தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார்

தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார்.

சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் போது அவருக்கு சுமார் 15 வயது இருக்கும். ஆனால் அவர் ராஜாவாக பதவி ஏற்கும் போது 30 வயதாய் இருந்தார். ஆனால் தாவீது பிறக்கும் போதே ராஜாவாக பிறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? 

  • சவுல் 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினார் என்பது நமக்கு தெரியும். 
  • ஆனால் அவர் ஒரு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி, இரண்டாம் வருஷம் அரசாண்டு கொண்டிருந்த பொழுது (1 சாமு 13:1) ஒரு முறை சாமுவேல் குறித்த காலத்தில் வராத போது, லேவியர்கள் செய்ய வேண்டிய சர்வாங்கதகனபலியை தானே செலுத்துகிறார். 
  • ஆனால் சவுல் பென்யமீன் கோத்திரத்தான். 
  • இதன் நிமித்தம் சாமுவேலை கடிந்து கொண்டு இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார் என்றான். (1 சாமு 13:14). 
  • இந்த சம்பவம் நடந்தது சவுலின் இரண்டாம் வருஷ ராஜ்யபாரத்தில். 
  • ஆனால் வசனம் சொல்லுகிறது தாவீது ராஜாவாகும் போது 30 வயதாக இருந்தான் என்று. (2 சாமு 5:4). 
  • சவுல் ராஜ்யபாரம் பண்ணி, இந்த தவறை செய்த பிறகு 38 வருஷம் ராஜ்யபாரம் பண்ணுகிறார்.
  • தாவீது பிறப்பதற்கு 8 வருஷங்களுக்கு முன்பே, கர்த்தர் அவனை ராஜாவாக ஏற்படுத்துவேன் என்று கட்டளையிட்டு விட்டார்.  
  • அதனால் தான் மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் தாவீது ராஜாவை பெற்றான் என்று எழுதப்பட்டிருக்கும் (மத் 1:6)

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4