வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம்

இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 7 : 1
  • அந்த 7வது முத்திரையை உடைக்கும் முன்பதாக ஒரு காரியம் நடைபெறுகிறது. 
  • இவைகளுக்கு பின்பு என்றால், 7 முத்திரைகள் உடைக்கப்பட்ட பின்பு.
  • 6 வது முத்திரை உடைக்கப்படும் தருணத்தில் பூமியில் பயங்கரமான அழிவுகள் ஏற்பட்டன. 
  • சபை இல்லாத உலகத்திற்கு தான் 7 வருடங்கள் மிகுதியாய் இருக்கிறது. 
  • மோசத்திற்கு மேல் மோசம் வந்தது. 
  • இப்போது நான்கு திசைகளிலும் இருந்து 4 தூதர்கள் வருகிறார்கள். 
  • அங்கே காற்றை பிடித்திருக்கிறார்கள், ஏன்?
  • ஒரு சிறிய இடைவேளை எடுப்பதற்காக, காற்றை பிடித்திருக்கிறார்கள். 

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
 -வெளிப்படுத்தல் 7 : 2
  • 4 தூதர்கள் காற்று வராமல் இருக்க பிடித்திருக்கும் சமயத்திலே, இன்னுமொரு தூதன் வருகிறான். 
  • அந்த 4 தூதர்களையும் பார்த்து சொல்லுகிறான். கொஞ்சம் இருங்க, கொஞ்சம் இருங்க. அழிவை கொஞ்சம் நிறுத்துங்கள், ஒரு சிறிய வேலை இருக்கிறது என்கிறான். 
  • அந்த 4 தூதர்களின் வேலை சமுத்திரத்தையும், பூமியையும் அழித்து விடுவது தான். 
  • அந்த அழிவு வருவதற்கு முன்பாக தான் மற்ற தூதன் அங்கு வருகிறார். 
  • அந்த 666 பற்றி, வெளிப்படுத்தல் புத்தகத்தில் பின்பு வருவதால், 7 வது வருட முடிவில் அது வரும் என்ற அர்த்தமில்லை. 
  • அது 7 வருட ஆரம்பத்திலேயே வந்துவிடும். 
  • இயேசு கிறிஸ்து முத்திரையை உடைக்கும் நேரத்திலேயே இந்த பூமிக்கு 666 வந்து ஆகிவிட்டது. 
  • அந்த முத்திரை எடுக்காத இரு பிரிவினர் இருக்கின்றனர். 
  • முதல் பிரிவு யூதர்களோடு அந்திக்கிறிஸ்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுவான். 
  • நீங்கள் மாத்திரம் அந்த முத்திரையை எடுக்க தேவையில்லை. 
  • நீங்கள் மாத்தரம் எங்கள் சமயத்தை பின்பற்ற தேவையில்லை. எங்கள் சட்டதிட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமல்லை. 
  • நீங்கள் சாதாரணமாக எருசலேமிலே தேவ மாளிகையில் உங்களுடைய ஆண்டவருக்கு நமஸ்காரத்தை செலுத்துங்கள். 
  • யூதர்கள் அந்த முத்திரையை எடுக்க மாட்டார்கள். 
  • இரண்டாவது பிரிவினர் சபை எடுத்துக் கொள்ளப்படும் போது சில பெயர் கிறிஸ்தவர்கள் கைவிடப்படுவார்கள். 
  • யூதர்களும், பெயர் அளவில் கிறிஸ்தவர்களாக வாழுபவர்களும் அந்த முத்திரையை எடுக்க மாட்டார்கள். 
  • ஆண்டவருடைய ஊழியக்காரர்களுக்கு முத்திரை போடும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்று அந்த தூதன் சொல்லுகிறான். 

நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
 -வெளிப்படுத்தல் 7 : 3
  • தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது.
  • அப்படியென்றால் இது சபை அல்ல. 
  • சபையிலே ஆண்டவர் மக்களை ஊழியக்காரர்கள் என்று சொல்ல மாட்டார். 
  • சபையை குறிப்பிடுகின்ற இரண்டு காரியங்கள் ஒன்று தேவனுடைய புத்திரர் மற்றொன்று கிறிஸ்துவினுடைய மணவாட்டி. 
  • தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றால் சபையும் அல்ல, எடுத்துக்கொள்ளப்படும் போது கைவிடப்படும் கிறிஸ்தவர்களும் அல்ல. 

முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
 -வெளிப்படுத்தல் 7 : 4
  • இங்கு தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. 
  • இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர், இவர்கள் அந்த 7 வருடங்களிலே ஜீவிக்கிற யூதர்கள்.
  • பரிசுத்த யூதர்கள்.

யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
 -வெளிப்படுத்தல் 7 : 5
  • 12 கோத்திரங்கள் இருக்கின்றது.
  • ஒரு கோத்திரத்துக்கு 12000 வீதப்படி 12 கோத்திரங்களை கணக்கிட்டு பார்த்தால் 144000 வருகிறது.
  • 5-8 வசனம்  வரைக்கும் அந்த 12 கோத்திரங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 
  • அதில் முதலாவது இருக்கிற கோத்திரம் யூதா. 
  • யாக்கோபின் 12 மகன்மார்களும் கோத்திரப் பிதாக்கள் ஆனார்கள். 
  • ஒவ்வொரு நபரின் பரம்பரை, அந்தந்த கோத்திரம் ஆகியது. 
  • யூதா, ரூபன், காத் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது. 

ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
 -வெளிப்படுத்தல் 7 : 6
  • ஆசேர், நப்தலி, மனாசே இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது. 

சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
 -வெளிப்படுத்தல் 7 : 7
  • சிமியோன், லேவி, இசக்கார் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது. 

செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
 -வெளிப்படுத்தல் 7 : 8
  • செபுலோன், யோசேப்பு, பென்யமீன் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது. 

எண்

ஆதி

வெளி 7

1

ரூபன்

யூதா

2

சிமியோன்

ரூபன்

3

லேவி

காத்

4

யூதா

ஆசேர்

5

தாண்

நப்தலி

6

நப்தலி

மனாசே

7

காத்

சிமியோன்

8

ஆசேர்

லேவி

9

இசக்கார்

இசக்கார்

10

செபுலோன்

செபுலோன்

11

யோசேப்பு

யோசேப்பு

12

பென்யமீன்

பென்யமீன்


  • இங்கு தாண் கோத்திரம் காணப்படவில்லை. அதற்கு பதில் மனாசே கோத்திரம் இடம்பெற்றுள்ளது. 
  • ஏன் தாண் கோத்திரத்தை அவர் எடுத்து போட்டார்?
  • நியா 18 ஐ வாசித்து பாருங்கள். 
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
 -நியாயாதிபதிகள் 18 : 1
  • இஸ்ரவேல் தேசத்தில் ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு பகுதியை பகுத்து கொடுத்தார் யோசுவா. 
  • தாண் கோத்திரத்தான் மட்டும் தங்களுக்கு கொடுத்த பகுதியை குறித்து குறை பேசினார்கள். இது போதாது என்று எண்ணினார்கள். 
  • யோசுவாவிடம் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும் என கேட்டார்கள். 
  • ஆனால் ஆண்டவர் சொன்னபடி யோசுவா பகுத்து கொடுத்து விட்டார். 
  • எனவே இவர்கள் ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணாத  ஒரு இடத்தை போய் பற்றிக் கொண்டார்கள். 
  • வடக்கில் சிரியா, லெபனோன் பகுதியையும் பிடித்துக் கொண்டார்கள். 
  • தாண் 2 இடங்களில் இருந்தது. மேலும், கீழும். 
  • இந்த பிரதசத்திற்கு தாண் என்று பெயர் வைத்தார்கள். 
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
 -நியாயாதிபதிகள் 18 : 30
  • விக்கிரக வழிபாடு அவர்களுக்குள் இருந்தது.
  • லேவி கோத்திரத்தார் மாத்திரமே ஆசாரியர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லியும் இவர்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள். 
  • ஆண்டவர் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
  • ஆகவே, வெளி புத்தகத்தில் தாண் கோத்திரத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. 
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
 -ஆதியாகமம் 48 : 5

இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
 -ஆதியாகமம் 48 : 6
  • யோசேப்புக்கு மாத்திரம் ஆசீர்வாதம் இரட்டிப்பாகிறது. 
  • யோசேப்பு மூலமாக ஒரு கோத்திரம் உருவாக வேண்டும். 
  • இரட்டிப்பு ஆசீர்வாதம் கொடுத்ததன் மூலமாக அவருடைய 2 புத்திரர்கள் மூலமாக 2 கோத்திரங்கள் உருவானது. 
  • தாண் இல்லையென்றாலும், அதற்கு பதில் மனாசே வந்தபடியினால் 12 கோத்திரங்கள் ஆகிறது. 
  • யோசேப்பின் புத்திரர் எப்பிராயீம், மனாசே.
  • எப்பராயீம் கோத்திரத்துக்கு தான் இங்கு யோசேப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • மனாசே என்ற கோத்திரமும் உருவானது. 
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 14 : 1
  • 7 ம் அதிகாரத்தில் வருவதும், 14 வது அதிகாரத்தில் வருவதும் ஒன்று கிடையாது. 
  • இது வேறு நபர்கள். 
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
 -வெளிப்படுத்தல் 14 : 3
  • யார் இவர்கள்?
  • யூதர்கள் அல்ல. 
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
 -வெளிப்படுத்தல் 14 : 4
  • இந்த வசனத்தை வாசித்து பல பேர் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர் தெரியுமா?
  • 144000 பேரோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. 
  • இது ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது. 
  • ஆவிக்குரிய ரீதியில் விக்கிரக ஆராதனை செய்யாதவர்கள். 
  • திருமணம் முடிக்காததைக் குறித்து இங்கு சொல்லவில்லை. 
  • இவர்கள் சபையின் ஒரு பகுதி.
  • இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிற்பாடு தாண் கோத்திரத்தைப் போல விக்கிரக ஆராதனைக்குள் செல்லவில்லை. 
  • இயேசுவுக்கு மாத்திரம் உண்மையாக இருந்தார்கள். 
  • இயேசு கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தை விலைக்கிரயமாக செலுத்தி ஜனங்களை வாங்கி விட்டார். அவர்கள் தான் சபை. 
  • சபையில் இருக்கிற முதற்பலனாகியவர்கள். 
  • முதலாவது விசுவாசி தொடங்கி 144000 விசுவாசி வரைக்கும்.
  • அப் 2 வது அதிகாரத்தில் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள், பேதுரு பிரசங்கம் பண்ணிய போது இரட்சிக்கப்பட்டவர்கள்.
  • இப்படி சபை வளர்ச்சி அடைந்தது, நாம் கணக்கு பார்த்து கொண்டே போக வேண்டும். 
  • முதலாவது 144000 நபர்கள் தான் இவர்கள். 
  • உங்களுக்கும், எனக்கும் அதில் உட்புக முடியாது. 
  • நாம் எவ்வளவு தான் அர்ப்பணம் செய்தாலும் நாம் பேதுருவாக முடியாது. 
  • 14 ம் அதிகாரத்தில் வருகிறவர்கள் யூதர்களும் அல்ல. நாமும் அல்ல. சபையிலே முதற்பலனாவர்கள்.  
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
 -வெளிப்படுத்தல் 7 : 9
  • இவர்கள் யூதர்களும் அல்ல, முதற்பலனானவர்களும் அல்ல, சபையும் அல்ல. 
  • இவர்கள் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினவர்கள். 
  • இந்த சம்பவம் பரலோகத்திலே நடைபெறுகிறது. 
  • சிங்காசனம் இருப்பது பரலோகத்திலே அல்லவா?
  • யூதர்களை முத்திரை போட்டது இந்த பூமியிலே. 
  • அந்திக்கிறிஸ்துவினுடைய முத்திரையை எடுக்காத அந்த யூதர்களுக்கு ஆண்டவருடைய முத்திரை போடப்பட்டது. 
  • ஆனால் இப்போது சம்பவம் நடைபெறுவது பரலோகத்திலே. 

அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
 -வெளிப்படுத்தல் 7 : 10
  • பரலோகத்திலே மக்கள் சிங்காசனத்திற்கை முன்பாக வந்து ஆண்டவரைத் துதிக்க தொடங்கினார்கள். 
  • 4,5 ம் அதிகாரத்தில் சிங்காசனம் அங்கு இருக்கும் போது இவர்கள் அங்கு இருக்கவில்லை. 
  • ஆனால் இப்பொழுது இருக்கிறார்கள்.

தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
 -வெளிப்படுத்தல் 7 : 11
  • அந்த மக்கள் மாத்திரமல்ல, தூதர்களும் ஆண்டவரைத் தொழுது கொள்ளுகிறார்கள். 

ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
 -வெளிப்படுத்தல் 7 : 12
  • ஆண்டவரைத் துதிக்கிறார்கள்.

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
 -வெளிப்படுத்தல் 7 : 13
  • தூதர்களில் ஒருவன் யோவானை நோக்கி கேட்கிறான். 

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
 -வெளிப்படுத்தல் 7 : 14
  • இவர்கள் மிகவும் உபத்திரவத்தை கடந்து வந்தவர்கள். 
  • 7 வருட உபத்திரவ காலத்தில் போய் வந்தவர்கள். 
  • சபை அல்ல. 
  • யூதர்களும் அல்ல.
  • கிறிஸ்தவர்களாக இருந்து கைவிடப்பட்டு சத்தியத்தை தெரிந்து கொண்ட பிற்பாடு அந்திக் கிறிஸ்துவினுடைய முத்திரையை எடுக்காமல் அந்த 7 வருட உபத்திரவ காலத்திற்குள் போய் தன்னை காப்பாற்றி கொண்ட கிறிஸ்தவர்கள் தான் இவர்கள்.
  • அவர்களை இயேசு கிறிஸ்து கழுவுகிறார். 
  • தன்னுடைய இரத்தத்தினாலே கழுவுகிறர். 
  • ஆனால் அவர்களுக்கு மணவாட்டியாக முடியாது. 

ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
 -வெளிப்படுத்தல் 7 : 15
  • இவர்கள் பரலோகத்திலே ஆண்டவருக்கு ஊழியம் செய்யப் போகிறார்கள். 

இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
 -வெளிப்படுத்தல் 7 : 16
  • அப்படி ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் போது அவர்களுக்கு பசி,தாகம் எல்லாம் இருக்காது.
  • வெயிலும் அவர்கள் மேல் படாது என்கிறான். 

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.  
 -வெளிப்படுத்தல் 7 : 17
  • இது நடப்பது பரலோகத்திலே.
  • இவர்கள் சபையாக இருந்தவர்கள்.
  • குழப்பி கொண்டவர்கள்.
  • ஆகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
  • எப்படியோ 7 வருட உபத்திரவக் காலத்தில் சகித்து கொண்டு இருந்தார்கள். 
  • நித்திய மரணத்தில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள். 
  • ஆகவே பரலோகத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். 
  • பரிசுத்தமாக்கபட்டார்கள். 
  • ஆட்டுக்குட்டியானவர் தங்களை போஷிக்கும் போது, அவர் தங்களை பார்த்துக் கொள்ளும் போது, அவர்கள் சபையாகிய மணவாட்டியை காண்கிறார்கள். 
  • அவர்களைப் போல நாம் இயேசுவினுடைய மனைவியாக இருக்க முடியவில்லையே என்ற கவலையில் அழுகிறார்கள். 
  • அந்த கண்ணீரைத் துடைக்கிறார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4