பிசாசின் தந்திரங்கள்
Life with Bible (Tamil) பிசாசின் தந்திரங்கள் ஒரு ஆழமான பார்வை 15:25 பிசாசின் தந்திரங்கள் இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். -லூக்கா 19 : 10 எதை ஆதாம் இழந்து போனார்? எதை கர்த்தர் மீட்கும்படி வந்தார்? பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். -ஆதியாகமம் 1 : 28 பூமி முழுவதும் செய்யக்கூடியதான ஆளுகை. ஆதாம் சர்ப்பத்திற்கு கீழ்ப்படிந்தனால் அந்த ஆளுகையை பிசாசினிடத்தில் இழந்து போனார். எப்படி இழந்து போனார்? மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து : -மத்தேயு 4 : 8 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; -மத்தேயு 4 : 9 பூமியின் ஆளுகை எனக்கு கையளிக்கப்பட்டு இருக்கிறது நான்...