உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம் சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. -உன்னதப்பாட்டு 1 : 1 விளக்கம் : சாலொமோன் பாடின இந்த புத்தகம், ஒரு தீர்க்கத்தரிசனம் கலந்த கவிதைப் பாடல் என்றே சொல்லலாம். ————————————————————————- வசனம் 2-7: சாலொமோனை (மணவாளனாகிய இயேசுவை) பார்த்து, சூலமித்தியாள்(மணவாட்டியாகிய சபை) பாடுகிறாள். ————————————————————————- அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. -உன்னதப்பாட்டு 1 : 2 விளக்கம் : அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக சபை சொல்கிறது, மணவாளரே! இயேசுவே! உங்களால் எனக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் முத்தம், அதாவது உங்கள் வார்த்தை. கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் தேவனுடைய வார்த்தை தான். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. - யோவான் 1 : 1 அந்த வார்த்தை மாம்சமாகி , கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய ...
Comments
Post a Comment