மகமையின் சரீரம்
வேதத்தின்படி "மகிமையின் சரீரம்" என்றால் என்ன?
- "மகிமையின் சரீரம்" என்பது மீட்பைப் பெற்ற விசுவாசிகளுக்கு வழங்கப்பட இருக்கும் நித்தியமான, அழிவில்லாத, பரிசுத்தமான உடலை குறிக்கிறது.
- இது உலகியலான மண்ணுலக உடலை விட மகிமை மற்றும் ஆவிக்குரிய தகுதிகளை கொண்டதாக இருக்கும்.
1. வேதவசன ஆதாரங்கள்
1 கொரிந்தியர் 15:42-44 –
"மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
-1 கொரி 15 : 42
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
-1 கொரி 15 : 43
ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
-1 கொரி 15 : 44”- மண்ணுலக உடல் – அழிவுக்கும், துன்பத்திற்கும் உட்பட்டது.
- மகிமையின் சரீரம் – அழியாதது, வல்லமையுள்ளது, பரிசுத்தமானது.
பிலிப்பியர் 3:20-21 –
"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
-பிலிப்பியர் 3 : 20
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
-பிலிப்பியர் 3 : 21 யோவான் 3:2 –
"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.”
2. மகிமையின் சரீரத்தின் அம்சங்கள்
- அழிவில்லாதது – அழிவு, நோய், மரணம் என்பவற்றிற்கு உட்படாதது.
- 1 கொரிந்தியர் 15:53 – "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.”
- ஆவிக்குரிய வல்லமை – பூமியிலுள்ள இயல்புகளை மீறும் வல்லமை.
- யோவான் 20:19, 26 – இயேசு கதவுகள் ஊடாக தோன்றியதுபோல்.
-யோவான் 20 : 19
-யோவான் 20 : 26
- பரிசுத்தம் & மகிமை – பாவமற்றது, தேவனின் மகிமையை பிரதிபலிக்கும்.
- மத்தேயு 17:2 – அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
- நித்திய ஜீவன் – காலத்திற்கும் இடத்திற்கும் உட்படாதது.
- வெளிப்படுத்தல் 21:4 – "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
3. எப்போது இந்த மகிமையின் சரீரம் கிடைக்கும்?
- இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது
- 1 கொரிந்தியர் 15:52 – "எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
- 1 தெசலோனிக்கயர் 4:16-17 – ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
4. யாருக்கு இந்த மகிமையின் சரீரம் கிடைக்கும்?
- கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த விசுவாசிகளுக்கு.
- ரோமர் 8:11 – "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
- 1 கொரிந்தியர் 15:49 – "மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.”
5. இயேசு கிறிஸ்துவின் மகிமையின் சரீரம் – ஒரு மாதிரி
- மரித்துப் புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த பிறகு:
- அழிவில்லாதது – மரணத்தை வென்றார் (வெளிப்படுத்தல் 1:18).
- ஆவிக்குரிய வல்லமை – பூட்டியிருந்த கதவுகளுக்குள் வந்து சமாதானம் என்று சொன்னார் (யோவான் 20:19).
- உணவை புசித்தார் – இயேசு உயிர்ந்தெழுந்த பின்பு அந்த மகிமையின் சரீரத்தில் வந்து பொரித்த மீனையும், தேன்கூட்டு துணிக்கையையும் புசித்தார். (லூக்கா 24:42-43).
- மகிமையுள்ள தோற்றம் – எம்மாவு சீஷர்களால் இயேசுவை அடையாளம் கண்டு்கொள்ள முடியவில்லை (லூக்கா 24:16).
"மகிமையின் சரீரம்" என்பது மண்ணுலக உடலை விட நித்தியமான, அழியாத, பரிசுத்தமான உடலாக தேவனால் விசுவாசிகளுக்கு வழங்கப்படும் ஒரு நிதர்சனமான பரிசு.
- இது இயேசுவின் உயிர்ந்தெழுந்த பிறகு பெற்ற மகிமையின் சரீரத்தைப் போல இருக்கும்.
- இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது, மரித்தவர்களும், உயிரோடு எடுத்துக் கொள்ளப்படுபவர்களும் இதைப் பெறுவார்கள்.
- இது பாவம், மரணம், துன்பம், வலியிலிருந்து நிரந்தர விடுதலை அளிக்கும்.
Comments
Post a Comment