வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 8 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 8 விளக்கம்
அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 1
-வெளிப்படுத்தல் 8 : 1
- பரலோகத்தில் காலநேரம் கிடையாது.
- ஆண்டவருடைய வெளிச்சம் எப்போதும் அங்கு இருக்கும்.
- அங்கு நாட்கள் கிடையாது.
- அப்படியென்றால் எப்படி அரை மணி நேரம் என்று கூறப்படுகிறது.
- இங்கு ஆண்டவர் யோவானை ஆவியில் எடுத்துக்கொண்டு போனார்.
- இயேசு ஆட்டுக்குட்டியானவராக அதாவது மனிதனாக உருவெடுத்த நொடி தொடங்கி 7 வருடம் பரலோகத்தில் இருப்பார் என நாம் 5வது அதிகாரத்தில் பார்த்தோம்.
- அதனால் அரைமணி நேரம் அமைதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏனென்றால் ஏழாவது முத்திரை ஏற்கனவே இருந்த ஆறு முத்திரையை பார்க்கிலும் வேறுபட்டது, பயங்கரமானது.
- எனவே அனைவரும் அமைதியாக இருந்து அப்படியே இயேசுவை நோக்கி பார்த்து கொண்டிருந்தார்கள்.
பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங்கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 8 : 2
- 7 தேவதூதர்கள் வந்து நிற்கிறார்கள்.
- அவர்களுக்கு 7 எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது.
- எக்காளம் எதைக் குறிக்கிறது.
- அநேக அர்த்தங்கள் இருக்கிறது.
- வெற்றி, யுத்தம்.
- இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்திற்கு போகும் போது அங்கே மக்கள் அணி அணியாக நிற்பார்கள்.
- எக்காளம் ஊதின உடனே தான் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.
- யுத்தத்தில் வெற்றி பெற்ற பின்பு வெற்றிகரமாக தன் நாட்டுக்கு திரும்பி வருவார்களே,அப்போதும் எக்காளம் ஊதிக் கொண்டே தான் வருவார்கள்.
- 7 தூதர்களுக்கு 7 எக்காளங்கள் கொடுக்கப்பட்டதன் அர்த்தம் என்ன?
- இயேசு கிறிஸ்து இந்த 7 தூதர்களோடு பூமியோடு யுத்தம் பண்ணப் போகிறார்.
- அவரே நேரடியாக வந்து யுத்தம் செய்கிற ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.
- இந்த இடத்தில் அவரல்ல இருப்பது.
- 7 தூதர்களுக்கு எக்காளங்கள் கொடுக்கப்படுகின்றன.
- ஒன்றன் பின் ஒன்றாக அதை ஊதும் போது பூமிக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க போகிறோம்.
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 8 : 3
- இன்னுமொரு தூதன் வருகிறார்.
- அவன் பொற்கலசத்தை பிடித்திருந்தான்.
- பொற்கலசம் என்னவென்றால் ஆண்டவருக்கு கொடுக்கும் துதி.
- இது ஒரு அடையாளமாக காட்டப்படுகிறது.
- நாம் நினைக்கிறோம் நம்முடைய ஜெபங்களை ஆண்டவர் கேட்பதே இல்லை என்று.
- ஆனால் பரிசுத்தவான்களின் அனைத்து ஜெபங்களும் கர்த்தரிடத்தில் இருக்கிறது.
- துதியோடே கூட அது இருக்கிறது.
- இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆண்டவரை நோக்கி நாம் ஜெபிக்கும் போது அது விண்ணப்பங்களோடு மாத்திரம் இருக்கக் கூடாது. துதியோடு இருக்க வேண்டும்.
- அநேகருடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத காரணம் என்னவென்றால் அது விண்ணப்பங்களாக மாத்திரமே போகிற படியினாலே.
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 4
- இங்கு அடையாளமாக என்ன காட்டுகிறார் என்றால் பரிசுத்தவான்களுடைய விண்ணப்பங்கள், ஜெபங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்து அதை சுகந்த வர்க்கமாக ஆண்டவருடைய பாதத்தில் வைக்கும் போது ஆண்டவர் சொல்லுகிறார் இந்த ஜெபங்களுக்கு பதிலாக நான் நியாயந்தீர்க்கப் போகின்றேன்.
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
-வெளிப்படுத்தல் 8 : 5
- அந்த தூதன் பாத்திரத்தை எடுத்து அந்த உள்ள இருக்கின்ற எல்லா விண்ணப்பங்களையும் அப்படியே பூமியிலே கொட்டுவார்.
- எத்தனையோ வருடங்களாக மக்கள் ஆண்டவரிடத்தில் கேட்ட ஜெபங்களுக்கு ஆண்டவர் பதில் கொடுப்பார்.
அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
-வெளிப்படுத்தல் 8 : 6
- 7 முத்திரையை உடைக்கும் போது என்ன நடந்தது என்று பார்த்தோம்.
- இப்போது 7 எக்காளங்கள் ஊதும் போது என்ன நடக்கப் போகிறது எனப் பார்ப்போம்.
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 7
- அங்கு இயற்கைக்கு கூட ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு வரப் போகிறது.
- அந்த 7 வருட காலத்தில் தான் இது நடைபெறும்.
- முதலாவது எக்காளம் ஊதும் போது பசும்புல்லுக்கும், மரங்களுக்கும் அவருடைய நியாயத்தீர்ப்பு வருகிறது.
- இந்த பூமியில் இருக்கிற மரங்கள் மூன்றில் ஒரு பங்கு வெந்து போயிற்று என்று சொல்லப்படுகிறது.
- வறண்ட ஒரு நிலை காணப்படும்.
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதனால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 8
- சமுத்திரம் என்று ஒருமையில் சொல்லப்படுகிறது.
- கடல் அல்லது சமுத்திரம்.
- வேதாகமத்தில் கடல் என்று ஒருமையிலே சொல்லி இருந்தால் அது மத்தியத் தரைக்கடலை குறித்து தான் பேசப்படுகிறது.
- வேறு கடல்களை குறித்து அல்ல.
- வேறு கடலை குறித்து சொல்லப்பட்டு இருந்தால் அது அந்த கடலுடைய பெயரோடு சேர்ந்து தான் வரும். எ.கா கலிலேயா கடல், சவக்கடல், சிவந்த சமுத்திரம்.
- எனவே இஸ்ரவேலர்களுக்கு கடல் என்றால் மத்தியத் தரைக்கடல் தான்.
- அந்தக் கடல் ஐரோப்பிற்கும், ஆசியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் அடங்குகிறது.
- புவியியல் என்னவென்றால், பைபிள் காலத்தில் 3 கண்டங்கள் தான் இருந்தன. (Asia, Europe, Africa)
- America, Australia லாம் கண்பிடிக்கப்படவே இல்லை.
- வேத காலத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா இந்த 3 கண்டங்களும் தான் முழு உலகம்.
- இந்த 3 கண்டங்களும் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு கடல் மத்தியத் தரைக் கடல்.
- மத்திய தரைக்கடலுக்கு எதாவது பிரச்சனை வந்தால் அந்த 3 கண்டங்களுக்கும் பிரச்சனை வந்ததற்கு சமானம்.
- மத்தியத் தரைக்கடலை நோக்கிப் பார்த்தீர்களென்றால் Italy, Greece, Cyprus, Cecilia ஐரோப்பாவை சார்ந்த நாடுகள் அங்கு இருக்கின்றன.
- Israel, Lebanon, அந்த ஆசிய நாடுகளும் மத்தியத் தரைக்கடலுக்கு சம்மந்தமாக இருக்கிறது.
- மத்தியத் தரைக்கடல் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல.
- அது கப்பல் பயணத்திற்கு முக்கியம்.
- உலக வணிகத்திற்கு முக்கியம்.
- ஆவிக்குரிய காரியத்துக்கும் முக்கியம்.
- வேதத்துக்கும், எதிர் காலத்திற்கும், கடைசி காலத்திற்கும் முக்கியமான ஒன்று மத்திய தரைக்கடல்.
- இங்கு இரண்டாம் தூதன் எக்காளம் ஊதும் போது மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறும்.
சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 9
- ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு அழிந்து போகும்.
- கப்பல்கள் மூன்றிலொருபங்கு அழிந்து போகும்.
- ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா சமுத்திரம் இரத்தமானதின் நிமித்தம் விஷ வாயுக்கள் அங்கு உருவாகும்.
- மீன்கள் மூன்றில் ஒரு பங்கு மரிக்கிறபடியினாலே உணவுக்கு பிரச்சனை வரும்.
- சாப்பாடு இல்லாமல் போய்விடும்.
- கப்பல்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பாதகம் வருகிறபடியினாலே அங்கே பொருளாதாரத்திற்கும் பிரச்சனை வரும்.
- இரண்டாவது எக்காளத்திலே இந்த 3 கண்டங்களுக்கும் ஒரு பெரிதான தாக்கம் உருவாகும்.
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
-வெளிப்படுத்தல் 8 : 10
- மத்தியத் தரைக்கடலில் இப்படிப்பட்ட தாக்கங்கள் வந்த பிற்பாடு அந்த கடலை ஒட்டி வாழ்பவர்களுக்கு
- அவர்கள் செல்வந்தர்கள், பணக்காரர்கள் அய்யோ நாங்கள் இங்கு இருந்து செத்து போய்விடுவோம் என்று நினைத்து அந்த 3 கண்டங்களையும் விட்டு ஓடிப் போய்விடுவார்கள்.
- எங்கே போவார்கள்? Australia, New Zealand, America
- இப்படி தப்பி போனவர்களுக்கு வரக்கூடிய தாக்கம்.
- ஆண்டவர் துரத்தி துரத்தி அடிப்பார்.
அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
-வெளிப்படுத்தல் 8 : 11
- பெரிதான ஒரு எரிகல் அது பூமிக்கு வருகிறது.
- அது பூமிக்கு வந்து oxygen னுடன் சேர்ந்த பிற்பாடு அக்கினி வரும்.
- துண்டு துண்டாக உடையும்.
- அந்த உடைகிற துண்டுகள் ஆறுகள் மேலும், நீருற்றுகள் மேலும் விழும்.
- மூன்றாவது எக்காளம் பூமியில் இருக்கிற நீர்களுக்கு கொடுக்கிற ஒரு தாக்கம்.
- அதிலே ஒரு இரசாயன திரவியம் இருக்கிறது.
- அது தண்ணீரோடே கலந்தப் பிற்பாடு அந்த தண்ணீர் கசப்பாகி விடும்.
- இது முதலாவது முறையாக நடைபெறுகிறது என்று நினைக்க வேண்டாம்.
- சோதோம் கொமோராவை அழிக்கும் போது வானத்தில் இருந்து வந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல.
- ஒரு எரிகல் வந்தது.
- அதற்கு முன்பதாக சவக்கடல் என்று சொல்லப்படுகிற அந்தக் கடல் நன்நீர் கொண்ட ஒரு குளமாக இருந்தது. அது சுற்றிலும் பசுமையாக இருந்தது.
- அதனால் தான் லோத்து அங்கு சென்றான் ஜீவிப்பதற்கு.
- ஆண்டவர் அழித்த போது எரிகல் விழுந்த பிற்பாடு அதில் இந்த பூமியில் காணப்படாத 19 இரசாயனங்கள் இருந்தது.
- அந்த கடலில் அந்த இரசாயனங்கள் கலக்கப்பட்டது.
- அது கசப்பாக மாறியது.
- அந்த கடலில் இருக்கிற தண்ணீரை எடுத்து வாயில் வைத்தால் அந்த கசப்பு தன்மை போகவே போகாது.
- இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறப் போகிறது.
- அங்கே மற்ற இடங்களுக்கு ஓடிப் போன நபர்கள் நினைக்கவில்லை இப்படி நடைபெறும் என்பதாக.
- ஆகவே அந்த தண்ணீரைக் குடிப்பவர்கள் மரிப்பார்கள்.
- செல்வந்தர்கள் மரிப்பார்கள்.
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
-வெளிப்படுத்தல் 8 : 12
- இவ்வளவு நேரம் நடந்தது உஷ்ணத்தின் பிரச்சனை.
- எரிகல் விழுவது உஷ்ணத்தின் நிமித்தமாக.
- மக்கள் எல்லாம் சூட்டில் துடித்துக் கொண்டிருக்கும் போது சூரியன், சந்திரன் எல்லாம் மூன்றிலொருபங்கு அப்படியே உடைந்து போயிற்று.
- அங்கே பூமியில் மூன்றிலொருபங்கு குளிராக மாறும்.
- உஷ்ணத்தை தாங்க முடியாத ஜனங்களுக்கு இப்போது குளிர்ச்சியை தாங்க முடியாது.
- வெறுத்து விடும்.
பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
-வெளிப்படுத்தல் 8 : 13
- நான்கு எக்காளங்கள் ஊதப்பட்டு விட்டன.
- இன்னும் 3 எக்காளங்கள் ஊதப்பட வேண்டும்.
- அப்போது ஒரு தூதன் கழுகைப் போல பறந்து வருகிறான்.
- 3 எக்காளங்கள் இன்னும் இருப்பதினால் 3 தடவை ஐயோ என்று சொல்லப்படுகிறது.
- 3 எக்காளங்கள் ஊதப்படும் போது பூமிக்கு என்ன நடைபெறப் போகிறது.
- முதல் 4 எக்காளங்கள் ஊதின போது உலகம் ஏதோ நல்லா இருந்த மாதிரி சொல்லுகிறார்.
- ஆனால் கடைசி 3 எக்காளங்கள் இன்னும் பயங்கரமாக இருக்கப் போகிறது.
Comments
Post a Comment