வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 9 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 9 விளக்கம்
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 9 : 1
-வெளிப்படுத்தல் 9 : 1
- இங்கு சொல்லப்படுவது எரிகற்கள் அல்ல.
- Greek ல் aster- astouros என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. (Masculine noun)
- “அந்த நட்சத்திரம்” என்று அர்த்தம்.
- எந்த நட்சத்திரம்- அதிகாலையிலே மின்னுகிற அந்த நட்சத்திரம்.
- லத்தீன் பாஷையில் சொல்லுவோமானால் Luci-fer.
- ஏசாயா 14 வது அதிகாரத்தில் சொல்லப்படுகிறது, Lucifer என்ற பேர் கொடுக்கப்பட்டு இருப்பது சாத்தானுக்கு.
- 5 வது எக்காளம் ஊதும் வரையும் சாத்தானுடைய பாதம் பூமியிலே தொடாது.
- இன்றைக்கும் பிசாசின் பாதம் பூமியிலே தொடப்படவில்லை.
- அவன் தேவதூதனாக இருக்கும் போது ஆண்டவர் அவனை கீழே தள்ளும் போது எசேக்கியேல் 28 ம் அதிகாரம், ஏசாயா 14 ம் அதிகாரம் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, “பூமியை நோக்கி”என்பதாக.
- பூமிக்கு வரவில்லை. பூமியை நோக்கி என்று சொல்லப்பட்டுள்ளது.
- ஆகையால் எபேசியர் 6 ம் அதிகாரத்தில் பவுல் சொல்லுகிறார், வானமண்டலங்களில் கிரியை செய்கிற பொல்லாத ஆவி என்பதாக.
- பிசாசு இன்னும் தன்னுடைய காலை பூமியிலே வைக்கவில்லை.
- ஆகவே தான் உலகத்தார் பிசாசை காணும் போது அவர்கள் காண்பது பாதம் இல்லாத ஒரு பிசாசை.
- பூமியில் கால் படாமலேயே பிசாசு இவ்வளவு செய்வானானால், 5வது எக்காளம் ஊதிய பிற்பாடு திடீரென்று பூமியிலே பாதத்தை வைப்பானாம்.
- ஆகவே தான் தேவ தூதன் வந்து சொன்னான், ஐயோ, ஐயோ,ஐயோ என்பதாக.
- அதன் பிற்பாடு நடக்கப் போகிற காரியங்களை யோவான் தரிசனத்திலே கண்டார்.
- 2000 வருடங்களுக்கு முன்பதாக யோவான் இருந்தார்,
- 2000 வருடங்களுக்கு பிற்பாடு நடக்கப் போகிற காரியங்களை கண்ட பிற்பாடு அவருக்கு வார்த்தை இல்லை அதை சொல்லுவதற்கு.
- அவருக்கு தெரிந்த விதத்தில் தான் இதை எழுதுகிறார்.
- மரித்தவர்களின் ஆவி இருக்கிற பாதாளம் அல்ல அது.
- இது பூமிக்கு அடியில் உள்ள ஏதோ ஒரு காரியத்தை வெளியில் எடுப்பதற்காக கொடுக்கப்படுகிறது.
- பூமிக்கு அடியில் என்னென்னமோ காரியங்கள் நடைபெறுகின்றன.
- மேலே அப்படி ஏதும் நடைபெறாதது மாதிரி இருக்கின்றது.
- 1991 ம் ஆண்டு ஈராக் தேசம் குவெத் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.
- குவெத் ஒரு பரிதாபமான அப்பாவி நாடு.
- நல்ல ஒரு எண்ணெய் இருக்கிற நாடு.
- இஸ்ரவேலை miselle மூலமாக தாக்கினார்கள்.
- George bush senior American president ஈராக் தேசத்துக்கு விரோதமாக போர் எடுக்கப் போகின்றார்.
- Operation desert storm என்பதான ஒரு யுத்த இராணுவத்தை உருவாக்கினார்.
- அந்த நேரத்திலே அமெரிக்காவில் உள்ள பொது ஜனங்கள் என்ன நினைத்தார்கள் என்றால்
- அவர்கள் கண்டார்கள் எங்கள் தேசத்தில் கண்டிராத helicopters ஐ அவர்கள் கண்டார்கள்.
- Apache வர்க்கத்தை சேர்ந்த helicopters மூலமாக தான் யுத்தம் செய்தார்கள்.
- அப்பொழுது தான் அமெரிக்காவில் உள்ள ஜனங்கள் அறிந்து கொண்டார்கள், இப்படிப்பட்ட helicopters லாம் இருக்கிறதா என்று.
- உலகமே ஆச்சர்யமாக பார்த்தது, எப்படி எங்கு இருந்து இ்து வந்தது என்று.
- ஆனால் எந்த காலத்திலிருந்து அமெரிக்கா Apache Helicopters வைத்திருந்தது தெரியுமா?
- 70 ம் நூற்றாண்டில் இருந்து.
- 1996 ம் ஆண்டிலே pastor ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் போது , உங்களுக்கு இந்த இடத்தில் மயான வீடுகள் போன்ற சில வீடுகள் தெரிகிறது அல்லவா?
- சில இடங்களுக்கு நம்மால் உட்செல்ல முடியாது.
- இராணுவம் அங்கே வேலி அடைத்திருக்கிறது.
- எல்லா இடத்திலேயும் camera வைக்கப்பட்டு இருந்தது.
- இந்த இடத்தில் இரகசியமாக ஒருவர் வேலை செய்கிறார்.
- அவர் சொல்லுகிறார், இவை எல்லாவற்றிற்கும் கீழே இது வரையும் வெளியே எடுக்காத Aeroplanes, Helicopters எங்களுடைய அரசாங்கம் ஒளித்து வைத்திருக்கிறார்கள்.
- 1991 ம் ஆண்ட நடைபெற்ற கதை இது.
- இதை நியாபகம் வைத்துக் கொண்டு இந்த வசனத்தை வாசிப்போம்.
- சாத்தான் பூமியில் காலடி வைக்கும் போது அவனுக்கு அந்த இரகசிய இராணுவத்தின் திறவுகோல் கிடைக்கிறது.
- பூமிக்கு அடியில் புதைந்து இருக்கின்ற விமானப்படை தளங்களுடைய அந்த சாவி அவனுக்கு கிடைக்கிறது.
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
-வெளிப்படுத்தல் 9 : 2
- அந்த இராணுவக் கதவை திறக்கப் போகின்றான்.
- இரகசியமாக இது வரை வைக்கப்பட்டிருந்த விமானங்களின் இயந்திரங்கள் எல்லாம் start செய்யப்பட்டன.
- எனவே, புகை வரும்.
- பார்த்துக் கொண்டிருக்கிற யோவானுக்கு பாதாளத்தின் கதவு திறக்கப்பட்டது.
- புகை எழும்புகிறது
- அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 9 : 3
- அங்கே அவர் கண்டது அமெரிக்க யுத்த விமானங்களை.
- Stealth fighters என்று சொல்லுகின்ற விமானங்களை.
- ஆயிரக்கணக்கில் விமானங்கள் மேலே வருவது 2000 வருடங்களுக்கு முன்பதாக அவர் கண்டார்.
- அவருக்கு விமானங்கள் தெரியாது தானே.
- இவர் சொல்லுகிறார் வெட்டுக்கிளிகள் என்று.
- கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
- நமக்கு தெரிந்த வெட்டுக்கிளிகள் போல அல்ல.
- அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
- தேளையும் அவருக்கு தெரியும்.
- தேளும், வெட்டுக்கிளியும் அளவிலே கொஞ்சம் ஒத்த மாதிரி தான்.
பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 9 : 4
- அந்த விமானத்தில் வித்தியாசமான ஒரு வித குண்டுகள் இருக்கின்றன.
- அந்த குண்டுகள் போய் எல்லா இடத்திலும் அந்த குண்டுகளால் அடிக்கப் போகிறார்கள்.
- அந்த குண்டுக்கு யாருமே மரிக்க மாட்டார்கள்.
- அது என்ன மாதிரியான குண்டுகள் தெரியுமா?
- 2 வகைகள் உள்ளது.
- இராசயனம் மிகுந்த ஒரு குண்டு, Biological weapons ஒன்று.
- ஒரு குண்டு அடித்த உடனே இராசயன வர்க்கம் அங்கே வந்து விடும்.
- அப்பொழுது அங்கு இருக்கிற மனிதனுடைய உடம்பெல்லாம் அரிக்கத் தொடங்கும்.
- எரிபந்தங்களை போல எரிய தொடங்கும்.
- சாக மாட்டார்கள்.
- இன்னொன்று தான் உயிரியியல் சம்பந்தமான ஒரு குண்டை போட்டவுடன் virus, bacteria இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் வெளியில் வரும்.
- அங்கே ஜனங்களுக்கு சுவாசிக்க முடியாமல் போய்விடும்.
- கழுத்தை நெரிப்பதை போல உணருவார்கள்.
- ஜனங்களுக்கு இதனால் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
- இந்த காணப்போகிற கஷ்டங்கள் இதுவரையும் மக்களுக்கு வந்ததே இல்லை.
- அந்த குண்டுகளினாலே மரம்,செடி,கொடிகளுக்கு ஒன்றும் ஆகாது.
- ஆண்டவருடைய நாமம் தரிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றுமே நடைபெறாது.
- யார் இவர்கள், சபை இல்லை.
- 7 ம் அதிகாரத்திலே பார்த்தோம்.
- யூதர்களுக்கு தான் அந்த நாமம் கொடுக்கப்படும் என்பதாக.
- யூதர்களுக்கு இது தாக்கப்போவதில்லை.
- யாத்திராகமம் புத்தகத்திலே எகிப்திலே ஆண்டவர் அவர்களுக்கு வாதைகளை கொடுக்கும் போது, அங்கு வாழ்ந்த யூதர்களுக்கு அந்த வியாதிகள் எதுவும் வரவில்லை.
- எகிப்திலே மிருகங்கள் சாகும் போது யூதர்களுடைய மிருகங்கள் சாகவில்லை.
மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
-வெளிப்படுத்தல் 9 : 5
- அந்த 7 வருடங்களிலே, 5 மாதம் தான் அவர்கள் வேதனைப்பட்டார்கள்.
- பிசாசினுடைய சூழ்ச்சி இந்த இடத்தில் தெரிகிறது.
- பிசாசு ஜனங்களை இலகுவாக சாகடிக்க மாட்டான்.
- பிசாசுக்கு நம்மை உயிரோடே வைத்து வதைக்கணும்.
- அவன் பூமியிலே வந்தது கொண்டாடுவதற்கு.
- அவன் வல்லமையை காட்டுகிறான்.
- இது அநேக தலைவர்களுக்கு நடந்தது. Like Adolf Hitler.
- இப்படி அநேக தலைவர்கள் ஆளுகைக்கு வந்த பிறகு அவர்களுடைய வல்லமையை காட்டினார்கள்.
- அது தான் பிசாசின் குணங்கள்.
- அந்த பிசாசு பூமியிலே வந்த பிற்பாடு மக்களை வதைத்து அவன் வல்லமையை காட்டுகிறான்.
- தேள் கடிப்பது என்பது ஒரு சொல்ல முடியாத வேதனை.
- தேள் ல இருக்கிற toxin இரத்தத்தில் கலக்காது, நரம்பைத் தான் தாக்கும்.
- அது தாங்க முடியாத வேதனை.
- அப்படி தேள்கள் ஒரே நேரத்தில் வந்து தாக்கினால் எப்படி இருக்கும்.
- வெறுத்து விடும்.
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.
-வெளிப்படுத்தல் 9 : 6
- சாத்தான் பூமியிலே பாதத்தை வைத்தப் பிற்பாடு ஜனங்களுக்கு முத்திரை இடுவார்களாம்.
- நெற்றியிலும், கையிலும்
- அந்த இலக்கங்களை குறித்து பிற்பாடு பார்க்கலாம்.
- 666 இலக்கத்தை எடுத்தப் பிற்பாடு அந்த நபர் நினைப்பது கூட அந்த ஆளுகை செய்பவர்களுக்கு தெரியும்.
- அப்படிப்பட்ட இயந்திரங்கள் நிறைய இருக்கிறது.
- CIA- Criminal investigation Agency, America வில் இருக்கிற அந்த நிறுவனம்
- அவர்கள் உருவாக்குகிற இயந்திரங்களை பார்த்தோமானால்
- இஸ்ரவேலில் இருக்கிற Mozart நிறுவனம் தான் அதை கண்டுபிடித்தது.
- மூளை என்ன சிந்திக்கிறது என்பதை அவர்கள் எடுத்துக் காட்டலாம்.
- Lie Detector கூட இருக்கிறது.
- தற்கொலை கூட செய்து கொள்ள முடியாது.
அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
-வெளிப்படுத்தல் 9 : 7
- அந்த காலத்தில் யுத்தத்திற்கு செல்லும் போது குதிரைகள் அணி அணியாக வரிசையாக நிற்கும்.
- அது போல விமானங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
- Pilot உடைய multiplex helmet அதை தான் அவர் பொன்மயமான கிரீடம் என்கிறார்.
- விமானத்தின் முன் பக்கத்தை பார்த்தீர்களென்றால் இரண்டு கண் இருப்பது போலவும், ஒரு மூக்கு போலவும், இரண்டு கைகள் போலவும் தெரியும்.
அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
-வெளிப்படுத்தல் 9 : 8
- அந்த விமானம் பறக்கும் போது, கருப்பு புகை நீளமாக பெண்களின் கூந்தல் போல இருந்தது.
- அவர் இது போல ஒரு காரியத்தை கண்டதே இல்லை.
- முன்னாலே துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஒடுகிற அநேகங்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
-வெளிப்படுத்தல் 9 : 9
- மார்க்கவசங்கள்-அவர் மாம்சத்தை போல அல்ல, இரும்பை போன்ற விஷயங்களை காண்கிறார்.
- அந்த engine சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேகங்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன என்கிறார்.
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
-வெளிப்படுத்தல் 9 : 10
- அவர் கண்டது jet விமானம்.
- அவருக்கு தெரிந்த வகையிலே அவர் விவரிக்கின்றார்.
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயுபாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
-வெளிப்படுத்தல் 9 : 11
- உபத்திரவத்தின் தகப்பன் என்பது தான் அதன் பொருள்.
முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
-வெளிப்படுத்தல் 9 : 12
- ஐந்தாம் எக்காளம் ஊதி நடந்த காரியங்களுக்கு பிறகு, இன்னும் 2 ஆபத்துகள் வரப் போகிறது.
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,
-வெளிப்படுத்தல் 9 : 13
- இது இயேசு கிறிஸ்துவினுடைய சத்தம்.
- தேவனுக்கு முன்பாக நிற்கக்கூடிய ஆட்டுகுட்டியானவர்.
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.
-வெளிப்படுத்தல் 9 : 14
- ஐபிராத்து நதி என்றால் உலகத்தின் முதல் நாகரீகம் தோன்றின அந்த பிரதேசத்திலே இருக்கின்ற நதி.
- Euphrates, Tigris என்ற நதிகள், வேதத்திலே பார்க்கிற நதிகள் மாத்திரமல்ல, நாம் மற்ற புத்தகத்தில் கற்றுக்கொண்ட நதிகளும் அதில் இருக்கின்றன.
- உலகம் அந்த நதிகளை குறித்து பேசுகிறது.
- அவர்கள் தான் உலகத்தின் முதல் நாகரீகம் தோன்றின இடம் இது என சொல்லி இருக்கிறார்கள்.
- Euphrates நதிக்கும் Tigris நதிக்கும் இடையில் Mesopotamia நாகரீகம் உருவானது.
- Gilgsmesh என்ற ராஜா அங்கு தான் ஆளுகை செய்தார்.
- Bible ல அந்த Gilgamesh என்ற பெயர் தான் நிம்ரோத் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
- அவர் தான் உலகத்தின் முதலாவது ராஜா.
- அவருக்கு ஆண்டவர் ஒரு கட்டளை கொடுத்திருந்தார், நீங்கள் பிரிந்து போய் பலுகி, பெருகி இந்த பூமியை நிரப்புங்கள் என்பதாக.
- Gilgamesh சொன்னார் நாங்கள் பிரிந்து போகக் கூடாது. நாங்கள் ஒன்றாக இருப்போம் என்று.
- அந்த ஆண்டவருக்கு கீழ்ப்படியாமல் போனக் காரியம்.
- அவன் மூலமாக பிசாசு வந்தான்.
- தன்னைப் பெற்ற தாயையே திருமணம் செய்து கொண்டான்.
- Senoris - அவனுடைய தாயின் பெயர்.
- அவனுக்கும், அவன் தாய்க்கும் பிறந்தவன் தான்
- தம்மூஸ்.
- அவன் சொன்னான் நான் தான் தேவ பிதா.
- Senoris தான் தேவ தாய் என்று.
- தம்மூஸ் தான் தேவ புத்திரர் என்பதாக.
- என்னை நமஸ்கரிக்க வேண்டுமென்றால் எனக்காக பெரிதான ஒரு உருவத்தை செய்ய வேண்டும் என்பதாக.
- செய்தார்கள்.
- பாபேல் கோபுரத்தை கட்டினார்கள்.
- அந்த பாபேல் கோபுரத்தை கண்ட ஆண்டவர் பாஷைகளை தாறுமாறாக்கினார்.
- அதன் பிற்பாடு தான் மற்ற நாகரீகங்கள் எல்லாம் வந்தன.
- ஆகவே இந்த பாபிலோன் என்கிற பிரதேசம் Euphrates நதி மனிதனுடைய ஆரம்பத்தில் இருந்தே பிசாசினால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு இடமானது.
- பிசாசினுடைய மூலஸ்தனம் அங்கு தான் இருக்கிறது.
- இப்போது உலகத்தில் என்ன நடைபெறுகிறது.
- ISIS என்ற ஒரு குழு இருக்கிறார்கள்.
- 2014, Jan 14 ம் தேதி ISIS தன்னை பிரசித்தமாக பிரகடப்படுத்தினார்கள்.
- Islamic State of Iraq and the Levant Islamic State of Iraq and Syria.
- Osama bin laden, Al-Qaeda - வை ஸ்தாபித்தவர்.
- அவரை அமெரிக்கர்கள் கொலை செய்தார்கள்.
- அதன் பிற்பாடு Al-Qaeda gulf என்ற குழுவினரின் தீர்மானத்தின்படி ISIS என்ற ஒரு குழு பிரிந்தது.
- இஸ்லாமிய தேசம் என்ற அர்த்தத்தைக் கொண்டது அந்தப் பெயர்.
- ஐப்பிராத்து நதி நான்கு நாடுகளுக்கு மத்தியில் இருக்கிறது.
- அந்த நதி ஆரம்பிப்பது கிழக்கு துருக்கியில்.
- அங்கு இருந்து கீழே வந்து சிரியாவை நோக்கி போகிறது.
- அங்கு இருந்து ஈராக் தேசத்துக்கு வருகிறது.
- அநேகமாக ஈரானில் தான் அந்த நதிகள் இருக்கின்றது.
- அப்படியே கீழ் நோக்கி வந்து Saudi Arabia பகுதிக்கு வந்து Persian gulf வந்து விழுகிறது.
- துருக்கியில் ஆரம்பித்து சவுதி அரேபியாவில் முடிவடைகிறது.
- அநேகமாக அந்த நதி ஓடுவது ஈராக் மற்றும் சிரியா.
- 4 நாடுகள்- Saudi Arabia, Turkey, Syria, Iraq.
ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு
- யார் அந்த தூதன்.
- அந்த 4 நாடுகளையும் ஆளுகை செய்ய பிசாசினால் ஏற்படுத்தப்பட்ட ஒருவர்.
- சாத்தான் ஒரு பகுதியில் முழுமையாக தோல்வி அடைந்தவன்.
- ஆண்டவர் இல்லாத ஜனங்களை தாக்குவதற்கு அவனுக்கு வல்லமை உண்டு.
- ஆண்டவர் நம்மோடு இருப்பாரானால் பிசாசை விட நாம் வல்லமை பொருந்தியவர்கள்.
- எனக்குள் இருக்கிறவர் இந்த உலகத்தில் இருப்பவர்களை பார்க்கிலும் பலவான்.
- இயேசுவானவர் சாத்தானுடைய தலையை நசுக்கினார்.
- அவன் இயேசு கிறிஸ்துவை தெரியாத, அவரை ஏற்றுக்கொள்ளாத, இயேசு கிறிஸ்துவை தெரிந்து கொண்டு பயப்படுபவர்களை பயமுறுத்துவான்.
- ஆனால் நமக்குள் இருக்கிற இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர்.
- நாம் அவனுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.
- நாய் பயப்படுகிற மனுஷனை இன்னும் அதிகமாக துரத்தும்.
- பயப்படவில்லை என்றால் அது பாட்டுக்கு போய்விடும்.
- அது போல தான் பிசாசும்.
- பயப்படுகிறவர்களை இன்னும் அதிகமாக பயப்படுத்துவான்.
- இங்கு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இயேசு கிறிஸ்துவும் இல்லை, பரிசுத்த ஆவியானவரும் இல்லை.
- எனவே பிசாசு ஆட்டமாய் ஆடுவான்.
- இப்பொழுது அந்த பிரதேசத்தில் பிசாசு பேய் ஆட்டம் ஆடுகிறான் அல்லவா?
- இந்த ISIS குழுவினர் அங்கே ஜனத்தினுடைய கழுத்தை வெட்டுவார்கள்.
- சிறு பிள்ளைகளுடைய கழுத்தை வெட்டுவார்கள்.
- கிராமங்களுக்கு போய் அங்கே அநேகரை கொலை செய்வார்கள்.
- முழு உலகத்திற்கும் இந்த ISIS பெரிய தொந்தரவாக இருக்கிறது.
- ஆனால் அந்த பிரதேசத்தில் தான் அவர்கள் கிரியை செய்வார்கள்.
- எந்த பிரதேசம்?
- நாம் இப்போது பார்க்கிற ஆறாவது எக்காளத்தைக் குறித்து பார்க்கிற அந்த பிரதேசத்திலே.
- அந்த 4 தேசத்திலேயும் தூதனாகிய பிசாசு கட்டப்பட்டு இருக்கிறான்.
- அவனுக்கு தேவையான காரியத்தை அவனால் செய்ய முடியாது.
- அவன் கட்டப்பட்டு இருக்கும் போதே இவ்வளவு காரியங்களை செய்து கொண்டு இருப்பானால்,
- அந்த 6வது எக்காளத்தை ஊதும் போது துருக்கி, சிரியா, ஈராக், சவுதி அரேபியா இந்த 4 தேசங்களிலும் வல்லமையுள்ள பிசாசு கட்டு அவிழ்க்கப்படும்.
- அப்பொழுது என்ன நடைபெறும்?
- இன்றும் அந்த பிரதேசத்திலே பிரச்சனைகள் இருக்கின்றன.
- இப்போது பிசாசு கட்டப்பட்டு இருக்கிறான்.
- இப்போது அவிழ்த்துவிடும்படியாக கூறப்படுகிறது.
- அப்படியென்றால் என்ன? உனக்கு வேண்டியதை செய்.
- துருக்கி, சிரியா, ஈராக், சவுதி அரேபியா இந்த இடத்தை குறித்து வல்லமையுள்ள பிசாசு
- இந்த பூமியில், சரித்திரத்தில் நடைபெற்று இருக்காத காரியங்கள் அந்த 4 நாடுகளிலும் பிரச்சனை உருவாகும்.
அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
-வெளிப்படுத்தல் 9 : 15
- மரணத்தை கொடுக்கவில்லை.
- வேதனையை கொடுக்கிறார்.
- ஏன் 4 பேர் கட்டு அவிழ்க்கப்படுகிறார்கள்?
- உலகத்திலே மூன்றிலொரு பங்கை கொலை செய்ய.
- எப்படி செய்யப் போகிறார்.
- அந்த 4 தேசங்களிலும் யுத்த தாங்கிகள் வரப் போகின்றன.
குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபதுகோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
-வெளிப்படுத்தல் 9 : 16
- நமக்கு யுத்த தாங்கிகள் என்ன என்பது தெரியும்.
- ஆனால் யோவானுக்கு தெரியாது தானே!
- அவர் சொல்லுகிறார்.
- அவருடைய காலத்தில் யுத்தத்திற்கு இரதங்களை உருவாக்கினால், அந்த இரதங்களுக்கு இயந்திரங்கள் இருக்கவில்லை.
- அந்த இரதங்கள் எப்படி பிரயாணம் செய்தது?
- குதிரையை கட்டி தான் இழுக்க வேண்டும். குதிரை ரதம்.
- எனவே, யோவான் நினைக்கிறார் வித்தியாசமான குதிரை இரதங்கள்.
- அவர் எண்ணிக்கையை கணக்கு பார்க்கவில்லை.
- அந்த தொகை இருபது கோடி என்று நான் எண்ண வில்லை.
- அதை சொல்லுவதைக் கேட்டேன் என்று சொல்லப்பட்டு உள்ளது.
- யுத்த தாங்கிகள் (War Bearers) இருபது கோடி புறப்பட்டது என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
- இப்படிப்பட்ட யுத்த தாங்கிகளை பூமியிலே யாருமே கண்டிருக்க மாட்டார்கள்.
- முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது சில இடங்களில் யுத்த தாங்கிகளின் அடையாளங்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
- சாதாரணமாக 8000 யுத்த தாங்கிகள் யுத்தத்தில் இருக்கும்.
- ஆனால் கோடிக்கணக்கு என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
-வெளிப்படுத்தல் 9 : 17
- யோவான் குதிரை மேல் அமர்ந்திருக்கிறவர்களை தரிசனத்திலே காண்கிறார்.
- பெரிய ஒரு பீரங்கி அங்கு பொருத்தப்பட்டு இருக்கும்.
- அவர் தரிசனத்தில் காணும் போது பும் பும் என்று வெடிக்கிறது.
- அங்கு அக்கினி புறப்படுகிறது.
- ஆனால் அவருக்கு அது என்ன என்பது தெரியாது.
- அவர் எழுதுகிறார் குதிரையின் வாயில் இருந்து புகை வருகிறது என்பதாக.
- கந்தகங்கள் வருகின்றன.
அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.
-வெளிப்படுத்தல் 9 : 18
- அந்த காலத்திலே இருக்கப் போகிற ஜனங்களில் மூன்றிலொரு பங்கு.
- உலக ஜனத்தொகையிலே மூன்றிலொரு பங்கு.
- அந்த யுத்த தாங்கிகளில் இருந்து வருகிற குண்டுகளினாலே மக்கள் சாக போகிறார்கள்.
அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
-வெளிப்படுத்தல் 9 : 19
- இப்பொழுது இத்தனைக் கணக்கான யுத்த தாங்கிகள் எங்கு இருந்து வந்தது?
- ஏன் அவற்றை அவர்கள் உற்பத்தி செய்தார்கள்?
- இஸ்ரவேல் தேசத்தை தாக்குவதற்கு.
- 1948 May 14th - இஸ்ரவேல் தேசம் ஒரு தேசமாக மாறியது.
- அன்று இரவு சுற்றிலும் இருந்த நாடுகள் இஸ்ரவேல் தேசத்தை தாக்க தொடங்கினார்கள்.
- என்னத்தினால் தாக்கினார்கள்?
- யுத்த கப்பல்களினாலும், யுத்த விமானங்களினாலும், யுத்த தாங்கிகளாலும்.
- என்ன நாடுகள்? Lebanon, Syria, Jordan,Iraq, Iran, Saudi Arabia, Egypt.
- அவர்களுக்கு பின்னால் இருந்து உதவி செய்வது யார்? Turkey, Russia.
- 9 மாதங்கள் அந்த யுத்தம் நடைபெற்றது.
- பெரிய நாடுகளுக்கு விரோதமாக.
- யார் அங்கு போராடியது? ஒரு சிறிய இஸ்ரவேல் தேசம்.
- ஒரே ஒரு பிரதம மந்திரி இருக்கிறார் Benjamin Netanyahu.
- பாராளுமன்றம் இல்லை.
- இராணுவ அதிகாரிகள் இல்லை.
- இராணுவமே இல்லை.
- யுத்த தாங்கிகள் கிடையாது.
- 1949, Feb 19th, எல்லா நாடுகளும் தோல்வியை ஏற்றுக் கொண்டபடியினால் அந்த யுத்தம் நிறுத்தப்பட்டது.
- ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
- 19 வருடங்கள் இரகசியமாக இந்த நாடுகள் இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக ஆயுதங்களை உற்பத்தி செய்தனர்.
- அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
- இஸ்ரவேல் தேசத்தை இலகுவாக தாக்க முடியாது என்பதாக.
- நல்ல நல்ல ஆயுதங்களை, யுத்த தாங்கிகளை எல்லாம் உருவாக்குவோம் என்று நினைத்தார்கள்.
- விமானங்களை, யுத்தக் கப்பல்களை எல்லாம் உருவாக்கினார்கள்.
- 19 வருடங்கள் சென்றது.
- 1967 June 11th நாங்கள் சுற்றி வந்து தாக்குவோம், இஸ்ரவேலை அழித்து விடுவோம், உலக வரைபடத்தில் இருந்து அஅவர்களை அழித்து விடுவோம் என்று சொன்னார்கள்.
- Feb month அந்த செய்தி அவர்களுக்கு கிடைத்தது.
- அந்த இடத்திலே இராணுவ அதிகாரி ஒருவர் இருந்தார்.
- Moshe Dayan என்பதாக.
- அவர் சொன்னார்.
- இவர்கள் June 11 ம் தேதி யுத்தத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள்.
- நாம் 5ம் தேதியிலிருந்து தாக்கி, 6 நாட்களில் தாக்கி அழித்து விடுவோம் என்பதாக.
- 7 வது நாள் ஓய்ந்திருப்போம் என்பதாக.
- மக்கள் இதெல்லாம் சரி வராது என்று சொன்னார்கள்.
- அதற்கு Moshe Dayan சொன்னார் இந்த தேசத்தை கொடுத்தது ஆண்டவர் எங்களுக்கு.
- எங்கள் ஆண்டவர் 6 நாளில் உலகத்தை படைத்து 7 ம் நாள் ஓய்ந்திருந்தாரேயானால், 6 நாளில் யுத்தம் செய்து 7ம் நாள் ஓய்ந்திருப்போம் என்றார்.
- ஆண்டவர் உதவி செய்வார்.
- ஆகவே 1967 ம் ஆண்டிலே June 5 ம் தேதி தன்னிடத்தில் இருந்த 413 விமானங்களில் 200 வெளியே எடுத்தார்கள்.
- அங்கே விமானப்படையை அனுப்பினார்கள் 3 தேசங்களுக்கு விரோதமாக.
- 6 ம் நாள் எருசலேமை கைபற்றினார்கள்.
- 10 ம் தேதி வரும் போது ராஜா ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொல்லி இருக்கிறார் இதோ நாங்கள் சரண் அடைகிறோம் என்று,
- 6 நாட்கள் யுத்தம் செய்து இஸ்ரவேல் வெற்றி பெற்றது.
- அரபு நாடுகள் தோல்வியை அடைந்தன.
- எகிப்தில் இருந்த இராணுவ வீரர்களிடம் ஏன் நீங்கள் யுத்தத்தை விட்டு ஓடினீர்கள் என்று கேட்ட போது, இஸ்ரவேலர்கள் சொல்வது பொய் .
- யுத்த தாங்கிகள் 250 மாத்திரம் அல்ல, 25,000 க்கு மேல் வந்தது என்றார்கள்.
- நமக்கு தெரியும் நம் ஆண்டவரைக் குறித்து.
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;
-வெளிப்படுத்தல் 9 : 20
- இந்த உலகத்தில் எவ்வளவு பாவம் இருக்கிறது.
- ஆனால் ஜனங்கள் மனந்திரும்பவில்லை.
- ஆனால் இயேசு கிறிஸ்து இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். சபை இருக்கிறது.
- ஆனால் இப்பொழுதே இந்த ஜனங்கள் மனந்திரும்பாமல் இருக்கும் போது, இயேசு இல்லாமல், பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், சபை இல்லாமல் உலகத்தார் மனந்திரும்புவார்களா? இல்லை.
தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.
-வெளிப்படுத்தல் 9 : 21
- மக்கள் தங்கள் பாவங்கள் எதையும் நிறுத்தப் போவதில்லை.
Comments
Post a Comment