19 Galatians 3:19 Wherefore then serveth the law? It was added because of transgressions, till the seed should come to whom the promise was made; and it was ordained by angels in the hand of a mediator. வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி(வித்து) அதாவது இயேசுவானவர் வரும் வருக்கும், மக்களுடைய மீறுதலின் நிமித்தம் நியாயப்பிரமாணம் தற்காலிகமாக தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கொடுக்கப்பட்டது.