லூக்கா 19:10 விளக்கம்
லூக்கா 19:10 விளக்கம்
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
-லூக்கா 19 : 10
-லூக்கா 19 : 10
இழந்துபோனது என்ன? எதை இரட்சிக்கும்படி மனுஷகுமாரன் வந்தார்?
- உலகத்தின் மீதான அதிகாரம்.
- ஆதாம் பிசாசிடம் இழந்து போன அந்த அதிகாரத்தை அவனிடமிருந்து மீட்கும்படி இயேசு வந்தார்.
ஆதி 1:28 ல் கர்த்தர் ஆதாமிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி……….ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்கிறார்
ஆதி 9:1-2 ல் கர்த்தர் நோவாவிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்கிறார்…..யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன என்றுக் கூறுகிறார்.
- ஏன் நோவாவிடம் “கீழ்ப்படுத்தி” என்று கர்த்தர் கூறவில்லை.
- ஏனென்றால் இப்போது பூமியின் அதிகாரம் சாத்தானிடம் போய் விட்டது.
- அதை கீழ்ப்படுத்திக் கொள்ள மக்களால் முடியாது.
Comments
Post a Comment