வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 11 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 11 விளக்கம்

பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
 -வெளிப்படுத்தல் 11 : 1
  • இந்த இடத்தில் 3 காரியங்களைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 
  • தேவாலயம், பலிபீடம், தொழுது கொள்ளுகிறவர்கள் . 
  • தேவாலயத்திலே தொழுது கொள்ளுகிறவர்கள் யார்?
  • யூதர்கள் மாத்திரம் தானே.
  • அப்படியானால் அந்த 7 வருடங்களுக்குள்ளே, யூதர்கள் மீண்டும் ஒரு முறை தேவாலயத்தைக் கட்டி தேவனை ஆராதிக்கப் போகிறார்கள். 
  • இன்றைக்கு அப்படி இல்லை. 
  • இன்றைக்கு இந்த நிகழ்காலத்திலே யூதர்களுக்கு ஒரு தேவாலயம் இல்லை. 
  • அப்படியானால் அவர்கள் எப்படி தொழுது கொள்ளுகிறார்கள். 
  • அவர்கள் ஜெப வீடுகளுக்கு வந்து TORAH - பழைய ஏற்பாட்டின் ஆகமங்களை வாசித்து, சங்கீதங்களில் இருக்கிற சில சங்கீதங்களைப் பாடி, ஒரு ரபீ-யினுடைய போகத்தை கேட்டு விட்டு செல்கிறார்கள். 
  • உலகத்தில் எங்கு இருந்தாலும் அந்த SABBATH - ஓய்வுநாளாகிய சனிக்கிழமையில் அப்படி தான் செய்கிறார்கள். 
  • ஆனால் இங்கு யோவானிடம் தேவாலயம், பலிபீடம், தொழுது கொள்ளுகிறவர்கள் என்ற மூன்று விஷயங்களை அளந்து பார் என்று சொல்லப்படுகிறது.
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு யூதர்கள் ஆராதிப்பதற்காக ஒரு தேவாலயம் இங்கு இருக்கப் போகிறது என்று சொல்லப்படுகிறது. 
  • அந்த தேவாலயம் ஒரு சாதாரண தேவாவலயம் அல்ல. 
  • அது சரியான ஒழுங்கின்படி கட்டப்பட்ட ஒரு தேவாலயம். 
  • ஏனென்றால் அதற்குள் பலிபீடம் இருக்கிறதென்றால் அங்கே பலி செலுத்தப்படும். 
  • அதாவது பழைய ஏற்பாட்டில் இருந்த 5 வகையான பலிகளும் செலுத்தப்படப் போகிறது. 
தானியேல்:

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.  
 -தானியேல் 9 : 27

ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.
 -தானியேல் 11 : 31

அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.
 -தானியேல் 12 : 11
  • எதிர்காலத்தில் கட்டப்படப் போகிற ஆலயத்தை குறித்தும், 7 வருடங்கள் அந்த ஆலயம் இருக்கும் என்றும், அந்த 7 வருடங்களுக்குள்ளே அந்திக்கிறிஸ்து அந்த தேவாலயத்துக்குள் வந்து அதை தீட்டுப்படுத்துவான், கெடுப்பான், அருவருப்பானக் காரியங்களை செய்வான் என்றும் சொல்லப்படுகிறது. 
இயேசு கிறிஸ்து:
மத்தேயு 24: 15-21
  • அதில் இயேசு தெளிவாக சொல்லுகிறார், அது கடைசிகாலம். 
  • அந்த கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து தேவாலயத்திற்குள் வருவான் என்று. 
  • அதாவது இயேசு இருந்த காலகட்டத்தில் இருந்த தேவாலயத்தைக் குறித்து அங்கு சொல்லப்படவில்லை. 
  • ஏனென்றால் அந்த தேவாலயம் உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு விட்டது. 
பவுல்:
2 தெசலோனிக்கேயர் 2:3-4
  • கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து தேவாலயத்திற்குள் வருவான் என்று அங்கு சொல்லப்படுகிறது. 
இம்மூவரும் குறிப்பிட்ட தேவாலயம் எந்த தேவாலயம்:
  • அதாவது கட்டப்படப் போகிறதான மூன்றாவது தேவாலயம். 
  • அந்த தேவாலயத்தை அலங்கரிப்பார் என இயேசு யோவானுக்கு சொல்லுகிறார். 
  • இந்த இடத்தில் சொல்லப்படுகிறது, தேவனுடைய ஆலயம் என்று. 
  • தேவனுடைய என்பதன் கிரேக்கப் பெயரை, நாம் எபிரேய மொழிக்கு திருப்பிப் போட்டால் El-o-him. 
  • அதாவது பழைய ஏற்பாட்டிலே அவர்கள் அறிந்திருந்த தேவனினுடைய என்பது தான் அதன் அர்த்தம். 
  • அப்படியானால் இந்த 7 வருடங்கள், புதிய ஏற்பாடு முடிந்த பின்னர் ஆரம்பிக்கிற 7 வருடங்கள்.
புதிய ஏற்பாடு எப்பொழுது ஆரம்பிக்கிறது, எப்போது முடியப் போகிறது? 
  • அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அதை உடைத்து “இதை வாங்கி புசியுங்கள்” 
  • நான் வரும் வரையிலே என்னுடைய மரணத்தை நினைவுகூருங்கள் என்றார். 
  • அவர்கள் சாப்பிட்ட பின்னர் பானம் பண்ணுகிற பாத்திரத்தை எடுத்து இது என்னுடைய புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்று சொன்னார். 
  • அப்பொழுது தான் இயேசு புதிய ஏற்பாடு என்கிற காரியத்தை கொண்டு வருகிறார். 
  • அந்த இராத்திரி போஜனத்திற்கு பின்பு அவர்கள் கெத்சமனே தோட்டத்திற்கு போனார்கள். 
  • அங்கு இயேசு மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். 
  • அவர் ஜெபிக்கிறப் பொழுது இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் வியர்வைத் துளிகளைப் போல வெளியில் வந்தது. 
  • அந்த முதல் சொட்டு இரத்தம் கெத்சமனே தோட்டத்தில் விழுந்த பொழுது தான் புதிய ஏற்பாடு ஆரம்பித்தது. 
  • சபை எடுத்துக்கொள்ளப்படும் போது புதிய ஏற்பாடு முடியப் போகிறது. 
7 வருடங்கள் - பழைய ஏற்பாடு:
  • வெளி 3 ம் அதிகாரம் முடிகிற போது அது நடக்கிறது. 
  • வெளி 4 ம் அதிகாரத்திலே புதிய ஏற்பாட்டின் முடிவிலே, பழைய ஏற்பாட்டின் மிகுதியான 7 வருடங்கள் ஆரம்பிக்கிறது. 
  • தானியேல் 9:24-27 வாசிக்கும் பொழுது அங்கே 490 வருடங்கள் யூதர்களுக்கு என்று சொல்லப்படுகிறது. 
  • அதில் 483 வருடங்கள் முடிந்து விட்டது. 
  • 484 ம் வருடம் ஆரம்பிக்கும் முன்பதாக ஒரு இடைவெளி. 
  • அது தான் கிருபையின் காலம். 
  • அது தான் புறஜாதியாருடைய காலம். 
  • நம்முடைய காலம் முடிவடைகிறது. 
  • நாம் எடுத்துக்கொள்ளப்படுகிற நாளிலே தானியேலுடைய 490 வருடங்கள் மிகுதியான முடிவான 7 வருடங்கள், சபை எடுத்துக்கொள்ளப்பட்டப் பின்பு அந்த 7 வருடங்கள் முடியும்.
  • எனவே அது புதிய ஏற்பாடு அல்ல. 
  • அதில் இப்போது இருக்கிறது போல பரிசுத்த ஆவியானவர் அந்த காலத்தில் இல்லை. 
  • சபை இல்லை. 
  • பழைய ஏற்பாடு போல தேவாலயம் இருக்கும், பலிபீடம் இருக்கும், யூதர்கள் தேவாலயத்திலே தேவனை ஆராதிப்பார்கள். 
  • தேவனுடைய ஆலயம் கட்டப்பட்ட பின்பு தான் சபை எடுத்துக்கொள்ளப்படும். 
  • தேவாலயம் கட்டுவதற்கு எவ்வளவு காலம் செல்லும்?
  • தேவாலயத்தை கட்டுவதற்குரிய பொருட்கள், திட்டங்கள் எல்லாம் ஆயத்தம். ஆரம்பிப்பது மாத்திரம் தான் மீதம். இரண்டே இரண்டு பிரச்சனை தான் இருக்கிறது. 
  • அந்த 2 பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டால்  அவர்கள் ஆரம்பித்து 14 மணி நேரத்திலே முடித்து விடுவார்கள்.
  • 1906 ம் ஆண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் எடுத்த முடிவு இது. 
  • ஆனால் இன்றைக்கு தொழில்நுட்பம் இன்னும் அதிகமாக வளர்ந்து விட்டது. 
  • இன்றைய தொழில்நுட்பத்தின்படி குறைந்தது 10 மணி  நேரத்தில் அந்த வேலையை முடித்து விடுவார்கள். 
2 பிரச்சனைகள்:
முதலாவது பிரச்சனை:
  • இரண்டு பிரச்சனைகளில் ஒன்று மோரியா மலையில் இரண்டு Muslim பள்ளிவாசல்கள் இருக்கிறது. 
  • மிக பிரம்மாண்டமான அளவிலே நடுவிலே ஒரு Al-Amar என்ற பள்ளிவாசல் கட்டப்பட்ட இருக்கிறது. 
  • அது ஒரு கற்பாறையில் கட்டப்பட்ட இருப்பதினால் அது ஒரு வட்டமான தோற்றத்தை எடுக்கிறபடியினால் அதாவது பாதி வட்டத்திற்கு dome என்று சொல்லுவார்கள். 
  • Dome  of the Rock அது தான் Al-Amara பள்ளிவாசல்.
Al-Amara Mosque


Al-Aqsa mosque


  • இன்னொரு பள்ளிவாசல் Al-Aqsa.
  • முதலாவது பிரச்சனை எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டப்பட வேண்டுமானால் Al-Amar என்ற பள்ளிவாசல் உடைக்கப்பட வேண்டும். 
  • Muslim களுடைய பள்ளிவாசலை யூதர்கள் உடைத்தால் எப்படி இருக்கும்!
  • இஸ்லாம் சமயத்திலே பரிசுத்த ஸ்தலங்கள் 3 இருக்கிறது. 
  • மெக்கா, மெதீனா, எருசலேம்.
  • ஏழாம் நூற்றாண்டிலே சுல்தான் சுலைமான் என்கிறவன் எருசலேமை அவன் கைபற்றினான். 
  • அப்போது அவன் ஒரு அறிக்கையை சொன்னான்.
  • அந்த இடத்தில் இருந்து தான் முகமது நபி அல்லாவினிடத்திற்கு போனாராம். 
  • உலகத்தில் வாழ்கிற எல்லா முஸ்லீம்களுக்கும் 3வது பரிசுத்த ஸ்தலம் Al-Amar ஆக இருக்குமானால், அதை யூதர்கள் உடைக்க முயற்சித்தால் 3வது உலக யுத்தம் ஆரம்பிக்கும். 
  • அது தான் முதலாவது பிரச்சனை. 
  • அதாவது கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக பூலோகவியலை ஆராய்ச்சி செய்கிறதான உபகரணங்களை பயன்படுத்தி இந்த யூதர்கள் தேடிப் பார்த்தார்கள். 
  • உண்மையாகவே தேவாலயம் இருந்த இடம் Al-Amar பள்ளிவாசல் இருக்கின்ற இடத்தில் அல்ல. 
  • Al-Amar மற்றும் Al-Aqsa என்ற 2 பள்ளிவாசல்கள் இருக்கின்ற இடத்திற்கு நடுவிலே தான் தேவாலயம் இருந்திருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். 
  • இன்றைக்கும் மோரியா மலை ஆளுகை செய்யப்படுவது இஸ்ரவேலர்களினால் தான். 
  • யூதர்கள் தான் யூதர்களுக்கு ஒரு தடை உத்தரவைப் பிரபித்து இருக்கிறார்கள். 
  • அந்த மலைக்கு யூதர்கள் யாரும் போகக் கூடாது என்பதாக. 
  • ஒரு வேளை ஒரு யூதர் தற்செயலாக மகா பரிசுத்த ஸதலத்திலே மிதித்து விடுவார்கள் என்பதற்காக. 
  • ஆகவே தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்களோடு எந்த பிரச்சனையும் இல்லாமல் Al-Amar மற்றும் Al-Aqsa என்ற 2 பள்ளிவாசல்கள் இரண்டுக்கும் நடுவே தேவாலயம் கட்டப்பட முடியும். 
  • முதலாவது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டது. 
இரண்டாவது பிரச்சனை: 
  • இன்னொரு பிரச்சனை.
  • ஏன் தேவாலயம் கட்டப்பட வேண்டும். 
  • உடன்படிக்கைப் பெட்டி எங்கே?
  • அப்படியானால் முதன்முதலில் தேவாலயம் கட்டினது யார்?
  • ஏன் கட்டினார்கள்  என்று பார்க்க வேண்டும். 
  • தேவாலயம் முதன்முதலில் கட்டப்பட்டது சாலொமோன் என்கிற ராஜாவாலே. 
  • தாவீது ராஜாவுக்கு தான் தேவாலயம் கட்டுகிற ஆசை வந்தது. 
  • கி.மு 963 லே தேவாலயத்தை கட்டினான்.
  • தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு தான். 
  • அந்த தேவாலயம் கி.மு 586 வரையிலே அந்த தேவாலயம் இருந்தது. 
  • கி.மு 586 பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இராணுவத்தோடு கூட வந்து எருசலேமை அடித்து தேவாலயத்தை சுட்டெரித்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் பாபிலோனுக்கு கொண்டு போய் விட்டான். 
  • 70 ஆண்டுகளுக்கு பிறகு செருபாபேல் என்ற மனுஷன் இந்த மனிதர்களை மீண்டும் கூட்டிக் கொண்டு எருசலேமிற்கு வருகிறார். 
  • அவன் தான் எருசலேமில் 2வது தேவாலயத்தை மீண்டும் அந்த இடத்தில் கட்டினான். 
  • அந்த தேவாலயம் தான் இயேசுவின் காலகட்டத்திலும் இருந்தது. 
அந்த தேவாலயத்தை தான் இயேசு கிறிஸ்து 2 முறை பரிசுத்தப்படுத்தினார். 
  • யோவான் 2 ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். 
  • இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்து முதலாவது தன்னுடைய அற்புதத்தை கானா ஊர் திருமண வீட்டிலே செய்துவிட்டு கப்பர்நகூமுக்கு சென்று எருசலேமிற்கு போகிறார். 
  • அங்கே தேவனுடைய ஆலயத்தை இயேசு பரிசுத்தமாக்குகிறார். 
  • அதன் பின்பு மீண்டும் கானாவுக்கு வந்து 4 ம் அதிகாரத்தில் யோவான் சொல்லுகிறதாவது இயேசு தன்னுடைய 2வது அற்புதத்தைச் செய்கிறார். 
  • யோவான் 2:46-52 வரையிலும் வாசித்தால், அந்த அற்புதம் தான் இயேசுவினுடைய இரண்டாம் அற்புதம் என்று சொல்லப்படுகிறது. 
  • முதலாம் அற்புதத்திற்கும் இரண்டாம் அற்புதத்திற்கும் இடையில் இயேசு தேவாலயத்தை பரிசுத்தப்படுத்தினார். 
  • ஆனால் மத் 21 ல் இயேசு சிலுவைக்கு போகும் முன்னதாக சரியாக 7 நாட்களுக்கு முன்னதாக  எருசலேமுக்குள்ளே வந்து தேவாலயத்தை பரிசுத்தப்படுத்துகிறார். 
  • ஊழியத்தின் ஆரம்பத்திலே, ஊழியத்தின் முடிவிலே 2 முறை தேவாலயத்தை பரிசுத்தப்படுத்துகிறார். 
  • எந்த தேவாலயம்? 
  • செருபாபேல் கட்டின 2வது தேவாலயம். 
  • அது கி.மு 516 லே துவக்கப்பட்டது. 
  • இயேசு அந்த தேவாலயத்தை பார்த்து தான் சொன்னார், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி இவைகள் இடித்துப் போடப்படும் காலம் வரும் என்று சொன்னார். 
  • அது கி.பி 70 ஆண்டிலே அது நிறைவேறியது. 
  • 3 வது தேவாலயத்தைக் குறித்து தான் வெளி 11ல் சொல்லப்படுகிறது. 
  • அப்படியானால் இந்த தேவாலயம் ஏன் கட்டப்பட வேண்டும்? 
  • அந்த உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு.
  • உடன்படிக்கைப் பெட்டிக்காக தேவாலயமா? அல்லது தேவாலயத்திற்காக உடன்படிக்கைப் பெட்டியா? 
  • அதாவது உடன்படிக்கைப் பெட்டிக்காக தான் தேவாலயம்.
  • அப்படியானால் தேவாலயம் இல்லாமல் கிட்டதட்ட 500 வருடங்கள் உடன்படிக்கைப் பெட்டி தனியாக இருந்தது கூடாரத்திலே. 
  • உடன்படிக்கைப் பெட்டி எங்கே? அது இருந்தால் தானே தேவாலயம் கட்டுவதற்கே அர்த்தம். 
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
 -நீதிமொழிகள் 25 : 2
  • எத்தியோப்பியர்களை குறித்து நாம் பார்ப்பது வறுமையான தேசத்தை. 
  • ஆனால் அது ஒரு அழகான தேசம், செழிப்பான தேசம். 
  • நைல் நதி ஆரம்பிப்பது எத்தியோப்பாவிலே.
  • எப்படி இப்படி ஒரு செழிப்பான தேசம் பெரிய வாதைகளுக்குள் போக முடியும்.
  • ஏன் அவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள். 
  • ஏன் அவர்கள் உணவில்லாமல் சாகிறார்கள்?
  • London British Museum ல் எத்தியோப்பியரின் பாரம்பரிய வரலாறு அங்கே இருந்தது
  • வேதாகமத்தோடு ஒப்பிட்டு பேசக் கூடிய கதை ஒன்று இருந்தது. 
  • வேதாகமத்திலே சொல்லப்படாத வரலாற்றில் இருக்கக் கூடிய கதை.
  • 1 இராஜாக்கள் 10:1-13 வசனங்களிலே ஒரு கதை இருக்கிறது. 
  • 2 நாளாகமம் 9:1-12 வசனங்களிலும் அது இருக்கிறது. 
  • சேபா என்கிற பெண் வந்த தேசம் எது? எத்தியோப்பியாவில் இருந்து. 
  • ஆதி 10 ல் எத்தியோப்பாவைக் குறித்துப் பார்க்கிறோம். 
  • எத்தியோப்பியா என்பது உலகத்திலே மிக பழமை வாய்ந்த தேசம். 
  • எத்தியோப்பியாவில் இருந்து ஒரு ராஜஸ்திரீ வருகிறாள். 
  • சாலொமோனைக் காண வருகிறாள். 
  • விடுகதைகளினால் அவனை சோதிப்பதற்கு. 
  • உலகத்திலேயே ஞானமாக இருக்கக்கூடிய சாலொமோனை விடுகதைகளினால் சோதிக்க வருகிறாள் என்றால் இவளுக்கு எவ்வளவு ஞானம் இருக்க வேண்டும். 
  • அவள் மிக உயர்ந்த பரிசுகளை கொண்டு வந்தாள் என்றால் எத்தியோப்பியா எவ்வளவு பெரிய செல்வந்த தேசம். 
  • அப்படியானால் இன்று எத்தியோப்பியாவிற்கு என்ன நடந்திருக்கிறது?
  • சாலொமோன் அந்த சேபாவின் ராஜஸ்திரீயை மணம் முடித்திருந்தான் என்று எத்தியோப்பியரின் வரலாற்று புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
  • அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. வெள்ளை நிறம், சுருட்டை முடி, மெனலிக் என்பது அவன் பெயர். 
  • சேபாவின் ராஜஸ்திரீ அவனை 4-5 வயது வரை வளர்த்தாள். 
  • அதன்பின்பு அவனை எருசலேமிற்கு அனுப்பினாள். 
  • அப்பாவனிடத்திலே வளரும்படி. 
  • சாலொமோனுக்கு தனது எல்லா மகன்களிலும் மெனலிக் என்ற இந்த மகன் மீது தான் அதிகமான விருப்பம். 
  • அவன் தேவபக்தியுள்ள மகனாக வளர்ந்தான். 
  • இந்தப் பையன் வாலிபன் ஆன போது மீண்டும் தன் தேசத்திற்கு போக அவனுக்கு நேரிட்டது. 
  • அந்த நேரத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 
  • 1 இராஜாக்கள் 6 லே சொல்லப்படுகிறது. 
  • சாலொமோன் வயது சென்ற காலகட்டத்திலே அவனது மனைவிமார்கள் அவனை தேவனை விட்டு வழிவிலகப் பண்ணினார்கள் என்று. 
  • இதை மெனலிக் கண்டான். 
  • இவ்வளவு காலம் தேவனுக்கு மாத்திரமே வைராக்கியமாக வாழ்ந்த தன்னுடைய தகப்பன் தன்னுடைய மனைவிமார்களின் தேவர்களுக்கும் கோவில்களை கட்டினான் என்று. 
  • எனவே இந்த மெனலிக் சாலொமோனிடம் வந்து பேசி, தான் தன்னுடைய அம்மாவினிடத்திற்கு எத்தியோப்பாவிற்கு போகிறேன் என்றான். 
  • அதனால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறது போன்ற ஒரு உடன்படிக்கைப் பெட்டியை எனக்கு செய்து தாருங்கள் என்றான். 
  • அதே போல எனக்கு தேவனுக்கு பலியிடக்கூடிய ஆசாரியர்களையும் தாருங்கள் என்றான். 
  • அவற்றோடு கூட என் தேசத்துக்கு நான் போய் என் தேவனுக்கு நான் தொடர்ந்து ஆராதனை செய்ய என்னை அனுப்புங்கள் என்றான்.
  • யாத்திராகமம் புத்தகத்தில் உடன்படிக்கைப் பெட்டியைக் குறித்த அனைத்து விடயங்களும் எழுதப்பட்டு உள்ளது. 
  • எனவே, அதேப்போல ஒரு உடன்படிக்கைப் பெட்டியை சாலொமோன் செய்வித்தான். 
  • அப்போது மெனலிக் பிரதான ஆசாரியனோடு துணையுடன் செய்விக்கப்பட்ட மாதிரியான உடன்படிக்கைப் பெட்டியை மகா பரிசுத்த ஸ்தலத்திலே வைத்து விட்டு அங்கே இருந்த நிஜமான மோசே செய்த உடன்படிக்கைப் பெட்டியையும் ஆசாரியர்களையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய தேசத்திற்கு போய் விட்டான். 
  • May be ஆண்டவர் இதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். இல்லையென்றால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒருவர் பிரவேசித்தால் மரித்து விடுவார்கள்.
  • அந்த உடன்படிக்கைப் பெட்டி அன்றிலிருந்து இன்று வரை இருப்பது எத்தியோப்பியாவிலே. 
  • எத்தியோப்பிலாவிலே Exome என்ற இடத்திலே அந்த உடன்படிக்கைப் பெட்டி இருக்கிறது. 
  •  எத்தியோப்பியாவிலே வாழ்கிற யூதர்கள் வேறு யாரும் அல்ல. 
  • மெனலிக்கோடு சென்றதான ஆசாரியர்களுடைய சந்ததியினர் அங்கு வாழ்கின்றனர். 
  • இஸ்ரவேலில் Israel Defense Forces (IDF) இராணுவத்தில் கருப்பினத்தை சார்ந்தவர்கள் அங்கு இருக்கிறார்கள். 
  • அதாவது அவர்கள் எத்தியோப்பியாவில் இருந்து மீண்டும் இஸ்ரவேலுக்கு வந்த யூதர்கள். 
  • இந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு ஒரு தாக்கம் உண்டாகலாம் என்பதால் அங்கே இருக்கிற யூதர்கள் அதேப் போல இன்னும் 8 உடன்படிக்கைப் பெட்டிகளை உண்டாக்கி 9 பெட்டிகளாக 9 தீபகற்பங்களில் வைத்திருக்கிறார்கள். 
  • அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் 9 லே எது உண்மையான உடன்படிக்கைப் பெட்டி என்று. 
  • பைபிளில் இருந்து சில ஆதாரங்கள். 
  • பழைய ஏற்பாட்டில் 200 தடவைகள் உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • Ahon-beheth-Elohim இதன் அர்த்தம் என்னவென்றால் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி.
  • யாத்-சாலொமோன் வரையும் 200 தடவைகள் உடன்படிக்கைப் பெட்டி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • சாலொமோனுக்கு பிறகாக ஒரே ஒரு முறை தான் உடன்படிக்கைப் பெட்டி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • 2 நாளாகமம் 35:3. யார் இந்த யோசியா?
  • அதாவது சாலொமோனுக்கு பிறகு வந்த 17வது ராஜா.
  • சாலொமோன் தொடங்கி யோசியா வரை 270 வருடங்கள் சென்று இருக்கிறது. 
  • இப்பொழுது யோசியா ஒரு பஸ்கா பண்டிகையை ஆசரிக்கிறான்.
  • தேவனுடைய ஆலயத்திற்குள்ளே பெட்டியை கொண்டு வாருங்கள் என்று சொல்லுகிறான்.
  • இதனுடைய அர்த்தம் என்ன? 
  • அதாவது தேவனுடைய ஆலயத்திற்குள்ளே பெட்டி இல்லை. 
  • கடைசியாக தேவனுடைய ஆலயத்திற்குள் பெட்டியை வைத்தவர் யார்? சாலொமோன் ராஜா.
  • 270 ஆண்டுகளுக்குள்ளே யாரோ ஒருவன் தேவனுடைய ஆலயத்திற்குள் இருந்து பெட்டியை வெளியே எடுத்துக் கொண்டு போய் விட்டான். 
  • எப்படி எதற்கு யார் எங்கே கொண்டு போனார் என்று வேதத்திலே சொல்லப்படவில்லை. 
  • சாலொமோனுக்கு பிறகு வேதத்தை எழுதும் போது பரிசுத்த ஆவியானவர் அந்தப் பெட்டியை கணக்கெடுக்கவில்லை. ஏன்?
  • ஏனென்றால் அந்த உடன்படிக்கைப் பெட்டி மோசே செய்த பெட்டி அல்ல. 
  • கி.மு 586 லே இந்த பெட்டியை பாபிலோனியர்கள் கொண்டு போனார்கள். 
  • 70 வருடங்களுக்கு பின்னராக செருபாபேல் அதை மீண்டும் கொண்டு வருகிறார். 
  • இது எதுவும் பைபிளில் எழுதப்படவில்லை. 
  • புதிய ஏற்பாட்டிலே இயேசு 2 முறை தேவாலயத்தைப் பரிசுத்தப்படுத்துகிறார். 
  • ஆனால் இயேசுவோ, பவுலோ யாருமே பெட்டியைக் குறித்து பேசவில்லை. 
  • ஆனால் சாலொமோன் காலத்தில் 3 மாதங்கள் ஓபேத்ஏதோம் வீட்டில் பெட்டி இருந்தது என்றால் இருந்தது என்று எழுதப்பட்டு இருக்கிறது. 
  • பெத்சமேசிலே 20 வருடங்கள் இருந்தது என்ற சொன்னால் இருந்தது என்று எழுதப்பட்டு இருக்கிறது. 
  • பெலிஸ்தருடைய தேசத்திலே 7 மாதங்கள் இருந்தது என்றால் இருந்தது என்று எழுதப்பட்டு இருக்கிறது. 
  • பெலிஸ்தருடைய தேசத்திலே 7 மாதங்கள் இருந்ததால் அந்த 7 மாதங்கள் தேவன் பெலிஸ்தியிரை வாதைகளால் வாதித்ததால் அவர்கள் பெட்டியை வண்டியில் வைத்து அனுப்பி விட்டார்கள். 
  • அந்த மாட்டு வண்டி வந்து இஸ்ரவேல் தேசத்தில் தான் நின்றது. 
  • ஆனால் பாபிலோனில் பெட்டி 70 வருடங்கள் இருந்தாலும் அதைப் பற்றி சொல்லவில்லை. 
  • அந்த மனிதர்களுக்கு அதினால் எந்த சாபமும் இல்லை. 
  • இப்பொழுது புரிகிறதா அந்த இடத்தில் இருப்பது வேறொரு பெட்டி என்று.  
  • 20 வருடங்கள் பெத்சமேசிலே பெட்டி இருந்தது அல்லவா? 
  • அங்கே இருந்து எருசலேமிற்கு பெட்டியை கொண்டு வந்த போது அந்த உடன்படிக்கைப்பெட்டி யாருடைய வீட்டில் இருந்ததோ அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள் கூட நடந்த வந்தார்கள். 
  • அப்படி ஒரு சூழ்நிலையிலே அந்தப் பெட்டி வந்து கொண்டிருந்த போது மாடுகள் தடுமாறியதால் அந்தப் பெட்டி விழும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. 
  • அந்த வாலிபர்களில் இரண்டிலே ஒருவர் ஊசா. 
  • அவர் ஓடிப் போய் பெட்டியைப் பிடித்தார். 
  • அது விழாமல் இருக்க வேண்னுமென்று. 
  • தேவனுக்கு கோபம் வந்து அடித்தார்.
  • இப்போது பாபிலோனுக்கு கொண்டு போகிறார்கள், அங்கே அவர்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லையாம். 
  • பெத்சிமேசிலே கொண்டு வந்தார்கள். 
  • ஒரு இடத்தில் பெட்டியை வைத்தார்கள். 
  • அந்த பெத்சிமேசின் மனிதர்கள் 50,000 நபர்கள் சுற்றி இருக்கிற மலைகளின் மேல் போய் பள்ளத்தில் இருக்கிறதான அந்த தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைப் பார்த்தார்கள். 
  • அங்கே மேலே இருந்து சமபூமியிலே இருக்கிறதான அந்த தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைப் பார்த்தற்காக 50,000 பேரை ஆண்டவர் மரணிக்க செய்தார்.
  • ஆனால் இவர்கள் பாபிலோனுக்கு கொண்டு போகிறார்கள்.
  • ஒன்றுமே அவர்களுக்கு நடக்கவில்லையாம். 
  • மெனலிக் -ன்  கதை உண்மை.
  • உண்மையான பெட்டி எத்தியோப்பியாவிற்கு கொண்டுப் போகப்பட்டு விட்டது. 
  • அதனால் செல்வந்தமாக இருந்த எத்தியோப்பியா சபிக்கப்பட்டது.
  • அந்தப் பெட்டியை யூதர்கள் வைத்திருக்கிறபடியினால் இஸ்ரவேல் தேசத்தார் போய் பலவந்தமாக அந்தப் பெட்டியை கொண்டுவருவதில்லை.
  • அந்த எத்தியோப்பியாவில் இருக்கிற யூதர்களும் இஸ்ரவேலுக்கு அந்தப் பெட்டியை கொண்டு வரவில்லை. 
  • ஏன் தெரியுமா? 
  • இஸ்ரவேலை சுற்றி இருக்கிற தேசத்தார்நிமத்தம் இஸ்ரவேலுக்கு ஒரு எதிர்ப்பு இருக்கிறபடியினால். 
  • இப்போது இஸ்ரவேலர்களுடைய எதிரிகள் தோற்றுப் போய் வாயை மூடிக் கொள்கிறார்கள். 
  • சிலர் சமாதானத்திற்கு வருகிறார்கள். 
  • எகிப்தும் இஸ்ரவேலோடு ஒப்புரவு ஆகிறது. 
  • எகிப்திலே இஸ்ரவேலுடைய ஸ்தானாதிபதி காரியாலயம் இருக்கிறது. 
  • இஸ்ரவேலி்லே எகிப்தினுடைய ஸ்தானாதிபதி காரியாலயம் இருக்கிறது. 
  • இப்பொழுது எத்தியோப்பியாவில் இருக்கிற யூதர்களும் இஸ்ரவேலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். 
  • சீக்கிரமாக பெட்டி இஸ்ரவேலுக்கு வரப் போகிறது. 
  • இன்றும் அந்த பெட்டி exome என்ற தீவிலே வைக்கப்பட்டுள்ளது.
  • அந்தப் பெட்டி எத்தியோப்பியாவிலே இருந்து எருசலேமிற்கு கொண்டுவரப்படும் வேளையில் தேவாலயம் கட்டப்பட்டு முடிவடையும். 
  • அந்தப் பெட்டி எத்தியோப்பியாவில் இருந்து புறப்படும் போது மோரியா மலையிலே எருசலேம் தேவாலயத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் பொருத்தப் போகிறார்கள். 
  • அங்கே பெட்டி வந்தவுடனேயே தேவாலயத்திற்குள் எல்லாம் ரெடியாகி விடும்.
  • எருசலேம் தேவாலயம் சீக்கிரமாக நிர்மாணிக்கப்படப் போகிறது. 
  • சபை எடுத்துக் கொள்ளப்பட போகிறது. 

ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 2
  • உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய  உடன்படிக்கையைக் குறிக்கிறது. 
  • நித்திய உடன்படிக்கை. 
  • நித்தியத்தை காண்பிக்கிற அந்த நித்தியமான உடன்படிக்கை பெட்டியும் நித்தியமானதாக இருக்க வேண்டும். 
  • Al-Amar மற்றும் Al-Axa இந்த 2 பள்ளிவாசல்களுக்கும் இடையில் தான் தேவாலயம் இருந்திருக்கிறது எனக் கண்டுபிடித்தார்கள். 
  • இந்த வசனத்தில் யோவானுக்கு ஆண்டவர் சொல்லுகிறார். 
  • கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோலைக் கொண்டு அளந்து பார்.
  • ஆனால் ஆலயத்திற்கு வெளிப்புறம் இருப்பதை அளக்க வேண்டாம் என்கிறார். 
  • முதலாம் தேவாலயத்துக்கும், இரண்டாம் தேவாலயத்துக்கும் அந்த வெளிப்பிரகாரம் சொந்தமாக இருந்தது.
  • ஆனால் மூன்றாம் தேவாலயத்துக்கு அந்த வெளிப்பிரகாரம் சொந்தமாக இருக்கப் போவதில்லை. 
  • ஏன்? அது புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். 
  • பாருங்கள், எவ்வளவு ஒரு அழகான தீர்க்கத்தரிசனம். 
  • நாம் கணக்குடுவது Solar Calendar. சூரியனைக் கொண்டு கணக்கிடக்கூடிய மாதங்கள். 
  • 42 மாதங்கள், யூதர்களுடைய மாதங்கள். (Lunar Calendar). சந்திரனைக் கொண்டு கணக்கிடக்கூடிய மாதங்கள். அனைத்து மாதத்திற்கும் 30 நாட்கள் மாத்திரமே. ஒரு வருடத்திற்கு 360 நாட்கள்.
  • 42*30=1260 நாட்கள். 
  • வருடக்கணக்கில் சொன்னால் 36+6=42 மாதங்கள் என்பது 3 and 1/2 வருடங்கள். 
  • 7 வருடங்களில் சரியாக அரைவாசி. 
  • தானியேல் 9 ல் தேவன் நல்ல ஒரு தீர்க்கத்தரிசனத்தை யூதர்களுக்கு கொடுக்கிறார்.
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
 -தானியேல் 9 : 24
  • தேவன் தானியேலுக்கு பேசுகிறார்.
  • உம்முடைய ஜனங்களுக்கு என்று சொல்லும் போது அது யூதர்களை தான். 
  • பரிசுத்த நகரம் என்பது எருசலேம்.
  • எருசலேமில் தான் தேவாலயம் இருப்பது. 
  • எருசலேமில் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். 
  • எருசலேமில் தான் ஒலிவமலை இருக்கிறது. 
  • எருசலேமில் இருக்கிற ஒலிவமலையில் இருந்து தான் இயேசு பரம் ஏறினார். 
  • 2ம் முறை வரும் போதும் அவருடைய பாதம் ஒலிவமலையின்மேல் படும். 
  • உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் தருகிறேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். 
  • மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் எல்லாம் நடப்பதற்காக. 
  • அவை எதுவுமே இன்னும் நடக்கவில்லை. 
  • 70 வாரங்கள் என்றால் 490 நாட்கள்.
  • தானியேல் புத்தகத்தின்படி ஒரு நாள், ஒரு வருஷத்துக்கு பொருத்தமானது. 
  • அப்படியானால் யூதர்களுக்கு 490 வருடங்கள் கொடுக்கப்படும். 
இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
 -தானியேல் 9 : 25
  • 7 வாரங்கள், 62 வாரங்கள். 
  • மொத்தம் 69 வாரங்கள். 
அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
 -தானியேல் 9 : 26
  • மேசியா - இயேசு கிறிஸ்து. 
  • கி.பி 30 லே இயேசு சங்கரிக்கப்பட்டார். 
  • 62 வாரங்களின் முடிவிலே அவர் சங்கரிக்கப்பட்டார். 
  • 62 வாரங்கள் என்பது 483 நாட்கள். அதாவது 483 வருடங்கள். 
  • 3 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது பாபிலோனில் இருந்து இஸ்ரவேலர்கள் எருசலேமிற்கு வருவதற்கு.
  • முதலாம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது கோரேஸ் ராஜா இருந்த போது செருபாபேலுக்கு. 
  • இரண்டாம் கட்டளை வெளிப்பட்டது எஸ்றாவிற்கு. எஸ்றா வந்து தேவாலயத்தைக் கட்டினார். 
  • இரண்டாம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது அகாஸ்வேரு என்கிற ராஜா நெகேமியாவிற்கு ஒரு கட்டளை கொடுக்கிறார். எருசலேமின் அலங்கத்தை கட்டும்படியாக.
  • அந்த 3வது கட்டளையை தான் இந்த இடத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • அந்த கட்டளை வெளிப்பட்ட வருடம் எது தெரியுமா? 
  • 483 லே 30 கழிக்கப்பட்டால் எத்தனை? 453. சரியாக கணக்கெடுத்துப் பார்த்தால் கி.மு. 453 ம் ஆண்டிலே நெகேமியாவிற்கு அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது. இது சரித்திரம். 
  • தானியேலுக்கு தேவன் சொல்கிறார் இந்த கட்டளை ஆரம்பக்கின்ற நாள் தொடக்கம். 453 வருடங்கள்.
  • சிலுவையில் இயேசு அறைவதற்கு இன்னும் 30 வருடங்கள் கடந்து செல்கிறது. 
  • 483 வருடங்கள் ஆகிறது. 
  • தானியேலுக்கு சொல்லப்பட்ட தீர்க்கத்தரிசனம் சரியான நேரத்திலே நிறைவேறியது. 
  • இயேசு சிலுவையிலே அடிக்கப்படுகின்ற போது சரியாக 483 வருடங்கள் நிறைவு பெறுகிறது. 
  • இன்னும் யூதர்களுக்கு 7 வருடங்கள் இருக்கிறது.
  • இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட பின்பு யூதர்களுடைய கடிகாரம் நிறுத்தப்படுகிறது. 
சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
 -ரோமர் 11 : 17

நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.
 -ரோமர் 11 : 18
  • காட்டொலிவ மரம் - புறஜாதியார்
  • யூதர்களுடைய calendar ஐ தேவன் நிறுத்தி விட்டு புறஜாதிகளை தேவன் உள்ளே கொண்டு வருகிறார்.
  • Greek word - Charis
  • அதினுடைய அர்த்தம் கிருபை (Grace).
  • கிருபையின் அர்த்தம் என்னவென்றால் கிடைப்பதற்கு பெருமதி இல்லாத ஒருவனுக்கு அதைப் பெற்றுக் கொடுப்பது.  
  • இஸ்ரவேலுடைய தேவனை பெற்றுக்கொள்ள நாம் தகுதியானவர்கள் அல்ல. 
  • இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்பு இருந்து இது கிருபையின் காலம். 
  • அது யூதர்களின் காலம். 
  • அவர்களுடைய காலகடிகாரம் நின்று விட்டது. 
  • ஆனால் நம்முடைய கிருபையின் காலம் நிறைவு பெறப் போகிறது. 
  • எப்பொழுது?
  • அவருடைய கிருபையினாலே உருவாக்கப்பட்ட அந்த சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு . 
  • அப்போது யூதர்களுடைய நிறுத்தப்பட்ட கடிகாரம் மறுபடியும் செயல்பட ஆரம்பிக்கும்.
  • 7 வருடங்களுக்கு. 
  • அந்த 7 வருடங்கள் தான் நாம் பரலோகத்திலே இருப்போம்.
  • உலகத்தில் இருப்பவர்களுக்கு அந்த 7 வருடங்கள் பல விதமான உபத்திரவம். 
  • ஆனால் யூதர்களுக்கு வேறுப்பட்ட ஒரு கதை.
  • அந்த 7 வருடங்களுக்குள்ளே யூதர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பார்க்கப் போகிறோம். 

என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
 -வெளிப்படுத்தல் 11 : 3
  • தீர்க்கத்தரிசனம் என்பது என்ன?
  • தீர்க்கத்தரிசனங்கள் என்பது என்ன?
  • தீர்க்கத்தரிசி என்பது யார்?
  • தீர்க்கத்தரிசிகள் என்பது யார்?
  • அதைக் குறித்த pastor உடைய பிரசங்கம் இருக்கிறது. 
  • புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை எப்படி காண்பிக்கிறது. 
  • தீர்க்கத்தரிசனங்களாக.
  • 2 சாட்சிகள் வந்து தீர்க்கத்தரிசனம் சொல்லுவார்களாம். 
  • அதாவது ஆதி முதல் மல்கியா வரையிலான புத்தகங்களை குறித்து பேசுவார்களாம். 
  • அவர்கள் புதிய ஏற்பாட்டைக் குறித்து பேசவில்லை, ஏனென்றால் அவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு உரித்தானவர்கள் அல்ல. 
  • சபை போய்விட்டது, சபையோடு கூட இந்த 27 புத்தகங்களும் போய் விட்டது. 
  • பழைய ஏற்பாட்டுக்கு எபிரேய மொழியிலே Tanak என்று சொல்லுவார்கள். 
  • பழைய ஏற்பாட்டை 2 விதமாக பிரிக்கலாம். 
  • TORAH - first 5 books. NEBIM- தீர்க்கத்தரிசிகளுடைய - remaining books.
  • முதல் 5 புத்தகத்திற்கு மோசே பிரதிநிதி. 
  • யோசுவா முதல் மல்கியா வரை 34 புத்தகங்கள் இருக்கிறது. 
  • அதன் பிரதிநிதி எலியா. 
  • அந்த பிரதிநிதி மற்ற தீர்க்கத்தரிசிகளை பார்க்கிலும் உயர்ந்தவர். 
  • மோசேயும், எலியாவும் சேர்ந்து பிரதிநிதிப்படுத்துவதை பழைய ஏற்பாட்டை. 
  • புதிய ஏற்பாட்டின் பிரதிநிதி இயேசு கிறிஸ்து. 
  • முழு வேதாகமத்தின் பிரதிநிதி இந்த 3 பேர் தான். 
  • முழு வேதாகமத்திலும் மோசே, எலியா. இயேசு இந்த 3 பேர் மாத்திரமே 40 நாட்கள் உபவாசம் இருந்தவர்கள். 
  • இந்த 3 பேரும் உபவாசம் இருந்த ஒரே இடம் சீனாய் மலை. 
  • வேதாகமத்தில் வெறுமனே வனாந்தரம் என்று வந்தால் அது சீனாய் வனாந்தரம். இயேசு சென்றதும் அங்கு தான். 
  • பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரும் ஒரு மலைக்கு ஏறிப் போனார்கள்.
  • மெகிதோவில் இருந்த மிக உயர்ந்த மலை தாபோர் மலை. அந்த மலைக்கு போனார்கள். 
  • அவர்கள் போன கலைப்பின் காரணமாக அவர்கள் தூங்கி விட்டனர். 
  • அப்போது மோசேயும், எலியாவும் கீழே வருகிறார்கள். 
  • அப்போது இயேசுவும் மனிதரூபத்தில் இருந்து  மறுரூபமானார். 
  • இவர்கள் மூவரும் இயேசு படப்போகிற பாடுகளை குறித்து பேசினார்கள் என்று சொல்லப்படுகிறது. 
  • அந்த நேரம் மட்டும் எழுதப்பட்டு இருந்தது பழைய ஏற்பாடு மாத்திரமே. 
  • அது வரையிலே புதிய ஏற்பாடு எழுதப்படவில்லை. 
  • வார்த்தையானவர், நான் இரத்தம் சிந்தி புதிய ஏற்பாட்டை ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னார். 
  • சரித்திரத்திலே முதன்முறையாக பழைய ஏற்பாட்டின் 2 பிரதிநிதிகள் புதிய ஏற்பாட்டின் பிரதிநிதியும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள். 
  • எவ்வளவு மகிமையுள்ள ஒரு சூழ்நிலை. 
  • இதை பேதுரு, யாக்கோபு, யோவான் கண்டார்கள். 
  • அவர்களும் கண்டு கொண்டார்கள் இது மோசேயும், எலியாவும் என்று சொல்லி. 
  • மேகம் இறங்கி வந்தது, பிதாவினுடைய சத்தம் கேட்டது. 
  • 3 காரியங்கள் சொன்னார். 
  • இதோ என்னுடைய நேசகுமாரன்.நான் இவர் மேல் பிரியமாக இருக்கிறேன். இவருக்கு கீழ்ப்படியுங்கள்.
  • அப்படியென்றால் இவருக்குள்ளாக அடங்கியிருக்கிற வேதாகமத்திற்கு கீழ்ப்படியுங்கள் என்று சொன்னார். 
  • மோசேயும், எலியாவும் ஒன்று சேருகிற போது அவர்கள் இருவரும் பழைய ஏற்பாட்டை பிரிதிநிதிப்படுத்துபவர்கள். 

பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
 -வெளிப்படுத்தல் 11 : 4
  • யூதர்களுடைய 7 வருடங்கள் ஆரம்பிக்கிற போது முதல் 42 மாதங்கள், 1260 நாட்கள், 3 1/2 வருடங்கள், மோசேயும், எலியாவும் பழைய ஏற்பாட்டை கற்றுக் கொடுப்பார்களாம். 
  • ரோமர் 11:17 ல் சுபாவ ரீதியான ஒலிவமரங்களாக இஸ்ரவேலரை  ஒப்பிடுகிறார். 
  • இஸ்ரவேலரை ஒலிவமரத்திற்கு ஒப்பிடுவதற்கு அநேக காரணங்கள் உண்டு. 
  • உலகத்தில் இருக்கின்ற மரங்களிலே அதிகமான oxygen ஐ வெளிவிடுகிறதான ஒரே மரம் ஒலிவ மரம். 
  • அதனால் தான் அநேகர் இயேசு உட்பட ஒலிவ மரத்தின் கீழ் இளைப்பாறினார்கள். 
  • ஒலிவ மரத்தை இலகுவாக அழிக்க முடியாது. Eternal Tree.
  • அதாவது ஆபிரகாம் மூலமாக இஸ்ரவேல் தேசம் உண்டானது முதல் இன்று வரை அந்த நாட்டை அழிக்க அநேக ஜாதிகள், இயக்கங்கள், முயற்சிக்கின்றன.
  • இஸ்ரவேல் அழிய மாட்டாது. 
  • உலக வங்கியில் கடன்பெறாத ஒரே தேசம் இஸ்ரவேல். 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு முழு உலகத்தையும் அந்திக்கிறிஸ்து பிடித்துக் கொள்வான்.
  • ஆனால் யூதர்களை பிடிக்க முடியாது. 
  • பிடிக்க முயற்சிப்பான், ஆனால் முடியாது. 
  • ஏனென்றால் அந்திக்கிறிஸ்து தன்னுடைய இராணுவத்தை எழுசலேமுக்கு கொண்டு வரும் போது எருசலேமிலே 2 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
  • மோசே மற்றும் எலியா. 

ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
 -வெளிப்படுத்தல் 11 : 5
  • வேதாகமத்தில் அக்கினியை இறக்கின ஒரே ஒரு தீர்க்கத்தரிசி யார்? எலியா. 
  • 1 இரா 18:38 ஐ படித்து பாருங்கள். 
  • எலியாவின் வாயிலிருந்து அக்கினி புறப்படும் என்று சொல்லப்படுகிறது. 
  • அது சத்துருக்களைப் பட்சிக்குமாம். 

அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
 -வெளிப்படுத்தல் 11 : 6
  • வேதாகமத்தில் 3 வருடங்கள் மழையை நிறுத்தின மனிதன் யார்? எலியா.
  • 1 இரா 19 வது அதிகாரத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. 
  • தண்ணீரை இரத்தமாக மாற்றின ஒரே ஒரு தீர்க்கத்தரிசி யார்? மோசே. 
  • எகிப்திலே வாதைகளை கொண்டு வந்த ஒரே ஒரு தேவ மனிதன் யார்? மோசே.
  • இந்த 4 அற்புதங்களினாலே தேவன் நமக்கு காண்பிக்கிறார். 
  • வரப்போகிற 2 பேர் யார் என்பதை. 
  • மூன்றரை வருடங்கள் யூதர்கள் மாத்திரம் அவர்களுடைய காரியங்களை செய்து கொண்டு போவார்கள். 
  • முழு உலகமும் அந்திக்கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கும்.
  • ஆனால் ஒரே ஒரு ஜனக்கூட்டம் மாத்திரம் அவனுக்கு கீழ் இருக்கப் போவதில்லை. 
  • இஸ்ரவேலர்கள், யூதர்கள்.
  • அப்போது அந்திக்கிறிஸ்து தன்னுடைய முழு பலத்தையும் உபயோகப்படுத்தி யூதர்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பான். 
  • அந்த 2 பேரும் நின்று கொண்டு இருக்கும் வரையிலும் முடியாது. 
  • அந்திக்கிறிஸ்துவால் அனுப்பப்படுகிற விமானம் பறந்து வருகிற போது எலியா வாயினால் அக்கினியை புறப்படச் செய்வார். 
  • யுத்த இராணுவங்கள் தாக்க வரும் போது அவர்களுக்கு வாதை வருகிறது. 
  • சரீரம் முழுவதும் கட்டி வருகிறது. 
  • மூன்றரை வருடங்கள் முழுவதும் எல்லா ஜனங்களுக்கும் இஸ்ரவேலரைக் குறித்து மிகுந்த பொறாமை உண்டாகும். 
  • இஸ்ரவேலர்கள் அங்கு பயமில்லாமல் இருக்கிறார்கள். 

அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
 -வெளிப்படுத்தல் 11 : 7
  • யார் இந்த பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம்? அந்திக்கிறிஸ்து. 
  • அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது அதாவது 3 1/2 வருடங்களுக்கு பிறகு. 
  • அந்த மூன்றரை வருடங்களுக்குள் ஒருவரும் அவர்களை தொடக் கூட முடியாது. 
  • அந்த மூன்றரை வருடங்களுக்கு பிறகு தேவன் அந்திக்கிறிஸ்துவுக்கு இடம் அளிக்கிறார் அவர்களை கொலை செய்ய. 
  • தேவன் உங்களுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்திருந்தால், அந்த தரிசனத்தை தேவன் உனக்குள்ளாக செய்து முடிக்கும் வரை யாராலும் உங்களை அழிக்க முடியாது. 
  • நமக்கு தேவன் கொடுத்த பொறுப்பு முடிவடைந்த உடன் நம்மை தேவன் எடுத்துக் கொள்வார். 
  • பல ஊழியர்கள் அப்படி மரித்து இருக்கிறார்கள். 
  • இங்கு மோசேயும், எலியாவும் மரித்து விழுகிறார்கள். 
  • 2 பேரை கொலைசெய்ய அந்திக்கிறிஸ்து பெரிய இராணுவத்தை கொண்டு வருகிறான். 
  • 2 பேரோடு அவன் யுத்தம் பண்ணுகிறான் என்று சொல்லப்படுகிறது. வெட்கம்.

அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
 -வெளிப்படுத்தல் 11 : 8
  • இந்த நகரம் எருசலேம். 
  • அங்கு தான் இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டார். 
  • அதற்கு சோதோம் என்ற ஆவிக்குரிய ரீதியில் சொல்லப்படுகிறது? ஏன்?
  • சில வருடங்களுக்கு முன்பு tel-aviv ல் ஒரு பால் புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு உரிமைகளை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். 
  • ஒரு பால் புணர்ச்சி இருந்த தேசம் தான் சோதோம். 
  • ஆகவே தான் இங்கு சோதோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • எகிப்து என்று அர்த்தப்படுத்துவதற்கு காரணம், 
  • ஏனென்றால் எகிப்து அந்த காலத்திலே செழிப்பான தேசம். 
  • நைல் நதியின் நிமித்தமாக.
  • ஆகவே இன்றைக்கும் எகிப்து செழிப்பான தேசமாக இருக்கிறது. 
  • அந்த எருசலேமிலே மோசே, எலியாவனுடைய சவங்கள் விழும்.

ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 9
  • எப்படிப் பார்ப்பார்கள்? 
  • ஒவ்வொரு நாளும் செய்தியிலே பார்ப்பார்கள்.
  • CNN, BBC, Sky News, Al-Jesera என்ற பல விதமான ஊடகங்கள் மூலமாக. 
  • இன்னும் அவர்கள் உடல் வீதியிலே இருக்கிறது. 
  • நாற்றம் அடிக்கத் தொடங்கும்.
  • எங்களை இத்தனை காலம் ஆட்டிப் படைத்தவர்கள் இதோ வீதியிலே. 
  • யூதர்களை அவமானப்படுத்தி நிந்திக்கும்படியாக அந்த 2 உடல்களை அப்புறப்படுத்த விட மாட்டார்கள். 
  • ஏன் மூன்றரை நாள் வரையில் அவர்கள் அடக்கம் பண்ணப்படவில்லை. 
  • யூதர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. 
  • யாராவது மரித்தால் அந்த ஆவி அங்கே சுற்றித் திரியுமாம். 
  • மூன்றாம் நாளிலே அந்த ஆவி பரதீசுக்கு இல்லை பாதாளத்துக்கு போகுமாம். 
  • ஆகவே தான் மரித்த லாசருவை எழுப்ப இயேசு 4 வது நாளிலே வந்தார். 
  • ஏனென்றால் யூதர்களுடைய நம்பிக்கை 3 நாள் சென்று விட்டால் இனி உயிர் வராது என்று. 
  • அதனால் தான் இயேசு மரித்து 3 ம் நாளுக்கு பின்பு உயிர்த்தெழுந்தார். 
  • ஆகவே தான் மோசே, எலியாவின் உடல்களை அகற்ற அவர்கள் இடங்கொடுக்கவில்லை. 

அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 10
  • Social media அனைத்திலும் இந்த pictures trend ஆகும். 
  • மாறி மாறி பரிசுகளை கொடுத்துக் கொள்கிறார்கள். 

மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
 -வெளிப்படுத்தல் 11 : 11
  • பயங்கரமான scene. 
  • Breaking news. 
  • அவர்கள் இருவரும் உயிரோடு எழுந்திருக்கிறார்கள். 
  • அதைப் பார்த்தவர்கள் பயந்தார்கள். 

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 12
  • வானத்தில் இருந்து இயேசுவின் சத்தம் கேட்கிறது. 
  • மேகத்தில் ஏறி வானத்திற்கு போனார்கள். 
  • இந்த சம்பவம் எருசலேமில் நடக்கிறது. 
  • அவர்கள் இருந்த இடம் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தில். 
  • மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த உடன்படிக்கைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். 
  • மோசே தான் உடன்படிக்கைப் பெட்டியை செய்தார். 
  • மோசே தான் பரலோகத்திற்கும் உடன்படிக்கைப்பெட்டியை கொண்டு செல்வார். 

அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 13

மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; 
  • யார் இந்த மனிதர்கள்? யூதர்கள் அல்ல. 
  • புறஜாதியார்.

இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
 -வெளிப்படுத்தல் 11 : 14
  • இரண்டாம் ஆபத்து முடிந்தது. 

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
 -வெளிப்படுத்தல் 11 : 15
  • 7 வது எக்காளம் ஊதப்படுகிறது. 
  • 7 என்பது பரிபூரணம், முடிவு. 
  • எல்லாக் காரியங்களும் பரிபூரணப்படுகிறது.
  • பரலோகத்தில் பெரிய சந்தோஷம். 

அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
 -வெளிப்படுத்தல் 11 : 16
  • 24 தூதர்கள். 

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
 -வெளிப்படுத்தல் 11 : 17
  • கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாவற்றையும் ஆளுகை செய்பவர் நம் தேவன். 
  • நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர். 

ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 11 : 18
  • தேவ தூதர்கள் மரித்தோர் நியாயத்தீர்ப்படையும் காலம் வந்து விட்டது என்று சொல்லி கர்த்தரை தொழுது கொண்டார்கள். 

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.  
 -வெளிப்படுத்தல் 11 : 19
  • அப்பொழுது என்றால் எப்பொழுது.
  • மோசேயும், எலியாவும் மேலே போகும் வரையில் பரலோகத்தில் தேவாலயம் இருக்கிறது. 
  • ஆனால் பூட்டி இருக்கிறது. 
  • இவர்கள் இருவரும் போன உடன் தான் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. 
  • அங்கு உடன்படிக்கைப் பெட்டியும் காணப்படுகிறது. 
  • உடன்படிக்கைப் பெட்டியை அழிக்க முடியாது.
  • ஏனென்றால் தேவனுடைய உடன்படிக்கை நித்தியமானது. 
  • தானியேல் 9, மத்தேயு 24, 1 தெசலோனிக்கேயர் 4, இந்த அதிகாரங்களிலே சொல்லப்படுகிறது அந்திக்கிறிஸ்து போய் மகா பரிசுத்த ஸதலத்திலே நிற்பான் நான் தான் தேவன் என்று சொல்லி என்று சொல்லப்படுகிறது. 
  • எப்போது அப்படி சொல்லுவான்.
  • அந்த உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் கொண்டு போன பிறகு தான். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4