Posts

Showing posts from August, 2023

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம் அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.    -தானியேல் 9 : 27 ஒரு வாரம் என்பது 7 நாட்கள்.  அது 7 வருடங்களைக் குறிப்பிடுகிறது.  அதாவது அதில் 3 1/2 வருடங்கள் சென்ற பிறகு அந்திக் கிறிஸ்து வந்து சொல்லுவான், யூதர்கள் இனி பலி செலுத்த முடியாது என்று.  அவன் வந்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பான். அவனுக்கு ஒன்றும் ஆகாது.  ஏனென்றால் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இல்லை. 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 11 விளக்கம்

Image
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 11 விளக்கம் பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.  -வெளிப்படுத்தல் 11 : 1 இந்த இடத்தில் 3 காரியங்களைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.  தேவாலயம், பலிபீடம், தொழுது கொள்ளுகிறவர்கள் .  தேவாலயத்திலே தொழுது கொள்ளுகிறவர்கள் யார்? யூதர்கள் மாத்திரம் தானே. அப்படியானால் அந்த 7 வருடங்களுக்குள்ளே, யூதர்கள் மீண்டும் ஒரு முறை தேவாலயத்தைக் கட்டி தேவனை ஆராதிக்கப் போகிறார்கள்.  இன்றைக்கு அப்படி இல்லை.  இன்றைக்கு இந்த நிகழ்காலத்திலே யூதர்களுக்கு ஒரு தேவாலயம் இல்லை.  அப்படியானால் அவர்கள் எப்படி தொழுது கொள்ளுகிறார்கள்.  அவர்கள் ஜெப வீடுகளுக்கு வந்து TORAH - பழைய ஏற்பாட்டின் ஆகமங்களை வாசித்து, சங்கீதங்களில் இருக்கிற சில சங்கீதங்களைப் பாடி, ஒரு ரபீ-யினுடைய போகத்தை கேட்டு விட்டு செல்கிறார்கள்.  உலகத்தில் எங்கு இருந்தாலும் அந்த SABBATH - ஓய்வுநாளாகிய சனிக்கிழமையில் அப்படி தான...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 10 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 10 விளக்கம் பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.  -வெளிப்படுத்தல் 10 : 1 6 வது எக்காளம் ஊதி முடித்தாகி விட்டது. தேவ தூதன் 7 வது எக்காளத்தை ஊத ஆயத்தப்படுகிறார்.  7 வது எக்காளத்தை ஊதும் முன்பதாக வெளி 10-14 ஒரு சம்பவம் இருக்கிறது.  6 வதும், 7 வது எக்காளத்திற்கு இடையிலே முக்கியமாக 2 சம்பவங்கள் இருக்கிறது.  அதில் ஒன்று தான் 10ம் அதிகாரம்.  இரண்டாவது 11 ம் அதிகாரம் பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்;  இந்த தேவ தூதன் யார்? ஆண்டவருடைய பாதத்திலே இரவும் பகலும் இருப்பவர்கள்.  ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவன் அவர்களை உருவாக்கினார்.  ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பவர்கள்.  ஆண்டவருடைய முகத்தை காண்பவர்கள்.  அவர்களுக்கு தராதரங்கள் இருக்கின்றன. மீகாவேல், காபிரியேல் பிரதான தூதர்கள்.  கேரூபீன்க...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 9 விளக்கம்

Image
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 9 விளக்கம் ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.  -வெளிப்படுத்தல் 9 : 1 இங்கு சொல்லப்படுவது எரிகற்கள் அல்ல.  Greek ல் aster- astouros என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. (Masculine noun) “அந்த நட்சத்திரம்” என்று அர்த்தம்.  எந்த நட்சத்திரம்- அதிகாலையிலே மின்னுகிற அந்த நட்சத்திரம்.  லத்தீன் பாஷையில் சொல்லுவோமானால் Luci-fer. ஏசாயா 14 வது அதிகாரத்தில் சொல்லப்படுகிறது, Lucifer என்ற பேர் கொடுக்கப்பட்டு இருப்பது சாத்தானுக்கு.  5 வது எக்காளம் ஊதும் வரையும் சாத்தானுடைய பாதம் பூமியிலே தொடாது.  இன்றைக்கும் பிசாசின் பாதம் பூமியிலே தொடப்படவில்லை.  அவன் தேவதூதனாக இருக்கும் போது ஆண்டவர் அவனை கீழே தள்ளும் போது எசேக்கியேல் 28 ம் அதிகாரம், ஏசாயா 14 ம் அதிகாரம் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, “பூமியை நோக்கி”என்பதாக.  பூமிக்கு வரவில்லை. பூமியை நோக்கி என்று சொல்லப்பட்டுள்ளது.  ஆகையால் எபேசியர் 6 ம் அதிகாரத்தில...

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 8 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 8 விளக்கம் அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.  -வெளிப்படுத்தல் 8 : 1 பரலோகத்தில் காலநேரம் கிடையாது.  ஆண்டவருடைய வெளிச்சம் எப்போதும் அங்கு இருக்கும்.  அங்கு நாட்கள் கிடையாது.  அப்படியென்றால் எப்படி அரை மணி நேரம் என்று கூறப்படுகிறது.  இங்கு ஆண்டவர் யோவானை ஆவியில் எடுத்துக்கொண்டு போனார்.  இயேசு ஆட்டுக்குட்டியானவராக அதாவது மனிதனாக உருவெடுத்த நொடி தொடங்கி 7 வருடம் பரலோகத்தில் இருப்பார் என நாம் 5வது அதிகாரத்தில் பார்த்தோம். அதனால் அரைமணி நேரம் அமைதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏனென்றால் ஏழாவது முத்திரை ஏற்கனவே இருந்த ஆறு முத்திரையை பார்க்கிலும் வேறுபட்டது, பயங்கரமானது.  எனவே அனைவரும் அமைதியாக இருந்து அப்படியே இயேசுவை நோக்கி பார்த்து கொண்டிருந்தார்கள். 

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம் இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.  -வெளிப்படுத்தல் 7 : 1 அந்த 7வது முத்திரையை உடைக்கும் முன்பதாக ஒரு காரியம் நடைபெறுகிறது.  இவைகளுக்கு பின்பு என்றால்,  7 முத்திரைகள் உடைக்கப்பட்ட பின்பு. 6 வது முத்திரை உடைக்கப்படும் தருணத்தில் பூமியில் பயங்கரமான அழிவுகள் ஏற்பட்டன.  சபை இல்லாத உலகத்திற்கு தான் 7 வருடங்கள் மிகுதியாய் இருக்கிறது.  மோசத்திற்கு மேல் மோசம் வந்தது.  இப்போது  நான்கு திசைகளிலும் இருந்து 4 தூதர்கள் வருகிறார்கள்.  அங்கே காற்றை பிடித்திருக்கிறார்கள், ஏன்? ஒரு சிறிய இடைவேளை எடுப்பதற்காக, காற்றை பிடித்திருக்கிறார்கள்.