வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
-தானியேல் 9 : 27
- ஒரு வாரம் என்பது 7 நாட்கள்.
- அது 7 வருடங்களைக் குறிப்பிடுகிறது.
- அதாவது அதில் 3 1/2 வருடங்கள் சென்ற பிறகு அந்திக் கிறிஸ்து வந்து சொல்லுவான், யூதர்கள் இனி பலி செலுத்த முடியாது என்று.
- அவன் வந்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பான்.
- அவனுக்கு ஒன்றும் ஆகாது.
- ஏனென்றால் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இல்லை.
அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
-வெளிப்படுத்தல் 12 : 1
-வெளிப்படுத்தல் 12 : 1
அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
-ஆதியாகமம் 37 : 9
- யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் இது.
- அது நடந்தது.
- யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டப் பின்பு அதன் பின்பாக வறட்சி, பஞ்சம் உண்டான பொழுது இந்த மனிதர்கள் தானியம் தேடிக் கொண்டு எகிப்துக்கு போகிறார்கள். அப்போது யோசேப்பு அங்கு அதிபதியாக இருந்தார்.
- அப்படி தான் அந்த சொப்பனம் நிறைவேறியது.
- இப்போது அந்த சொப்பனத்திலே சூரியன் யார்?
- மல்கியா புத்தகத்தில் இயேசுவை குறித்து நீதியின் சூரியன் என்று சொல்லப்படுகிறது.
- ஆனால் யோசேப்பின் சொப்பனத்தில் வந்த
- சூரியன் யார்? யாக்கோபு.
- சந்திரன் யார்? அம்மா.
- சூரியனும், சந்திரனும் என்பது தகப்பனும், தாயும்.
- 11 நட்சத்திரங்கள் என்பது அவருடைய சகோதர்கள்.
- அப்படியானால் யோசேப்பும் ஒரு நட்சத்திரம் தான்.
- அந்த 12 பேர் மூலம் தான் இஸ்ரவேல் கோத்திரங்கள் வந்தன.
- சூரியனையும், சந்திரனையும், 12 நடசத்திரங்களையும் அணிந்திருக்கும் ஸ்திரீ என்றால் அது இஸ்ரவேல்.
அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது;
- இது கிரேக்க மொழியில் ஒரு அடையாளம் (sign) என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
- அடையாளம் அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல.
- அது உண்மையாகவே ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதல்ல.
- உண்மையான சந்திரன், சூரியன், நட்சத்திரங்களை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல.
அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
-வெளிப்படுத்தல் 12 : 2
- இது இயேசுவை குறிப்பிடுகிறது.
- இயேசு பிறப்பதற்கு இஸ்ரவேலை தேர்வு செய்தபடியினால் முழு உலகமும் இஸ்ரவேலுக்கு விரோதமாக இருந்தது.
- இன்று வரை இஸ்ரவேலை அழிக்க முடியாமல் பிசாசு தடுமாறுகிறான்.
- இதை தான் இந்த வசனம் சொல்லுகிறது.
- அந்த வேதனை இஸ்ரவேலுக்கு உண்டானது இயேசுவை இந்த பூமியில் பிறப்பிக்கும்படியாக.
அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
-வெளிப்படுத்தல் 12 : 3
- இது யார்? சாத்தான்.
- பிசாசு தான் இப்படி வர்ணிக்கப்படுகிறான்.
- அவனை வலுசர்ப்பம் என சொல்லப்படுகிறது.
- ஆதாம் ஏவளை பாவத்தில் விழத் தள்ளும்படியாக சர்ப்பத்தின் ரூபத்திலே தான் அவன் வந்தான்.
- அதனால் தான் உலகத்தில் உள்ள எல்லா மதங்களிலும் சர்ப்பத்தை வழிபடும் முறைமை இருக்கிறது.
- ஏனென்றால் மக்கள் அனைவரும் தன்னை வணங்க வேண்டும் என்பதே அவன் திட்டம்.
சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
- சிவப்பு என்பது இரத்த நிறம்.
- பிசாசு என்பவன் மரணத்தின் தூதன்.
- பிசாசோடு இருப்பவர்களுக்கு மரணம் மாத்திரமே.
- ஆனால் இயேசு கிறிஸ்துவோடு இருக்கும் நமக்கு அவர் ஜீவனைப் பெற்றுத் தருவார்.
ஏழு தலைகளையும்
- எபேசியர் 6:12 - 1)துரைத்தனங்களோடும், 2)அதிகாரங்களோடும், 3)இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், 4)வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்,
- இந்த 4 ம் தான் இந்த உலகத்தில் கிரியை செய்கிறது
- சாத்தான் 3 வகையாக கிரியை செய்வான். 1)யேசபேல், 2)அந்திக்கிறிஸ்து, 3)மரணத்தின் பாதாளத்தின் ஆவி.
- இந்த 3ம் வானமண்டலங்களின் மேலே கிரியை செய்கிறது.
- மொத்தம் 7.
பத்துக் கொம்புகளையும்,
- கொம்புகளைக் குறித்து தானியேலுடைய புத்தகத்தில் காண்கிறோம்.
- கொம்புகள் என்றால் ராஜ்யங்கள்.
- 10 என்பது எண்ணிக்கையிலே பரிபூரணத்தைக் காண்பிக்கிறது.
- 10 என்பது நாம் நினைக்கும் 10 அல்ல.
- எல்லாம் என்று அர்த்தம்.
- உலகத்தில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களையும் குறிக்கிறது.
- 7 வருடங்கள் சாத்தானுடைய ஆட்சி தான் இந்த பூமியிலே இருக்கும்.
- எல்லா ராஜ்யங்களுடைய தலைவர்களும் சாத்தானுக்கு அடிமைப்பட்டு அவனுடைய கட்டளைக்கு கீழ்ப்பட்டு நடப்பார்கள்.
- அது தான் 10 கொம்புகள் என்று சொல்லப்படுகிறது.
- உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களும் அவர்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் சாத்தானுக்கு கொடுப்பார்கள்.
- ஏழு தலைகளின் மீது ஏழு முடிகளையும் கொடுப்பார்கள்.
- அந்த 7 வருடங்களுக்குள் உலகத்தில் கிறிஸ்தவர்கள் இல்லை தானே.
- சபையாகிய நாம் சாத்தானின் தலையை நசுக்கி இருக்கிறோம்.
- எனவே, சபையாகிய நாம் இருக்கும் வரையிலே பிசாசின் தலையில் கிரீடத்தை அணிவிக்க முடியாது அல்லவா!
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
-வெளிப்படுத்தல் 12 : 4
- வேதம் நமக்கு என்னக் கற்றுக்கொடுக்கிறது என்றால் பிசாசு வானத்தில் இருந்து கீழே விழும் போது தேவதூதர்களில் மூன்றிலொரு பங்கை இழுத்துக்கொண்டு விழுந்தான்.
- அதை தான் மூன்றிலொரு பங்கு நட்சத்திரத்தை விழத்தள்ளிற்று என்று சொல்லப்படுகிறது.
- இவைகள் அடையாளங்கள்.
பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
- இயேசு பிறந்த நாளில் இருந்து ஏரோது ராஜா உட்பட பிள்ளைகளை கொன்றும் போடும் விதமாக இயேசுவை அழிக்க முயற்சித்தான்.
- முடியவில்லை.
- உண்மையான ஸ்திரீ அல்ல இது.
- ஸ்திரீ என்றால் யூதர்களை அடையாளமாக காண்பிக்கிறது.
- சர்ப்பம் என்றால் சாத்தானை அடையாளமாக காண்பிக்கிறது.
சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
-வெளிப்படுத்தல் 12 : 5
- இஸ்ரவேலருக்குள்ளாக இயேசு பூமியில் வந்தார்.
- அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
- அது தான் இங்கு சொல்லப்படுகிறது.
ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
-வெளிப்படுத்தல் 12 : 6
- 1260 நாட்கள் என்பது யூத நாட்காட்டியின்படி அது 3 1/2 வருடங்கள்.
- முதல் மூன்றரை ஆண்டுகள் தான் மோசேயும், எலியாவும் வந்து யூதர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.
- அது முடிந்து உடன்படிக்கைப் பெட்டி போய்விட்டது.
- அந்திக்கிறிஸ்து அப்போது தன்னை தேவன் என்று சொல்லுவான்.
- நான் மகா பரிசுத்த ஸ்தலத்திலே நிற்கிறேன் என்று சொல்லுவான்.
- யூதர்களை தன்னை வணங்க கட்டாயப்படுத்துவான்.
- ஆனால் அவர்கள் வணங்க மாட்டார்கள்.
- அப்பொழுது அந்திக்கிறிஸ்து யூதர்களை கொலை செய்ய முயற்சிப்பான்.
ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்
- இஸ்ரவேலை வனாந்தரத்தில் மறைத்து சாத்தானிடமிருந்து பாதுகாப்பதற்காக, அவர்களை காப்பாற்றுவதற்காக வனாந்தரத்திற்கு கர்த்தர் கூட்டிச் சொல்கிறார்.
வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
-வெளிப்படுத்தல் 12 : 7
- இங்கு வலுசர்ப்பம் என்பது பிசாசு.
- மிகாவேல் என்ற பிரதான தூதனும், அவனை சேர்ந்த தூதர்களும் பிசாசோடு யுத்தம் பண்ணினார்கள்.
வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
-வெளிப்படுத்தல் 12 : 8
- இனி பிசாசனவனுக்கு வானத்தில் (Heaven) ல் எந்த ஒரு இடமும் கிடையாது.
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
-வெளிப்படுத்தல் 12 : 9
- பழைய பாம்பு என்று சொல்லப்படுவது ஆதியில் இருந்து இப்போது வரை மனிதர்களை பாவத்தில் விழத்தள்ளின அந்த பாம்பு ( பிசாசு).
- சாத்தானும், அவன் தூதர்களும் மேலே இருந்து பூமிக்கு தள்ளப்பட்டார்கள்.
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
-வெளிப்படுத்தல் 12 : 10
- வெளிப்படுத்தல் புத்தகத்தில் கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பற்றி பேசப்படும் ஒரே இடம் இது மாத்திரமே.
- இரவும், பகலும் என்பது எந்நேரமும் நம்மைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தவன் தள்ளப்பட்டான்.
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
-வெளிப்படுத்தல் 12 : 11
- சாத்தானை நாம் இப்போதும், எப்போதும் ஜெயிக்கிறோம்.
- இயேசுவின் இரத்தத்தினாலும், தேவ வார்த்தையினாலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம்.
- அதை தான் ஜெயித்தார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது.
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
-வெளிப்படுத்தல் 12 : 12
- பரலோகத்தில் வாசமாயிருக்கிற சபையே களிகூருங்கள் என்கிறார்.
- ஆனால் பூமியில் இன்னும் இருப்பவர்களுக்கு ஐயோ என்று சொல்லப்படுகிறது.
- சாத்தானின் தாக்கம் அவனுடைய கடைசிகாலங்களில் இன்னும் கொடுமையானதாக இருக்கும்.
வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
-வெளிப்படுத்தல் 12 : 13
- இஸ்ரவேலை அந்திக்கிறிஸ்து துன்பப்படுத்துகிறான்.
ஸ்திரீயானவள் அந்த பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
-வெளிப்படுத்தல் 12 : 14
- இஸ்ரவேலர்கள் அந்திக்கிறிஸ்துவிடம் இருந்து தப்பித்துப் போக அவர்களுக்கு பெருங்கழுகின் 2 சிறகுகள் கொடுக்கப்படுமாம்.
- இதை யோவான் கண்டார்.
- யோவானுடைய காலகட்டத்திலே அங்கே விமானங்கள் இருக்கவில்லை.
- அதாவது மிக பிரம்மாண்டமான விமானங்களில் ஏறி இந்த இஸ்ரவேலர்கள் தப்பித்துப் போகிறதை யோவான் கண்டான்.
- மற்ற பறவைகள் சிறகுகளை அசைத்து பறக்கும், ஆனால் கழுகுகள் சிறகுகளை அசைக்காமல் பறக்கும்.
- அதைத் தான் யோவான் சொல்லுகிறார் பெருங்கழுகின் 2 சிறகுகள் கொடுக்கப்பட்டது என்று.
ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய்
- காலம் என்பது 1 வருடம்.
- காலங்கள் என்பது 2 வருடங்கள்
- அரைக்காலம் என்பது 1/2 வருடம்.
- மொத்தம் 3 and 1/2 வருடங்கள்.
- அந்த மூன்றரை வருடங்கள் தேவன் அவர்களை போஷிப்பார்.
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
-வெளிப்படுத்தல் 12 : 15
- மிக பிரம்மாண்டமான விமானங்களில் ஏறி இந்த இஸ்ரவேலர்கள் தப்பித்துப் போகும் போது அவர்களுக்கு பின்னால் இராணுவ விமானங்கள் தொடர்ந்து போகும்.
- 20-30 அடி அவர்கள் மேலே பறக்கும் போது அது ஒரு தண்ணீரைப் போல பறந்து செல்லும்.
- அந்த விமானம் கீழே இருந்து மேலே போகும் போது அது ஒரு பெருவெள்ளத்தைப் போன்ற தோற்றமளிக்கும்.
- அதை தான் அவர் கண்டார்.
பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
-வெளிப்படுத்தல் 12 : 16
- இங்கு ஊற்றின வெள்ளம் என்பது அந்திக்கிறிஸ்துவினுடைய விமானங்கள்.
- ஸ்திரீ என்பது இஸ்ரவேல்.
- இஸ்ரவேலரை கொலை செய்ய அந்திக்கிறிஸ்து முயற்சிக்கிற பொழுது Boeing 747 என்ற விமானத்தின் மூலமாக அவர்கள் தப்பித்து போவார்கள்.
- இப்போதே இப்படிப்பட்ட விமானங்கள் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
- அதை service பண்ணி ஆயத்தத்தோடு வைத்திருக்கிறார்கள்.
- சடுதியாக ஒரு ஆபத்து வந்தால் அதன் மூலமாக தப்பித்து புறப்படுவதற்கு.
- அவர்கள் தப்பித்து போகும் போது 20-30 அடியில் தான் பறக்கப் போகிறார்கள்.
- அதாவது jet engine உள்ள ஒரு விமானம் வனாந்தரத்திலே 20-30 அடி உயரத்திலே பறக்கவே முடியாது.
- ஏனென்றால் வனாந்தரத்தில் இருக்கிறதான அந்த மணற்துகள்களை அந்த engine உள்வாங்கும் பொழுது வெடித்து சிதறி விடும்.
- ஆனால் இவைகள் வெடிக்காமல் அந்த உயரத்தில் பறக்கப் போகிறது.
- அதன் பிற்பாடு அந்திக்கிறிஸ்துவினுடைய விமானங்கள் இவர்களும் 20-30 அடியிலே பறக்கும் போது அந்த engine களுக்குள் இந்த மணத்துகள்கள் போய் அது வெடிக்கிற போது அந்த மணல்களில் அது விழும்.
- அதை யோவான் கண்டு தான் இதை எழுதுகிறார்.
- அந்த Boeing 747 ல் ஒரு விமானத்துக்கு 4 engine கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ஒரு கதை:
- 1967 லே June 5, 6:15am, இஸ்ரவேலர்களிடத்தில் இருந்த 200 விமானங்கள், எகிப்தின் மேலே சிறகடிக்க ஆரம்பித்தன.
- Sinai, Alexandria, Swiss, Chiro அந்த 4 இடங்களிலும் இருக்கிற விமான நிலையங்களை அழித்துப் போடும்படியாக புறப்பட்டது.
- அவர்கள் பறக்க ஆரம்பித்தது 20-30 அடி உயரத்திலே.
- போனார்கள், அடித்தார்கள், வந்தார்கள்.
- ஒரு விமானமும் உடையவில்லை.
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
-வெளிப்படுத்தல் 12 : 17
- இஸ்ரவேலை தாக்க முடியவில்லை என்ற கோபத்தில் அந்திக்கிறிஸ்து தேவனுக்காக வாழ்கிற மற்ற மக்களுடனே யுத்தம் பண்ணப் போனான்.
- சர்ப்பமானது யூதர்களை அழிக்க முற்பட்டது.
- முடியவில்லை.
- ஆகவே, ஸ்திரீயினுடைய சந்ததியுடன் கூட யுத்தம் பண்ண போயிற்று
அவளுடைய சந்ததியான
- சபை அல்ல.
- இயேசுகிறிஸ்துவினுடைய சந்ததி.
- சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, கைவிடப்பட்டவர்கள் இனியாவது நாம் எப்படியாவது பாதுகாப்பாக இருப்போம் என்று எண்ணி இருப்பவர்கள்.
- இந்தக் கூட்ட மக்கள் அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு எதிர்ப்பான கூட்டமாக மாறுகிறார்கள்.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
-ஆதியாகமம் 3 : 15
- இங்கு அவள் வித்து என்று சொல்லப்படுவது இயேசுகிறிஸ்துவினுடைய சந்ததி.
Comments
Post a Comment