வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 7 விளக்கம்
இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
-வெளிப்படுத்தல் 7 : 1
-வெளிப்படுத்தல் 7 : 1
- அந்த 7வது முத்திரையை உடைக்கும் முன்பதாக ஒரு காரியம் நடைபெறுகிறது.
- இவைகளுக்கு பின்பு என்றால், 7 முத்திரைகள் உடைக்கப்பட்ட பின்பு.
- 6 வது முத்திரை உடைக்கப்படும் தருணத்தில் பூமியில் பயங்கரமான அழிவுகள் ஏற்பட்டன.
- சபை இல்லாத உலகத்திற்கு தான் 7 வருடங்கள் மிகுதியாய் இருக்கிறது.
- மோசத்திற்கு மேல் மோசம் வந்தது.
- இப்போது நான்கு திசைகளிலும் இருந்து 4 தூதர்கள் வருகிறார்கள்.
- அங்கே காற்றை பிடித்திருக்கிறார்கள், ஏன்?
- ஒரு சிறிய இடைவேளை எடுப்பதற்காக, காற்றை பிடித்திருக்கிறார்கள்.
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
-வெளிப்படுத்தல் 7 : 2
- 4 தூதர்கள் காற்று வராமல் இருக்க பிடித்திருக்கும் சமயத்திலே, இன்னுமொரு தூதன் வருகிறான்.
- அந்த 4 தூதர்களையும் பார்த்து சொல்லுகிறான். கொஞ்சம் இருங்க, கொஞ்சம் இருங்க. அழிவை கொஞ்சம் நிறுத்துங்கள், ஒரு சிறிய வேலை இருக்கிறது என்கிறான்.
- அந்த 4 தூதர்களின் வேலை சமுத்திரத்தையும், பூமியையும் அழித்து விடுவது தான்.
- அந்த அழிவு வருவதற்கு முன்பாக தான் மற்ற தூதன் அங்கு வருகிறார்.
- அந்த 666 பற்றி, வெளிப்படுத்தல் புத்தகத்தில் பின்பு வருவதால், 7 வது வருட முடிவில் அது வரும் என்ற அர்த்தமில்லை.
- அது 7 வருட ஆரம்பத்திலேயே வந்துவிடும்.
- இயேசு கிறிஸ்து முத்திரையை உடைக்கும் நேரத்திலேயே இந்த பூமிக்கு 666 வந்து ஆகிவிட்டது.
- அந்த முத்திரை எடுக்காத இரு பிரிவினர் இருக்கின்றனர்.
- முதல் பிரிவு யூதர்களோடு அந்திக்கிறிஸ்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுவான்.
- நீங்கள் மாத்திரம் அந்த முத்திரையை எடுக்க தேவையில்லை.
- நீங்கள் மாத்தரம் எங்கள் சமயத்தை பின்பற்ற தேவையில்லை. எங்கள் சட்டதிட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமல்லை.
- நீங்கள் சாதாரணமாக எருசலேமிலே தேவ மாளிகையில் உங்களுடைய ஆண்டவருக்கு நமஸ்காரத்தை செலுத்துங்கள்.
- யூதர்கள் அந்த முத்திரையை எடுக்க மாட்டார்கள்.
- இரண்டாவது பிரிவினர் சபை எடுத்துக் கொள்ளப்படும் போது சில பெயர் கிறிஸ்தவர்கள் கைவிடப்படுவார்கள்.
- யூதர்களும், பெயர் அளவில் கிறிஸ்தவர்களாக வாழுபவர்களும் அந்த முத்திரையை எடுக்க மாட்டார்கள்.
- ஆண்டவருடைய ஊழியக்காரர்களுக்கு முத்திரை போடும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்று அந்த தூதன் சொல்லுகிறான்.
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
-வெளிப்படுத்தல் 7 : 3
- தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது.
- அப்படியென்றால் இது சபை அல்ல.
- சபையிலே ஆண்டவர் மக்களை ஊழியக்காரர்கள் என்று சொல்ல மாட்டார்.
- சபையை குறிப்பிடுகின்ற இரண்டு காரியங்கள் ஒன்று தேவனுடைய புத்திரர் மற்றொன்று கிறிஸ்துவினுடைய மணவாட்டி.
- தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றால் சபையும் அல்ல, எடுத்துக்கொள்ளப்படும் போது கைவிடப்படும் கிறிஸ்தவர்களும் அல்ல.
முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
-வெளிப்படுத்தல் 7 : 4
- இங்கு தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.
- இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர், இவர்கள் அந்த 7 வருடங்களிலே ஜீவிக்கிற யூதர்கள்.
- பரிசுத்த யூதர்கள்.
யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
-வெளிப்படுத்தல் 7 : 5
- 12 கோத்திரங்கள் இருக்கின்றது.
- ஒரு கோத்திரத்துக்கு 12000 வீதப்படி 12 கோத்திரங்களை கணக்கிட்டு பார்த்தால் 144000 வருகிறது.
- 5-8 வசனம் வரைக்கும் அந்த 12 கோத்திரங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
- அதில் முதலாவது இருக்கிற கோத்திரம் யூதா.
- யாக்கோபின் 12 மகன்மார்களும் கோத்திரப் பிதாக்கள் ஆனார்கள்.
- ஒவ்வொரு நபரின் பரம்பரை, அந்தந்த கோத்திரம் ஆகியது.
- யூதா, ரூபன், காத் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது.
ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
-வெளிப்படுத்தல் 7 : 6
- ஆசேர், நப்தலி, மனாசே இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது.
சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
-வெளிப்படுத்தல் 7 : 7
- சிமியோன், லேவி, இசக்கார் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது.
செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
-வெளிப்படுத்தல் 7 : 8
- செபுலோன், யோசேப்பு, பென்யமீன் இந்த 3 கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டதை குறித்து இந்த வசனம் சொல்லுகிறது.
எண் |
ஆதி |
வெளி 7 |
1 |
ரூபன் |
யூதா |
2 |
சிமியோன் |
ரூபன் |
3 |
லேவி |
காத் |
4 |
யூதா |
ஆசேர் |
5 |
தாண் |
நப்தலி |
6 |
நப்தலி |
மனாசே |
7 |
காத் |
சிமியோன் |
8 |
ஆசேர் |
லேவி |
9 |
இசக்கார் |
இசக்கார் |
10 |
செபுலோன் |
செபுலோன் |
11 |
யோசேப்பு |
யோசேப்பு |
12 |
பென்யமீன் |
பென்யமீன் |
- இங்கு தாண் கோத்திரம் காணப்படவில்லை. அதற்கு பதில் மனாசே கோத்திரம் இடம்பெற்றுள்ளது.
- ஏன் தாண் கோத்திரத்தை அவர் எடுத்து போட்டார்?
- நியா 18 ஐ வாசித்து பாருங்கள்.
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
-நியாயாதிபதிகள் 18 : 1
- இஸ்ரவேல் தேசத்தில் ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு பகுதியை பகுத்து கொடுத்தார் யோசுவா.
- தாண் கோத்திரத்தான் மட்டும் தங்களுக்கு கொடுத்த பகுதியை குறித்து குறை பேசினார்கள். இது போதாது என்று எண்ணினார்கள்.
- யோசுவாவிடம் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும் என கேட்டார்கள்.
- ஆனால் ஆண்டவர் சொன்னபடி யோசுவா பகுத்து கொடுத்து விட்டார்.
- எனவே இவர்கள் ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணாத ஒரு இடத்தை போய் பற்றிக் கொண்டார்கள்.
- வடக்கில் சிரியா, லெபனோன் பகுதியையும் பிடித்துக் கொண்டார்கள்.
- தாண் 2 இடங்களில் இருந்தது. மேலும், கீழும்.
- இந்த பிரதசத்திற்கு தாண் என்று பெயர் வைத்தார்கள்.
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
-நியாயாதிபதிகள் 18 : 30
- விக்கிரக வழிபாடு அவர்களுக்குள் இருந்தது.
- லேவி கோத்திரத்தார் மாத்திரமே ஆசாரியர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லியும் இவர்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
- ஆண்டவர் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
- ஆகவே, வெளி புத்தகத்தில் தாண் கோத்திரத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
-ஆதியாகமம் 48 : 5
இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
-ஆதியாகமம் 48 : 6
- யோசேப்புக்கு மாத்திரம் ஆசீர்வாதம் இரட்டிப்பாகிறது.
- யோசேப்பு மூலமாக ஒரு கோத்திரம் உருவாக வேண்டும்.
- இரட்டிப்பு ஆசீர்வாதம் கொடுத்ததன் மூலமாக அவருடைய 2 புத்திரர்கள் மூலமாக 2 கோத்திரங்கள் உருவானது.
- தாண் இல்லையென்றாலும், அதற்கு பதில் மனாசே வந்தபடியினால் 12 கோத்திரங்கள் ஆகிறது.
- யோசேப்பின் புத்திரர் எப்பிராயீம், மனாசே.
- எப்பராயீம் கோத்திரத்துக்கு தான் இங்கு யோசேப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
- மனாசே என்ற கோத்திரமும் உருவானது.
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
-வெளிப்படுத்தல் 14 : 1
- 7 ம் அதிகாரத்தில் வருவதும், 14 வது அதிகாரத்தில் வருவதும் ஒன்று கிடையாது.
- இது வேறு நபர்கள்.
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
-வெளிப்படுத்தல் 14 : 3
- யார் இவர்கள்?
- யூதர்கள் அல்ல.
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
-வெளிப்படுத்தல் 14 : 4
- இந்த வசனத்தை வாசித்து பல பேர் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர் தெரியுமா?
- 144000 பேரோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.
- இது ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது.
- ஆவிக்குரிய ரீதியில் விக்கிரக ஆராதனை செய்யாதவர்கள்.
- திருமணம் முடிக்காததைக் குறித்து இங்கு சொல்லவில்லை.
- இவர்கள் சபையின் ஒரு பகுதி.
- இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிற்பாடு தாண் கோத்திரத்தைப் போல விக்கிரக ஆராதனைக்குள் செல்லவில்லை.
- இயேசுவுக்கு மாத்திரம் உண்மையாக இருந்தார்கள்.
- இயேசு கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தை விலைக்கிரயமாக செலுத்தி ஜனங்களை வாங்கி விட்டார். அவர்கள் தான் சபை.
- சபையில் இருக்கிற முதற்பலனாகியவர்கள்.
- முதலாவது விசுவாசி தொடங்கி 144000 விசுவாசி வரைக்கும்.
- அப் 2 வது அதிகாரத்தில் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள், பேதுரு பிரசங்கம் பண்ணிய போது இரட்சிக்கப்பட்டவர்கள்.
- இப்படி சபை வளர்ச்சி அடைந்தது, நாம் கணக்கு பார்த்து கொண்டே போக வேண்டும்.
- முதலாவது 144000 நபர்கள் தான் இவர்கள்.
- உங்களுக்கும், எனக்கும் அதில் உட்புக முடியாது.
- நாம் எவ்வளவு தான் அர்ப்பணம் செய்தாலும் நாம் பேதுருவாக முடியாது.
- 14 ம் அதிகாரத்தில் வருகிறவர்கள் யூதர்களும் அல்ல. நாமும் அல்ல. சபையிலே முதற்பலனாவர்கள்.
-வெளிப்படுத்தல் 7 : 9
- இவர்கள் யூதர்களும் அல்ல, முதற்பலனானவர்களும் அல்ல, சபையும் அல்ல.
- இவர்கள் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினவர்கள்.
- இந்த சம்பவம் பரலோகத்திலே நடைபெறுகிறது.
- சிங்காசனம் இருப்பது பரலோகத்திலே அல்லவா?
- யூதர்களை முத்திரை போட்டது இந்த பூமியிலே.
- அந்திக்கிறிஸ்துவினுடைய முத்திரையை எடுக்காத அந்த யூதர்களுக்கு ஆண்டவருடைய முத்திரை போடப்பட்டது.
- ஆனால் இப்போது சம்பவம் நடைபெறுவது பரலோகத்திலே.
அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
-வெளிப்படுத்தல் 7 : 10
- பரலோகத்திலே மக்கள் சிங்காசனத்திற்கை முன்பாக வந்து ஆண்டவரைத் துதிக்க தொடங்கினார்கள்.
- 4,5 ம் அதிகாரத்தில் சிங்காசனம் அங்கு இருக்கும் போது இவர்கள் அங்கு இருக்கவில்லை.
- ஆனால் இப்பொழுது இருக்கிறார்கள்.
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
-வெளிப்படுத்தல் 7 : 11
- அந்த மக்கள் மாத்திரமல்ல, தூதர்களும் ஆண்டவரைத் தொழுது கொள்ளுகிறார்கள்.
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
-வெளிப்படுத்தல் 7 : 12
- ஆண்டவரைத் துதிக்கிறார்கள்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
-வெளிப்படுத்தல் 7 : 13
- தூதர்களில் ஒருவன் யோவானை நோக்கி கேட்கிறான்.
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
-வெளிப்படுத்தல் 7 : 14
- இவர்கள் மிகவும் உபத்திரவத்தை கடந்து வந்தவர்கள்.
- 7 வருட உபத்திரவ காலத்தில் போய் வந்தவர்கள்.
- சபை அல்ல.
- யூதர்களும் அல்ல.
- கிறிஸ்தவர்களாக இருந்து கைவிடப்பட்டு சத்தியத்தை தெரிந்து கொண்ட பிற்பாடு அந்திக் கிறிஸ்துவினுடைய முத்திரையை எடுக்காமல் அந்த 7 வருட உபத்திரவ காலத்திற்குள் போய் தன்னை காப்பாற்றி கொண்ட கிறிஸ்தவர்கள் தான் இவர்கள்.
- அவர்களை இயேசு கிறிஸ்து கழுவுகிறார்.
- தன்னுடைய இரத்தத்தினாலே கழுவுகிறர்.
- ஆனால் அவர்களுக்கு மணவாட்டியாக முடியாது.
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
-வெளிப்படுத்தல் 7 : 15
- இவர்கள் பரலோகத்திலே ஆண்டவருக்கு ஊழியம் செய்யப் போகிறார்கள்.
இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
-வெளிப்படுத்தல் 7 : 16
- அப்படி ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் போது அவர்களுக்கு பசி,தாகம் எல்லாம் இருக்காது.
- வெயிலும் அவர்கள் மேல் படாது என்கிறான்.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
-வெளிப்படுத்தல் 7 : 17
- இது நடப்பது பரலோகத்திலே.
- இவர்கள் சபையாக இருந்தவர்கள்.
- குழப்பி கொண்டவர்கள்.
- ஆகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
- எப்படியோ 7 வருட உபத்திரவக் காலத்தில் சகித்து கொண்டு இருந்தார்கள்.
- நித்திய மரணத்தில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள்.
- ஆகவே பரலோகத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள்.
- பரிசுத்தமாக்கபட்டார்கள்.
- ஆட்டுக்குட்டியானவர் தங்களை போஷிக்கும் போது, அவர் தங்களை பார்த்துக் கொள்ளும் போது, அவர்கள் சபையாகிய மணவாட்டியை காண்கிறார்கள்.
- அவர்களைப் போல நாம் இயேசுவினுடைய மனைவியாக இருக்க முடியவில்லையே என்ற கவலையில் அழுகிறார்கள்.
- அந்த கண்ணீரைத் துடைக்கிறார்.
Comments
Post a Comment