வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 10 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 10 விளக்கம்

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
 -வெளிப்படுத்தல் 10 : 1
  • 6 வது எக்காளம் ஊதி முடித்தாகி விட்டது.
  • தேவ தூதன் 7 வது எக்காளத்தை ஊத ஆயத்தப்படுகிறார். 
  • 7 வது எக்காளத்தை ஊதும் முன்பதாக வெளி 10-14 ஒரு சம்பவம் இருக்கிறது. 
  • 6 வதும், 7 வது எக்காளத்திற்கு இடையிலே முக்கியமாக 2 சம்பவங்கள் இருக்கிறது. 
  • அதில் ஒன்று தான் 10ம் அதிகாரம். 
  • இரண்டாவது 11 ம் அதிகாரம்
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; 
  • இந்த தேவ தூதன் யார்?
  • ஆண்டவருடைய பாதத்திலே இரவும் பகலும் இருப்பவர்கள். 
  • ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவன் அவர்களை உருவாக்கினார். 
  • ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பவர்கள். 
  • ஆண்டவருடைய முகத்தை காண்பவர்கள். 
  • அவர்களுக்கு தராதரங்கள் இருக்கின்றன.
  • மீகாவேல், காபிரியேல் பிரதான தூதர்கள். 
  • கேரூபீன்கள், சேராபீன்கள் என்ற தேவ தூதர்கள். 
  • கோடிக்கணக்கில் இப்படிப்பட்ட தூதர்கள் அங்கு இருக்கிறார்கள். 
  • ஆனால் பழைய ஏற்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆபிரகாமுக்கு, மனோவாவுக்கும், கிதியோனுக்கு, சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோவுக்கு, தானியேலுக்கு, எசேக்கியேலுக்கு அந்த மாதிரியான ரொம்பவும் குறைவான சந்தர்ப்பங்களில் தேவ தூதரைப் போல இயேசு கிறிஸ்து வந்தார். 
  • இயேசு கிறிஸ்து தேவ தூதனைப் போல வந்தார். 
  • ஆனால் அவருடைய செயல்பாடுகளை காணும் போது நமக்கு விளங்குகிறது இது சாதாரணமான தேவதூதன் அல்ல. 
  • அவர்கள் தான் வந்து இருக்கிறார். 
  • அதற்கு வேத பண்டிதர்கள் வைத்திருக்கிற பெயர் christophany in Greek. 
  • Christos - கிறிஸ்து
  • Phanos - தரிசனம் அல்லது சப்தம் (Appearance)
  • இந்த வசனத்தில் காணப்படுகிற தேவதூதன் இயேசு கிறிஸ்து தான். 
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
 -வெளிப்படுத்தல் 4 : 3
  • இந்த வசனத்தில் காணப்படுகிறவர் தேவ தூதன் அல்ல, இயேசு கிறிஸ்து.
அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
  • வெளி 10:1 ல் காணப்படுகிறவரும் இயேசு கிறிஸ்து தான். 
  • முதலாவது அதிகாரத்தில் கண்டோம் அவருடைய முகம் சூரியனைப் போல பிரகாசித்தது என்பதாக. 
  • ஒரு தேவ தூதனுடைய முகமும் அப்படி சூரியனைப் போல பிரகாசிக்காது. 
  • ஏன் இந்த சந்தர்ப்பத்தில் அவர் தேவ தூதனாக வர வேண்டும்?
  • பரலோகத்திலே அவர் தன்னை எப்படியாக காட்டினார் 5ம் அதிகாரத்திலே. 
  • ஆட்டுக்குட்டியானவராக வெளிப்பட்டார். 
  • இங்கு தேவ தூதனைப் போல வருகிறார். 

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
 -வெளிப்படுத்தல் 10 : 2
  • ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை திறந்தார் என 5ம் அதிகாரத்தில் பார்த்தோம்.
  • அந்த புத்தகத்தை திறந்து 7 முத்திரைகளை உடைத்து இந்த பூமிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்த பிறகு அவர் பூமிக்கு வருவார். 
  • அவர் அவராகவே பூமிக்கு வந்தால் அவருடைய இரண்டாம் வருகையாகி விடும். 
  • 7 வருடங்கள் முடிந்து தான் அவருடைய இரண்டாம் வருகை வரும். 
  • ஆகவே, தேவ தூதனுடைய சுரூபத்தை எடுத்துக் கொண்டு வருவார்.
  • ஆனால் நமக்கு தெரியும் வந்தது தேவதூதன் அல்ல, இயேசு கிறிஸ்து என்று. 
  • அவர் கரத்தில் இருக்கிற புத்தகம் என்ன? 
  • 5ம் அதிகாரத்திலே திறக்கப்பட்ட புத்தகம். 

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
 -வெளிப்படுத்தல் 10 : 3
  • 5ம் அதிகாரத்தில் மூப்பர்களில் ஒருவன் யூதா கோத்திரத்து சிங்கம், தாவீதின் வேருமானவர் என்று சொன்னார். 
  • அவர் எப்படி தன்னைக் காட்டினார் ஆட்டுக்குட்டியானவரைப் போல. 
  • நம்முடைய ஆண்டவர் மனுஷனுடைய பாவங்களை போக்க ஆட்டுக்குட்டியானவராக இருந்தாலும் அவர் சிங்கம், யூதா கோத்திரத்து ராஜா. 
  • அந்த சந்தர்ப்பத்தில் அவர் தனது வலது பாரிசத்தை சமுத்திரத்தின் மீது வைத்தார். 
  • சமுத்திரம் என்று வெறுமனே சொல்லப்பட்டு இருந்தால் அது மத்தியத் தரைக்கடல். 
  • பூமியிலே இடது காலை வைத்தார். 
  • வாயை திறந்தால் சிங்கம் கெர்ச்சிப்பது போல சத்தம்.
  • இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்? 
  • அவர் ஓய்வில் நித்திரையாய் இருக்கிறார். 
  • அவர் எழுந்துருந்து கெர்ச்சிக்கும் போது அனைவரும் ஆடிப் போய் விடுவார்கள். 

அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 10 : 4
  • 7 எக்காளங்களைப் போல 7 இடிமுழக்கங்களில் ஏதோ சொல்லி இருக்கிறார்.  
  • கர்ஜனையின் சத்தத்தை எழுதவில்லை. 
  • அது நமக்கு என்னவென்று தெரியாது. 
  • அதைத் தெரிந்த ஒரே நபர் யோவான். 
  • அந்த யோவானுக்கு அதை எழுத ஆண்டவர் இடங்கொடுக்கவில்லை. 
  • 7 இடிமுழக்கத்தின் காரியங்கள் கண்டிப்பாக நல்ல காரியமாக இருக்க முடியாது. 
  • ஏதோ ஒரு பயங்கரமான நியாயத்தீர்ப்பை ஆண்டவர் இந்த பூமிக்கு கொடுக்க போகிறார். 

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
 -வெளிப்படுத்தல் 10 : 5
  • பழைய ஏற்பாட்டில் சத்தியம் செய்த காரியங்கள் உண்டு. 
  • 54 தடவை ஆண்டவர் முழு வேதாகமத்திலும் சத்தியம் செய்திருக்கிறார்.
  • ஒரு முறையாவது ஒரு தேவ தூதனாவது சத்தியம் செய்ததில்லை. 
  • ஆண்டவர் 54 தடவை சத்தியம் செய்திருப்பதால் இந்த இடத்தில் வந்திருப்பது இயேசு கிறிஸ்து தான். 

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
 -வெளிப்படுத்தல் 10 : 6
  • இனி காலம் செல்லாது என்கிறார். 
  • ஆண்டவர் சொல்லுகிறார் நான் நியாயத்தீர்ப்பை கட்டாயம் கொடுப்பேன் என்பதாக. 
  • மிகுதியாய் இருக்கிற மூன்றரை வருடங்கள் பயங்கரமான நியாயத்தீர்ப்பாக இருக்க போகிறது.
  • தேவனுடைய இரகசியம் என்றால் என்ன?
  • இஸ்ரவேலைக் குறித்து ஆண்டவர் வைத்திருக்கிறதான திட்டம். 
  • அநேகர் நினைக்கிறார்கள் இஸ்ரவேலை ஆண்டவர் மறந்து விட்டார் என்பதாக. 
  • 1948 ல் May 14 இஸ்ரவேல் ஒரு தேசமாக மறுபடியும் மாறியது. 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்டு மூன்றரை வருடங்கள் கழித்து இஸ்ரவேல் தேசத்துக்கு ஆண்டவர் செய்யப் போகிற காரியங்கள் நிறைவேறும். 

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
 -வெளிப்படுத்தல் 10 : 7
  • ஆண்டவர் 54 தடவை சத்தியம் செய்திருப்பதால் இந்த இடத்தில் வந்திருப்பது இயேசு கிறிஸ்து தான். 

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
 -வெளிப்படுத்தல் 10 : 8
  • அந்த நியாயத்தீர்ப்பின் புத்தகம். வெளி 5 ல் பார்த்த புத்தகம். 

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும். ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.
 -வெளிப்படுத்தல் 10 : 9
  • யோவான் அந்த தூதனிடத்தில் போய் அந்த சிறு புத்தகத்தை தாருங்கள் என்று கேட்டான். 
  • அது ஒரு பெரிய புத்தகம். ஆனால் சிறு புத்தகமாக காட்டப்படுகிறது. 

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
 -வெளிப்படுத்தல் 10 : 10
  • எசேக்கியேல் 3 ம் அதிகாரத்தில் எசேக்கியேலிடம் அடையாளமாக சொன்னார், இந்த புத்தகத்தை புசி என்பதாக. 
  • அதாவது அவருடைய வார்த்தையை உணவு போல உட்கொள்ள வேண்டும்.
  • அது உள்ளுக்குள் சென்ற பிற்பாடு நீ போய் ஜனங்களுக்கு இதை கற்றுக்கொடு என்பதாக. 
  • ஆண்டவர் எப்படிப்பட்ட வேத ஆசிரியர்களை தேடுகிறார் தெரியுமா? 
  • மேலோட்டமாய் படிக்கிறவர்களை அல்ல. 
  • வேதாகமத்தை நாம் புசிக்க வேண்டும். 
  • நாம் வேதத்தை மூன்று வேளையும் புசித்து புசித்து நிரப்பி இருக்காவிட்டால் நாம் பிரசிங்கிக்க முயற்சிக்கக் கூடாது. 
  • அது ஆண்டவர் வெறுக்கிற காரியம். 
  • TV manual போல பிரச்சனை வந்தால் மட்டும் அதை எடுக்கக் கூடாது. 

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.  
 -வெளிப்படுத்தல் 10 : 11
  • நீ வார்த்தையை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் நீ அதை முதலில் புசிக்க வேண்டும்.
  • அன்று எசேக்கியேலுக்கு கொடுத்த புத்தகம் தேனைப் போல மதுரமாயிருந்தது, ஆனால் வயிற்றுக்கு கசப்பாக இல்லை. 
  • ஆனால் யோவானுக்கு கொடுத்த புத்தகம் தேனைப் போல மதுரமாயிருந்தது, ஆனால் வயிற்றுக்கு கசப்பாக இருந்தது. 
  • என்ன அர்த்தம்? 
  • சாப்பிடுபவர்களுக்கு தேனைப் போல மதுரமாயி்ருக்கும், ஆனால் கேட்கப் போகிறவர்களுக்கு அது பயங்கரமாக இருக்கும். 
  • இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுவிசேஷம் நற்செய்தியாக இருக்கும். 
  • இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு சுவிசேஷம் அது நற்செய்தி அல்ல. 
  • ஏன்?
  • இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு அது கெட்ட செய்தி.
  • அது நித்திய கால மரணம். 
  • வேதத்திற்கு புறம்பாக வாழ்பவர்களுக்கு அது ஒரு கசப்பான புத்தகம். 
  • இதை தான் அடையாளமாக யோவானுக்கு காட்டினார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4