வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம் அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான். -தானியேல் 9 : 27 ஒரு வாரம் என்பது 7 நாட்கள். அது 7 வருடங்களைக் குறிப்பிடுகிறது. அதாவது அதில் 3 1/2 வருடங்கள் சென்ற பிறகு அந்திக் கிறிஸ்து வந்து சொல்லுவான், யூதர்கள் இனி பலி செலுத்த முடியாது என்று. அவன் வந்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பான். அவனுக்கு ஒன்றும் ஆகாது. ஏனென்றால் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இல்லை.